Tuesday, 13 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஆதிசங்கர #பகவத் #பாதரால்இயற்றப்பட்ட #பஜகோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀
 
🍀#காவியம்🍀 : 5
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோsபின ப்ருச்சதி கேஹே
ஸாரம்:

உன்னால் எவ்வளவு காலம் சம்பாதிக்க முடியுமோ, அது நாள் வரை உன்னை சார்ந்தவர்கள் உன்னிடம் நெருங்கி பழகுவார்கள்.எப்பொழுது நரை விழுந்து தேஹம் நலிந்துபோகிறதோ அப்பொழுது யாரும்–உன் குடும்பத்தார் கூட-உன்னிடம் பேசமாட்டார்கள்

🍀விளக்கம்🍀:
****************
நாம் கண்கூடாக பார்க்கும் ஓர் சத்தியநிலையை எவ்வள்வு ஸுலபமாக சித்ரீகரித்திருக்கிறார்! நம்மால் எவ்வள்வு நாள் ஸம்பாதித்து பண் உதவி பண்ண இயலுகிறதோ அதாவது மற்றவருக்கு எவ்வளவு காலம் ந்ம்மால் உபயோகமுண்டோ அது வரை நம்மை சார்ந்தவர்கள் ந்ம்மிடம் ஒட்டி உறவாடுவார்கள்.

 உலக நியதிப்படி பார்த்தால், எல்லோரும் மற்றவ்ரிடம் உதவி எதிர்பார்த்து உறவு கொள்கிறார்கள்.  நமக்கு வயதாகி வந்து, நம் தேஹம் நரை கண்டு, க்ஷீணமாகி ந்ம்மால் மற்றவருக்கு உபயோகமில்லாமல ஆகிவிடும்பொழுது, நம் சொந்த குடும்பத்தினரும் கூட ந்ம்மிடம் ஒட்டி உற்வாட தயங்குவார்கள்.

 பேசுவதர்க்கு கூட அருகில் வர மாடார்கள்.  இதிலிருந்து, உலகத்தில் எந்த உறவும் சாச்வதமல்ல என்ற தத்துவத்தை மிக எளிதாக சுட்டிகாட்டியிருக்கிறார்.
--
#பஜகோவிந்தம் #தொடரும்.........
--
🍀#தொகுப்பு  :🍀 #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...