Thursday, 11 February 2021

சியாமளா நவரத்ன மாலிகா

சியாமளா நவரத்ன மாலிகா


1)ஓங்கார பஞ்சரசுகீம் உபநிஷதுத்யான கேலிகலகண்டீம் /

ஆகமவிபிநமயூரீம் ஆர்யாம் அந்தர்விபாவயே கௌரீ/


ஓங்காரக் கூட்டிலுறை பைங்கிளியே!-உபநிடதப் 

பூங்காவில் கூவுங்குயிலே!

சாத்திரக்காட்டிலே சஞ்சரிக்கும் மயிலே!

சான்றோர் தொழும் ஷ்யாமளே! 


2)தயமான தீர்க்க நயநாம் தேசிகரூபேண தர்சிதாப்யுதயாம்/

வாமகுசநிஹிதவீணாம் வரதாம் சங்கீதமாத்ருகாம் வந்தே/


நல்லருள் பொழியும் நீள்விழியாளே! ஆசானாய் 

நன்னெறி புகட்டும் அன்னையே!

வீணை தழுவு மேனியளே!கானம் பிறப்பித்தவளே!

சரணம்!வரந்தரும் சங்கரி ! 


3)ச்யாமதனு ஸௌகுமார்யாம் சௌந்தர்யானந்த ஸம்பதுன்மேஷாம்/

தருணிமகருணா பூராம் மதஜலகல்லோலலோசனாம் வந்தே!


பேரழகு,இன்பம்,பொருள்,அனைத்துக்கும் மூலமே!

கார்வண்ண எழிற்கோலமே !

பொங்கும் கருணைக்கடலே!ஆனந்தக்கண்ணீர் 

தங்கும் விழியாளே!தொழுதேன்!


4)நகமுகமுகரிதவீணா நாதரஸாஸ்வாதநவனவோல்லாஸம்/

முகமம்ப மோதயது மாம் முக்தாதாடங்க முக்தஹஸிதம் தே/


நகநுனிகள் வீணைமீட்ட, நாதந்தரும் இனியசுகம்

முகப்பொலிவை மேலுங்கூட்ட,

முத்துத்தோடணிந்தொளிரும் உன்வதனம் கண்டெனது

சித்தம் சிலிர்த்தாடவேண்டும்! 


5) ஸரிகமபதநி ரதாம் தாம் வீணாஸங்க்ராந்தஹஸ்தாம் தாம்/

சாந்தாம் ம்ருதல ஸ்வாந்தாம் குசபரதாந்தாம் நமாமிசிவகாந்தாம் /


ஏழுசுர இன்பத்தில் திளைப்பவளே!-வீணைவிட்டு 

நழுவாத விரல்நுனியளே !

அமைதியுறை கனிவுநிறை மனத்தாளே!- தாய்மை பொங்கும் 

தனத்தாளே!சிவகாமியே!!


6)அவடுதடகடிதசூலி தாடித தாளீபலாச தாடங்காம்/

வீணா வாதனவேலாகம்பித சிரசம் நமாமி மாதங்கீம்/


பின்னிமுடித்த கூந்தல்,பனங்குருத்துக் காதணியை 

மென்மையாய்த் தீண்டி வருட,

வீணை மீட்டித் தலையாட்டி ரசிக்கும் பஞ்ச 

பாணி!நின் பதம் பணிந்தேன்!


7) வீணாரவானுஷங்கம் விகசமுகாம் போஜமாதுரீப்ருங்கம் /

கருணாபூரதரங்கம் கலயே மாதங்ககன்யகாபாங்கம்/ 


வீணைநாதம்போல் இதமானதாம்--முகக்கமலத் 

தேன் மொய்க்கும் வண்டொத்ததாம்,

கருணையலை மோதுமுன் கடைக்கண்களில் மனம் 

ஒருமித்தேன் மதங்கன் மகளே! 


8)மணிபங்கமேசகாங்கீம் மாதங்கீம் நௌமி ஸித்தமாதங்கீம்/

யௌவனவனஸாரங்கீம் ஸங்கீதாம்போருஹானு பவப்ருங்கீம் / 


நீலமணிபோலொளிரும் மேனியளே!மாமுனியாம் 

மதங்கனின் இனிய மகளே!

இளமையெனும் வனத்து மானே!பூவண்டென 

இசைக்கமலம் நுகரும் மாதே! 


9)மேசகமாஸேசனகம் மித்யாத்ருஷ்டாந்த மத்யபாகம் தத்/

மாதஸ்தவஸ்வரூபம் மங்கள சங்கீத ஸௌரபம் மன்யே/


பார்க்கத்திகட்டா நீலமேனியளே!கண்ணுக்குப் 

புலப்படா நுண்ணிடையளே!

போற்றாதோரே இல்லாப்பேரழகி!சங்கீத 

ஸாரத்தின் வடிவே !சரணம்!


அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

ருத்ரம் ஸ்லோகம்


☘#ஸ்ரீருத்ரம்_நமகம்_சமகம்_ஸ்லோகங்கள்_முழுவதும்☘
--
☘#ஸ்ரீ_கணபதி_த்யானம்☘
--
ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:
ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
--
அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய,
அகோர ருஷி:   அனுஷ்டுப் சந்த:
ஸங்கர்ஷண - மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய:
பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா
நம: ஸிவாயேதி பீஜம்:
ஸிவதராயேதி ஸக்தி:  மஹா-தேவாயேதி கீலகம்:   ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத சித்யர்தே ஜபே விநியோக:
--
#சாந்தி_பாடம்
ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே,
ஸெளமன ஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே,
யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே,
தர்தா ச மே, க்ஷேமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே,

மஹஸ்ச மே, ஸம்விச்ச மே,  ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே,  ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே,

யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே,  தீர்காயுத்வஞ்ச மே,
நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே,
ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி: 
ஓம் நமோ பகவதே ருத்ராய
ஓம் நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம:
நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முத தே நம:

யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு:
ஸிவா ஸரவ்யா யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா

யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோர பாப காஸினீ
தயா நஸ்-தனுவா ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி
யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே
ஸிவாம் கிரித்ர தாம் குரு மா ஹிஹிம் ஸீ: புருஷம் ஜகது

ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி
யதா ந: ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்மகம் ஸுமனா அஸது

அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷகு
அஹீஸ்ச ஸர்வாAAன் ஜம்பயன்த்-ஸர்வாAAஸ்ச யாது தான்ய:
அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல:

யே சேமாஹும் ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷாஹும்  ஹேட ஈமஹே

அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித:
உதைனம் கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய:

