Sunday, 19 August 2018

ஏகாதசி

🍀#ஏகாதசி #விரதமும்.. #பலன்களும்..🍀
--
#ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் #ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.
--
#ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் #ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் #ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். #அமாவாசை, #பவுர்ணமிக்கு #அடுத்த 11 நாட்களில் ஒரு #ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 #ஏகாதசிகள் #வருகின்றன. #இதில் #வளர்பிறையில் #ஒரு #ஏகாதசியும், #தேய்பிறையில் #ஒரு #ஏகாதசியும் #வரும்.
--
#ஆண்டு முழுவதும் #வரும் #ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த #ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் #நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. #ஒவ்வொரு #ஏகாதசியும் #ஒவ்வொரு #பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
--
 #சித்திரை மாத #வளர்பிறை #ஏகாதசி,  🍀‘காமதா ஏகாதசி’🍀 என்றும், #தேய்பிறையில் #வரும் #ஏகாதசி
🍀 ‘பாப மோகினி ஏகாதசி’🍀  என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு #ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.
--
 #வைகாசி மாத #வளர்பிறை #தினத்தில் வரும் ஏகாதசி 🍀‘மோகினி ஏகாதசி’ 🍀என்றும், #தேய்பிறை #ஏகாதசி
🍀 ‘வருதித் ஏகாதசி’ 🍀என்றும் கூறப்படுகிறது. இந்த #ஏகாதசி காலங் களில் #விரதம் இருப்பவர்கள் அனைவரும், #இமயமலை #சென்று #பத்ரிநாத்தை #தரிசனம் #செய்து #வந்ததற்கானபலனைபெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
--
 #ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 🍀‘நிர்ஜலா ஏகாதசி’🍀 என்றும், #தேய்பிறையில் #வரும் #ஏகாதசி🍀 ‘அபார ஏகாதசி’🍀 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த #ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் #சொர்க்கத்தை #அடைவார்கள்.
--
 #ஆடி மாதத்து #வளர்பிறை #ஏகாதசி  🍀‘சயனி’ 🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி 🍀‘யோகினி’ 🍀 என்றும் பெயர்பெற்றுள்ளது. இந்த #ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு #அன்னதானம் #வழங்கியதற்கு #நிகரான #பலன்கள் #கிடைக்கப்பெறும்.
--
 #ஆவணி மாத #வளர்பிறை #ஏகாதசியானது 🍀‘புத்ரஜா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசியானது🍀 ‘காமிகா’🍀 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த #ஏகாதசி #தினங்களில் #விரதம் #இருந்தால் #மக்கட்பேறு #கிடைக்கப்பெறுவார்கள்.
--
 #புரட்டாசி மாத #வளர்பிறை #ஏகாதசி, 🍀‘பத்மநாபா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி 🍀‘அஜா’ 🍀 என்றும் பெயர் பெற்றது. இந்த #ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.
--
 #ஐப்பசி மாத #வளர்பிறை #ஏகாதசி🍀 ‘பாபாங்குசா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி 🍀‘இந்திரா’🍀 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த #ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
--
 #கார்த்திகை மாத #வளர்பிறை #ஏகாதசி
🍀 ‘பிரபோதின’🍀 எனப்படும் இந்த #ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், #தேய்பிறை #ஏகாதசியான, 🍀‘ரமா’🍀 தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.
--
 #மார்கழி மாத #ஏகாதசி 🍀‘வைகுண்ட ஏகாதசி’🍀 என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் #ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் #தேய்பிறை #ஏகாதசி 🍀‘உத்பத்தி ஏகாதசி’🍀 எனப்படுகிறது.
--
 #தை மாத #வளர்பிறை #ஏகாதசி🍀 ‘புத்ரதா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி
🍀 ‘சுபலா’🍀 என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.
--
 #மாசி மாத #வளர்பிறை #ஏகாதசி🍀 ‘ஜெயா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி
🍀 ‘ஷட்திலா’ 🍀என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
--
 #பங்குனி #தேய்பிறை #ஏகாதசி 🍀‘விஜயா’ 🍀எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். #வளர்பிறை #ஏகாதசி
🍀 ‘ஆமலகி’ 🍀எனப்படும். அப்போது விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும்.
--
ஆண்டில் கூடுதலாக வரும் #ஏகாதசி🍀 ‘கமலா ஏகாதசி’🍀 எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

🍀தொகுப்பு🍀 :  🍀திருமதி லதா வெங்கடேஷ்வரன்.🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...