Sunday, 26 August 2018

பஞ்ச_குண_சிவ_மூர்த்திகள்

☘#பஞ்ச_குண_சிவ_மூர்த்திகள்

__

#ஓம்_நமச்சிவாய
--
பஞ்ச குண சிவ மூர்த்திகள் எனப்படுவது ஐந்து குணங்களை வெளிப்படுத்தும் ஐந்து வகையான சிவ மூர்த்திகள் ஆவர்.

☘#ஆனந்தம்_சாந்தம்_கருணை_வசீகரம்_ருத்திரம் ஆகியவை #பஞ்ச_குணங்கள் ஆகும்.☘

ஆனந்தத்தின் வடிவமாக நடராஜரும், சாந்தத்தின் வடிவமாக தட்சிணாமூர்த்தியும், கருணையின் வடிவமாக சோமஸ்கந்தரும், வசீகரத்தின் வடிவமாக பிச்சாடனாரும், ருத்திரத்தின் வடிவமாக பைரவரும் போற்றப்படுகின்றனர்.

இனி பஞ்ச குண சிவ மூர்த்திகளைப் பற்றிப் பார்ப்போம்...

☘#ஆனந்த_மூர்த்தி – #நடராஜர்☘

சிவனின் ஆனந்த வடிவமாக நடராஜர் வழிபடப்படுகிறார். இவர் ஆடல்கலையின் தலைவராகவும் வணங்கப்படுகிறார்.

இவர் தனது ஆடல்கலையின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கிறார் எனக் கருதப்படுகிறது.

இவர் வலது காலை முயலகன் மீது ஊன்றியும், இடது காலை உடலுக்கு குறுக்காக தூக்கிய ஆடிய நிலையிலும் காட்சியளிக்கிறார்; வலது மேற்கையில் டமருகமான உடுக்கையையும், இடது மேற்கையில் அக்னியையும் ஏந்தியுள்ளார்.

இவரின் வலது கீழ்கை அடைக்கலம் தரும் நிலையிலும், இடது கீழ்கைகளின் விரல்கள் தூக்கிய திருவடியை சுட்டியபடியும் இருக்கும்.

இவரது கூந்தல் மற்றும் ஆடைகள் காற்றில் ஆடியபடி இருக்கின்றன.

தலையில் கங்கை, நாகம், பிறைச்சந்திரன் ஆகியவற்றை அணிந்துள்ளார்.

முகத்தில் புன்சிரிப்புடன் காண்போரை கவர்ந்திழுக்கின்றார் நடராஜர்.

நடராஜர் உருவம் பஞ்சபூதங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அதாவது ஊன்றிய திருவடி நிலத்தினையும், தலையிலுள்ள கங்கை நீரினையும், இடதுமேற்கை அக்னி நெருப்பினையும், அசைந்தாடும் கூந்தல் காற்றினையும், தூக்கிய திருவடி ஆகாயத்தையும் குறிக்கின்றது.

இவரின் ஆனந்த தாண்டவமே உலக இயக்கத்திற்கு காரணமாகக் கருதப்படுகிறது.

ஆடல்வல்லான், ஆடலரசன், சிற்றம்பலன், சபேசன், அம்மபலத்தான், கூத்தன் என்றெல்லாம் நடராஜர் அழைக்கப்படுகிறார். இம்மூர்த்தியை வழிபட எல்லையில்லா பேரானந்தம் கிடைக்கும்...

☘#சாந்த_மூர்த்தி – #தட்சிணாமூர்த்தி..☘

சிவனின் சாந்த வடிவமாக தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி வழிபடப்படுகிறார். இவர் சிவாலயங்களில் மூலவருக்கு தெற்கே கல்லால மரத்தின் கீழ் தென்முகமாக அருள்பாலிக்கிறார்.

இவர் ஞானம், அறிவு, தெளிவு ஆகியவற்றின் வடிவமாகப் போற்றப்படுகிறார்.