உதைனம் விஸ்வா பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:
நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷாய மீடுஷேAA

அதோ யே அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:
ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம்

யாஸ்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப
அவதத்ய தனுஸ்த்வஹம் ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே
நிஸீர்ய ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ
விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ
பாணவாஹம் உத

அநேஸந் நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:
யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு:

தயா ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ
நமஸ்தே அஸ்த்வாயு தாயானா ததாய த்ருஷ்ணவேAA
உபாப்-யாமுத தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே
பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத:
அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்
சம்பவே நம:
நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய
ஸதாஸிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:
இரண்டாவது அனுவாகம்
நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திஸாம் ச பதயே நமோ
நமோ வ்ரு க்ஷேப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ

நம: ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ
நமோ பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ

நமோ ஹரிகேஸாயோ பவீ திநே புஷ்டானாம் பதயே நமோ
நமோ பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ
நமோ ருத்ராயா ததாவிநே க்ஷேத்ராணாம் பதயே நமோ
நமோ ஸூதாயா ஹந்த்யாய வனானாம் பதயே நமோ

நமோ ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷாணாம் பதயே நமோ
நமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷாணாம் பதயே நமோ
நமோ புவந்தயே வாரிவஸ்க்ருதா யௌஷதீனாம் பதயே நமோ
நம: உச்சைர் கோஷாயா க்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ
நம: க்ருத்ஸ்ன வீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:
மூன்றாவது அனுவாகம்
நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதி நீனாம் பதயே நமோ
நம: ககுபாய நிஷங்கிணே AA ஸ்தேநானாம் பதயே நமோ

நமோ நிஷங்கிண இஷுதி மதே தஸ்கராணாம் பதயே நமோ
நமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ

நமோ நிசேரவே பரிசராயா ரண்யானாம் பதயே நமோ
நம: ஸ்ரு காவிப்யோ ஜிகாஹும் ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ
நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ
நம: உஷ்ணீ ஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ

நம: இஷுமத்ப்யோ தன் வாவிப்யஸ்ச வோ நமோ
நம ஆதன்வானேப்ய: ப்ரதித தானேப்யஸ்ச வோ நமோ
நம ஆயச்சத்ப்யோ விஸ்ரு ஜத்ப்யஸ்ச வோ நமோ
நமோ ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ

நம ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ
நமஸ் ஸ்வபத்யோ ஜாக்ரத் ப்யஸ்ச வோ நமோ
நம திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ
நம: ஸபாப்ய: ஸபா பதிப்யஸ்ச வோ நமோ
நமோ அஸ்வேப்யோ ஸ்வ பதிப்யஸ்ச வோ நம:
நான்காவது அனுவாகம்
நம ஆவ்யாதினீAAப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ
நம உகணாப்யஸ்-த்ரு ஹம்தீப்யஸ்ச வோ நமோ

நமோ க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ
நமோ வ்ராதேAAப்யோ வ்ராத பதிப்யஸ்ச வோ நமோ

நமோ கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ
நமோ விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ
நமோ மஹத்ப்ய: க்ஷúல்ல கேப்யஸ்ச வோ நமோ
நமோ ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ

நமோ ரதேAAப்யோ ரதபதிப்யஸ்ச வோ நமோ
நமோ ஸேநாப்AAய: ஸேநானிப்யஸ்ச வோ
நமோ க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ
நமஸ் தக்ஷப்யோ ரதகாரேAAப்யஸ்ச வோ நமோ
நம: குலாலேப்ய: கர்மாரேAAப்யஸ்ச வோ நமோ
நம புஞ்ஜிஷ்டேAAப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ
நம இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ

நமோ ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ
நம: ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:
ஐந்தாவது அனுவாகம்
நமோ பவாய ச ருத்ராய ச
நம: ஸர்வாய ச பஸுபதயே ச
நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச
நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச
நம: ஸஹஸ்ராக்ஷாய ச ஸததன்வனே ச
நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச
நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச
நமோ ஒ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச
நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச
நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச
நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச
நம ஆஸவே சாஜிராய ச
நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச
நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச
நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச
ஆறாவது அனுவாகம்
நமோ ஒ  ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச
நம: பூர்வஜாய சாபரஜாய ச
நமோ மத்யமாய சாபகல்பாய ச
நமோ ஜகன்யாய ச புத்னியாய ச
நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச
நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச
நம உர்வர்யாய ச கல்யாய ச
நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச
நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச
நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச
நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச
நம: ஸூராய சாவபிந்ததே ச
நமோ வர்மிணே ச வரூதினே ச
நமோ பில்மினே ச கவசினே ச
நமஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச
ஏழாவது அனுவாகம்
நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச
நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச
நமோ தூதாய ச ப்ரஹிதாய ச
நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச
நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச
நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச
நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச
நம: காட்யாய ச நீப்யாய ச
நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச
நமோ நாத்யாய ச வைஸந்தாய ச
நம: கூப்யாய சாவட்யாய ச
நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச
நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச
நம ஈத்ரியாய சாதப்யாய ச
நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச
நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச

எட்டாவது அனுவாகம்
நம: ஸோமாய ச ருத்ராய ச
நம: தாம்ராய சாருணாய ச
நம: ஸங்காய ச பஸுபதயே ச
நம உக்ராய ச பீமாய ச
நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச
நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச
நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ
நமஸ்தாராய
நம: ஸம்பவே ச மயோபவே ச
நம: ஸங்கராய ச மயஸ்கராய ச
நம: ஸிவாய ச ஸிவதராய ச
நம: தீர்த்யாய ச கூல்யாய ச
நம: பார்யாய சாவார்யாய ச
நம: ப்ரதரணாய சோத்தரனாய ச
நம ஆதார்யாய சாலாத்யாய ச
நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச
நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச
ஒன்பதாவது அனுவாகம்
நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச
நம: கிகிம்ஸிலாய ச க்ஷயணாய ச
நம: கபர்திநே ச புலஸ்தயே ச
நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச
நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச
நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச
நமோ  ஒ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச
நம: பாகம்ஸவ்யாய ச ரஜஸ்யாய ச
நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச
நமோ லோப்யாய சோலப்யாய ச
நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச
நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச
நமோ பகுரமாணாய சாபிக்நதே ச
நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச
நமோ வ: கிரி கேப்யோ தேவானா ஹ்ம்ருதயேப்யோ
நமோ விக்ஷீண கேப்யோ,
நமோ விசின்வத் கேப்யோ
நம ஆநிர்ஹதேப்யோ
நம ஆமீவத்கேப்யஹ

