Wednesday, 27 March 2019

கருடபஞ்சமி

கருட பஞ்சமி!

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு  மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை  அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து  நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர்.  போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன்  கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது  அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக்  கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன்,  அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான்.  தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன்  வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும்  ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று  அழைக்கப்படுகின்றது.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று  அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.  கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம்  இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு  பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள் அவர்கள்  செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று  அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக  எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை  செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய்  கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை,  பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை  செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற  வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால்,  பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும்  இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நோன்பு கூடப்  பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு  பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும்.  சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர். இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும்  பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு  அழைப்பு விடுத்தாள். அக்கா...நமக்குள் ஒரு போட்டி... பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை என்ன நிறம்  தெரியுமா? என்றாள். இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம்... என்றாள் வினதை. இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு...  என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள். சரி...நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் மற்றவர்க்கு  அடிமையாக வேண்டும்... என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள். கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில்  கருப்பானவற்றை அழைத்து, நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்... என, உத்தரவு போட்டாள். பாம்புகளும்  அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன.

வினதை, கத்ருவுக்கு அடிமையானாள். இதை அறியாத கருடன், வினதையிடம், அம்மா... நீ, ஏன் சின்னம்மாவுக்கு எடுபிடி வேலை  செய்கிறாய்? அவள் எங்கு சென்றாலும், அவள் பல்லக்கை சுமந்து செல்கிறாயே... என்று, வேதனையுடன் கேட்டது. நடந்த விஷயத்தைச்  சொன்னாள் வினதை. உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று,என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?  என்று கேட்டது. கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள். கருடா... நீ தேவலோகம் சென்று, இந்திரனிடம் உள்ள  அமுதக்கலசத்தைப் பெற்று வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உன் அன்னையை விடுவிப்பேன்... என்றாள்.  கருடன் தேலோகம் சென்று இந்திரனிடம் போரிட்டது. இந்திரனின் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை செயல்பட விடாமல் செய்து, அவனைத்  தோற்கடித்தது. இருப்பினும், இந்திரா... இந்த வஜ்ராயுதம் முனிவரின் எலும்பால் ஆனது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பளித்து,  இதை உன்னிடமே திரும்பத் தருகிறேன். அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் கொடு. என் தாயை விடுவிக்கவே இதைக்  கேட்கிறேன்... என்றது. மகிழ்ந்த இந்திரன், அமுதத்தை கொடுத்தான். அதை கத்ருவிடம் ஒப்படைத்தது கருடன். அப்போது, குதிரையின்  வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம்  வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்தாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள். எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும்,  கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார். கருடன் பிறந்த நாளை, ஆடி மாதம் பஞ்சமி  திதியில் ஒரு சாரார் கருட பஞ்சமியாகவும், ஆடி சுவாதி நட்சத்திரத்தை ஒரு சாரார் பட்சிராஜர் திருநட்சத்திரமாகவும் அதாவது, கருட  ஜெயந்தியாகவும் கொண்டாடுவர்.

பன்னெடுங்காலமாகவே கருட உபாஸனை பாரத பூமி எங்கும் சிறந்து விளங்கி வந்திருப்பதைப் பண்டைய நூல்களும் சரித்திரச்  சான்றுகளும் மெய்ப்பிக்கின்றன. கருட பகவானின் பெருமைகளாகவும் அடியார்களுக்கு இரங்கும் அருள் உள்ளத்தையும் கருட புராணம்  விரிவாகக் கூறுகிறது. கருட உபாசனை புரிவதில் பல சிறப்புகள் உண்டு. விஷ்ணு அம்சமான கருடனை வழிபடுவதன் மூலம்  திருமாலின் அருள் கிடைக்கிறது. கருடன் திருமாலின் மெய்த் தொண்டர் என்று கூறப்படுபவர். விஷ்ணு பக்தர்கள் கருடோபாஸனையின்  மூலம் தாம் திருமாலின் தொண்டருக்கும் தொண்டர் என்பதை நிரூபிக்கின்றனர். வைணவக் கோயில் பலவற்றில் கருடனுக்குத் தனி  சன்னதிகள் உள்ளன. பூரி ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தில் தூண் ஒன்றில் உள்ள கருட மூர்த்தம் பிரசித்தி பெற்றது.  அக்கருட மூர்த்தியை  வழிபட்டு விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி நலம் பெறுகின்றனர். தென்னகத்திலும் பல தலங்கள் கருடனின்  பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள திருவகீந்திபுரம் கருட க்ஷேத்திரம் எனப்படுகிறது.  இங்குதான் பகவானின் தாகம் தீர்த்த கருட நதி என்ற பெயர் கொண்ட கெடில நதியை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது.   கருடோபாஸனையின் மூலம் ஸ்ரீவேதாந்த தேசிகர் கவித்துவம் பெற்றதாகவும் கூறுவர்.

கருட பகவானுக்கு இரண்டு கரங்கள். நான்கு கால்களும் உண்டு. அருள் ததும்பும் திருமுகம் கவலைக் குறியே இல்லாதவர். தனது  இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர். சிறகுகளை விட உடல் பருத்திருக்கும். குண்டலங்களைக்  காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள். உருண்டை கன்னங்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். கருடனின் நித்திய  வாசஸ்தலம் திருப்பாற்கடலாகும். அவர்க்குரிய மண்டலத்திலும் ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர மக்களைக் காப்பதில்  திருமால் போன்றவர். நாள்தோறும் கருட தரிசனம் ஒவ்வொரு வகையில் பலன் தருமானாலும் வியாழன் மாலையிலும் சனி  காலையிலும் கருட தரிசனம் மிகவும் சிறப்பானது என்று வசந்தராஜ சகுன விஸ்தரம் என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கருட  தரிசனத்தை விடக் கருடத்வனி மிகவும் மங்கலகரம். காருடம் தர்சனம் புண்யம் ததோபித்வனி ருச்யதே என்பது பெரியோர் வாக்கு.  பதினாறு வகையான மங்கள வாத்தியங்களின் பலன் கருடத்வனியில் உள்ளது சில்பா மிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும்  கும்பாபிஷேக சமயத்தில் விமான கலசாபிஷேகத்தின் போது இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது எனவும். கருட  தரிசனமும் கருடத்வனியுமே கங்காபிஷேகத்திற்கு முகூர்த்தமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது என்பார்கள். கருடத்வனி கேட்கும்போது  மங்களானி பவந்து என்று சொல்வதும், கருட தரிசனத்தின்போது குங்குமாங் கித வர்ணாய குந்தேந்துதவளா யச விஷ்ணு வாஹ  நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம என்ற சுலோகத்தைச் சொல்வதும் வழக்கம்.

ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இது இம்மை மறுமைப் பலன்களை  விரைவில் தரவல்லது. இதற்கு விசுவாமித்திரர் ரிஷி லக்ஷ்மி நாராயணனுடன் கூடிய கருட தேவதை என்பார்கள். கருட பஞ்சமி  நாளன்று கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லி கருட பகவானை வழிபடலாம்.

கருட காயத்ரி

1. தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

2. ஓம் ககோத்தமாய வித்மஹே வைணதேயாய தீமஹி

தன்ன தார்ஷ்ய ப்ரசோதயாத்

(நாகர்களும், கருடனும் ஒரு தந்தை(தாய் வேறு வேறு) பிள்ளைகள், சகோதரர்கள் என்பதால் இவ்விரண்டு நாட்களும் சகோதரர்களுக்கான  பண்டிகைகளாகக் கொண்டாடப்படுகிறது)

கருடன் பிறந்தது பஞ்சமி திதியில்தான். அதனால் தான் கருட பஞ்சமி என்று பெயர் ஏற்பட்டது. இவர் பரமபதத்தில் பெருமாளின் அருகே இருந்து சேவை செய்கின்ற நித்ய சூரிகளில் ஒருவர். இவர் பெரிய திருவடி என்றும், ஹனுமான் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றனர். கருடாழ்வாரின் அம்சமாகத் தோன்றியவர் ஆழ்வார்களில் ஒருவரான விஷ்ணு சித்தர் என்று சொல்லப்படும் பெரியாழ்வார்.

பிரம்மதேவன் மகன் கஷ்யபன் கஷ்யபருக்கு அநேக பத்தினிமார்கள் உண்டு. அவர்களுள் கத்ரு வினதை என்ற இரு சகோதரிகளும் அவரது பத்தினிகள் ஆவர். கத்ரு நாகர்களின் தாய். விநதை கருடனின் தாய். ஒரு முறை இந்த இரு சகோதரிகளிடையே விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து முடிந்தது. அந்த போட்டியில் இருவரும் ஜெயித்தவர்களுக்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையை வகுத்துக் கொண்டனர்.

போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்றாள். நிபந்தனைப்படி அவள் கத்ருவிற்கு அடிமையானாள். கத்ரு அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமையாயினர். கருடன், கத்ருவிற்கும் அவனது பிள்ளைகளுக்கும் வாகனம் போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தினான். எப்படியும் தனது தாயை அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்ற சபதம் கொண்டான்.

அது சமயம் கத்ரு கருடனிடம் தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் அடிமைத் தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை அளிப்பதாகச் சொன்னாள். கருடன் மனமகிழ்ச்சிக் கொண்டான். அடிமøத் தனத்திலிருந்து விடுதலைப் பெற வழி பிறந்ததே என்று தனக்குள் மகிழ்ச்சி கொண்டான். அன்னையை நமஸ்கரித்து தேவலோகம் சென்றான்.

தேவலோகத்தில் தேவர்களுக்கும் கருடனுக்கும் கடும்போர் மூண்டது. இறுதியில் கருடன் வெற்றி பெற்றான். கருடன் தேவேந்திரனை நமஸ்கரித்து தோத்திரம் செய்து தேவேந்திரனிடமிருந்து அமிர்த கலசத்தைப் பெற்றுக் கொண்டு வந்தான். கருடன் அமிர்த கலசத்தை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்தான். அன்னைக்கும், தனக்கும், அருணனுக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி ஆனந்த வாழ்வு ஏற்படச் செய்தான் கருடன். பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது. எனவே கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

பெருமாளின் வாகனமாகவும் கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும் விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

கருடனைப்போல பலசாலியும் புத்திமானாகவும் வீரனாகவும் மைந்தர்கள் பிறக்க பெண்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

கருட தண்டகம்:

எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பட்சி ராஜனாகிய கருடனைப் பற்றி வேதாந்த தேசிகர் அருளியது இந்த ஸ்தோத்திரம்.

கருட பகவானே! வேதம் படித்த பெரியோர்கள் உம்மை இடைவிடாமல் துதிக்கின்றனர். உம்முடைய சிறகுகளில் இருந்து மிகவும் வலிமையாக காற்று வீசுகிறது. அந்தக் காற்றினால் கடல்கள் கரையை மீறிப் பொங்குகின்றன. அப்போது எழும்பும் அலைகள் பாதாள லோகம் வரையில் பாய்கின்றன. அந்தப் பாய்ச்சல் காற்றோடு கலந்த மிகவும் விசையோடு பாம் என்ற பேரொலியை எழுப்புகின்றன. அந்த சத்தத்தைக் கேட்டதும் பூமியைத் தாங்கும்  திக்கஜங்கள் தங்களுடன் யாரோ போருக்கு வருவதாக நினைத்து கோபத்தோடு எதிர்த்து வருகின்றன. அந்த நேரத்தில் உம்முடைய நாகங்கள் என்ற ஆயுதத்தைக் கொண்டு திக்கஜங்களை அடக்கி விடுகிறீர்.

கருட பகவானே உம்முடைய கூர்மையான வளைந்த அலகு எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. நீர் உமது புருவங்களை நெறிக்கும்போது பாம்பு நெளிவதைப் போல அச்சமேற்படுகிறது. உம்முடைய கோரைப்பற்களைக் காணும் எதிர்கள் இவை தேவேந்திரனின் வஜ்ராயுதமோ என்று கதி கலங்கிப் பின் வாங்குகிறார்கள். இத்தகைய பெருமைகள் கொண்ட உம்மை அடியேன் போற்றுகிறேன். வேதாந்த வித்தைகள் அடியேனுக்கு வசமாகும்படியாக அருள் செய்ய வேண்டும். மேலும் எப்போதும் உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் தவறாமல் அடியேனுக்கு தந்தருள வேண்டும் என்கிறார் தேசிகர்.

இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஐந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர்.

கருடாழ்வாரை வணங்குவோம்!

இவரை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது. எம்பெருமான் பள்ளி கொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.

Wednesday, 20 March 2019

திருச்செந்தூர்_ஸ்ரீ_செந்திலாதிபன்_திருப்பள்ளி_எழுச்சி

#திருச்செந்தூர்_ஸ்ரீ_செந்திலாதிபன்_திருப்பள்ளி_எழுச்சி

☘வெற்றி வேற்கரமுடையாய் எமையுடையாய்
விடிந்ததுன் பூங்கழற்கிணை மலர்கொண்டு
சுற்றிய அடியேங்கள் தூய்மனத்துடனே
சொல்மகிழ்வுடன் நின்திருவடி தொழுவோம்
தெற்றிய கமலங்கள் அலரும் தண்வயல் சூழ்
திருச்செந்திலம்பதி வாழ் முருகோனே
எற்றுயர் சேவற் பதாகையையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

☘கீழ்திசை அருணணும் கிளரொளி வீச
கிளி மயில் குயில் காகம் சேவல்கள் கூவ
காரிருள் நீக்கிடும் கதிரவன் வரவும்
கடிமா மலருடன் ஏந்திய கையார்
தாழ்ந்திடும் சென்னியர் தவமுடை பெரியோர்
தனித்தனி நாமங்கள் புகலுவார் நாவில்
ஏழிசை பரவும் நற்செந்திலம்பரனே
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

☘வெண் சங்கமுழங்கின விசையொலி பேரி
விதவித வாத்தியங்கள் ஒலித்தன பலவால்
தண்ணருள் சுரந்திடும் தளிர் மலர்ப்பாதங்கள்
சார்ந்துடன் தெரிசிக்க யாவரும் வந்தார்
பண்ணிசை வேதியர் வேதமுழங்கி
பனிமலர்த் தூவியே பரவினர் மருங்கில்
எண்ணரும் செந்தியில் இசைந்தமர் முருகா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

☘பாற்குடம் காவடி பக்தர்கள் ஒருபால்
பரிவுடன் வழிபடும் அன்பர்கள் ஒருபால்
நாற்றிசையோர் திரை கொணர்ந்தனர் ஒருபால்
நலமுடன் தமிழ்மறை ஒலிப்பவர் ஒருபால்
பாற்கடல் துயின்றோனும் பிரமனும் ஒருபால்
பண்புடன் ஊர்வசி அரம்பையர் ஒருபால்
ஏற்குரும் ஒளிதிகழ் செந்திலமர்ந்தோய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

☘பஞ்சபூதங்கள் யாவும் பரவி நின்றோய் என்றும்
பார்க்குமிடந்தோறும் பண்புற அமர்ந்தாய்
எஞ்சலில் இசையுடன் ஏற்றுதல் அல்லால்
என்புருகவும் நினைக்கண்டறியோம் யாம்
தஞ்சமென்றடியவர்க்கருளும் செந்தூரா
சதுர்மறை யூடுறை ஷண்முகநாதா
எஞ்சிய பழவினை அறுத்தெமையாண்ட
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

☘செப்பரும் அடியவர் தனியிருந்துணர்வார்
செய்வினை யகற்றிடுவார் தவர் பலரும்
ஒப்பரும் இருடிகள் தம்மனையோடும்
உவமையில் ஜெபத்தொடு ஒன்றியே அமர்ந்தார்
செய்ப்பெறும் நீள்வயல் சூழ்திருச்செந்தூர்
சிறப்புடன் அமர் சிவசுப்பிரமணியா
எப்பிறப்பினும் உனை ஏத்திட அருள்வாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

☘தேனினி தெனக்கண்டு பால் இனிதெனவே
செப்புகின்ற அமுதம் இனிதென உணரார்
மானமர் திருவடி படிமிசை உறவே
வந்தெமை ஆண்டிட இங்கெழுந்தருளும்
மேல்நிமிர் சோலைசூழ் செந்திலம்பதிவாழ்
வேலனே சீலனே விஞ்சையர் கோனே
ஞானவடிவே எமை ஆட்கொண்ட கோவே
நாதாந்தனே பள்ளி எழுந்தருளாயே...!☘

☘ஆதி நடுவும் அந்தம் ஆகியும் நின்றாய்
அரி அயன் அறியார் யாருனை அறிவார்
ஜோதி வடிவாம் இருதேவியும் நீயும்
தொல் புகழ் அடியார்க் கருள் செயும் பரனே
ஓதிய மறை புகழ் உருவினைக் காட்டி
உயர் திருசீரலைவாய் நகர் காட்டி
வேதியராவதும் காட்டி வந்தாண்டாய்
விமலனே திருப்பள்ளி எழுந்தருளாயே...!☘

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

☘வானகத் தேவரும் வழிபடும் நின்னை
மாபொருளே நிதம் வாழ்த்திட என்றும்
மான இப்புவிதனில் வந்தமர் வாழ்வே
மன்னு செந்தூரா வழி வழியடியோம்
ஊனகத்துலவி நின்றொளிரும் செந்தேனே
ஒளிக்கொளியா யென்றும் பரவும் அடியார்
ஞான அகத்தினில் நன்றொளிரானாய்
நல்லமுதே பள்ளி எழுந்தருளாயே...!☘

☘அவனியிற் பிறந்து நாம் ஆய்வறிவில்லா
ஆனகாலம் வீணாய் போக்கினோம் அவமே
சிவகுமரா யாங்கள் உய்ந்திட நினைத்து
சீரலைவாய் உறைவாய் அயன் மாலா
புவிதனில் போற்றவும் புகழவும் நின்றாய்
புண்ணியனே நின்கருணையும் நீயும்
தவமிலா சிறியெமை தடுத்தாள வல்லாய்
தயாபரனே பள்ளி எழுந்தருளாயே...!