இவர் வலது காலை அபஸ்மரனின் மீது ஊன்றியும், இடது காலை மடித்து அமர்ந்து தியான நிலையில் உள்ளார்; வலது மேற்கையில் பாம்புடன் கூடிய உடுக்கை ஃ ருத்திராட்ச மாலையும், இடது மேற்கையில் அக்னியையும் கொண்டுள்ளார்.

இவரது இடது கீழ்கையில் ஓலைச்சுவடி உள்ளது. வலது கீழ்கையில் உள்ள பெருவிரலுடன், ஆட்காட்டி விரலை இணைத்து ஏனைய விரல்கள் நேராக வைத்து சின்முத்திரை காட்டி அருளுகிறார்.

இடையில் புலித்தோலினையும், தலையில் பிறைச்சந்திரனையும் அணிந்து அருளுகிறார்.

பிரம்மாவின் குமாரர்களான சனகர், சதானந்தர், சனாதனர், சனத்குமாரர் ஞானத்தைத் தேடி அலைந்தனர். அவர்கள் தேடிய ஞானம் எங்கும் புலப்படவில்லை.

அப்போது தென்முகம் நோக்கி இறைவனான சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் சின்முத்திரை காட்டியவாறு தியானத்தில் அமர்ந்திருந்தார்...

இதனைக் கண்ட சனகாதி முனிவர்கள் பசுவாகிய ஆன்மாவானது ஆணவம்;, கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை ஒழித்து பதியாகிய இறைவனை அடையும்போது ஞானம் (மோட்சம்) கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டனர்.

சிவனின் இத்திருக்கோலம் தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

இவர் ஆலமர் கடவுள், ஆலமர் செல்வன், குருபகவான், தென்முகக் கடவுள் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இவரை வழிபட அறியாமை என்ற அஞ்ஞானம் நீங்கி மெய்யறிவான ஞானம் கிடைக்கும்.

☘#கருணா_மூர்த்தி – #சோமஸ்கந்தர்..☘

சிவனின் கருணா வடிவமாக சோமஸ்கந்தர் வழிபடப்படுகிறார். சோமானான சிவபெருமான் ஸ்கந்தர் எனப்படும் முருகன், உமையம்மையுடன் இணைந்து இருப்பதால் சோமஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறார்.

இவ்வடிவில் இறைவன் அன்பான கணவனாகவும், பாசமிகு தந்தையாகவும் இருக்கிறார். குடும்ப உறவின் உன்னத நிலையை இவ்வடிவம் உணர்த்துகிறது.

சிவபெருமான் வலதுபக்கத்திலும், உமையம்மை இடது பக்கத்திலும் இவ்விருவருக்கு இடையில் முருகப்பெருமானும் காட்சியளிகின்றனர்.

சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து இவ்வுலகைக் காக்கும் பொருட்டு இறைவனார் தம் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு நெருப்பு பொறிகளை உருவாக்கினார். அந்நெருப்பு பொறிகளை அக்னிதேவனும், வாயுதேவனும் சரவணப்பொய்கையில் சேர்த்தனர்.

நெருப்பொறிகள் ஆறு தாமரைமலர்களில் ஆறுகுழந்தைகளாக மாறினர். அவர்களை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். குழந்தைகளைக் காண வந்த உமையம்மை ஆறுகுழந்தைகளை அணைத்த போது அறுவரும் ஒரே குழந்தையாக மாறினர். இவரே கந்தன் என்று அழைக்கப்பட்டார்..

கந்தன் அம்மைக்கும், அப்பனுக்கும் இடையில் இருந்து உலகத்திற்கு காட்சியளித்தார். இவ்வுருவமே சோமஸ்கந்தர் என்றழைக்கப்படுகிறது.

குழந்தைநாயகர், சச்சிதானந்தம், சிவனுமைமுருகு, இளமுருகு உடனுறையும் அம்மையப்பர் என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார். இவரை வழிபட நல்ல குடும்ப வாழ்க்கையும், குடும்ப ஒற்றுமையும் கிடைக்கும்..

☘#வசீகர_மூர்த்தி – #பிட்சாடனார்☘

சிவனின் வசீகர வடிவமாக பிட்சாடனர் வழிபடப்படுகிறார். இவ்வடிவம் சிவபெருமான் பிச்சை ஏற்கும் வடிவிலான திருக்கோலமாகும். இவ்வடிவனத்தில் இறைவனார் பெரும் அழகோடு எல்லோரையும் வசீகரிக்கிறார்.

