Saturday, 22 August 2020

ஸ்ரீ_ருணஹர_கணேச_ஸ்தோத்ரம்

 #ஸ்ரீ_ருணஹர_கணேச_ஸ்தோத்ரம்


ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேச’ம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம் |


ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம்ப்ரணமாமி 

தேவம்||1


ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பலஸித்தயே |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே|| 2


 த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் ச’ம்புனா ஸம்யகர்ச்சித: |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  3


மஹிஷஸ்ய வதே தேவ்யா கண நாத: பூஜித: |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  4


 ஹிரண்யகச்’யாபதீனாம் வதார்த்தே விஷ்ணு நார்ச்சித: |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  5


தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித: |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  6


 பாஸ்கரேண கணேசோ’ஹி பூஜிதச்’சைவ 

ஸித்தயே |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  7


ச’சி’ நா காந்தி வ்ருத்யர்த்தம் பூஜிதோ கண நாயக: |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  8


பால நாயச’ தபஸாம் விச்’வாமித்ரேண பூஜித:


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  9


இதம் ருணஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாச’னம் |


ஏகவாரம் படேந்நித்யம் வர்ஷமேகம் ஸமாஹித: || 10


தாரித்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேர ஸமதாம் வ்ரஜேத் |


படந்தோ(அ)யம் மஹா மந்த்ர: ஸார்த்த பஞ்சதசா’க்ஷர: ||  11


இதம் மந்த்ரம் படே ந் நித்யம் ததச்’ச சு’சிபாவன: |


ஏகவிம்சதி ஸங்க்யாபி: புரச்’சரண மீரிதம் ||  12


ஸஹஸ்ராவர்த்தனாத் ஸம்யக் ஷண்மாஸம்ப்ரியதாம் வ்ரஜேத் |


ப்ருஹஸ்பதி ஸமோஜ் ஞானே தனே தனபதிர் பவேத் ||  13


அஸ்யைவாயுத ஸங்க்யாபி: புரச்’சரண மீரிதம் |


வக்ஷ்யாம்யாவர்த்தனாத் ஸம்யக் வாஞ்சிதம் பலமாப்னுயாத் ||  14


பூதப்ரேத  பிசா’சானாம் நாச’நம் ஸ்ருதிமாத்ருத:

Monday, 3 August 2020

கைசிக_ஏகாதசி_விரத_கதை

#கைசிக_ஏகாதசி_விரத_கதை
--
எப்படிப்பட்ட பாவத்தையும் கைசிக ஏகாதசி விரதம் தொலைக்கும் என்பது ஐதீகம். கைசிக ஏகாதசியின் பெருமையை விளக்கும் கதையை அறிந்து கொள்ளலாம்.

#கைசிக_ஏகாதசி_விரத_கதை

மக்கள் உழைப்பதும், பிழைப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காகத்தான். ஆனால் பெறுவதே தருவதற்குத்தான் என்பதை உணர்த்தியவன் நம்பாடுவான் என்னும் எளிய பக்தன். பெருமாளைப் பாடுவதே தனது பாக்கியமாகக் கருதியவன் நம்பாடுவான். வீணையும் கையுமாக அவன் பாடுவதைக் கேட்க காதுமடல் சாய்த்துக் காத்திருப்பார் பெருமாள்.

இது நடந்த இடம் திருக்குருங்குடி என்ற திருத்தலம். அன்று கார்த்திகை வளர்பிறை ஏகாதசி. #பிரபோதின_ஏகாதசி என்று சொல்வார்கள். விரதமிருந்து பெருமாளைப் பாடக் கிளம்பினார் நம்பாடுவான். வழியில் ஒரு பிரம்ம ராட்சசன் எனக்கு இன்று நீ உணவாக வேண்டும் என்று பிடித்துக்கொண்டான்.

நம்பாடுவான் சொன்னான், “ என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும். ஆனால் நான் போய்ப் பெருமாளைப் பாடிவிட்டு வந்து விடுகிறேன். அதன்பின் என்னை உணவாகக் கொள்ளலாம்”.

பிரம்ம ராட்சசன் மறுத்துக் கூறினான், “ நீ மனிதன். மனிதர்கள் பெரும்பாலும் சொன்ன சொல்லை மறந்துவிடுவார்கள். உன்னை எப்படி நம்புவது? “ என்று அப்போது நம்பாடுவான், தான் திரும்பி வராவிட்டால் அடையப்போகும் நரகங்களைச் சொல்லி, பயங்கரமான சத்தியங்களைச் செய்கிறான். பிரம்ம ராட்சசன் விட்டு விட்டான்.

நம்பாடுவான் மகிழ்ச்சியோடு பெருமாள் சந்நிதிக்குச் சென்று பாடுகிறான். அன்று மிக மிக உருக்கமாக ஒரு பண் பாடுகிறான். அது கைசிகப் பண். பாடிவிட்டு திரும்ப வரும்போது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி இல்லை.எனவே நம்பாடுவானை உண்ணவில்லை. தன்னை சாபவிமோசனம் செய்ய வேண்டுகிறான். தான் பாடின கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சனனின் சாபத்தை நீக்குகிறான் நம்பாடுவான்.

கைசிகப் பண் பாடிய ஏகாதசி கைசிக ஏகாதசி. இந்தக் கதை வராகப் புராணத்தில் உள்ளது. திருக்குறுங்குடியில் இது இப்போதும் நாடகமாக நிகழ்த்தப் பெறுகிறது. மற்ற திவ்யதேசங்களில் பெருமாள் கோயிலில் கைசிக மகாத்மியம் படிக்கப்படுகிறது.

#நன்றி : #மாலைமலர்.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...