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

           ☘ஓம் முருகா☘

Monday, 11 March 2019

சர்வ_மங்கலங்களும் #தரும்_மாவிளக்கு_வழிபாடு

#சர்வ_மங்கலங்களும்
#தரும்_மாவிளக்கு_வழிபாடு

மாவிளக்கு வழிபாடு என்பது இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று

.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல்,மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது..

ஆனால் தற்பொழுது மாக்கோலம் இடும் பழக்கம் குறைந்து கொண்டு வருவது வருந்தத்தக்க விஷயமாகும்.

இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன

.அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள்.

நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.

இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம்  ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.

மாவிளக்கு தத்துவம்

காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.

அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.

வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.

அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.

அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது.மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவேமாவிளக்கு ஏற்றுகிறோம்.

நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும்,அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வவழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறையாவது செய்ய வேண்டும்.

வீட்டில் மாவிளக்கு போடுதல்
பெரும்பாலான வீடுகளில் ஆடி,தை  வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு.
கோவில்களில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

மாவிளக்கு செய்வது எப்படி

1.மாவிளக்கு ஒரு கிலோ அரிசி என்றால் அதனை களைந்து விட்டு ஒரு துணியில் பரப்பி விட்டு காயவைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும் போது மிக்ஸி அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 மாவு அரைக்கும் போது நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம், வெல்லத்தை துருவி அல்லது தூள் துளாக நுணுக்கி அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும்.

 அதில் சிறிதளவு பால் ஊற்றி கொள்ளலாம். பின்னர் அதனை நன்றாக பிசறி விட்டு உருண்டையாக உருட்டவும். உருண்டை பிடிக்க வராவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருட்டலாம். ஒற்றை படை எண்ணிக்கையில் தான் மாவிளக்கு போடுவார்கள். ஒரளவு பெரிய உருண்டையாக தான் உருட்டுவார்கள்.

 உருண்டையின் மேல் எலுமிச்சை பழத்தை அழுத்தினால் சிறிது குழிப்போல அச்சு பதியும். குழியின் ஓரத்தில் மூன்று இடத்தில் குங்குமம் பொட்டு வைத்து நெய்விளக்குகேற்றி வைக்கவும்.

2.ஆடிவெள்ளி, மற்றும் தை வெள்ளிக்
கிழமைகளில் மாவிளக்கு போடுவார்கள். அரைக்கிலோ பச்சை அரிசியை
நன்கு அலம்பி ஒரு துணியில் உலர்த்தவும். நன்றாக உலர விட வேண்டாம்.

பாதி காய்ந்ததும் மிக்ஸியில் மாவாக பொடித்துக்கொள்ளவும். பொடித்த ஈரம்
இருக்கும்போதே கால் கிலோ வெல்லத்தையும் பொடித்து போட்டு மாவுடன்
நன்கு பிசையவும். வெல்லம் போட்டு பிசையும் போதே அதன் ஈரப்பதத்தால்
மாவு ஈசியாக திரண்டு வரும். மேலாக 2ஏலக்காய்களை பொடித்து தூவவும்.

விளக்குப் பிரை முன்பு கோலம் போட்டு ஒரு வாழை இலை விரிக்கவும்.
வெள்ளியில் பேசின் மாதிரி ஏதாவது பாத்திரம் இருந்தால் (இல்லைனா,இலையில்)
அதில் இந்த மாவை கைகளினாலே உருண்டையாக திரட்டவும்.

 நான்குபுரமும்
சந்தனம், குங்குமம் பொட்டு வக்கவும். நடுவில் ஒரு பெரிய கிண்ணம் அளவுக்கு
ஒரு குழி பண்ணி அது நிறைய நெய் ஊற்றவும். நாலு பக்கமும் திரியின் நுனி
வரும்படி போடவும்.

அப்படி இல்லைனா பஞ்சு ஒரு நெல்லிக்காய் அளவு உருட்டி
நுனியில் கூர்ப்பாக திரித்து நெய்யின் நடுவில் வத்து நல்ல நேரம் பார்த்து
விளக்கு ஏற்றவும் குறைந்தது 2 மணி நேரங்களாவது மாவிளக்கு எரியனும்
அந்த நேரம் நீங்கள் விளக்கு முன்பு உக்காந்து ஸ்லோகங்களோ பாராயணங்களோ
சொல்லிண்டு இருக்கலாம்.( இது கம்பல்சரி இல்லை.)

விளக்கு மலை ஏரினதும்
வெத்திலை பாக்கு, பழம் தேன்காய் உடைத்து நைவேத்யம் செய்யனும்.
அந்த தேங்கா தண்ணியை மாவில் விட்டு கலந்து பிசைந்து எல்லாருக்கும்
பிரசாதமாக கொடுக்கலாம்.

வாழ்க வளமுடன் அன்பர்களே...

Sunday, 10 March 2019

சிவநாமாவல்யஷ்டகம்

☘#சிவநாமாவல்யஷ்டகம்☘

1.ஹேசந்த்ரசூட மதனாந்தக சூலபாணே
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ!
பூதேச பீதபயஸ¨தன மாமநாதம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

#பொருளுரை:
ஹே சந்த்ரனை தலையில் அணிந்தவரே!மன்மதனை அழித்தவரே. சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே. மலைக்கு அரசே. மலைமகள் மனாளனே. மகேசனே. சம்போ. பூதங்களின் தலைவரே. பயந்தவர் பயம் களைபவரே. ஸம்ஸாரம் என்ற துன்பக்காட்டிலிருந்து அநாதனான என்னைக் காத்தருளும்.

2.ஹேபார்வதீஹ்ருதயவல்லப சந்த்ரமௌலே
பூதாதிப ப்ரமதநாத கிரீச சாப!
ஹேவாமதேவ பவ ருத்ர நிநாகபாணே
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

#பொருளுரை:
ஹே பார்வதீகாந்த!ச்ந்த்ரமௌலே!வாமதேவ!பிரமதநாதனே!மேருவை வில்லாகக் கொண்டவரே. பவனே. ருத்ரனே. பிநாகத்தை வில்லாகக் கொண்டவரே. ஸமமஸாரமாகிய து:கப்பிடியிலிருந்து என்னைக் காப்பாயாக.

3.ஹேநீலககண்டவ்ருஷபத்வஜ பஞ்சவர்த்ர
லோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ I
ஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாயதே மாம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

#பொருளுரை:
ஹே நீலகண்டனே. காளைக்கொடியோனே. ஐந்துமுகங்கள் கொண்டவனே. உலகக் கடவுளே. ஆதிசேஷனை வளையாகக் கொண்டவனே. ப்ரமதத்தலைவனே. சர்வனே. ஜடாபாரம் தாங்கியவனே. பசுபதியே. கிரிஜாபதியே. என்னை உலகியல் து:க்கத்திலிருந்து காத்தருள்வாயாக!

4.ஹே விச்வநாத சிவ சங்கர தேவ தேவ
கங்காதர ப்ரமதநாயக நந்திகேச I
பாணேச்வராந்தரியோ ஹரலோக நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

#பொருளுரை:
ஹே விசிவநாத, சிவ. சங்கர. தேவ தேவ. கங்காதர. பிரமத நாயக. நந்திக்கு ஈசனே. பாணாஸுரன், அந்தகாஸுரன் ஆகியோரை அழித்தவரே. ஹரனே உலக நாதனே என்னை ஸம்ஸாரதுக்கத்திலிருந்து காத்தருள்வீராக!