வசீகர மூர்த்தி இடது காலை ஊன்றி வலது காலை வளைத்து நடந்து செல்லும் நிலையில் உள்ளார். முன்வலது கையில் அருகம்புல்லால் மானை ஈர்த்தும், பின்வலது கையில் உடுக்கை ஏந்தி காதுவரை நீண்டும் இவர் காட்சியளிக்கிறார்.

பின்இடது கையில் பாம்புடன் திரிசூலமும், முன்இடது கையில் பிச்சை பாத்திரமும் கொண்டிருப்பார். ஆடையேதுமின்றி இடையில் பாம்பை அணிந்து விளங்குவார்.

தலையில் சடாபாரம், நெற்றியில் முக்கண்ணும், கருணை பொழியும் கண்களும், காண்போரை மயக்கும் கட்டழகுடனும் அருளுவார்.

வலக்காலில் வீரக்கழலும், திருவடிகளில் பாதுகைகளும் காணப்படும். இவரின் இடப்பக்கத்தில் தலையில் பிச்சை பாத்திரம் கொண்ட குறட்பூதமும், மோகினியும் காணப்படுவர்.

தாருகாவனத்தில் முனிவர்கள் வேள்விகளிலும், வேதமந்திரங்களிலும் தங்களைவிடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை எனச் செருக்குற்றிருந்தனர். முனி பத்தினிகளும் கற்பில் தாங்கள் சிறந்தவர்கள் என்று ஆணவம் கொண்டிருந்தனர்.

அப்போது சிவபெருமான் பிட்சாடனார் வேடமிட்டு திருமாலை மோகினி வேடத்தில் கூட்டிக் கொண்டு தாருகாவனத்திற்குச் சென்றார்...

முனி பத்தினிகள் பிட்சாடனர் பின்னும், முனிவர்கள் மோகினி பின்னும் தங்களை மறந்து சென்றனர். திடீரென முனிவர்கள் தங்கள் நிலையை உணர்ந்தனர்.

தங்களின் பத்தினிகள் மயங்கக் காரணமான பிட்சாடனார் மீது வேள்வித்தீ, மான், மழு, நாகங்கள், யானை, புலி, சூலம், பூதப்படை, உடுக்கை, முயலகன் ஆகிவற்றை ஏவினர்.

இறைவனார் அவற்றை ஆடையாகவும், அணிகலானகவும், ஆயுதங்களாகவும் ஏற்றுக் கொண்டார். இதனைக் கண்ட முனிவரும், அவர்தம் பத்தினியரும் இறைவனை உணர்ந்து தங்களின் ஆவணவம் அழியப் பெற்றனர்.

பலிதேர்பிரான், ஐயங்கொள் பெம்மான், பிச்சத்தேவர் என்றெல்லாம் போற்றப்படும் இவரை வழிபட அடியர்களின் தீவினைகளை அழித்து நல்வழி காட்டுவார்.

இவர் தம் பக்கதர்களின் சிற்றின்ப பற்றினை நீக்கி பேரின்பத்தை நல்குவார்..

☘#ருத்திர_வடிவம் – #பைரவர்...☘

சிவனின் ருத்திர வடிவமாக பைரவர் வழிபடப்படுகிறார். இவரை வைரவர் என்றும் அழைப்பர். இவரின் வாகனம் நாய் ஆகும். இவர் காவல் தெய்வமாக்க கருதப்படுகிறார்.

இவர் பொதுவாக சிவாலயத்தில் வடகிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார்.

சிவாலய வழிபாட்டின் முடிவில் சிவாலயத்திலிருந்து பிரசாதத்தைத் தவிர வேறு பொருட்களை எடுத்து செல்லவில்லை என்று கூறி இவரிடம் அனுமதி பெற்ற பின்பே செல்ல வேண்டும்.

