Tuesday, 20 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட #பஜகோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம் 🍀 :10
~~~~~~~~~~~~~~
வயஸி கதே க:காமவிகார:
சுஷ்கே நீரே க:காஸார:
க்ஷீணே வித்தே க:பரிவார:
ஞாதே தத்வே க:ஸம்ஸார:

🍀#ஸாரம்🍀:
***************
முதிர்ச்சி அடையும்போது (அதாவது சிறுவயது போய் வயதாகும்போது) என்ன காம விசாரம்? ஜலம் வற்றின் பிறகு எங்கே தடாகம் (ஏரி)? தனமில்லதாகும் பொழுது எங்கே சுற்றத்தார்கள்? (ஆத்ம) ஞானம் கிடைத்தபிறகு ஏது ஸம்ஸாரம்?

🍀#விளக்கம்🍀:
******************
உலக பந்தம் பலனில் அடங்கியது.  ந்மக்கு பலன் இல்லையேல் நாம் யாருடனும் குட்டுறவு வைத்துக்கொள்ள மாட்டோம். சிறுவயது போய் நாம் முதிர்ச்சி அடையும்போது நம்க்கு காம விசாரங்கள் அடங்கிவிடுகிறது.  முதியோர்களில் சிறுவர்களில் காணும் காம உணர்ச்சி அல்லது ஸல்லாபம் இருப்பதில்லை.

ஒரு தடாகத்தில் (ஏரி) ஜலம் முழுதும் வற்றிவிட்டால் அதர்க்கு தடாகம் என்ற பேர் போய்விடுகிறது. அதேபோல் ந்ம்மிடம் தனமில்லையேல் ந்ம உறவினர்கள் ந்ம்மை நாடி வரமாட்டார்கள்.  அதாவது நம் பொருளாதார நிலை போய் விட்டாள் சுற்றத்தார் விலகிவிடுவார்கள்.

ஆத்மஞானம் வந்து விட்டால் இந்த உலக வாழ்க்கை நமக்கு கிடையாது முன் சொன்ன ஸ்லோகத்தில் ஆத்ம ஞானம் பெற வழியை காண்பித்தார்.  எதர்க்காக ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்று இந்த ஸ்லோகத்திலும் அடுத்து வரும் ஸ்லோகங்களிலும் விவரிக்கிறார்.

#பஜகோவிந்தம்
#தொடரும்...............

🍀#தொகுப்பு : 🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...