5.வாராணஸீபுரபதே மணிகர்ணிகேச
விரேச தக்ஷமககால விபோ கணேச!
ஸர்வஜ்ஞ ஸர்வஹ்ருதயைகநிவாஸ நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

#பொருளுரை:
வாராணஸீ நகரத்தின் நாயகநே!மணிகர்ணிகைத் தலைவனே. வீரர்களின் தலைவனே. தக்ஷயாகத்தை குலைத்தவனே. விபோ. ப்ரமத கணங்களின் தலைவனே. எல்லாம் அறிந்தவனே. எல்லோர் ஹ்ருதயத்திலும் குடி கொண்டவனே. நாதனே என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருளவேணுமே.

6.ஸ்ரீமன்மஹேச க்ருபாமய ஹேதயாலோ
ஹேவ்யோமகேச சிதிகண்ட கணாதிநாத!
பஸ்மாங்கராக ந்ருகபாலகலாபமால
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

#பொருளுரை:
ஸ்ரீ மஹாதோவ, கருணையே உருவானவரே. ஆகாயத்தைக் கேசமாகக் கொண்டவரே. நீலகண்டரே, கணங்களுக்கு நாதரே. விபூதி பூசியவரே. மண்டையோடு மாலையணிந்தவரே. என்னை ஸம்ஸாரத் துன்பத்திலிருந்து காக்க வேண்டும்.

7.கைலாஸசைல விநிவாஸ வ்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகந்நிவாஸ!
நாராயணப்ரிய மதாபஹ சக்திநாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

#பொருளுரை:
கைலாயமலையில் வாழும் ஹே சிவபிரானே. யமனை வென்றவனே. முக்கண் உடையானே. மூவுலகிலும் வாழ்பவனே. விஷ்ணுவின் அன்பனே. செருக்கு களைபவனே. சக்தியின் நாதனே. என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருள வேண்டுமே!

8.விச்வேச விச்வபவநாசக விச்வரூப
விச்வாத்மக த்ரிபுவனைக குணாதிகேச!
ஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

#பொருளுரை:
ஹே உலக நாயகனே. உலகில் பிறப்பதை நீக்குபவனே உலகே உருவானவனே. மூவுலகிலும் குணம்மிக்கவரில் மேலானவனே ஹேவிச்வநாத. கருணையுருவானவனே. எளியோருக்குப் பங்காளனே. என்னை உலகியல் துன்பத்திலிருந்து காத்தருள வேண்டுமே!

9.கௌரீவிலாஸபவனாய மஹோச்வராய
பஞ்சாநநாய சரணாகத கல்பகாய!
சர்வாய ஸர்வஜகதாமதிபாய தஸ்மை
தாரித்ர்யது:கதஹநாய நம:சிவாய!!

#பொருளுரை:
பார்வதியின் கேளிக்கையிடமேயான மஹேச்வரனுக்கு சிவனுக்கு நமஸ்காரம். அவர் ஐந்து முகமுடையவர், சரணம் என்று வந்தவருக்கு கல்பகமரம் போன்றவர். அகில உலகுக்கும் தலைவர். அவர். ஏழ்மை, துன்பங்களைக் களைபவரும் அவரே.

#சிவநாமாவல்யஷ்டகம்_முற்றிற்று.

Thanks  :  KAMAKOTI.ORG. 

ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே

ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
ஸ்ரீ ராமபிரானின்  இந்த கதை கேட்கும் எல்லோருமே
இகபர சுகமெல்லாம் அடைந்திடலாமே என்ற புகழ் பெற்ற  பாடல் வரிகள் இன்று 10/3/2019 ஞாயிறு அன்று பதிவு செய்துள்ளோம். ஸ்ரீ ராமபிரானை வழிபட்டால் கோடி கோடி நன்மைகள் கிடைக்கும். உங்கள் மனக்குறை நீங்கும்.வாழ்க்கை சிறந்து விளங்கும் .ஸ்ரீ ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே போற்றி ஸ்ரீ ஆஞ்சனேயபிரபு திருவடிகளே துணை ஸ்ரீ ராமஜெயம்

ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவிகுளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே..

இகபர சுகமெல்லாம் அடைந்திடலாமே
இந்த கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும்போதிலே (2)
இணையே இல்லாத காவியமாகும்..(ஜெகம் புகழும்)

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கெளசல்யா, கைகேயி, சுமித்திரை
கருவினிலே உருவானார் ராமர், லஷ்மணர்
கனிவுள்ள பரதன், சத்ருக்னர் நால்வர்..

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தாரே..
காட்டில் கெளசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலஷ்மணரை அனுப்பினனே..

தாடகை சுபாகுவை தரையில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே (2)
பாதையில் அகலிகை சாபத்தை தீர்த்தபின் (2)
சீர்பெறும் மிதிலை நகர் நாடி சென்றனரே..

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையை கன்னி மாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தனர்(2)
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்..

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தன்னை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வனின் வீரத்தை கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையை கண்டான்...(ஜெகம் புகழும்)

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணி முடி சூட்டவே நாள் குறித்தானே(2)
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகரத் தோரணத்தால் அலங்கரித்தனரே..

மந்தரை போதனையால் மனம்மாறி கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள் வாழவும்
மன்னனிடம் வரமதைக் கேட்டாள்..

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உன்னை வனம் போக சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தை தந்தார் என்றாள்..

சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கி சென்றான்
மிஞ்சிய கோபத்தால் வெகுண்டே விலெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினார்..

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வதைக் கண்டு (2)
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடன் எனப் போவதென்று தடுத்தனர் சென்று..

ஆறுதல் கூறியே கார்முகில் வந்தான்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்னதற்காகவே
அன்னலும் கானகத்தை நாடிச் சென்றானே...(ஜெகம் புகழும்)

கங்கைக் கரைஅதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான் (2)
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்(2)
அஞ்சக வண்ணன் அங்கு சென்று தங்கினான் (2)

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள் (2)
கோபம் கொண்ட இளையோன்
குரும்பால் அவளை மானபங்கம் செய்து விரட்டி விட்டன்..

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்..(2)
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச் சென்றான்..

வழியிலே ஜடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் ஹனுமனின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டி இலங்கை சென்ற ஹனுமான்
அன்னையை அசோக வனத்தில் கண்டான்..

"ராம சாமியின் தூதன் நானடா ராவணா" என்றான்
ஹனுமார் லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
"கண்டேன் அன்னையை" என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அய்யன் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்..

விபீஷணனின் நட்பைக் கொண்டான்
விபீஷணனின் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியை தீக்குளிக்க செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டார்(2)
மக்கள் பலரும் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்...(ஜெகம் புகழும்)

ஸ்ரீ  ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே போற்றி
 ஸ்ரீ ஆஞ்சனேயபிரபு திருவடிகளே துணை ஸ்ரீ ராமஜெயம்

Thursday, 7 March 2019

#தட்சிணாமூர்த்தி_அஷ்டகம்

#வ்ருஷ_தேவர்_அருளியது.

☘அகணித குணகணமப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

#பொருளுரை :
எண்ணுதற்கரிய குணமுடையவரும், காட்சி முதலிய பிரமாணங்களால் அறியவொண்ணாதவரும், உலகங்களைப் படைத்து, காத்து, அழிக்கக் காரணமாயும், சாந்தமான யோகிகளினுள்ளத்தில் குடிகொண்டவரும், முதல்வருமான( நன்றி : தினமலர் )
 தக்ஷிணாமூர்த்தியை இடையறாது நான் துதிக்கின்றேன்.

☘நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

#பொருளுரை :
வரம்பிலாத இன்பமுடையவரும், விருப்பங்களை அளிப்பவரும், வணங்கியவரின்
( நன்றி  :  தினமலர்)
 மனக்கவலைகளைத் தீர்ப்பதில் வல்லுநரும், காட்டைத் தீ அழிப்பதுபோலத் தன் நாமத்தை உச்சரித்த அளவில் பிறவிக் கடலைக் கடக்கச் செய்கின்றவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

#பொருளுரை :
மூவுலகிற்கு குருவாயும், ஆகமங்களால் உணரப்படுபவரும், உலகங்களுக்குக் காரணமான யோகமாயையுடையவரும், நூறு சூரியன்போல் ஒளிர்பவரும், இஷ்டங்களை அளிப்பவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

#பொருளுரை :
உலக வாழ்க்கையை நினைப்பவர்கட்கு எட்டாதவரும், தாமரை அடியிணைகளை தியானிப்பவருக்கு அண்மையிலுள்ள பிறவிக் கடலைத் தாண்ட
( நன்றி  :  தினமலர்)
 கப்பல்போன்ற திருவடிகளை உடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

பொருளுரை :
எப்போதும் ஆலமரத்தடியிலிருப்பவரும், உபநிடதங்களால் உணர்த்தப்பெறும் உடலுடையவரும், கைவிரலிலுள்ள சின் முத்திரையினால் மெய்ஞ்ஞானம் உணர்த்துபவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

பொருளுரை :
பிரம்மபுத்திரனால் பூஜிக்கப்பட்ட திருவடித்தாமரைகளில் வணங்கியோர்களுக்கு வீடுபேறு அளிக்க வல்லமையுடையவரும், குருகுலவாசம் செய்த யோகிகளுக்கு நண்பருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

பொருளுரை :
துறவிகளினுள்ளத்தில் விளங்குபவரும், கோடி மன்மதனை யொத்த அழகினை உடையவரும், பரோபகாரிகளுக்குச் சேவிக்கத்தக்க முதல்வருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

பொருளுரை :
புன்முறுவல் பூத்த மலர்ந்த முகமுடையவரும், மறைகளாலறியப்படுபவரும், விடையேறிய வெண்தாமரை போன்ற ஒளிமிக்க திருமேனியுடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!!☘

பொருளுரை :
விருஷபதேவரால் இயற்றப்பட்ட இஷ்டங்களை அளிக்கவல்ல இத்துதியைத் தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியில் படிப்பவர் சகல துக்கங்களிலும் பாபங்களினும் விடுபட்டவராய் மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிவலோகத்தில் வாழ்வார்.

