Tuesday, 4 April 2023

ஶ்ரீ நாராயணப⁴ட்ட பாத ³ விரசிதா ஶ்ரீபாத ³ஸப்ததி :

 ஶ்ரீ நாராயணப⁴ட்ட பாத ³ விரசிதா ஶ்ரீபாத ³ஸப்ததி :


யத்ஸம்வாஹநலோபி⁴ந : ஶஶிகலாசூட ³ஸ்ய ஹஸ்தாம்பு ³ஜ-

ஸ்பர்ஶேநாபி ச லோஹிதாயதி முஹுஸ்த்வத்பாத ³பங்கேருஹம் ।

தேநைவோத் ³த⁴தகாஸராஸுரஶிரஶ்ஶ ்ரு ’ங்கா ³க்³ரஸஞ்சூர்ணந -

ப்ராசண்ட் ³யம் தத ³நுஷ்டி ²தம் கில கத ²ம் முக்திஸ்த ²லஸ்தே ²! ஶிவே ! ॥ 1॥

முக்தி ஸ்தலத்தில்* வாசம் செய்யும் மங்களாம்பிகயே ! சந்திரனை சிரசில் தரித்துள்ள ஸ்ரீ பரமேஸ்வரன் உன் ஸ்ரீ பாதாரவிந்ததைத் தாங்கப் பேராவல் கொண்டவராய் கமலம் போன்ற கையினால் உன் ஸ்ரீ பாதத்தை ஸ்பரிசிக்கும் போது உன் ஸ்ரீ பாதம் சிவந்து போகிறது.  அப்பேர்ப்பட்ட உன் ஸ்ரீ பாதமானது மலையை விடப் பெரிய சரீரங்கொண்ட மஹிஷாசுரனுடைய தலையைப் பொடி பொடியாக்கியது ப்ரசித்தம். இது எவ்வாறு?

· முக்தி ஸ்தலம் என்ற க்ஷேத்திரத்தில் ப்ரகாசிப்பவள்

· முக்திக்குத் தகுதி வாய்ந்த பெரியோர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவள்

· மாயையாகிற அவித்யையைப் போக்கும் ப்ரம்ம வித்யை சொரூபமாக இருப்பவள் என்று பல அர்த்தங்கள் கொள்ளலாம்.

த்வத்பாத ³ம் நிஜமஸ்தகே க⁴டயிதும் கே கே நு லோகே ஜநா :

கிம் கிம் நாரசயந்தி து³ஶ்சரதபஶ்சர்யாஸபர்யாதி ³கம் ।

மந்யே த⁴ந்யதமம் து தே ³வி ! மஹிஷம் வைரஸ்த ²யைவ த்வயா

யந்மூர்த்⁴நி ஸ்வயமேவ பாதகஹரம் பாதா ³ம்பு ³ஜம் பாதிதம் ॥ 2॥

தேவியே ! ஜனங்கள் உன்னுடைய ஸ்ரீ பாதார விந்தங்கள் தங்கள் சிரஸின் மீது தாங்கக் கிடைப்பதற்காக மிகக் கடுமையான தபஸ், பூஜை முதலிய என்னென்னவோ காரியங்களையெல்லாம் மேற்கொள்ளுகிறார்கள். ஆனால் மஹிஷாசுரனோ உன்னுடைய பரம விரோதியாக இருந்தான். இருந்தும் நீயோ சர்வ பாபங்களையும் போக்கும் உன் ஸ்ரீ பாத மலத்தை நீயாகவே அவனுடைய சிரஸின் மீது வைத்தாய். அந்த மஹிஷாசுரனல்லவோ மகா பாக்கிய சாலி.

இங்கு “கே கே ஜனா” என்று சொல்லியிருக்கிறபடியால் மனுஷ்யர்களைத் தவிர தேவர்கள், யக்ஷர்கள், கந்தவர்கள் முதலானவர்களையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக ஆகும்.

த்வத்பாதா ³ம்பு ³ஜமர்பிதம் க்வ நு ஶிவே ! கிந்நு த்ரயீமஸ்தகே ?

நித்யம் தத்த்வவிசாரத ³த்தமநஸாம் சித்தாம்பு ³ஜாக் ³ரேஷு வா ? ।

கிம் வா த்வத்ப்ரணயப்ரகோபவிநமந்மாராரிமௌலிஸ்த ²லே ?

கிம் ப்ரோத்க ²ண்டி ³தகோ⁴ரஸைரிப⁴மஹாதை ³த்யேந்த் ³ரமூர்த் ³தா⁴ந்தரே ? ॥ 3॥

மங்களாம்பிகையே ! உன் ஸ்ரீ பாத கமலங்கள் எங்கு இருக்கின்றன? தேவர்களுடைய சிரஸாகிற உபநிஷத்துக்களிலா ? (வேதங்களுக்கு சிரஸாகிற ப்ரணவமாகிற ஓங்காரத்தையும் கொள்ளலாம்) அல்லது தத்வ ஆராய்ச்சியில் மனஸைப் பறி கொடுத்த யோகிகளின் ஹ்ருதய கமலங்களிலா ?