பிறந்த மேனியினராய், நாகத்தை பூணூலாகவும் சந்திரனை தலையில் வைத்தும் காட்சி அளிக்கிறார். கைகளில் பாசம், அங்குசம், சூலம், வாள் ஆகியவற்றை ஏந்தி நாய் வாகனத்துடன் அருள்பாலிப்பார்.

இவர் சனிபகவானின் குருவாகவும், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரங்கள் உள்ளிட்டவைகளையும், காலத்தை கட்டுப்படுத்துபவராகவும் கருதப்படுகிறார்.

அந்தகாசுரன் என்ற அசுரன் சிவனிடம் பெற்ற வரத்தினால் உலக உயிர்களை துன்புறுத்தினான். சிவனிடம் இருந்து பெற்ற சக்தியால் உலகினை இருளில் மூழ்கடித்தான்..

அனைவரும் இறைவனான சிவபெருமானிடம் அந்தாகாசுரனை வதம் செய்ய வேண்டினர்.

சிவனும் காலாக்னியைக் கொண்டு பைரவரை படைத்தார். பைரவரும் சிவனின் ஆணைப்படி அந்தகாசுரனை அழித்து உலகில் ஒளி பரவச் செய்தார்.

எட்டு திசைகளிலும் நிலவிய இருளைப் போக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

இவர் பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், சேத்ர பாலர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், சித்தன், வாதுகன் என பல பெயர்களில் போற்றப்படுகிறார்.

இவரை வழிபட மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி சிறந்ததாகும். செவ்வாயுடன் சேர்ந்த தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவரை வழிபட அகால மரணம் தவிர்க்கப்படும். நோய் நொடிகள் நீக்கி வளமான வாழ்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும்.

நாமும் பஞ்ச குண சிவ மூர்த்திகளை வழிபட்டு வாழ்வில் மேன்மை அடைவோம்..
சிவசிவ
அன்பே சிவம்.

Tuesday, 21 August 2018

ஸ்ரீ_அருணகிரிநாதர்_சுவாமிகள்_அருளிய_கந்தர்_அநுபூதி

☘#ஸ்ரீ_அருணகிரிநாதர்_சுவாமிகள்_அருளிய_கந்தர்_அநுபூதி


☘#காப்பு☘
--
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
--
☘#நூல்☘

(1) ☘ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.☘
--
(2) ☘உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.☘
--
(3) ☘வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.☘
--
(4)☘ வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.☘
--
(5) ☘மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.☘
--
(6) ☘திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.☘
--
(7) ☘கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.☘
--
(8) ☘அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.☘
--
(9) ☘மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல
நிர்பயனே.☘
--
(10) ☘கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.☘
--
(11) ☘கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.☘
--
(12) ☘செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.☘
--
(13) ☘முருகன், தனிவேல் முனி, நம் குரு ... என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.☘
--
(14) ☘கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.☘
--
(15) ☘முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.☘
--
(16)☘ பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக
 துரந்தரனே.☘
--
(17) ☘யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.☘
--
(18) ☘உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல,
சூர பயங் கரனே.☘
--
(19)☘ வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.☘
--
(20) ☘அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.☘
--
(21) ☘கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.☘
--
(22)☘ காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.☘
--
(23) ☘அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே☘
--
(24) ☘கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர
 பூபதியே.☘
--
(25) ☘மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.☘
--
(26) ☘ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.☘
--
(27) ☘மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஆனா வானவனே.☘
--
(28) ☘ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.☘
--
(29) ☘இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.☘
--
(30)☘ செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.☘
--
(31)☘ பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.☘
--
(32)☘ கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.☘
--
(33) ☘சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.☘
--
(34) ☘சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே.☘
--
(35) ☘விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா,
சுர பூபதியே.☘
--
(36) ☘நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத
சேகரனே.☘
--
(37) ☘கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.☘
--
(38) ☘ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.☘
--
(39) ☘மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர
தேசிகனே.☘
--
(40) ☘வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே.☘
--
(41) ☘சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே.☘
--
(42)☘ குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.☘
--
(43) ☘தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி
பிறந்ததுவே.☘
--
(44) ☘சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே.☘
--
(45) ☘கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக
தயாபரனே.☘
--
(46) ☘எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.☘
--
(47) ☘ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.☘
--
(48) ☘அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.☘
--
(49) ☘தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.☘
--
(50) ☘மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.☘
--
(51) ☘உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.☘

ஸ்ரீபஞ்சாயுத_ஸ்தோத்ரம்

#ஸ்ரீபஞ்சாயுத_ஸ்தோத்ரம்
...