#நன்றி  :  #தினமலர்

Wednesday, 6 March 2019

நரசிம்ம_ராஜ_மந்திரம்

#நரசிம்ம_ராஜ_மந்திரம்
!

திருமணத்தடை, குழந்தை வரம், கடன் பிரச்னை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, தம்பதிகள் பிரிந்திருத்தல், தொழிலில் பின்னடைவு.இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள் குறுக்கிடுகின்றன. இவை அத்தனையையும் உடைத்தெறியும் அழகான ஸ்தோத்திரமே #ஸ்ரீ_மந்திரராஜபத_ஸ்தோத்திரம். தினமும் மாலையில், #லட்சுமி_நரசிம்மர் படத்தின் முன் காய்ச்சிய பாலை வைத்து  இதை சொல்ல வேண்டும். ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம்.

☘வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!
நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!☘

#பொருள்: பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

☘ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்!
நகாக்ரை சகலீசக்ரே
யஸ்தம் வீரம்
நமாம்யஹம்!!☘

#பொருள்: திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்.

☘பதா வஷ்டப்த பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்!
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்!! ☘

#பொருள்: விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

☘ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்!
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம்
நமாம்யஹம்!!☘

#பொருள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

☘ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
யோ ஜாநாதி நமாம் யாத்யம்
தமஹம் ஸர்வதோ முகம்!!☘

#பொருள்: சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

நன்றி  : தினமலர்

☘நரவத் ஸிம்ஹவச் சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந!
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!☘

#பொருள்: பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்.

☘யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி
பீஷணம் தம்
நமாம்யஹம்!!☘

#பொருள்: உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

#நன்றி  :  #தினமலர்.

☘ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே!
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம்
நமாம்யஹம்!!☘

#பொருள்: அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

☘ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்!
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்!!☘

#பொருள்: மரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

☘நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்!
த்யக்தது கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம்
நமாம்யஹம்!!☘

#பொருள்: எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்.

☘தாஸபூதா: ஸ்வத ஸர்வே
ஹ்யாத்மாந பாமாத்மந!
அதோஹமபி தே தாஸ:
இதி மத்வா
 நமாம்யஹம்!!☘

#பொருள்: இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.

☘சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்!
த்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச
வர்த்ததே!!☘

#பொருள்: ஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்.

☘உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்!
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்!!☘

#பொருள்: கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

☘ஸ்ரீமதே லட்சுமி நரசிம்ஹ ப்ரஹ்மணே நம;
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம:
ஓம் பூம் பூம்யை நம:
ஓம் நீம் நீளாயை நம:☘

#பொருள்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்ற மகாதெய்வத்திற்கு நமஸ்காரம். லட்சுமி தாயாருக்கு நமஸ்காரம். பூமாதேவிக்கு நமஸ்காரம். நீளாதேவிக்கு நமஸ்காரம்.

☘#நன்றி  :  #தினமலர். ☘

Monday, 4 March 2019

ஸ்ரீருத்ரம்_நமகம்_சமகம்_ஸ்லோகங்கள்_முழுவதும்

☘#ஸ்ரீருத்ரம்_நமகம்_சமகம்_ஸ்லோகங்கள்_முழுவதும்☘
--
☘#ஸ்ரீ_கணபதி_த்யானம்☘
--
ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே கவிம் கவீனா-முபம
ஸ்ர-வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:
ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
--
அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய,
அகோர ருஷி:   அனுஷ்டுப் சந்த:
ஸங்கர்ஷண - மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய:
பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா
நம: ஸிவாயேதி பீஜம்:
ஸிவதராயேதி ஸக்தி:  மஹா-தேவாயேதி கீலகம்:   ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத சித்யர்தே ஜபே விநியோக:
--
#சாந்தி_பாடம்
ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே,
ஸெளமன ஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே,
யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே,
தர்தா ச மே, க்ஷேமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே,

மஹஸ்ச மே, ஸம்விச்ச மே,  ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே,  ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே,

யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே,  தீர்காயுத்வஞ்ச மே,
நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே,
ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி: 
ஓம் நமோ பகவதே ருத்ராய
ஓம் நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம:
நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முத தே நம:

யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு:
ஸிவா ஸரவ்யா யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா

யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோர பாப காஸினீ
தயா நஸ்-தனுவா ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி
யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே
ஸிவாம் கிரித்ர தாம் குரு மா ஹிஹிம் ஸீ: புருஷம் ஜகது

ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி
யதா ந: ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்மகம் ஸுமனா அஸது

அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷகு
அஹீஸ்ச ஸர்வாAAன் ஜம்பயன்த்-ஸர்வாAAஸ்ச யாது தான்ய:
அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல:

யே சேமாஹும் ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷாஹும்  ஹேட ஈமஹே

அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித:
உதைனம் கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய:

உதைனம் விஸ்வா பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:
நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷாய மீடுஷேAA

அதோ யே அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:
ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம்

யாஸ்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப
அவதத்ய தனுஸ்த்வஹம் ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே
நிஸீர்ய ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ
விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ
பாணவாஹம் உத

அநேஸந் நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:
யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு:

தயா ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ
நமஸ்தே அஸ்த்வாயு தாயானா ததாய த்ருஷ்ணவேAA
உபாப்-யாமுத தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே
பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத:
அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்
சம்பவே நம:
நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய
ஸதாஸிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:
இரண்டாவது அனுவாகம்
நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திஸாம் ச பதயே நமோ
நமோ வ்ரு க்ஷேப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ

நம: ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ
நமோ பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ

நமோ ஹரிகேஸாயோ பவீ திநே புஷ்டானாம் பதயே நமோ
நமோ பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ
நமோ ருத்ராயா ததாவிநே க்ஷேத்ராணாம் பதயே நமோ
நமோ ஸூதாயா ஹந்த்யாய வனானாம் பதயே நமோ

நமோ ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷாணாம் பதயே நமோ
நமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷாணாம் பதயே நமோ
நமோ புவந்தயே வாரிவஸ்க்ருதா யௌஷதீனாம் பதயே நமோ
நம: உச்சைர் கோஷாயா க்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ
நம: க்ருத்ஸ்ன வீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:
மூன்றாவது அனுவாகம்
நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதி நீனாம் பதயே நமோ
நம: ககுபாய நிஷங்கிணே AA ஸ்தேநானாம் பதயே நமோ

நமோ நிஷங்கிண இஷுதி மதே தஸ்கராணாம் பதயே நமோ
நமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ

நமோ நிசேரவே பரிசராயா ரண்யானாம் பதயே நமோ
நம: ஸ்ரு காவிப்யோ ஜிகாஹும் ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ
நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ
நம: உஷ்ணீ ஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ

நம: இஷுமத்ப்யோ தன் வாவிப்யஸ்ச வோ நமோ
நம ஆதன்வானேப்ய: ப்ரதித தானேப்யஸ்ச வோ நமோ
நம ஆயச்சத்ப்யோ விஸ்ரு ஜத்ப்யஸ்ச வோ நமோ
நமோ ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ

நம ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ
நமஸ் ஸ்வபத்யோ ஜாக்ரத் ப்யஸ்ச வோ நமோ
நம திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ
நம: ஸபாப்ய: ஸபா பதிப்யஸ்ச வோ நமோ
நமோ அஸ்வேப்யோ ஸ்வ பதிப்யஸ்ச வோ நம:
நான்காவது அனுவாகம்
நம ஆவ்யாதினீAAப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ
நம உகணாப்யஸ்-த்ரு ஹம்தீப்யஸ்ச வோ நமோ

