Thursday, 11 February 2021

சியாமளா நவரத்ன மாலிகா

சியாமளா நவரத்ன மாலிகா


1)ஓங்கார பஞ்சரசுகீம் உபநிஷதுத்யான கேலிகலகண்டீம் /

ஆகமவிபிநமயூரீம் ஆர்யாம் அந்தர்விபாவயே கௌரீ/


ஓங்காரக் கூட்டிலுறை பைங்கிளியே!-உபநிடதப் 

பூங்காவில் கூவுங்குயிலே!

சாத்திரக்காட்டிலே சஞ்சரிக்கும் மயிலே!

சான்றோர் தொழும் ஷ்யாமளே! 


2)தயமான தீர்க்க நயநாம் தேசிகரூபேண தர்சிதாப்யுதயாம்/

வாமகுசநிஹிதவீணாம் வரதாம் சங்கீதமாத்ருகாம் வந்தே/


நல்லருள் பொழியும் நீள்விழியாளே! ஆசானாய் 

நன்னெறி புகட்டும் அன்னையே!

வீணை தழுவு மேனியளே!கானம் பிறப்பித்தவளே!

சரணம்!வரந்தரும் சங்கரி ! 


3)ச்யாமதனு ஸௌகுமார்யாம் சௌந்தர்யானந்த ஸம்பதுன்மேஷாம்/

தருணிமகருணா பூராம் மதஜலகல்லோலலோசனாம் வந்தே!


பேரழகு,இன்பம்,பொருள்,அனைத்துக்கும் மூலமே!

கார்வண்ண எழிற்கோலமே !

பொங்கும் கருணைக்கடலே!ஆனந்தக்கண்ணீர் 

தங்கும் விழியாளே!தொழுதேன்!


4)நகமுகமுகரிதவீணா நாதரஸாஸ்வாதநவனவோல்லாஸம்/

முகமம்ப மோதயது மாம் முக்தாதாடங்க முக்தஹஸிதம் தே/


நகநுனிகள் வீணைமீட்ட, நாதந்தரும் இனியசுகம்

முகப்பொலிவை மேலுங்கூட்ட,

முத்துத்தோடணிந்தொளிரும் உன்வதனம் கண்டெனது

சித்தம் சிலிர்த்தாடவேண்டும்! 


5) ஸரிகமபதநி ரதாம் தாம் வீணாஸங்க்ராந்தஹஸ்தாம் தாம்/

சாந்தாம் ம்ருதல ஸ்வாந்தாம் குசபரதாந்தாம் நமாமிசிவகாந்தாம் /


ஏழுசுர இன்பத்தில் திளைப்பவளே!-வீணைவிட்டு 

நழுவாத விரல்நுனியளே !

அமைதியுறை கனிவுநிறை மனத்தாளே!- தாய்மை பொங்கும் 

தனத்தாளே!சிவகாமியே!!


6)அவடுதடகடிதசூலி தாடித தாளீபலாச தாடங்காம்/

வீணா வாதனவேலாகம்பித சிரசம் நமாமி மாதங்கீம்/


பின்னிமுடித்த கூந்தல்,பனங்குருத்துக் காதணியை 

மென்மையாய்த் தீண்டி வருட,

வீணை மீட்டித் தலையாட்டி ரசிக்கும் பஞ்ச 

பாணி!நின் பதம் பணிந்தேன்!


7) வீணாரவானுஷங்கம் விகசமுகாம் போஜமாதுரீப்ருங்கம் /

கருணாபூரதரங்கம் கலயே மாதங்ககன்யகாபாங்கம்/ 


வீணைநாதம்போல் இதமானதாம்--முகக்கமலத் 

தேன் மொய்க்கும் வண்டொத்ததாம்,

கருணையலை மோதுமுன் கடைக்கண்களில் மனம் 

ஒருமித்தேன் மதங்கன் மகளே! 


8)மணிபங்கமேசகாங்கீம் மாதங்கீம் நௌமி ஸித்தமாதங்கீம்/

யௌவனவனஸாரங்கீம் ஸங்கீதாம்போருஹானு பவப்ருங்கீம் / 


நீலமணிபோலொளிரும் மேனியளே!மாமுனியாம் 

மதங்கனின் இனிய மகளே!

இளமையெனும் வனத்து மானே!பூவண்டென 

இசைக்கமலம் நுகரும் மாதே! 


9)மேசகமாஸேசனகம் மித்யாத்ருஷ்டாந்த மத்யபாகம் தத்/

மாதஸ்தவஸ்வரூபம் மங்கள சங்கீத ஸௌரபம் மன்யே/


பார்க்கத்திகட்டா நீலமேனியளே!கண்ணுக்குப் 

புலப்படா நுண்ணிடையளே!

போற்றாதோரே இல்லாப்பேரழகி!சங்கீத 

ஸாரத்தின் வடிவே !சரணம்!


அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...