பத்தவாது அனுவாகம்
த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித
ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர் மாரோ
மோ ஏஷாம் கிஞ்சநாமமது
யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ
ஸிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே AA
இமாஹும் ருத்ராய தவஸே கபர்தினே AA க்ஷயத்வீராய
ப்ரபராமஹே மதிம்
யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்ன னாதுரம்
ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய
நமஸா விதேம தே
யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ
மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த
முத மா ந உக்ஷிதம்
மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:
மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ
அஸ்வேஷு ரீரிஷ:
வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே
ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய
ஸும்ன-மஸ்மே தே அஸ்து
ரக்ஷா ச நோ அதி ச தேவ ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா: AA
ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு
முக்ரம்
ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா: AA
பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி-
ரகாயோ: ஹோ
அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய
மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ
பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி,  விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ:
யாஸ்தே ஸஹஸ்ரஹ்ம் ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா: ஹா
ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய:
தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி
பதினொன்றாவது அனுவாகம்
ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாAAம்
தேஷாஹும் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

அஸ்மின் மஹத்யர்ணவேAA ந்தரிக்ஷேபவா அதி
நீலக்ரீவா: ஸிதிகண்டா: AA ஸர்வா  அத: க்ஷமாசரா: ஹா

நீலக்ரீவா: ஸிதிகண்டா திவஹும் ருத்ரா உபஸ்ரிதா: ஹா
யே வ்ருக்ஷேக்ஷு ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலோஹிதா: ஹா
யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின:
யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனானு

யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத:
யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண:

ய ஏதாவந்தஸ்ச பூயாஹ்ம் ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே
தேஷாஹ்ம் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே AAந்தரி÷க்ஷ யே திவி
யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ

தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ
நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ

த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி
எங்குமாய் யாவுமாய் உள்ள முக்கண்ணனை நமஸ்கரித்தல்
த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்
ம்ருத்யோர் - முக்ஷீய – மாம்ருதாAAது
யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு
யோ ருத்ர விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து
தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி பேஷஜஸ்ய
யக்ஷ்வாAAமஹே ஸெளஹுமனஸாய ருத்ரம் நமோAAபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய
அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தர:
அயம் மேAA விஸ்வ பேAAஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:

யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே
 தான் யஜ்ஞஸ்ய மாயயா ஸர்வானவ யஜாமஹே

ம்ருத்யவே ஸ்வாஹா ம்ருத்யவே ஸ்வாஹாAA
ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர்-மே பாஹி
ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக:
தேனான் னேனாAAப்யாயஸ்வ; சதாசிவோம்
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஸ்ரீருத்ரம் சமக ப்ரச்னம்
(வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனை) சமகம் - முதல் அனுவாகம்
அக்னிதேவரையும் விஷ்ணுவையும் வேண்டிக்கொண்டு தொடங்குதல்
ஓம் அக்னா விஷ்ணூ ஸஜோஷஸேமா வர்தந்து வாம் கிர:
த்யும்னைர் வாஜே பிராகதம்
இந்திரியங்களின் நலன்களை வேண்டுதல்
வாஜஸ்ச மே, ப்ரஸவஸ்ச மே, ப்ரயதிஸ்ச மே,
ப்ரஸிதிஸ்ச மே, தீதிஸ்ச மே, க்ரதுஸ்ச மே,
ஸ்வரஸ்ச மே, ஸ்லோகஸ்ச மே, ஸ்ராவஸ்ச மே,
ஸ்ருதிஸ்ச மே, ஜ்யோதிஸ்ச மே, ஸுவஸ்ச மே,

ப்ராணஸ்ச மே, பானஸ்ச மே, வ்யானஸ்ச மே,
ஸுஸ்ச மே, சித்தஞ்சம ஆதிதஞ்ச மே, வாக்ச மே,

மனஸ்ச மே, சக்ஷúஸ்ச மே, ஸ்ரோத்ரஞ்ச மே,
தக்ஷஸ்ச மே, பலஞ்சம ஓஜஞ்ச மே, ஸஹஸ்ச ம ஆயுஸ்ச மே,
ஜரா ச ம ஆத்மா ச மே, தனூஸ்ச மே, ஸர்ம ச மே,
வர்ம ச மே, ங்கானி ச மே, ஸ்தானி ச மே,
பரூஹும் ஷி ச மே, ஸரீராணி ச மே

சமகம் - இரண்டாவது அனுவாகம்
செல்வச் செழிப்பு வேண்டுதல்

ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே, மன்யுஸ்ச மே,
பாமஸ்ச மே, மஸ்ச மே, ம்பஸ்ச மே,

ஜேமா ச மே, மஹிமா ச மே, வரிமா ச மே,
ப்ரதிமா ச மே, வர்ஷ்மா ச மே, த்ராகுயா ச மே,

வ்ருத்தஞ்ச மே, வ்ருத்திஸ்ச மே, ஸத்யஞ்ச மே,
ஸ்ரத்தா ச மே, ஜகச்ச மே, தனஞ்ச மே,
வஸஸ்ச மே, த்விஷிஸ்ச மே, க்ரீடா ச மே,
மோதஸ்ச மே, ஜாதஞ்ச மே, ஜநிஷ்யமாணஞ்ச மே,

ஸூக்தஞ்ச மே, ஸுக்ருதஞ்ச மே, வித்தஞ்ச மே,
வேத்யஞ்ச மே, பூதஞ்ச மே, பவிஷ்யச்ச மே,

ஸுகஞ்ச மே, ஸுபதஞ்ச மருத்தஞ்ச மருத்திஸ்ச மே,
க்லுப்தஞ்ச மே, க்லுப்திஸ்ச மே, மதிஸ்ச மே, ஸுமதிஸ்ச மே
சமகம் - மூன்றாவது அனுவாகம் - இகவாழ்க்கை நலன்களை வேண்டுதல்
ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே,
னுகாமஸ்ச மே, காமஸ்ச மே, ஸெளமனஸஸ்ச மே,

பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே,
பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, தர்தா ச மே,

÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,
ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே,
ப்ரஸூஸ்ச மே, ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே,
ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே,

ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே, நமித்ரஞ்ச மே,
பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே,
ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே
சமகம் - நான்காவது அனுவாகம் உணவு மற்றும் விவசாய நலன்களை வேண்டுதல்

ஊர்க் ச மே, ஸூந்ருதா ச மே, பயஸ்ச மே, ரஸஸ்ச மே,
க்ருதஞ்ச மே, மது ச மே, ஸக்திஸ்ச மே,