தினமும் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள்
திருமாலின் திருக்கரங்களிலுள்ள பஞ்ச ஆயுதங்கள் உங்களுக்குத் தேனான வாழ்வு கிட்டச் செய்யும்.

#திருமாலின்_திருவருளும், அதனால் திருமகளின் அருளும் உங்கள் இல்லம் வந்து சேரும்.
குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிலைக்கும். எதிரிகள் சக்தியிழப்பர்.

 1) #சுதர்சனம் - சக்கரம்

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்மி
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!

தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும்,
வல்லமை பொருந்தியதும்,
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

2) #பாஞ்சஜன்யம் - சங்கு

விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே!

மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளி வரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும், தனது கம்பீர ஓசையால்
அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.

3) #கௌமோதகம் - கதை

ஹிரண்மயீம் மேரு ஸமான ஸாரம்
கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம் வைகுண்ட வாமாக்ரகரா பிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைகிறேன்.

4) #நந்தகம் - வாள்

ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேதக்ஷரச் சோணித திக்ததாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி, செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் எனும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடைகிறேன்.

5) #சார்ங்கம் - வில்

யஜ்ஜ்யாநீ நாத ஸ்ரவபணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பர்ணவர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக்கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் சரணமடைகிறேன்.

இமம் ஹரே: பஞ்சமஹாயுதாநாம
ஸ்தவம் படேத் யோ அநுதிநம் ப்ரபாதே
ஸமஸ்தது:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

உயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தைப் பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்.

வநேரணே சத்ரு ஜலாக்நிமத்யே
யத்ருச்சயா பத்ஸு மஹாபயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர நாகுலாத்மா
ஸுகிபவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ:

வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்.

Sunday, 19 August 2018

ஹிரண்மயீம் லக்ஷ்மீம்

இராகம் : லலிதா

தாளம் : ரூபகம்

#பல்லவி

ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஸதா பஜாமி
ஹீன மானவாஸ்ரயம் த்யஜாமி

#அனுபல்லவி

சிர-தர ஸம்பத்ப்ரதாம்
க்ஷீராம்புதி தனயாம்

ஹரி வக்ஷ:ஸ்தலாலயாம்
ஹரிணீம் சரண கிஸலயாம்
கர கமல த்ருத குவலயாம்
மரகத மணி-மய வலயாம்

#சரணம்

ஸ்வேத த்வீப வாஸினீம்
ஸ்ரீ கமலாம்பிகாம் பராம்
பூத பவ்ய விலாஸினீம்
பூஸுர பூஜிதாம் வராம்
மாதரம் அப்ஜ மாலினீம்
மாணிக்யாபரண தராம்
கீத வாத்ய வினோதினீம்
கிரிஜாம் தாம் இந்திராம்

ஸீத கிரண நிப வதனாம்
ஸ்ரித சிந்தாமணி ஸதனாம்
பீத வஸனாம் குரு குஹ -
மாதுல காந்தாம் லலிதாம் (ஹிரண்மயீம்
லக்ஷ்மீம் )

