Tuesday, 13 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீ #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம்🍀  :  8
காதே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரொயம் அதீவ விசித்ர:
கஸ்யத்வம் க: குத ஆயாத:
த்த்வம் சிந்தய த்திஹ ப்ராந்த:

🍀#ஸாரம்🍀:
***************
உன்னுடய ப்ரியதமன் அல்லது ப்ரியதமை யார்? யார் உன்னுடய புத்திரன்? இந்த ஸம்ஸார ஸாகர்ம் (குடும்பஜீவிதம்) அதி விசித்ரமாக உள்ளது.  நீ யாருடையவன்? நீ யார்? எங்கிருந்து வந்தாய்? இப்படி (வழ்க்கை) தத்துவத்தை பற்றி சிந்தனை செய் சகோதரா!

🍀விளக்கம்🍀:
*****************
இந்த ஸ்லோகம் மூலம் நம்மை ஆத்ம சிந்தனையில் ஈடுபட சொல்கிறார்.  யார் மனைவி அல்லது பர்த்தா?  யார் புத்திரன்? நான் யாருடையவன்?  நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், இந்த ஸம்ஸாரம் (குடும்ப பந்தம்) விசித்ரமாக உள்ளதே என்ற தத்வார்த்தமாக சிந்தனை செய் என பொருள்.

 ஸ்ரீ ரமண மஹர்ஷியின் "நான் யார்" என்ற நூலில் இதைத்தான் அவர் கூறுகிறார். முதலில் ந்ம்மை அறிந்துகொள்ள வேண்டும்.  இல்லையேல் உலக ஞானம் பூர்த்தியாகாது.  உலகத்தை அறிவதர்க்கு முன் யார் அறிகிறார்கள் என பார்க்க வேண்டும்.

(Know the Knower).  அதாவது பார்ப்பவனை (Subject) அறியுமுன் பாற்ப்பதை (Object)  அறிய இயலாது.  அந்த ஞான்ம் பூர்த்தியாகாது.. ஸ்ரீ சங்கரர் ஆத்ம விசாரத்தில் ந்ம்மை மூழ்க சொல்கிறார்.

#பஜகோவிந்தம் #தொடரும்..................

#தொகுப்பு  :  🍀#திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...