ஸபீதிஸ்ச மே, க்ருஷிஸ்ச மே, வ்ருஷ்டிஸ்ச மே,
ஜைத்ரஞ்ச ம ஒளத்பித்யஞ்ச மே, ரயிஸ்ச மே, ராயஸ்ச மே,

புஷ்டஞ்ச மே, புஷ்டிஸ்ச மே, விபு ச மே, ப்ரபு ச மே,
பஹு ச மே, பூயஸ்ச மே, பூர்ணஞ்ச மே ,
பூர்ணதரஞ்ச மே, க்ஷிதிஸ்ச மே, கூயவாஸ்ச மே,
ன்னஞ்ச மே, க்ஷúச்ச மே, வ்ரீஹயஸ்ச மே,

யவாAAஸ்ச மே, மாஷாAAஸ்ச மே, திலாAAஸ்ச மே,
முத்காஸ்ச மே, கல்வாAAஸ்ச மே, கோதூமாAAஸ்ச மே,

மஸுராAAஸ்ச மே, ப்ரியங்கவஸ்ச மே, ணவஸ்ச மே,
ஸ்யாமாகாAAஸ்ச மே, நீவாராAAஸ்ச மே
சமகம் - ஐந்தாவது அனுவாகம்
அஸ்மா ச மே, ம்ருத்திகா ச மே, கிரயஸ்ச மே,
பர்வதாஸ்ச மே, ஸிகதாஸ்ச மே, வனஸ்பதயஸ்ச மே,

ஹிரண்யஞ்ச மே, யஸ்ச மே, ஸீஸஞ்ச மே,
த்ரபுஸ்ச மே, ஸ்யாமஞ்ச மே, லோஹஞ்ச மே,

க்னிஸ்ச ம ஆபஸ்ச மே, வீருதஸ்ச ம ஓஷதயஸ்ச மே,
க்ருஷ்ட-பச்யஞ்ச மே, க்ருஷ்ட-பச்யஞ்ச மே,
க்ராம்யாஸ்ச மே, பஸவ ஆரண்யாஸ்ச யஜ்ஞேன கல்பந்தாம்,
வித்தஞ்ச மே, வித்திஸ்ச மே, பூதஞ்ச மே,

பூதிஸ்ச மே, வஸு ச மே, வஸதிஸ்ச மே,
கர்ம ச மே, ஸக்திஸ்ச மே,

ர்தஸ்ச ம ஏமஸ்ச ம இதிஸ்ச மே, கதிஸ்ச மே

சமகம் - ஆறாவது அனுவாகம் புற வாழ்க்கைக்கு தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்
அக்னிஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸோமஸ்ச ம இந்தரஸ்ச மே,
ஸவிதா ச ம இந்தரஸ்ச மே, ஸரஸ்வதீ ச ம இந்தரஸ்ச மே,

பூஷா ச ம இந்தரஸ்ச மே, ப்ரஹஸ்பதிஸ்ச ம இந்தரஸ்ச மே,
மித்ரஸ்ச ம இந்தரஸ்ச மே, வருணஸ்ச ம இந்தரஸ்ச மே,

த்வஷ்டா ச ம இந்தரஸ்ச மே, தாதா ச ம இந்தரஸ்ச மே,
விஷ்ணுஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸ்விநௌ ச ம இந்தரஸ்ச மே,
மருதஸ்ச ம இந்தரஸ்ச மே, விஸ்வே ச மே,
தேவா இந்தரஸ்ச மே, ப்ருதிவீ ச ம இந்தரஸ்ச மே,

ந்தரிக்ஷஞ்ச ம இந்தரஸ்ச மே, த்யௌஸ்ச ம இந்தரஸ்ச மே,
திஸஸ்ச ம இந்தரஸ்ச மே, மூர்தா ச ம இந்தரஸ்ச மே,
ப்ரஜாபதிஸ்ச ம இந்தரஸ்ச மே

சமகம் - ஏழாவது அனுவாகம் இக-பர அக வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து க்ரஹ தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்
அகும்ஸுஸ்ச மே, ரஸ்மிஸ்ச மே, தாAAப்யஸ்ச மே,
திபதிஸ்ச ம உபாஹும்ஸுஸ்ச மே,

ந்தர்யாமஸ்ச ம ஐந்த்ரவாயவஸ்ச மே,
மைத்ரா வருணஸ்ச ம ஆஸ்வினஸ்ச மே, ப்ரதிப்ரஸ்தானஸ்ச மே,

ஸுக்ரஸ்ச மே, மந்தீ ச ம ஆக்ரயணஸ்ச மே,
வைஸ்வதேவஸ்ச மே, த்ருவஸ்ச மே,
வைஸ்வாநரஸ்ச ம ருதுக்ரஹாஸ்ச மே, 
திக்ராஹ்யாAAஸ்ச ம ஐந்த்ராக்னஸ்ச மே, வைஸ்வதேவஸ்ச மே,

மருத்வதீயாAAஸ்ச மே, மாஹேந்த்ரஸ்ச ச ஆதித்யஸ்ச மே,
ஸாவித்ரஸ்ச மே, ஸாரஸ்வதஸ்ச மே, பௌஷ்ணஸ்ச மே,

பாத்னீவதஸ்ச மே, ஹாரியோஜனஸ்ச மே
சமகம் - எட்டாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டுதல்
இத்மஸ்ச மே, பர்ஹிஸ்ச மே, வேதிஸ்ச மே,
திஷ்ணியாஸ்ச மே, ஸ்ருசஸ்ச மே, சமஸாஸ்ச மே,

க்ராவாணஸ்ச மே, ஸ்வரவஸ்ச ம உபரவாஸ் ச மே,
திஷவணே ச மே, த்ரோணகலஸஸ்ச மே, வாயவ்யானி ச மே,
பூதப்ருச்ச ம ஆதவனீயஸ்ச ம ஆக்னீAAத்ரஞ்ச மே, ஹவிர்தானஞ்ச மே, க்ருஹாஸ்ச மே, ஸதஸ்ச மே, புரோடாஸாAAஸ்ச மே,
பசதாஸ்ச மே, வப்ருதஸ்ச மே, ஸ்வகா காரஸ்ச மே
சமகம் - ஒன்பதாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளுக்கான தேவதைகளின் அருளும், அவற்றைச் செய்வதற்கான மந்திர ஞானமும் வேண்டுதல்
அக்னிஸ்ச மே, கர்மஸ்ச மே, ர்க்கஸ்ச மே,
ஸூர்யஸ்ச மே, ப்ராணஸ்ச மே, ஸ்வமேதஸ்ச மே,