ஏகாதசி

🍀#ஏகாதசி #விரதமும்.. #பலன்களும்..🍀
--
#ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் #ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.
--
#ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் #ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் #ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். #அமாவாசை, #பவுர்ணமிக்கு #அடுத்த 11 நாட்களில் ஒரு #ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 #ஏகாதசிகள் #வருகின்றன. #இதில் #வளர்பிறையில் #ஒரு #ஏகாதசியும், #தேய்பிறையில் #ஒரு #ஏகாதசியும் #வரும்.
--
#ஆண்டு முழுவதும் #வரும் #ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த #ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் #நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. #ஒவ்வொரு #ஏகாதசியும் #ஒவ்வொரு #பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
--
 #சித்திரை மாத #வளர்பிறை #ஏகாதசி,  🍀‘காமதா ஏகாதசி’🍀 என்றும், #தேய்பிறையில் #வரும் #ஏகாதசி
🍀 ‘பாப மோகினி ஏகாதசி’🍀  என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு #ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.
--
 #வைகாசி மாத #வளர்பிறை #தினத்தில் வரும் ஏகாதசி 🍀‘மோகினி ஏகாதசி’ 🍀என்றும், #தேய்பிறை #ஏகாதசி
🍀 ‘வருதித் ஏகாதசி’ 🍀என்றும் கூறப்படுகிறது. இந்த #ஏகாதசி காலங் களில் #விரதம் இருப்பவர்கள் அனைவரும், #இமயமலை #சென்று #பத்ரிநாத்தை #தரிசனம் #செய்து #வந்ததற்கானபலனைபெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
--
 #ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 🍀‘நிர்ஜலா ஏகாதசி’🍀 என்றும், #தேய்பிறையில் #வரும் #ஏகாதசி🍀 ‘அபார ஏகாதசி’🍀 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த #ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் #சொர்க்கத்தை #அடைவார்கள்.
--
 #ஆடி மாதத்து #வளர்பிறை #ஏகாதசி  🍀‘சயனி’ 🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி 🍀‘யோகினி’ 🍀 என்றும் பெயர்பெற்றுள்ளது. இந்த #ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு #அன்னதானம் #வழங்கியதற்கு #நிகரான #பலன்கள் #கிடைக்கப்பெறும்.
--
 #ஆவணி மாத #வளர்பிறை #ஏகாதசியானது 🍀‘புத்ரஜா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசியானது🍀 ‘காமிகா’🍀 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த #ஏகாதசி #தினங்களில் #விரதம் #இருந்தால் #மக்கட்பேறு #கிடைக்கப்பெறுவார்கள்.
--
 #புரட்டாசி மாத #வளர்பிறை #ஏகாதசி, 🍀‘பத்மநாபா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி 🍀‘அஜா’ 🍀 என்றும் பெயர் பெற்றது. இந்த #ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.
--
 #ஐப்பசி மாத #வளர்பிறை #ஏகாதசி🍀 ‘பாபாங்குசா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி 🍀‘இந்திரா’🍀 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த #ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
--
 #கார்த்திகை மாத #வளர்பிறை #ஏகாதசி
🍀 ‘பிரபோதின’🍀 எனப்படும் இந்த #ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், #தேய்பிறை #ஏகாதசியான, 🍀‘ரமா’🍀 தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.
--
 #மார்கழி மாத #ஏகாதசி 🍀‘வைகுண்ட ஏகாதசி’🍀 என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் #ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் #தேய்பிறை #ஏகாதசி 🍀‘உத்பத்தி ஏகாதசி’🍀 எனப்படுகிறது.
--
 #தை மாத #வளர்பிறை #ஏகாதசி🍀 ‘புத்ரதா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி
🍀 ‘சுபலா’🍀 என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.
--
 #மாசி மாத #வளர்பிறை #ஏகாதசி🍀 ‘ஜெயா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி
🍀 ‘ஷட்திலா’ 🍀என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
--
 #பங்குனி #தேய்பிறை #ஏகாதசி 🍀‘விஜயா’ 🍀எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். #வளர்பிறை #ஏகாதசி
🍀 ‘ஆமலகி’ 🍀எனப்படும். அப்போது விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும்.
--
ஆண்டில் கூடுதலாக வரும் #ஏகாதசி🍀 ‘கமலா ஏகாதசி’🍀 எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

🍀தொகுப்பு🍀 :  🍀திருமதி லதா வெங்கடேஷ்வரன்.🍀

Friday, 17 August 2018

நாராயணன் நாமம்

நாராயணன் நாமம் ஒரு முறை சொன்னாலே
நாடுமே நலம் யாவுமே( ஸ்ரீ மன் நாராயணா)

