Tuesday, 13 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம்🍀 :  9
ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல தத்வம்
நிச்சல தத்வே ஜீவன் முக்தி:

🍀#ஸாரம்🍀:
****************
ஸத்துக்களுடைய (புண்ணியாதமாக்கள்) கூட்டுறவு கிடைத்தால் பந்தபாசத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.  பந்தபாச விடுதலை நம்மை மோஹத்திலிருந்து (மாயை) விடுபட செய்யும்.  மோஹம் அகன்றால் ஸ்திரமாக உள்ள (நித்திய) வஸ்து விளங்கும்.  ஸ்திரமான வஸ்து விளங்கினால் அதுவே ஜீவன்முக்தி நிலை.

🍀#விளக்கம்🍀:
******************
ஆத்ம விசாரம் செய்ய ந்மக்கு வ்ழிகாட்டி வேண்டும்.  அதுதான் ஸத்துக்களுடைய சங்கம்.  அதாவது ந்ல் வழியில் செல்லும் ஞானிகளின கூட்டுறவு.  அப்படி அவர்களிடம் உறவு கொண்டால் அவர்கள் நம்க்கு வழிகாட்டுவார்கள்.  அப்படி அவர்கள் வழியில் சென்றால், பந்தபாசங்கள் ஒழியும். 

எப்படி?  மேலே சொன்ன ஆத்ம விசார பாதயில் செல்ல அவர்கள் நமக்கு உதவுவார்கள்.  அப்படி ஆத்மவிசாரம் செய்தால் மோஹம் (Deluision) அக்லும். அதாவது மாயை அகலும். அதாவது ஞானம் உதயமாகும். அப்படி மாயை அகன்று ஞானம் வந்தால் ஸ்திரமாக உள்ள நிச்சலமான வஸ்து (SELF)  ந்மக்கு புலப்படும். 

அப்படி புலப்பட்டால் அதுவே ந்மக்கு மன அமைய்தியை தந்து இந்த உடலில் இருக்கும்போதே ஜீவன்முக்த நிலையை தரும். இதைத்தான் ஸ்ரீ ரமணமஹர்ஷி "Self Realization"  என கூறியிருக்கிறார்.

 திருப்புகழ் என்ற கிரந்தத்தில் ஸ்ரீ அருணகிரி நாதர் "ஸ்வானுபூதி" என குறிப்பிட்டுள்ளாற். இதைத்தான் ஆட்ம ஸாக்ஷாத்க்காரம் என்று கூறுகிறார்கள்.  அதாவது தன்னை தானே அறிந்துகொள்வது.  இதுதான் நம் வாழ்க்கை லக்ஷியம்.

#பஜகோவிந்தம் #தொடரும்...................

#தொகுப்பு :🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...