Sunday, 20 February 2022

காமாக்ஷி ஆவிர்பாவ தினம் !

மாசி பூரம் ஸ்பெஷல் !


காப்பு


மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்

துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட்

புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்

கயமுகவைங் கரனிருதாள் காப்பு.


நூல்


சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

சோதியா நின்ற வுமையே.

சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்

துன்பத்தை நீக்கி விடுவாய்.

சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்

துயரத்தை மாற்றி விடுவாய்

ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ

சிறியனால் முடிந்திராது

சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்

சிறிய கடனுன்னதம்மா.

சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி

சிரோன்மணி மனோன்மணியு நீ.

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி

யனாத ரட்சகியும் நீயே,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அன்னை காமாட்சி உமையே.


பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது

பாடகந் தண்டை கொலுசும்,

பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட

- பாதச் சிலம்பி னொலியும்,

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்

மோகன மாலை யழகும் ;

முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்

முடிந்திட்ட தாலி யழகும் ,

சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்

செங்கையில் பொன்கங்கணம்,

ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற

சிறுகாது கொப்பி னழகும்,

அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை

அடியனாற் சொல்லத் திறமோ,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்

குறைகளைச் சொல்லி நின்றும்,

கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ

குழப்பமா யிருப்ப தேனோ

விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச்

சதமாக நம்பி னேனே

சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க

சாதக முனக் கிலையோ

மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய

மதகஜனை யீன்ற தாயே.

மாயனிட தங்கையே பரமனது மங்கையே

மயானத்தில் நின்ற வுமையே

அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்

அன்பு வைத்தென்னை யாள்வாய்,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்

பேரான ஸ்தலமு மறியேன்

பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்

போற்றிக் கொண்டாடி யறியேன்,

வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,

வாயினாற் பாடியறியேன்,

மாதா பிதாவினது பாதத்தை நானுமே

வணங்கியொரு நாளுமறியேன்,

சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்

சரணங்கள் செய்து மறியேன்,

சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,

சாஷ்டாங்க தெண்ட னறியேன்,

ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்

ஆச்சி நீ கண்ட துண்டோ,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்

பிரியமாயிருந்த னம்மா,

மெத்தனம் உடையை என்றறியாது நானுன்

புருஷனை மறந்தனம்மா,

பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்

பராமுகம் பார்த்திருந்தால்,

பாலன் யானெப்படி விசனமில்லாமலே

பாங்குட னிருப்பதம்மா,

இத்தனை மோசங்களாகாது ஆகாது

இது தர்மமல்ல வம்மா

எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ

யிதுநீதி யல்லவம்மா,

அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ

அதை யெனக்கருள் புரிகுவாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ

மணி மந்தர காரிநீயே

மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ

மலையரையன் மகளானநீ,

தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,

தயாநிதி விசாலாட்சி நீ

தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ

சரவணனை யீன்ற வளும் நீ,

பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்

பேர்பெற வளர்த்தவளும் நீ,

பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ

பிரிய வுண்ணாமுலையு நீ

ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ

அகிலாண்டவல்லி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்

புத்திகளைச் சொல்லவில்லையோ,

பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை

பிரியமாய் வளர்க்க வில்லையோ,

கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்

கதறி நானழுத குரலில்,

கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்

காதினுள் நுழைந்த தில்லையோ

இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா

இனி விடுவதில்லை சும்மா,

இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்

இதுதரும மல்ல வம்மா,

எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்

ஏதும் நீதியல்ல வம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்

மூடனான் செய்த னம்மா

மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு

மோசங்கள் பண்ணி னேனோ

என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே

இக்கட்டு வந்த தம்மா

ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து

என்கவலை தீரு மம்மா

சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே

சிறுநாணமாகு தம்மா,

சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்

சிவசக்தி காமாட்சி நீ

அன்னவாகனமேறி யானந்தமாக உன்

அடியன் முன் வந்து நிற்பாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க

ளின்பமாய் வாழ்ந் திருக்க,

யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்

உன்னடியேன் தவிப்பதம்மா,

உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்

உன் பாதஞ் சாட்சியாக

உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்

உலகந்தனி லெந்தனுக்கு

பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை

போக்கடித் தென்னை ரட்சி

பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்

பிரியமாய்க் காத்திடம்மா

அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க

அட்டி செய்யா தேயம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பாரதனி லுள்ளளவும் பாக்கிபத்தோ டென்னைப்

பாங்குடனி ரட்சிக்கவும்,

பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த

பாலருக் கருள் புரியவும்

சீர்பெற்ற தேசத்தில் சிறுபிணிகள் வாராமல்

செங்கலிய ளணு காமலும்,

சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து

ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,

பேர்பெற்ற காலனைப் பின்றொடர வொட்டாமற்

பிரியமாய்ச் காத்திடம்மா.

பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி

பிழைகளைப் பொறுத்து ரட்சி.

ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்

னம்மை யேகாம்பரி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது

இப்பூமி தன்னி லம்மா,

இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்

இனிஜெனன மெடுத்திடாமல்,

முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்

முக்காலும் நம்பினேனே,

முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ

முழித்திருக்காதே யம்மா,

வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன

விருத்தங்கள் பதினொன்றையும்

விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை

விமலனாரேசப் போறார்,

அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்

அருங்குறை யைத் தீருமம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

ஸ்ரீ காமாக்ஷி அகவல்

 காமாக்ஷி ஆவிர்பாவ தினம் !

மாசி பூரம் ஸ்பெஷல் !


ஸ்ரீ காமாக்ஷி அகவல்


#காப்பு:


ஜகத்திருள் நீக்கும் காஞ்சி க்ஷேத்ரம் தனில்

மகத்துவம் மிகுந்த சக்தி மனோன்மனீ காமாக்ஷி தன்மேல்

அகத்திருள் நீங்கும் வண்ணம் ஓர் அகவற் பாமலை ஓத

முகத்திருள் நீக்கும் யானை முளரி மாமலர்த்தாள் காப்பே


#அகவல்:


ஓம் நமோ பகவதி உத்தமி கவுரி

சாம்பவி மனோன்மனீ சங்கரி பயங்கரி

வெண்தலை மாலை விமலி எண்தோளி

பஞ்சாக்ஷரத்தி பரப்ரம்மசொரூபீ

எஞ்சாகரத்தி இன்பத் தாண்டவீ

ப்ரணவ சொரூபம் பெற்றிடும் வீரி

சரணாம்புயத்தி ஸர்வஸம்ஹாரி

தத்துவப் பொருளாய் தழைத்த நன்மணி

அத்தி முகவனை அளித்த கண்மணி

சிறுவிதி மகவாய் சிறந்த சிவமணி


ஒருதனி முதலாய் ஓங்கும் தவமணி

வரைமகள் எனவே வளர்ந்த நவமணி

பரையென நாமம் பகர்ந்தவர் பவப்பிணி

அகற்றி ஆட்கொள்ளும் அற்புத ஒளியே

சிவ சிவ சிவ சிவ சிவசங்கரியே

நவவடிவாகிய நாராயணியே

ஆதிஅனாதியும் அந்தமும் நீயே

ஜோதி சுடராய் சூழ்ந்தவள் நீயே

தந்தை தாயுமாய் தழைத்தவள் நீயே

இடை பிங்கலையில் இருப்பவள் நீயே


கடை சுழுமுனையில் கலப்பவள் நீயே

முச்சுடராகி முளைத்தவள் நீயே

உச்சுக்கு வெளியில் உலவுபவள் நீயே

மூலத்தில் நின்ற முதல்வியும் நீயே

ஜாலங்கள் புரியும் சமர்த்தியும் நீயே

ஓரெழுத்தான் ஒலிவெளி நீயே

ஈரெழுத்தான் ஈச்வரி நீயே

மூவெழுத்தான முக்கண்ணி நீயே

நாலெழுத்தான நாயகி நீயே

அஞ்செழுத்தான அம்மணி நீயே


பஞ்சக்ருத்தியம் படைத்தவள் நீயே

ஐவராம் கர்த்தர்கு அன்னையும் நீயே

ஐயாறு மூவேழு அக்ஷரீ நீயே

அருவுருவான அற்புதம் நீயே

குருவாய் விளங்கும் கோலமும் நீயே

சின்மயமாக செறிந்தவள் நீயே

தன்மயமாக தனித்தவள் நீயே

வேதாந்தமான விளைவும் நீயே

நாதாந்தமான நவரசம் நீயே

வேற்றுமை இல்லா வித்தகி நீயே


நாற்பத்து முக்கோண நாயகி நீயே

அரனொடு அரியாய் அமர்ந்தவள் நீயே

பரனொடு பரையாய் பதிந்தவள் நீயே

மோன பாத்திர முடிவும் நீயே

ஞான க்ஷேத்திர நவநிதி நீயே

நடுநிலையான நாயகம் நீயே

கொடுவினை மாற்றும் குண்டலி நீயே

சுத்த சிவமாய் ஜொலிப்பவள் நீயே

சத்தி சிவமாய் சார்ந்தவள் நீயே

சுகஸ்வரூபீ சூட்சியும் நீயே


அகண்டபூரணம் ஆனவள் நீயே

வேலனை ஈன்ற விளக்கொளி நீயே

வாலைத் திருமகள் வாணியும் நீயே

கன்னிகையாம் சிவகாமியும் நீயே

அன்னையாம் வடிவம்மையும் நீயே

ஆட்சி நீலாயதாக்ஷியும் நீயே

சூட்சி சிவகமலாக்ஷியும் நீயே

நாரணியாம் மீனாக்ஷியும் நீயே

ஆரணியாம் விசாலாக்ஷியும் நீயே

கன்னிகள் பத்திரகாளியும் நீயே


மன்னும் துர்கை மாரியும் நீயே

எந்திர வித்தைகள் எல்லாம் நீயே

மந்திர ஸ்வரூப மௌலியும் நீயே

மாய குண்டலி மனோன்மனீ நீயே

ஆயிரம் நாமம் ஆனவள் நீயே

ஆனந்த வடிவாய் அமைந்தவள் நீயே

மனவாக்கடங்கா மகமாயி நீயே

ஸர்வ ஸம்ஹார சக்தியும் நீயே

ஸர்வானுக்ரஹ ஸமர்த்தியும் நீயே

எண்ணும் மனதில் இருப்பவள் நீயே


மண்ணுயிர்க்குயிராய் மருவிய தாயே

அகிலாண்டவல்லி அம்பிகையாளே

மஹிமே சேர் கச்சி மாநகராளே

கனகம் பொழி திருக்காமக்கோட்டத்தி

மனங்கவர் காயத்ரி மாமண்டபத்தி

ஓங்கார கோணத்தில் ஒளிர் பத்மாஸனத்தி

நீங்காத நீல நிறத்தி சதுர்புஜத்தி

காணரும் பிலாகாச பீடத்தி கன்னி

சேனுயர் துவஜ சிகர கோபுரத்தி

தகவுறு தர்ம ஸந்தான ஸ்தம்பத்தி


திகழறத்தி பஞ்ச தீர்த்த பூதத்தி

வெற்றி ஸ்தம்பம் விளங்குமாலயத்தி

பற்றற்றவர் பணி பொற்பதத்தி

தலம் புகழ் சங்கராசாரியர் என்னும்

வலம் புரிந்தேத்தி வன்மையோ இன்னும்

ஒருபுடை மருவ உளம் மகிழ் நீலி

திருமகள் கலைமகள் தினம் தொழும் சூலி

காமக்கண்ணி கவுரி கமலாக்ஷி

தாமதமின்றி தந்தருள் காக்ஷி

ஆதரவின்ற அம்மணி உன்றன்


பாதக் கமலம் பணிந்தனன் என்றன்

வேதனை தீர்த்து இவ்வேளை வந்தாதரி

மாதரி வீரி மயான ருத்ரி

சகலரும் போற்றி சந்தோஷமுற்று

சகல சித்தியும் சக்தியும் பெற்று

பக்குவமாக நின் பதமலர் போற்றிட

சக்ரேச்வரியே ஸந்ததம் காப்பாய்

போற்றி போற்றி பொன்னடி போற்றி

ஏத்தி ஏத்தி இறையடி தொழுவாம்

காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே

காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே.


அம்பிகையின் திருவடிகளில் சரணம்!

Wednesday, 9 February 2022

ஸ்ரீ சூர்யாஷ்டகம் !

 ரத ஸப்தமி ஸ்பெஷல் ! 


ஸ்ரீ சூர்யாஷ்டகம் !


ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||


(ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்)


ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|

ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(ஏழு (வானவில்லின் வண்ணம் போல் ஏழு) குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே... வெப்பம் நிறைந்தவரே... ரிஷி கச்யபரின் குமாரரே... வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே... அனைத்து உலகங்களுக்கும் தந்தையே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என மூன்று குணங்களை உடையவரே... பலம் பொருந்திய மஹாசூரரே... ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)  


ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|

ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸ்ஸாகிய ஒளி கொண்டவரே... வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே... உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|

ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே... மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே... ஒரே சக்கரத்தைக் கொண்டவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே... தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே... எம் பாவம் அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(உலகின் நாதனே... ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... ஹே சூரிய தேவனே... உம்மை வணங்குகிறேன்)


இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்


(இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது)

-----------------------------------------------------

சூர்ய கவசம் !

 ரத ஸப்தமி ஸ்பெஷல் !


சூர்ய கவசம் !


சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.


ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்

ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்


ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும், 

சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்

மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.


தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்

த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்


மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,

ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும், 

ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான 

சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.


ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:

நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே 

வாஸரேஸ்வர: 


என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன் 

காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே 

ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.


க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:

ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே

ஸுரவந்தித: 


என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட 

ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.


ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:

பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:


என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும். 

மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு 

உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும். 

அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.


ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே

ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:


யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ 

அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்.


ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:

ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம்  ச விந்ததி.


யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார். 


இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும் 

சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி 

மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:


சூர்ய மங்கள ஸ்லோகம் !


பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ

குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:

சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ

மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்


பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !


சூரிய பகவான் !

 

காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும் 

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும் 

வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த 

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி


சூர்யன் த்யான ஸ்லோகம் !

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்

தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்


சூரியன் காயத்ரி !

அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்


சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி !

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...