ப்ருதிவீ ச மே, திதிஸ்ச மே, திதிஸ்ச மே,
த்யௌஸ்ச மே, ஸக்வரீ-ரங்குலயோ திஸஸ்ச மே,

யஜ்ஞேன கல்பந்தாம், ருக்ச மே, ஸாம ச மே, ஸ்தோமஸ்ச மே, யஜுஸ்ச மே, தீக்ஷஆ  ச மே,
தபஸ்ச ம ருதஸ்ச மே, வ்ரதஞ்ச மே,
ஹோராத்ரயோர்-வ்ருஷ்ட்யா ப்ருஹத்ர தந்தரே ச மே,
யஜ்ஞேன கல்பேதாம்
சமகம் - பத்தாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளின் விளைவாகப் பல்வகைப் பலன்களும் செவ்வனே ஸித்திக்க வேண்டுதல்

கர்பாஸ்ச மே, வத்ஸாஸ்ச மே, த்ர்யவிஸ்ச மே,
த்ர்யவீ ச மே, தித்யவாட் ச மே, தித்யௌஹி ச மே,

பஞ்சாவிஸ்ச மே, பஞ்சாவீ ச மே, த்ரிவத்ஸஸ்ச மே,
த்ரிவத்ஸா ச மே, துர்யவாட் ச மே, துர்யௌ ஹீ ச மே,

பஷ்டவாட் ச மே, பஷ்டௌஹீ ச ம உக்ஷõ ச மே,
வஸா ச ம ருஷபஸ்ச மே, வேஹச்ச மே, நட்வாஞ்ச மே,
தேனுஸ்ச ம ஆயுர் யஜ்ஞேன கல்பதாம்,
ப்ராணோ யஜ்ஞேன கல்பதாம், அபானோ யஜ்ஞேன கல்பதாம்,

வ்யானோ யஜ்ஞேன கல்பதாம், சக்ஷúர் யஜ்ஞேன கல்பதாம்,
ஸ்தோத்ரம் யஜ்ஞேன கல்பதாம், மனோ யஜ்ஞேன கல்பதாம்,

வாக் யஜ்ஞேன கல்பதாம், ஆத்மா யஜ்ஞேன கல்பதாம்,
யஜ்ஞோ யஜ்ஞேன கல்பதாம்
சமகம் - பதினொன்றாவது அனுவாகம்
ஏகா ச மே, திஸ்ரஸ்ச மே, பஞ்ச ச மே, ஸப்த ச மே,
நவ ச ம ஏகாதஸ ச மே, த்ரயோதஸ ச மே, பஞ்சதஸ ச மே,

ஸப்ததஸ ச மே, நவதஸ ச ம ஏகவிஹும் ஸதிஸ்ச மே,
த்ரயோவிஹும் ஸதிஸ்ச மே, பஞ்சவிஹும் ஸதிஸ்ச மே,

ஸப்தவிஹும் ஸதிஸ்ச மே, நவவிஹும் ஸதிஸ்ச ம ஏகத்ரிஹும்  ஸச்ச மே,
த்ரயஸ்த்ரிஹும் ஸச்ச மே சதஸ்ரஸ்ச மே, ஷ்டௌ ச மே,
த்வாதஸ ச மே, ÷ஷாடஸ ச மே, விஹும் ஸதிஸ்ச மே,
சதுர்விஹும் ஸதிஸ்ச மே, ஷ்டாவிஹும் ஸதிஸ்ச மே, த்வாத்ரிஹும் ஸச்ச மே,

ஷட்த்ரிஹும் ஸச்ச மே, சத்வாரிஹும் ஸச்ச மே, சதுஸ்சத்வாரிஹும் ஸச்ச மே, ஷ்டாசத்வாரிஹும் ஸச்ச மே,
வாஜஸ்ச ப்ரஸவஸ்சாபிஜஸ்ச க்ரதுஸ்ச ஸுவஸ்ச மூர்தா ச
வ்யஸ்னியஸ் சாந்த்யாயனஸ் சாந்த்யஸ்ச பௌவனஸ்ச
புவனஸ்சாதிபதிஸ்ச
சொற் பிழை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் அகல
இடா தேவஹூர்-மனுர்-யஜ்ஞனீர்-ப்ருஹஸ்பதி-ருக்தாமதானி
சஹும்ஸஸிஷத் விஸ்வேதேவா: ஸூAAக்தவாச: ப்ருதிவி-மாதர்மா மா ஹிஹிகிம் ஸீர்-மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி மது மதீம்;   தேவேப்யோ வாசமுத்யாஸகும் ஸுஸ்ரூஷேண்யாAAம்;   மனுஷ்யேAAப்யஸ்-தம் மா தேவா அவந்து ஸோபாயை பிதரோனுமதந்து

#நன்றி :  #ஸ்ரீ_ருத்ரம்_நமகம்_சமகம்_தமிழ்.

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் தசமிதிதி, "#தசஹரதசமி' என்றும், "#பாபஹர_தசமி' என்றும் கூறப்படுகிறது.

 '#பாபஹர_தசமி'

"#தசஹரதசமி' 


வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் தசமிதிதி, "#தசஹரதசமி' என்றும், "#பாபஹர_தசமி' என்றும் கூறப்படுகிறது.



இந்நாளில்தான் #ஸ்ரீராமபிரான், இலங்கை வேந்தன் #ராவணனைக் கொன்ற பாபம் நீங்க, #மணலில்_லிங்கப்_பிரதிஷ்டை செய்து சேதுக்கரையில் வழிபட்டார் என்று "#ஸ்ரீ_காந்தம்' என்னும் நூல் கூறுகிறது.


#வைகாசி_சுக்லபட்ச_தசமி திதியானது பத்துவிதப் பாபங்களைப் போக்கும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அந்நாளில் சேது என்று போற்றப்படும் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தத்திலும் கோயிலுக்_

குள்ளிருக்கும் புனித நீர்நிலைகளிலும் நீராடினால் பாபங்கள் நீங்கி அளவற்ற புனிதம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.


மறுபிறப்பு இல்லாத நிலைபெறுவதற்கு பாப புண்ணியங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். பாபம் செய்தால் நரகம்; புண்ணியம் செய்தால் சொர்க்கம்; இந்த இரண்டும் வீடுபேற்றுக்கு முட்டுக்கட்டைகள் என்று கூறப்படுவதால், "#நல்லதை_நினை; #நல்லதைச்_செய்; #நல்லதே_நடக்கும்' என்று பகவான் #கிருஷ்ணன் கூறியதுபோல் தீவினைகள் செய்யாமல். நம்மால் முடிந்த அளவு அனைவருக்கும் நல்லது செய்தாலே மறுபிறவி இல்லாத வாழ்வு கிட்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது.