நமோ க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ
நமோ வ்ராதேAAப்யோ வ்ராத பதிப்யஸ்ச வோ நமோ

நமோ கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ
நமோ விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ
நமோ மஹத்ப்ய: க்ஷúல்ல கேப்யஸ்ச வோ நமோ
நமோ ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ

நமோ ரதேAAப்யோ ரதபதிப்யஸ்ச வோ நமோ
நமோ ஸேநாப்AAய: ஸேநானிப்யஸ்ச வோ
நமோ க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ
நமஸ் தக்ஷப்யோ ரதகாரேAAப்யஸ்ச வோ நமோ
நம: குலாலேப்ய: கர்மாரேAAப்யஸ்ச வோ நமோ
நம புஞ்ஜிஷ்டேAAப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ
நம இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ

நமோ ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ
நம: ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:
ஐந்தாவது அனுவாகம்
நமோ பவாய ச ருத்ராய ச
நம: ஸர்வாய ச பஸுபதயே ச
நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச
நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச
நம: ஸஹஸ்ராக்ஷாய ச ஸததன்வனே ச
நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச
நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச
நமோ ஒ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச
நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச
நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச
நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச
நம ஆஸவே சாஜிராய ச
நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச
நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச
நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச
ஆறாவது அனுவாகம்
நமோ ஒ  ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச
நம: பூர்வஜாய சாபரஜாய ச
நமோ மத்யமாய சாபகல்பாய ச
நமோ ஜகன்யாய ச புத்னியாய ச
நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச
நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச
நம உர்வர்யாய ச கல்யாய ச
நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச
நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச
நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச
நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச
நம: ஸூராய சாவபிந்ததே ச
நமோ வர்மிணே ச வரூதினே ச
நமோ பில்மினே ச கவசினே ச
நமஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச
ஏழாவது அனுவாகம்
நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச
நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச
நமோ தூதாய ச ப்ரஹிதாய ச
நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச
நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச
நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச
நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச
நம: காட்யாய ச நீப்யாய ச
நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச
நமோ நாத்யாய ச வைஸந்தாய ச
நம: கூப்யாய சாவட்யாய ச
நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச
நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச
நம ஈத்ரியாய சாதப்யாய ச
நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச
நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச

எட்டாவது அனுவாகம்
நம: ஸோமாய ச ருத்ராய ச
நம: தாம்ராய சாருணாய ச
நம: ஸங்காய ச பஸுபதயே ச
நம உக்ராய ச பீமாய ச
நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச
நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச
நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ
நமஸ்தாராய
நம: ஸம்பவே ச மயோபவே ச
நம: ஸங்கராய ச மயஸ்கராய ச
நம: ஸிவாய ச ஸிவதராய ச
நம: தீர்த்யாய ச கூல்யாய ச
நம: பார்யாய சாவார்யாய ச
நம: ப்ரதரணாய சோத்தரனாய ச
நம ஆதார்யாய சாலாத்யாய ச
நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச
நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச
ஒன்பதாவது அனுவாகம்
நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச
நம: கிகிம்ஸிலாய ச க்ஷயணாய ச
நம: கபர்திநே ச புலஸ்தயே ச
நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச
நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச
நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச
நமோ  ஒ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச
நம: பாகம்ஸவ்யாய ச ரஜஸ்யாய ச
நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச
நமோ லோப்யாய சோலப்யாய ச
நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச
நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச
நமோ பகுரமாணாய சாபிக்நதே ச
நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச
நமோ வ: கிரி கேப்யோ தேவானா ஹ்ம்ருதயேப்யோ
நமோ விக்ஷீண கேப்யோ,
நமோ விசின்வத் கேப்யோ
நம ஆநிர்ஹதேப்யோ
நம ஆமீவத்கேப்யஹ

பத்தவாது அனுவாகம்
த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித
ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர் மாரோ
மோ ஏஷாம் கிஞ்சநாமமது
யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ
ஸிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே AA
இமாஹும் ருத்ராய தவஸே கபர்தினே AA க்ஷயத்வீராய
ப்ரபராமஹே மதிம்
யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்ன னாதுரம்
ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய
நமஸா விதேம தே
யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ
மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த
முத மா ந உக்ஷிதம்
மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:
மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ
அஸ்வேஷு ரீரிஷ:
வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே
ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய
ஸும்ன-மஸ்மே தே அஸ்து
ரக்ஷா ச நோ அதி ச தேவ ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா: AA
ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு
முக்ரம்
ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா: AA
பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி-
ரகாயோ: ஹோ
அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய
மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ
பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி,  விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ:
யாஸ்தே ஸஹஸ்ரஹ்ம் ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா: ஹா
ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய:
தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி
பதினொன்றாவது அனுவாகம்
ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாAAம்
தேஷாஹும் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

அஸ்மின் மஹத்யர்ணவேAA ந்தரிக்ஷேபவா அதி
நீலக்ரீவா: ஸிதிகண்டா: AA ஸர்வா  அத: க்ஷமாசரா: ஹா

நீலக்ரீவா: ஸிதிகண்டா திவஹும் ருத்ரா உபஸ்ரிதா: ஹா
யே வ்ருக்ஷேக்ஷு ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலோஹிதா: ஹா
யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின:
யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனானு

யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத:
யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண:

ய ஏதாவந்தஸ்ச பூயாஹ்ம் ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே
தேஷாஹ்ம் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே AAந்தரி÷க்ஷ யே திவி
யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ

தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ
நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ

த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி
எங்குமாய் யாவுமாய் உள்ள முக்கண்ணனை நமஸ்கரித்தல்
த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்
ம்ருத்யோர் - முக்ஷீய – மாம்ருதாAAது
யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு
யோ ருத்ர விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து
தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி பேஷஜஸ்ய
யக்ஷ்வாAAமஹே ஸெளஹுமனஸாய ருத்ரம் நமோAAபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய
அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தர:
அயம் மேAA விஸ்வ பேAAஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:

யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே
 தான் யஜ்ஞஸ்ய மாயயா ஸர்வானவ யஜாமஹே

ம்ருத்யவே ஸ்வாஹா ம்ருத்யவே ஸ்வாஹாAA
ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர்-மே பாஹி
ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக:
தேனான் னேனாAAப்யாயஸ்வ; சதாசிவோம்
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஸ்ரீருத்ரம் சமக ப்ரச்னம்
(வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனை) சமகம் - முதல் அனுவாகம்
அக்னிதேவரையும் விஷ்ணுவையும் வேண்டிக்கொண்டு தொடங்குதல்
ஓம் அக்னா விஷ்ணூ ஸஜோஷஸேமா வர்தந்து வாம் கிர:
த்யும்னைர் வாஜே பிராகதம்
இந்திரியங்களின் நலன்களை வேண்டுதல்
வாஜஸ்ச மே, ப்ரஸவஸ்ச மே, ப்ரயதிஸ்ச மே,
ப்ரஸிதிஸ்ச மே, தீதிஸ்ச மே, க்ரதுஸ்ச மே,
ஸ்வரஸ்ச மே, ஸ்லோகஸ்ச மே, ஸ்ராவஸ்ச மே,
ஸ்ருதிஸ்ச மே, ஜ்யோதிஸ்ச மே, ஸுவஸ்ச மே,

ப்ராணஸ்ச மே, பானஸ்ச மே, வ்யானஸ்ச மே,
ஸுஸ்ச மே, சித்தஞ்சம ஆதிதஞ்ச மே, வாக்ச மே,

மனஸ்ச மே, சக்ஷúஸ்ச மே, ஸ்ரோத்ரஞ்ச மே,
தக்ஷஸ்ச மே, பலஞ்சம ஓஜஞ்ச மே, ஸஹஸ்ச ம ஆயுஸ்ச மே,
ஜரா ச ம ஆத்மா ச மே, தனூஸ்ச மே, ஸர்ம ச மே,
வர்ம ச மே, ங்கானி ச மே, ஸ்தானி ச மே,
பரூஹும் ஷி ச மே, ஸரீராணி ச மே

சமகம் - இரண்டாவது அனுவாகம்
செல்வச் செழிப்பு வேண்டுதல்

ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே, மன்யுஸ்ச மே,
பாமஸ்ச மே, மஸ்ச மே, ம்பஸ்ச மே,

