Saturday, 20 October 2018

ஸ்ரீ குருவாயூரப்பன் .

ஸ்ரீ குருவாயூரப்பன் .
நமஸ்காரம்

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜன்மம் பாபம் தீர
குருவாயூரப்பா!நம்ஸ்காரம் செய்கின்றோம்.

திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு
கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

சந்தன காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்
நந்தகோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்

எண்ணைய் ஸ்நானம் செய்து கையில் வாழைபழத்தோடு நிற்கும்
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

குடம் குடமாக பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக்கொண்டு
குழல் ஊதும் க்ருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்

தெச்சி மந்தாரம் துளசி தாமரைப்பூ மாலை சாத்தி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

திவ்ய நாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து
ஸ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கின்றோம்

தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
நாராயணா உன்னைநமஸ்காரம் செய்கின்றோம் !

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...