Sunday, 1 April 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை_தத்துவம்🍀

🍀#காவியம்🍀:    16
******************
அக்ரே வஹ்ன்னி: ப்ருஷ்டே பானூ
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷஸ்தருதலவாஸ:
ததபின முஞ்சதி ஆசாபாச:

🍀#ஸாரம்🍀:
****************
முன்னால் அக்னியும் (தீயும்), பின்னால் ஸூர்யனும், இரவுனேரம் தன் கால்முட்டுகள் தாடியை தொடும்விதம் மரச்சுவட்டில் சுருங்கி உட்கார்ந்து, தன் இருகர்ங்க்ளையும் ஏந்தி பிக்ஷை வாங்கி சாப்பிடும் நிலையிலும் (அவன்) ஆசாபாசங்களை விடுவதில்லை.

🍀#விளக்கம்🍀:
****************
தள்ளாடி தத்தளிக்கும் முதியவரை பற்றி சொன்னார்.  ஆனால் முதியவர் மட்டுமல்லாமல், எவரும் தன் அனாத நிலையிலும் வைய்யிலில் அலைந்து, இரவு குளிரால் தாக்குண்டு தன் உடம்பை மூட கம்பிளி இல்லாமலும், தங்க இடம் இல்லாமலும், மரச்சுவட்டில் உடலை குறுக்கி உட்கார்ந்து இருகைகளையும் ஏந்தி பிச்சை எடுக்கும் ஒரு மனிதனும் தன ஆசாபாசங்களை விடுவதில்லை.  அதாவது மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் தங்கள் உலக ஆசாபாசங்களை விட முயலுவதில்லை என பொருள். ஆசை யாரை விட்டது?

🍀#பஜகோவிந்தம் #தொடரும்.................🍀

🍀#தொகுப்பு  :  #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன்🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...