ஜேமா ச மே, மஹிமா ச மே, வரிமா ச மே,
ப்ரதிமா ச மே, வர்ஷ்மா ச மே, த்ராகுயா ச மே,

வ்ருத்தஞ்ச மே, வ்ருத்திஸ்ச மே, ஸத்யஞ்ச மே,
ஸ்ரத்தா ச மே, ஜகச்ச மே, தனஞ்ச மே,
வஸஸ்ச மே, த்விஷிஸ்ச மே, க்ரீடா ச மே,
மோதஸ்ச மே, ஜாதஞ்ச மே, ஜநிஷ்யமாணஞ்ச மே,

ஸூக்தஞ்ச மே, ஸுக்ருதஞ்ச மே, வித்தஞ்ச மே,
வேத்யஞ்ச மே, பூதஞ்ச மே, பவிஷ்யச்ச மே,

ஸுகஞ்ச மே, ஸுபதஞ்ச மருத்தஞ்ச மருத்திஸ்ச மே,
க்லுப்தஞ்ச மே, க்லுப்திஸ்ச மே, மதிஸ்ச மே, ஸுமதிஸ்ச மே
சமகம் - மூன்றாவது அனுவாகம் - இகவாழ்க்கை நலன்களை வேண்டுதல்
ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே,
னுகாமஸ்ச மே, காமஸ்ச மே, ஸெளமனஸஸ்ச மே,

பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே,
பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, தர்தா ச மே,

÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,
ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே,
ப்ரஸூஸ்ச மே, ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே,
ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே,

ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே, நமித்ரஞ்ச மே,
பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே,
ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே
சமகம் - நான்காவது அனுவாகம் உணவு மற்றும் விவசாய நலன்களை வேண்டுதல்

ஊர்க் ச மே, ஸூந்ருதா ச மே, பயஸ்ச மே, ரஸஸ்ச மே,
க்ருதஞ்ச மே, மது ச மே, ஸக்திஸ்ச மே,

ஸபீதிஸ்ச மே, க்ருஷிஸ்ச மே, வ்ருஷ்டிஸ்ச மே,
ஜைத்ரஞ்ச ம ஒளத்பித்யஞ்ச மே, ரயிஸ்ச மே, ராயஸ்ச மே,

புஷ்டஞ்ச மே, புஷ்டிஸ்ச மே, விபு ச மே, ப்ரபு ச மே,
பஹு ச மே, பூயஸ்ச மே, பூர்ணஞ்ச மே ,
பூர்ணதரஞ்ச மே, க்ஷிதிஸ்ச மே, கூயவாஸ்ச மே,
ன்னஞ்ச மே, க்ஷúச்ச மே, வ்ரீஹயஸ்ச மே,

யவாAAஸ்ச மே, மாஷாAAஸ்ச மே, திலாAAஸ்ச மே,
முத்காஸ்ச மே, கல்வாAAஸ்ச மே, கோதூமாAAஸ்ச மே,

மஸுராAAஸ்ச மே, ப்ரியங்கவஸ்ச மே, ணவஸ்ச மே,
ஸ்யாமாகாAAஸ்ச மே, நீவாராAAஸ்ச மே
சமகம் - ஐந்தாவது அனுவாகம்
அஸ்மா ச மே, ம்ருத்திகா ச மே, கிரயஸ்ச மே,
பர்வதாஸ்ச மே, ஸிகதாஸ்ச மே, வனஸ்பதயஸ்ச மே,

ஹிரண்யஞ்ச மே, யஸ்ச மே, ஸீஸஞ்ச மே,
த்ரபுஸ்ச மே, ஸ்யாமஞ்ச மே, லோஹஞ்ச மே,

க்னிஸ்ச ம ஆபஸ்ச மே, வீருதஸ்ச ம ஓஷதயஸ்ச மே,
க்ருஷ்ட-பச்யஞ்ச மே, க்ருஷ்ட-பச்யஞ்ச மே,
க்ராம்யாஸ்ச மே, பஸவ ஆரண்யாஸ்ச யஜ்ஞேன கல்பந்தாம்,
வித்தஞ்ச மே, வித்திஸ்ச மே, பூதஞ்ச மே,

பூதிஸ்ச மே, வஸு ச மே, வஸதிஸ்ச மே,
கர்ம ச மே, ஸக்திஸ்ச மே,

ர்தஸ்ச ம ஏமஸ்ச ம இதிஸ்ச மே, கதிஸ்ச மே

சமகம் - ஆறாவது அனுவாகம் புற வாழ்க்கைக்கு தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்
அக்னிஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸோமஸ்ச ம இந்தரஸ்ச மே,
ஸவிதா ச ம இந்தரஸ்ச மே, ஸரஸ்வதீ ச ம இந்தரஸ்ச மே,

பூஷா ச ம இந்தரஸ்ச மே, ப்ரஹஸ்பதிஸ்ச ம இந்தரஸ்ச மே,
மித்ரஸ்ச ம இந்தரஸ்ச மே, வருணஸ்ச ம இந்தரஸ்ச மே,

த்வஷ்டா ச ம இந்தரஸ்ச மே, தாதா ச ம இந்தரஸ்ச மே,
விஷ்ணுஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸ்விநௌ ச ம இந்தரஸ்ச மே,
மருதஸ்ச ம இந்தரஸ்ச மே, விஸ்வே ச மே,
தேவா இந்தரஸ்ச மே, ப்ருதிவீ ச ம இந்தரஸ்ச மே,

ந்தரிக்ஷஞ்ச ம இந்தரஸ்ச மே, த்யௌஸ்ச ம இந்தரஸ்ச மே,
திஸஸ்ச ம இந்தரஸ்ச மே, மூர்தா ச ம இந்தரஸ்ச மே,
ப்ரஜாபதிஸ்ச ம இந்தரஸ்ச மே

சமகம் - ஏழாவது அனுவாகம் இக-பர அக வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து க்ரஹ தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்
அகும்ஸுஸ்ச மே, ரஸ்மிஸ்ச மே, தாAAப்யஸ்ச மே,
திபதிஸ்ச ம உபாஹும்ஸுஸ்ச மே,

ந்தர்யாமஸ்ச ம ஐந்த்ரவாயவஸ்ச மே,
மைத்ரா வருணஸ்ச ம ஆஸ்வினஸ்ச மே, ப்ரதிப்ரஸ்தானஸ்ச மே,

ஸுக்ரஸ்ச மே, மந்தீ ச ம ஆக்ரயணஸ்ச மே,
வைஸ்வதேவஸ்ச மே, த்ருவஸ்ச மே,
வைஸ்வாநரஸ்ச ம ருதுக்ரஹாஸ்ச மே, 
திக்ராஹ்யாAAஸ்ச ம ஐந்த்ராக்னஸ்ச மே, வைஸ்வதேவஸ்ச மே,

மருத்வதீயாAAஸ்ச மே, மாஹேந்த்ரஸ்ச ச ஆதித்யஸ்ச மே,
ஸாவித்ரஸ்ச மே, ஸாரஸ்வதஸ்ச மே, பௌஷ்ணஸ்ச மே,

பாத்னீவதஸ்ச மே, ஹாரியோஜனஸ்ச மே
சமகம் - எட்டாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டுதல்
இத்மஸ்ச மே, பர்ஹிஸ்ச மே, வேதிஸ்ச மே,
திஷ்ணியாஸ்ச மே, ஸ்ருசஸ்ச மே, சமஸாஸ்ச மே,

க்ராவாணஸ்ச மே, ஸ்வரவஸ்ச ம உபரவாஸ் ச மே,
திஷவணே ச மே, த்ரோணகலஸஸ்ச மே, வாயவ்யானி ச மே,
பூதப்ருச்ச ம ஆதவனீயஸ்ச ம ஆக்னீAAத்ரஞ்ச மே, ஹவிர்தானஞ்ச மே, க்ருஹாஸ்ச மே, ஸதஸ்ச மே, புரோடாஸாAAஸ்ச மே,
பசதாஸ்ச மே, வப்ருதஸ்ச மே, ஸ்வகா காரஸ்ச மே
சமகம் - ஒன்பதாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளுக்கான தேவதைகளின் அருளும், அவற்றைச் செய்வதற்கான மந்திர ஞானமும் வேண்டுதல்
அக்னிஸ்ச மே, கர்மஸ்ச மே, ர்க்கஸ்ச மே,
ஸூர்யஸ்ச மே, ப்ராணஸ்ச மே, ஸ்வமேதஸ்ச மே,