இந்த காலகட்டத்தில் பூலோகத்தில் மானிடர்களாகப் பிறந்த ஜீவன்கள் துலாக்கோலின் சமநிலை போல வாழமுடியாது என்பதால்தான் இந்த #வைகாசி_சுக்லபட்ச_தசமியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த வினைகளைப் போக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பினைத் தருகிறது. அதனால் தீவினைகள் அழியும் எனப்படுவதால் "#பாபஹர_தசமி' போற்றப்படுகிறது.


#அது_என்ன_பத்துப்_பாபங்கள்?


#வாக்கினால்_செய்வது_நான்கு; 

#சரீரத்தால்_செய்வது_மூன்று; 

#மனதால்_இழைப்பது_மூன்று. 

ஆக, இந்தப் #பத்துப்_பாபங்களையும் போக்கிக் கொள்ள இந்தப் "பாபஹர தசமி' உதவுகிறது.


வாக்கினால் செய்வது நான்கு! அவை,கடுஞ்சொல்; உண்மையில்லாத பேச்சு; அவதூறாகப் பேசுவது; அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது.


சரீரத்தால் செய்வது மூன்று: அவை, நமக்குக் கொடுக்கப்படாத பொருள்களை நாம் எடுத்துக் கொள்வது; அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது; பிறர் மனைவி மீது ஆசைப்படுவது.


மனதால் இழைக்கப்படும் பாபங்கள் மூன்று: அவை, மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது; மனதில் கெட்ட எண்ணங்களை நினைத்தல்; மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்.


இந்தப் பத்து பாபங்களும் குறிப்பிட்ட புண்ணியகாலமான வைகாசி அமாவாசைக்குப் பின்வரும் தசமி அன்று சேதுவில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்.


ராமேஸ்வரம் செல்வது என்பது எல்லோராலும் முடியாத காரியம். எனவே, அந்தப் புண்ணிய காலத்தில் தங்கள் ஊரின் அருகாமையில் உள்ள புனித நதியிலோ, ஆற்றிலோ, குளத்திலோ நீராடலாம். நதியிலும் ஆற்றிலும் நீர் இல்லாது போனாலும், சிவபெருமானையும், திருமாலையும் மனதில் நினைத்து இனிமேல் பாபங்கள் செய்யமாட்டேன்' என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு, வடக்கு நோக்கி வீட்டில் குளித்தாலும் பாபங்கள் நீங்கும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.


வைகாசி அமாவாசைக்குப்பின் வரும் தசமிதிதியில் #கங்காதேவி, #தேவலோகத்திலிருந்து_பகீரதன்_முயற்சியால்_பூலோகத்திற்கு_இறங்கி_வந்தாள் என்று புராணம் கூறுகிறது. அன்று #கங்காதேவியை_நினைத்து_நீராடினாலும் நம்முடைய பாபங்கள் நீங்கும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.


வைகாசி #அமாவாசைக்குப்பின்_பிரதமையிலிருந்து_தசமி வரை #கங்கை_நதியில்_நீராடினால்_பாபங்கள்_நீங்குவதுடன், #அஸ்வமேத_யாகம்_செய்த_பலன்_கிட்டும்' என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.


இந்நாளில் முன்னோர்களுக்குப் பின் பிதுர்பூஜை செய்வது, போற்றப்படுகிறது. ஏழைகளுக்கு வஸ்திரதானம் அன்னதானம் செய்தால் கூடுதல் புனிதம் கிட்டுவதுடன் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று வேத நூல்கள் கூறுகின்றன.


நன்றி : தினமணி.

அம்பா_நவமணிமாலை

 Bhakti

Bhakti is the pleasant, smooth, direct path to God.


#அம்பா_நவமணிமாலை


பொருள் விளக்கத்துடன்


லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு இரு புறங்களிலும் லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றருள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவமணிமாலை எனும் துதியை தினமும் பாராயணம் செய்தால் அம்பிகையின் திருவருளோடு சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் அருளும் அற்புத துதி இது:


 1) வாணீம்  ஜிதசுகவாணீமளிகுல

     வேணீம் பவாம்புதித்ரோணீம் /

    வீணாசுகசிசு பாணீ ம்

   நதகீர்வாணீம் நமாமிசர்வாணீம் //


மறையவளே!கிளியை வெல்லும் மொழியாளே!வண்டன்னக் 

கருங்குழலாளே!பிறவிக்கடல்கடக்கப் படகாவாளே!

வீணைக்கரத்தாளே!கிளியமருந்தோளாளே!வாணியும்   

பணிந்திடும் பூங்கழலாளே! பவானியே!சரணமம்மா!


வேதரூபியும் இனிமையால் கிளியின் இன்சொல்லை ஜெயித்தவளும் கருவண்டுக் கூட்டம் போன்ற பின்னலை உடையவளும் ஸம்ஸார ஸமுத்திரத்தைக் கடப்பதற்குத் தோணி போன்றவளுமான அம்பிகையே நமஸ்காரம். வீணை, கிளிப்பிள்ளையைக் கைகளில் ஏந்திய சரஸ்வதியினால் வணங்கப்பட்டவளே, பரமசிவனுடைய பத்தினியே, நமஸ்காரம்.


2) குவலயதளநீலாங்கீம்

    குவலயரக்ஷைகதீக்ஷிதாபாங்கீம் /

    லோசனவிஜிதகுரங்கீம்

    மாதங்கீம் நௌமி சங்கரார்த்தாங்கீம் //


நீலக்கமல மேனியளே!தரணி காக்க 

உறுதிபூண்டொளிரும்   ஓரக்கண்ணாளே!

மானைப்பழிக்கும்  எழில்விழியாளே!

மாதங்கி! சரணம்,சங்கரனின்  பங்கிணியே!


நீலோத்பல புஷ்பத்தின் இதழ் போன்ற சரீரத்தை உடையவளே, பூமண்டலத்தை ரட்சிப்பதையே முக்கிய விரதமாகக் கொண்டு, கடைக்கண் பார்வையால் அவ்வாறே அனுக்ரகிப்பவளே நமஸ்காரம். மான்களையும் தன் கண்களின் அழகால் வெட்கப்பட வைத்தவளே, மதங்க மகரிஷியின் புத்திரியே, சங்கரனின் பாதியுடலில் வசிப்பவளே, அம்பிகையே, நமஸ்காரம்.


