அக்ஷய திரிதியை ஸ்பெஷல் !
லக்ஷ்மீ நமநாஷ்டகம் !
|| ஓம்ʼ ஸ்ரீலக்ஷ்மீதே³வ்யை நம: ||
ஸ்ரீ லக்ஷ்மீ நமநாஷ்டகம்
நமஸ்கார மஹாமாயே, ஜக³ந்மாதே பராத்பரே ||
ஸ²ங்க² சக்ர க³தா³ ஹஸ்தே, லக்ஷ்மீமாதே நமோ ஸ்துதே || 1 ||
உயர்ந்தது அனைத்திலும் உயர்ந்தவளாம் உலகுக்கெல்லாம் தாய் அவளாம்
அன்புக்கரங்களில் சக்கரம், கதையும் அழகுச் சங்கும் தாங்கியவளாம்
மாயா சக்தியை தோற்றுவிக்கும் மஹாமாயை அவளாவாள்
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியை வணங்குகின்றேன்.
ஆதி³ நஹீʼ அந்த் நஹீʼ, ஆத்³யஸ²க்தி ஸச்முச் தூ ||
விஸ்²வாதா⁴ரே விஷ்ணூகாந்தே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 2 ||
முதலும் இல்லா முடிவும் இல்லா முழுமுதற் கடவுள் நிச்சயம் நீ !!
மூவுலகுக்கும் ஆதாரமாய் நிற்கும் மூலப் பொருளும் பத்மினி நீ !!
அலைகடல் துயிலும் திருமால் விரும்பும் அற்புதப் பொக்கிஷம் தேவி நீ!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.
ஸர்வ வ்யாபீ ஸர்வஸாக்ஷீ, ஸு²த்⁴த³ ஸத்வ ஸ்வரூபிணீ ||
ஸர்வஜ்ஞே ஸிந்து⁴ ஸம்பூ⁴தே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 3 ||
எங்கும் நிறைவாள் எதற்கும் சாட்சி என்னுயிர் நீயே ஸ்ரீலக்ஷ்மி!!
தூய நன் மனதில் குடி கொண்டருள்வாள் மன்னுயிர் மாதா ஸ்ரீலக்ஷ்மி!!
சாந்தரூபிணி சகலமும் அறிவாள் பாற்கடல் தந்த ஸ்ரீலக்ஷ்மி!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்
கமலே கமலநேத்ரே கோமலே கமலாஸநே ||
மங்க³லே முதி³தே முக்³தே⁴, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 4 ||
விழிகள் தாமரை, அமர்வதும் தாமரை, நிறமும் தாமரை, தாமரை நீ!!
மாதவன் கருணை உயிர்களுக்களித்திடும் மங்கல உருவாம் அம்பிகை நீ!!
முக்தியளித்திடும் மூலமும் நீயே மூவுலகும் தொழும் அற்புதம் நீ!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.
ஸு²ப்⁴ர வஸ்த்ர தா⁴ரிணீ ஹே, க³ருட³த்⁴வஜ பா⁴மிநீ ||
தி³வ்யாலங்கார பூ⁴ஷிதே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 5 ||
தூயநல் ஆடை அணிந்தே அருள்வாய், தூயவள் நீயே திருமகளே!!
திறமிகு கருடனைக் கொடியில் கொண்டாய் திருவருள் நீயே திருமகளே!!
அலங்கார ரூபிணி, அன்புக் கடல் நீ, கருணை பொழிவாய் திருமகளே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.
ஸர்வ து³:க² ஹரே தே³வீ, பு⁴ஜங்க³ ஸ²யநாங்க³நே ||
ப⁴க³வதீ பா⁴க்³யதா³த்ரீ, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 6 ||
துக்கக் கடலில் மூழ்கிடுவோரின் துயரம் தீர்ப்பாய் பொன்மகளே!!
அரவினில் துயிலும் அன்பன் மனதில் அகலாதுறையும் அலைமகளே!!
பகவதி நீயே பாக்கியம் தந்திடும் பரம்பொருள் நீயே திருமகளே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்
ஸித்³தி⁴பு³த்³தி⁴ பு⁴க்திமுக்தி ஸந்ததீ ஸுக²ஸம்பதா³ ||
ஆயுராரோக்³யஹி தே³நேவாலீ லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 7 ||
சித்தியும் புத்தியும் தந்திடுவாய் நீ சிறப்புகள் தருவாய் அருளமுதே!!
இகபர சுகமும் இனிதான ஆயுளும் இணையாய் அருள்வாய் இன்னமுதே!!
மழலை பாக்கியமும், மனம்நிறை வாழ்வும் மகிழ்ந்தே தருவாய் தெள்ளமுதே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.
நமோ நம: மஹாலக்ஷ்மீ த⁴நவைப⁴வதா³யகே ||
தை³ந்ய ஹமாரே தூ³ர கரோ, ப்ரார்தீ² மிலிந்த³ மாத⁴வ || 8 ||
பொருளை அருளும் பொற்செல்வி, புகழும் அருள்வாய் தாயே நீ!!
ஏழ்மை அகற்றி ஏற்றம் தருவாய் என் துணை வருவாய் தாயே நீ!!
வைபவம் அருளும் வைபவ லக்ஷ்மி வளங்கள் தருவாய் தாயே நீ !!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.
பட²ந - ஸ்²ரவண பா⁴வே நித்ய கரே நமநாஷ்டகா ||
மநோகாமநா ப்ராப்த ஹோ, ஸத்ய ஸ்²ரத்⁴தா³யுக்த பா⁴வுகா || 9 ||
நல்லன அருளும் நமனாஷ்டகம் இதை நாளும் துதித்து நலம் பெறுவோம்!!
பக்தியாய் படித்தாலும் படிப்பதைக் கேட்டாலும் பவவினை தீரும் சுகமடைவோம்!!
நிதமும் துதித்து நமஸ்கரித் தெழுந்தால் நிலமெல்லாம் போற்றும் நிச்சயமே!!
நினைப்பது நடக்கும் கேட்டது கிடைக்கும் திருமகள் அருள்வாள் சத்தியமே!!
ஸ்ரீ லக்ஷ்மீ நமநாஷ்டகத்தின் தமிழ் விளக்கத்தை கவிதையாக வடிவமைத்த பெருமை திருமதி. பார்வதி ராமச்சந்திரன் அவர்களையே சாரும்.
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ..
No comments:
Post a Comment