Monday, 19 February 2024

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம்

 ரத ஸப்தமி ஸ்பெஷல் !


ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் !


அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு

ஒளிதந்து இருள்நீக்கி 

அருள் புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு

நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


மங்கலக் குடியினில் மங்களமாய்க்

குடிகொண்டு மங்காத ஒளிவீசும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்

பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்

வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை

அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு

அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்

பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே

 சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ

உன்திருமுகம் காட்டி அருள்புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே

அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே

இச்செகம் போற்றும் கதிரவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


கண்ணால் காணும் கடவுள் நீ

கதிரொளி வீசும் கிரகமும் நீ

உன்னால் வாழும் உயிர்களைக் காக்க

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


நாளையும் கோளையும் நம்பி வாழும்

இப்புவியில் நன்மைகள் பல புரியவே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி

தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


விழியில் ஒளிதந்து புவியில்

புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


வான் மழை பொழிந்திட பயிர்கள்

விளைந்திட வையகம் தழைத்திட

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்

சரணம் சரணம் ஆதித்யனே சரணம்

சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்

சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்

சரணம் சரணம்.

Friday, 16 February 2024

சூர்யாஷ்டகம்

 சூர்யாஷ்டகம்....!


ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||


ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய்.

பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்.


ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|

ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


வானவில்லின் வண்ணம் போல் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே! வெப்பம் நிறைந்தவரே!

ரிஷி கச்யபரின் குமாரரே! வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே! அனைத்து உலகங்களுக்கும் தந்தையே!

எம் பாவத்தை அறுத்து பாவனம் ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


சத்வ, ரஜோ, தமோ என முக்குணங்களை உடையவரே! பலம் பொருந்திய மஹாசூரரே! ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே!

எம் பாவத்தை அறுத்து தூய்மை ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|

ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸாகிய ஒளி கொண்டவரே! வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே!

உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|

ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே! மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே!

ஒரே சக்கரத்தைக் கொண்டவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே! தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே!

எம் பாவத்தை அறுத்து என்னைத் தூய்மை ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


உலகின் நாதனே! ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே!

எம் பாவத்தை அறுத்து தூயவன் ஆக்குபவரே! ஹே சூரிய தேவனே! உம்மை வணங்குகிறேன்!


இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்||

இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...