3)கமலாகமலஜகாந்தாகரசாரச

தத்தகாந்தகரகமலாம் /

கரயுகலவித்ருதகமலாம் விமலாம்

கமலாங்கசூட சகலகலாம் //


கமலையும் கலைமகளும் கமலக்கரமேந்தும்  

கமலமன்ன   மென்கரங்களிரண்டிலும்  

கமலமலர்கள்  தாங்குந் தூயவளே!

சசிதரனின்  சகலகலைகளின் வடிவே !


லட்சுமி, சரஸ்வதி இவர்களின் தாமரைப் பூக்கள் போன்ற கரங்களில் வைக்கப்பட்ட இன்னொரு தாமரை போன்ற தளிர்க் கரங்களை உடையவளே, இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவளே, நிர்மலமாயிருப்பவளே, சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யையின் உருவமாக இருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.

 

4)சுந்தரஹிமகரவதனாம் குந்தஸுரதனாம்

  முகுந்தநிதிஸதனாம் /

கருணோஜ்ஜீவிதமதனாம் ஸுரகுசலாயா

 சுரேஷு க்ருதகதனாம் //


எழில்மதிமுகத்தாளே!முல்லைப்பூப்பல்லழகி!

அரும்பொருளின் உறைவிடமே!

கருணையால் காமனை உயிர்ப்பித்த உத்தமி!

சுரரைக்காக்க அசுரரை அழித்தவளே!


அழகிய சந்திரன் போன்ற முகத்தையுடையவளே, மலர் மொக்கு போல் அழகிய பற்களையுடையவளே, ஒன்பது நிதிகளில் ஒன்றான முகுந்தம் என்ற நிதிக்கு இருப்பிடமானவளே, மன்மதனைக் கருணையினால் உயிர்ப்பித்தவளே, தேவர்களை ரட்சிக்க, அசுரர்களை வதைத்தவளே, பராசக்தியே நமஸ்காரம்.


5) துங்கஸ்தனஜிதகும்பாம்  க்ருதபரிரம்பாம்

    சிவேன குஹடிம்பாம் /

    தாரிதசும்பநிசும்பாம் நர்த்திதரம்பாம்

    புரோ  விகததம்பாம் //


தாய்மைபொங்கும் மார்பினளே!அரனணைக்குமேனியளே!

சேயாய் சிவகுகனை உடையவளே!

சும்பநிசும்பரை நசித்தவளே!ரம்பைநடனம் ரசிப்பவளே!

தன்னலமறியா அன்பில் தாயாய்த்திகழ்பவளே!


தாய்மைபொங்கும் மார்பினளே!அரனணைக்குமேனியளே! சேயாய் சிவகுகனை உடையவளே! சும்பநிசும்பரை நசித்தவளே!ரம்பைநடனம் ரசிப்பவளே!தன்னலமறியா அன்பில் தாயாய்த்திகழ்பவளே! உன்னதமான ஸ்தனங்களினால் அழகிய குடத்தையே பழிப்பவளே, பரமசிவனால் அணைத்துகொள்ளப்பட்டவளே, ஸ்கந்தனைக் குழந்தையாக அடைந்தவளே, சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களை வதம் செய்தவளே, எதிரே ரம்பை நடனமாட, அழகிய சபையைக் கொண்டவளே, அகங்காரமற்றவளே, பராசக்தியே நமஸ்காரம்.


6)அருணாதரஜிதபிம்பாம் ஜகதம்பாம்

   கமனவிஜிதகாதம்பாம் /

  பாலிதசுஜனகதம்பாம் ப்ருதுல

  நிதம்பாம் பஜே சஹேரம்பாம் //


கொவ்வைச்செவ்விதழாளே!பாராளும் பேரருளே!

அன்னத்தைவெல்லும் மென்னடையாளே!

தன்னடியார் நன்னலம் காப்பவளே!பூரித்த

பின்னழகி!ஐங்கரனோடருள்பவளே!சரணம்!


கோவைப்பழத்தையே மயக்கும் சிவந்த கீழுதடை உடையவளே, உலகங்களுக்கு மாதாவாகத் திகழ்பவளே, நளினமான நடையினால் அன்னத்தையே வென்றவளே, பக்தர்களின் சமூகத்தைக் காப்பாற்றுபவளே, பெரிதான பின்பாகத்தையுடையவளே, கணபதியுடன் சேர்ந்திருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.


7) சரணாகதஜனபரணாம்  கருணா

  வருணாலயாம் நவாவரணாம் /

  மணிமயதிவ்யாபரணாம் சரணாம்

 போஜாதசேவகோத்தரணாம் //


"கதி நீயே!"என்போரைக்காக்குங்  கருணைக்கடலே!

மதிலொன்பது சூழ அமர்ந்து உலகாளும்  மாதரசி!

மணிநிறைப்புனிதஅணி  பூண்டவளே! நின்கமலப்

பதம்பணியுமடியாரை உய்விக்கும் உமையாளே!

 

சரணமடைந்த ஜனங்களை ரக்ஷிப்பவளே, கருணைக் கடலாய் விளங்குபவளே, ஒளி மிகுந்த மணிகளை அணிகலன்களாக சூடியவளே! பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை ஆபத்தினின்றும் எந்நாளும் காப்பவளே, நமஸ்காரம்.

 

8)நதஜனரக்ஷாதீக்ஷாம் தக்ஷாம்

பிரத்யக்ஷதைவதாத்யக்ஷாம் /

வாஹீக்ருதஹர்யக்ஷாம்

க்ஷபிதவிபக்ஷாம் சுரேஷு க்ருதரக்ஷாம்//


தாள்பணிவோர் நலங்காக்கும்   நல்லவளே!வல்லவளே!

காட்சிதரும் தெய்வங்களின் தலைவியாய்த் திகழ்பவளே!

வாகனமாம் சிங்கமேறி வளையவரும் சிங்காரி!

தானவரை வதம்செய்து தேவர்குலங்காத்தவளே!


நமஸ்கரித்த ஜனங்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளே, சாமர்த்தியமுள்ளவளே, பிரத்யக்ஷமான சூரியன் முதலிய தேவதைகளுக்கும் தேவதையாயிருப்பவளே, சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளே, சத்ருக்களை வதம் செய்தவளே, தேவர்களைக் காத்தவளே நமஸ்காரம்.


9)தன்யாம் சுரவரமான்யாம் ஹிமகிரி

கன்யாம் த்ரிலோகமூர்த்தன்யாம் /

விஹ்ருதசுரத்ருமவன்யாம் வேத்மி

வினா த்வாம் ந தேவதாஸ்வன்யாம் //


பொருள்வளமருள்பவளே!சுரருந்தொழுஞ் சிவையே!