ப்ருதிவீ ச மே, திதிஸ்ச மே, திதிஸ்ச மே,
த்யௌஸ்ச மே, ஸக்வரீ-ரங்குலயோ திஸஸ்ச மே,

யஜ்ஞேன கல்பந்தாம், ருக்ச மே, ஸாம ச மே, ஸ்தோமஸ்ச மே, யஜுஸ்ச மே, தீக்ஷஆ  ச மே,
தபஸ்ச ம ருதஸ்ச மே, வ்ரதஞ்ச மே,
ஹோராத்ரயோர்-வ்ருஷ்ட்யா ப்ருஹத்ர தந்தரே ச மே,
யஜ்ஞேன கல்பேதாம்
சமகம் - பத்தாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளின் விளைவாகப் பல்வகைப் பலன்களும் செவ்வனே ஸித்திக்க வேண்டுதல்

கர்பாஸ்ச மே, வத்ஸாஸ்ச மே, த்ர்யவிஸ்ச மே,
த்ர்யவீ ச மே, தித்யவாட் ச மே, தித்யௌஹி ச மே,

பஞ்சாவிஸ்ச மே, பஞ்சாவீ ச மே, த்ரிவத்ஸஸ்ச மே,
த்ரிவத்ஸா ச மே, துர்யவாட் ச மே, துர்யௌ ஹீ ச மே,

பஷ்டவாட் ச மே, பஷ்டௌஹீ ச ம உக்ஷõ ச மே,
வஸா ச ம ருஷபஸ்ச மே, வேஹச்ச மே, நட்வாஞ்ச மே,
தேனுஸ்ச ம ஆயுர் யஜ்ஞேன கல்பதாம்,
ப்ராணோ யஜ்ஞேன கல்பதாம், அபானோ யஜ்ஞேன கல்பதாம்,

வ்யானோ யஜ்ஞேன கல்பதாம், சக்ஷúர் யஜ்ஞேன கல்பதாம்,
ஸ்தோத்ரம் யஜ்ஞேன கல்பதாம், மனோ யஜ்ஞேன கல்பதாம்,

வாக் யஜ்ஞேன கல்பதாம், ஆத்மா யஜ்ஞேன கல்பதாம்,
யஜ்ஞோ யஜ்ஞேன கல்பதாம்
சமகம் - பதினொன்றாவது அனுவாகம்
ஏகா ச மே, திஸ்ரஸ்ச மே, பஞ்ச ச மே, ஸப்த ச மே,
நவ ச ம ஏகாதஸ ச மே, த்ரயோதஸ ச மே, பஞ்சதஸ ச மே,

ஸப்ததஸ ச மே, நவதஸ ச ம ஏகவிஹும் ஸதிஸ்ச மே,
த்ரயோவிஹும் ஸதிஸ்ச மே, பஞ்சவிஹும் ஸதிஸ்ச மே,

ஸப்தவிஹும் ஸதிஸ்ச மே, நவவிஹும் ஸதிஸ்ச ம ஏகத்ரிஹும்  ஸச்ச மே,
த்ரயஸ்த்ரிஹும் ஸச்ச மே சதஸ்ரஸ்ச மே, ஷ்டௌ ச மே,
த்வாதஸ ச மே, ÷ஷாடஸ ச மே, விஹும் ஸதிஸ்ச மே,
சதுர்விஹும் ஸதிஸ்ச மே, ஷ்டாவிஹும் ஸதிஸ்ச மே, த்வாத்ரிஹும் ஸச்ச மே,

ஷட்த்ரிஹும் ஸச்ச மே, சத்வாரிஹும் ஸச்ச மே, சதுஸ்சத்வாரிஹும் ஸச்ச மே, ஷ்டாசத்வாரிஹும் ஸச்ச மே,
வாஜஸ்ச ப்ரஸவஸ்சாபிஜஸ்ச க்ரதுஸ்ச ஸுவஸ்ச மூர்தா ச
வ்யஸ்னியஸ் சாந்த்யாயனஸ் சாந்த்யஸ்ச பௌவனஸ்ச
புவனஸ்சாதிபதிஸ்ச
சொற் பிழை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் அகல
இடா தேவஹூர்-மனுர்-யஜ்ஞனீர்-ப்ருஹஸ்பதி-ருக்தாமதானி
சஹும்ஸஸிஷத் விஸ்வேதேவா: ஸூAAக்தவாச: ப்ருதிவி-மாதர்மா மா ஹிஹிகிம் ஸீர்-மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி மது மதீம்;   தேவேப்யோ வாசமுத்யாஸகும் ஸுஸ்ரூஷேண்யாAAம்;   மனுஷ்யேAAப்யஸ்-தம் மா தேவா அவந்து ஸோபாயை பிதரோனுமதந்து

#நன்றி :  #ஸ்ரீ_ருத்ரம்_நமகம்_சமகம்_தமிழ்.

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ப்ரதோஷஸ்தோத்ராஷ்டகம்

#ப்ரதோஷஸ்தோத்ராஷ்டகம்


ஸத்யம் ப்ரவீமி பரலோகஹிதம் ப்ரவீமி ஸாரம் ப்ரவீம்யுபநிஷத்த்ருதயம் ப்ரவீமி |
ஸம்ஸாரமுல்பணமஸாரமவாப்ய ஜந்தோ: ஸாரோ(அ)யமீச்வரபதாம்புருஹஸ்ய ஸேவா ||௧|| யே நார்சயந்தி கிரிசம் ஸமயே ப்ரதோஷே யே நார்சிதம் சிவமபி ப்ரணமந்தி சாந்யே |

ஏதத்கதாம் ச்ருதிபுடைர்ன பிபந்தி மூடாஸ்தே ஜன்மஜந்மஸு பவந்தி நரா தரித்ரா: ||௨|| யே வை ப்ரதோஷஸமயே பரமேஸ்வரஸ்ய குர்வந்த்யநந்யமநஸோம்(அ)க்ரிஸரோஜபூஜாம் |

நித்யம் ப்ரவ்ருத்ததநதாந்யகளத்ரபுத்ரஸௌபாக்யஸம்பததிகாஸ்த இஹைவ லோகே ||௩|| கைலாஸசைலபுவனே த்ரிஜகஜ்ஜனித்ரீம் கௌரீம் நிவேச்ய கநகாசிதரத்னபீடே |

ந்ருத்யம் விதாதுமமிவாஞ்சதி சூலபாணௌ தேவா: ப்ரதோஷஸமயே நு பஜந்தி ஸர்வே ||௪|| வாக்தேவீ த்ருதவல்லகீ சதமுகோ வேணும் ததத்பத்மஜஸ்தாலோந்நித்ரகரோ ரமா பகவதீ கேயப்ரயோகான்விதா |

விஷ்ணு: ஸாந்த்ரம்ரூதங்கவாதநபடுர்தேவா: ஸமந்தாத்ஸ்திதா: ஸேவந்தே தமநு ப்ரதோஷஸமயே தேவம் ம்ருடாநீபதிம் ||௫|| கந்தர்வயக்ஷபதகோரகஸித்தஸாத்யாவித்யாதராமரவராப்ஸரஸாம் கணாம்ச்ச | யே(அ)ந்யே த்ரிலோகநிலயா: ஸஹபூதவர்கா: ப்ராப்தே ப்ரதோஷஸமயே ஹரபார்ச்வஸம்ஸ்தா: ||௬|| அத: ப்ரதோஷே சிவ ஏக ஏவ பூஜ்யோ(அ)த நாந்யே ஹரிபத்மஜாத்யா: | தஸ்மின்மஹேசே விதிநேஜ்யமாநே ஸர்வே ப்ரஸீதந்தி ஸுராதிநாதா: ||௭|| ஏஷ தே தநய: பூர்வஜன்மநி ப்ராஹ்மணோத்தம: | ப்ரதிக்ரஹைர்வயோ நிந்யே ந தாநாத்யை: ஸுகர்மபி: ||௮|| அதோ தாரித்ர்யமாபந்ந: புத்ரஸ்தே த்விஜபாமிநி | தத்தோஷபரிஹாரார்தம் சரணம் யாது சங்கரம் ||௯||

இதி ஶ்ரீஸ்காந்தோக்தம் ப்ரதோஷஸ்தோத்ராஷ்டகம் சம்பூர்ணம் ||

#நன்றி  :  Shaivam.org.

லிங்காஷ்டகம்_

#லிங்காஷ்டகம்_


பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும்

உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த #லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது.
இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

1.  ☘பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்.
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு - இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

2.  ☘தேவ முனி ப்ரவாச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்.
ராவண தர்ப வினாக்ஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

3.  ☘ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்.
புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்.
சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

4.  ☘கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த நன்றி  தினமலர்  மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்.
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்.
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

5.  ☘குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்.
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்.
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

6.  ☘தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்.
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்.. நன்றி  தினமலர்.
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

7.  ☘அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்☘

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம்.
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்.
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

8.  ☘ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.☘

லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது.
யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால்,
சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும்.
சிவேந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.

#நன்றி  :  #தினமலர்.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...