Monday, 16 March 2020

திதி நித்யா

#திதி நித்யா 
நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள். ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை.

அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது.

அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள். அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

1. பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா 2. துவதியை –பகமாலினி நித்யா  3. திரிதியை – நித்யக்லின்னை நித்யா 4. சதுர்த்தி – பேருண்டா நித்யா 5. பஞ்சமி – வந்நிவாசினி நித்யா 6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா 7. ஸப்தமி – சிவதூதி நித்யா 8. அஷ்டமி – த்வரிதா நித்யா 9. நவமி – குலசுந்தரி நித்யா 10. தசமி – நித்ய நித்யா 11. ஏகாதசி – நீலபதாகா நித்யா 12. துவாதசி – விஜயா நித்யா 13. திரயோதசி – ஸர்வமங்களா நித்யா 14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா 15. பவுர்ணமி – சித்ராதேவி நித்யா அன்னையின் காலவடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திரகலை வளர்கிறது.

ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக அம்பிகையே வீற்றிருக்கிறாள். திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள். அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி, திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் 43 முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும் 15 தேவியர் தான் இந்த திதி நித்யா.

நீங்கள் பிறந்த திதியும் திதி நித்யாவும் வளர்பிறை ப்ரதமை திதிக்கும் தேய்பிறை அமாவாசை திதிக்கும் ஸ்ரீ காமேச்வரி நித்யா வளர்பிறை த்விதியை திதிக்கும் தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும் ஸ்ரீ பகமாலினி நித்யா வளர்பிறை த்ருதியை திதிக்கும் தேய்பிறை த்ரயோதசி திதிக்கும் ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் தேய்பிறை த்வாதசி திதிக்கும் ஸ்ரீ பேருண்டா நித்யா வளர்பிறை பஞ்சமி திதிக்கும் தேய்பிறை ஏகாதசி திதிக்கும் ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும் மகா ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா வளர்பிறை சப்தமி திதிக்கும் தேய்பிறை நவமி திதிக்கும் ஸ்ரீ சிவதூதி நித்யா வளர்பிறை அஷ்டமி திதிக்கும் தேய்பிறை அஷ்டமி திதிக்கும்

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...