கிரியரசன் பொன்மகளே!மூவுலக நாயகியே!

தெய்வீகத்தருக்கள் நிறை  பூம்பொழிலில் நடைபழகும்

தூயவளே!உனையன்றி வேறுதெய்வம் நானறியேன்!


பாக்கியமுள்ளவளே, தேவ சிரேஷ்டர்களால் பூஜிக்கப்படுபவளே, இமயமலையின் மகளே, மூன்று உலகிலும் சிறந்தவளே, மந்தாரம் முதலிய தேவ விருக்ஷங்களடங்கிய தோட்டத்தில்

விளையாடுபவளே, நமஸ்காரம்.

                 #பலஸ்ருதி


ஏதாம் நவமணிமாலாம் படந்தி

பக்த்யேஹ யே பராசக்த்யா :/

தேஷாம் வதனே சதனே ந்ருத்யதி

வாணி ரமா ச பரமமுதா //


நவமணிமாலையிதை ஓதி அம்பிகையைப்பணிவோர்

நாவினிலே நான்முகனின் நாயகியாம் நாமகளும்,

இல்லத்திலே செல்வத்தினை அள்ளித்தரும் திருமகளும்

உள்ளமெல்லாம் மகிழ்ந்து   புரிந்திடுவர் களிநடனம்!

பராசக்தியின் இந்த நவமணிமாலை ஸ்தோத்திரத்தை பக்தியுடன் யார் படிக்கிறாரோ, அவரது வாக்கில் சரஸ்வதியும் இல்லத்தில் மகாலட்சுமியும் மிக்க சந்தோஷத்துடன் ஆனந்த நடனம் ஆடுகிறார்கள்

பாதய வா பாதாளே ஸ்தாபய வா

சகலபுவனஸாம்ராஜ்யே  /

மாதஸ்தவ பதயுகளம் நாஹம்

முஞ்சாமி நைவ முஞ்சாமி //


அன்னையே!நீ என்னைப் பாதாளத்தில் தள்ளிடினும்,

மன்னவனாய் அகிலத்தையே ஆளும்பதவி தந்திடினும்

என்னிருகை பற்றிவிட்ட உன்னிரு பூம்பாதங்களைப்

பொன்னெனவே போற்றிடுவேன்;ஒருபோதும் விடமாட்டேன்.

ஓ, எனக்குத் தாயான பராசக்தியே, தாங்கள் என்னை பாதாளத்தில் தள்ளினாலும் சரி, அல்லது எல்லா உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாகச் செய்தாலும் சரி, தங்களது இரண்டு பாதங்களையும் நான் விடமாட்டேன். விடவே மாட்டேன்.

Thx 2 Jaishree 

Bakthi.com

Saturday, 6 February 2021

ஏகாதசி

 2021ம் வருடத்தின் ஏகாதசிகளை அறிந்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


ஜனவரி 9ம் தேதி ஏகாதசி. இதை சப்லா ஏகாதசி என்பார்கள்.


ஜனவரி 24ம் தேதி வரும் ஏகாதசி. இதை பவுஷா புத்ராடா ஏகாதசி என்பார்கள்.


பிப்ரவரி 7ம் தேதி வரும் ஏகாதசி சட்டில ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.


பிப்ரவரி 23ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வரும் ஏகாதசி ஜெய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.


மார்ச் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை வரும் ஏகாதசி விஜய ஏகாதசி என்றும் மார்ச் 25ம் தேதி வியாழக்கிழமை வரும் ஏகாதசி ஆமாலக்கி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.


ஏப்ரல் 7ம் தேதி புதன்கிழமை வரும் ஏகாதசி பாப்மச்னி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 23ம் தேதி வெள்ளிக்கிழமை வரும் ஏகாதசியை கமாடா ஏகாதசி என்று போற்றப்படுகிறது.


மே மாதம் 7ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிற ஏகாதசியை வருதிணி ஏகாதசி என்றும் மே மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிற ஏகாதசியை மோகினி ஏகாதசி என்றும் விரதம் அனுஷ்டிப்பார்கள் பக்தர்கள்.


ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை 6ம் தேதி அன்று வரும் ஏகாதசி, அபரா ஏகாதசி என்றும் ஜூன் மாதம் திங்கட்கிழமை 21ம் தேதி அன்று வருகிற ஏகாதசி என்றும் நிர்ஜலா ஏகாதசி என்றும் கொண்டாடப்படுகிறது.


ஜூலை மாதம் 5ம் தேதி திங்கட்கிழமை வருகிற ஏகாதசி யோகினி ஏகாதசி, ஜூலை மாதம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிற ஏகாதசி தேவ் ஷாயானி ஏகாதசி, ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி புதன்கிழமை அன்று வருகிற ஏகாதசி கமிகா ஏகாதசி, ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை 18ம் தேதி வருகிற ஏகாதசி சரவண புத்ரத ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.


செப்டம்பர் மாதம் 3ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிற ஏகாதசி அஜா ஏகாதசி, செப்டம்பர் மாதம் வெள்ளிக்கிழமை 17ம் தேதி வருகிற ஏகாதசி பார்சவ ஏகாதசி, அக்டோபர் 2ம் தேதி சனிக்கிழமை வருகிற ஏகாதசி இந்திர ஏகாதசி என்றும் அக்டோபர் 16ம் தேதி சனிக்கிழமை அன்று வருகிற ஏகாதசி பாபன்குஷா ஏகாதசி என்றும் அனுஷ்டிக்கப்படுகிறது.


நவம்பர் 1ம் தேதி திங்கட்கிழமை வருகிற ஏகாதசி ராம ஏகாதசி என்றும் நவம்பர் 14ம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிற ஏகாதசி தேவதான ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது. நவம்பர் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிற ஏகாதசி உட்பனா ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.


டிசம்பர் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிற ஏகாதசி மோக்ஷா ஏகாதசி என்றும் டிசம்பர் 30ம் தேதி வியாழக்கிழமை வருகிற ஏகாதசி சப்லா ஏகாதசி என்றும் போற்றி அனுஷ்டிக்கப்படுகிறது.


ஏகாதசி நாளில்... அரங்கனை, அனந்தனை, நம் ஆயுளெல்லாம் காத்தருளும் ஏழுமலையானை, திருவரங்கனை, குணசீலனை... ஒப்பற்ற பெருமாளை வணங்குவோம். சகல செளபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் தந்தருள்வான் வேங்கடவன்.


ஏகாதசி நாளில், மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். ஒலிக்கவிட்டுக் கேட்போம். சங்கடங்களையெல்லாம் போக்கி அருளுவார் மகாவிஷ்ணு.


ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...