அல்லது மன்மதனைச் சாம்பலாக்கிய ஸ்ரீ பரமேஸ்வரன் பிரளய கலகத்தின் போது உன் ஸ்ரீ பதங்களில் விழுந்து நமஸ்கரிக்கும் போது அந்த ஸ்ரீ பரமேஸ்வரனுடைய சிரஸின் மீதா ? அல்லது மகா பயங்கரமான மஹிஷாசுரனுடைய வெட்டப்பட்ட சிரசின் மீதா ?

த்வத்பாதா ³ஞ்சலரூபகல்பலதிகாபா ³லப்ரவாலத் ³வயம்

யே தாவத்கலயந்தி ஜாது ஶிரஸா நம்ரேண கம்ரோஜ்ஜ்வலம் ।

தேஷாமேவ ஹி தே ³வி ! நந்த ³நவநக்ரீடா ³ஸு லப்⁴யம் புந :

ஸ்வர்வல்லீதருணப்ரவாலப⁴ரணம் ஸேவாநுரூபம் ப²லம் ॥ 4॥

தேவியே ! உன் ஸ்ரீ பாதங்களின் முன் பாகம் அதிசுந்தரமாகவும், ப்ரகாசமாகவும், தேவலோகத்துக் கல்பகக் கொடியின் மொட்டுக்களைப் போன்று (மென்மையுடனும், வேண்டியவற்றைத் தரவல்லவையாகவும்) இருக்கின்றன. அப்பேர்ப்பட்ட ஸ்ரீ பாதங்களை வணக்கத்துடன் தங்கள் சிரஸின் மீது யார் தரிக்கின்றார்களோ அவர்கள் (ஸ்வர்க்கத்தை வேண்டுபவர்க்ளாயிருந்தால்) ஸ்வர்க்கத்தில் நந்தவனங்களளில் கல்பகக்கொடி போன்ற தேவ கன்னிகைகளுடன் ஆனந்திக்கிறார்கள். அதாவது, பக்திக்குத் தக்க பலனை உன் ஸ்ரீ பாத கமலம் அளிக்கிறது. (கல்பகக்கொடி போன்ற ஸ்ரீ பாதங்களை நமஸ்கரித்ததன் பலன், ஸ்வர்க்கத்திற்கே கொண்டு சென்று, கல்பகக் கொடி போன்ற கன்னிகைகளுடன் ஸ்வர்க்க ஆனந்தத்தை அளிக்கிறது.

மோக்ஷத்தை வேண்டுபவர்களுக்கு மோக்ஷம் சித்திக்கும். வேண்டுவது கிடைக்கும் என்பது தாத்பரியம்.

தா⁴வல்யம் பரிலால்யதே புரரிபோரங்கே ³ந துங்க ³ஶ்ரீயா

கிஞ்ச ஶ்யாமலிமாபி கோமலதரே பா⁴த்யேவ கா ³த்ரே ஹரே : ।

தத்தாத் ³ரு’க்பத ³வீம் மமாபி ஜநயேத்யஸ்தோகஸேவாரஸா -

தா ³ருண்யம் தவ லீயதே சரணயோ : காருண்யமூர்தே ! ஶிவே ! ॥ 5॥

கருணாமூர்த்தியே ! மங்களாம்பிகையே ! திரிபுராந்தகனான (முப்புரம் எரித்தவனான) ஸ்ரீ பரமேஸ்வரனின் சரீரத்தினுடைய உத்தமமான ஒளியினால் வெண்மை நிறமானது சோபையை அடைகிறது. ஸ்ரீ ஹரியினுடைய மிகவும் மிருதுவான சரீரதிலோ, நீல மேக ஸ்யாமள வர்ணமானது ப்ரகாசிக்கிறது.

சிவப்பு நிறமோ, உன் பாதங்களிலே மகத்தான சேவை செய்வதினால், எனக்கு சிவ விஷ்ணு போன்ற பதவியைத்ததந்துவிடத்தான் போகிறாய் என்று உன் பாதங்களிலேயே லயமாகி விடுகிறது.

உன் ஸ்ரீ பாதங்களை நான் இறுகப் பற்றிக் கொண்டிருப்பதினால் சிவப்பு நிறமானது மறைந்து விடுகிறது. காரணம், சிவப்பு நிறத்திறிகு தெரியும், நீ சிவ, விஷ்ணு போன்ற பதவியை எனக்குத் தரப் போகிறாய் என்று.


No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...