வாரணம் கூவிட ஓடி வந்தான்
ஆரணங்கின் மானம் காத்து நின்றான் (ஸ்ரீ மன்)

பார்த்தனுக்காகவே தேர் செலுத்தி தர்ம போரினில் கீதையும் பரிந்துரைத்தான் ( ஸ்ரீ மன் )

சிறுவன் துருவன் துதித்த நாமம்
பிரகலாதன் அனவரதமும் பஜீத்த நாமம்
அரிய அஷ்டாச்சர நாமம்- குருவாயூர் அப்பனால் கலியினில் காட்சி தந்திடும் ( ஸ்ரீ மன் )

Wednesday, 8 August 2018

கமலாம்பிகை_ஸ்தோத்திரம்

#கமலாம்பிகை_ஸ்தோத்திரம்
.

நாராயண தீர்த்தரின் சீடரால் துதிக்கப்பட்டது.

1. பந்தூகத் யுதிமிந்து பிம்ப வதனாம்
ப்ருந்தா ரகைர்வந்தி தாம்
மந்தா ராதி ஸமர்சிதாம் மது மதீம்
மந்த ஸ்மிதாம் ஸுந்தரீம்
பந்தச் சேதன காரிணீம் த்ரிநயனாம்
போகா பவர்க ப்ரதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : செம்பருத்திப் பூ போல் பிரகாசிப்பவள், சந்திரபிம்பம் போன்ற முகம் உடையவள், தேவர்களால் வணங்கப்படுபவள், மந்தாரம் முதலிய மலர்களால் பூஜிக்கப்படுபவள், ஆனந்தத்தை அளிப்பவள், புன்சிரிப்பு மிக்கவள், பேரழகி, கர்மபந்தத்தைப் போக்குபவள், முக்கண்ணாள், இந்த உலகில் எல்லா சுகங்களையும் தந்து, மோக்ஷத்தை அளிப்பவள், விரும்பியதை அளிப்பவள், அப்படிப்பட்ட மங்களத்தை அருளும் கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

2. ஸ்ரீகாமேச்வர பீட மத்ய நிலயாம்
ஸ்ரீராஜராஜேச்வரீம்
ஸ்ரீவாணீ பரிஸேவிதாங்க ரியுகளாம்
ஸ்ரீமத்க்ருபாஸாக ராம்
சோகாபத்பய மோசினீம் ஸுகவிதா
நந்தைக ஸந்தாயினீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : காமகோடி பீடத்தின் நடுவில் அமர்ந்தவள், ராஜராஜர்களின் தலைவி, மகாலட்சுமி, சரஸ்வதி இவர்களால் துதிகக்ப்பட்ட தாமரைத் திருவடிகளை உடையவள்,https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/ பெருஞ்செல்வத்தைத் தரும் கருணைக்கடல், கவலை, பயம், ஆபத்துக்களைப் போக்குபவள், நல்ல புலமையைத் தந்து ஆனந்த நிலையை அளிப்பவள், விரும்பியதை அளிப்பவளும், மங்களத்தை அருளுபவளுமான கமலாம்பிகையை வணங்குகின்றேன்.

3. மாயா மோஹவினாசினீம்
முனிக ணைராராதி தாம் தன்மயீம்
ச்ரேய: ஸஞ்சய தாயினீம் குணமயீம்
வாய்வாதி பூதாம் ஸதாம்
ப்ராத: கால ஸமானசோப மகுடாம்
ஸாமாதி வேதை ஸ்துதாம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : மாயையால் உண்டாகும் அஞ்ஞானத்தைப் போக்குபவள், முனிவர்களால் துதிக்கப்பட்டு பிரம்மஸ்வரூபமாக விளங்குபவள், பலவித நன்மைகளை அளிப்பவள், நல்ல குணங்களை உடையவள், சாதுக்களின் இதயத்தில் ஆகாச வடிவில் உள்ளவள்,
https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/
அதிகாலை சூரியனுக்கு நிகரான சிவந்த அழகுடைய கிரீடத்தை உடையவள், சாம வேதம் முதலான வேதங்களால் துதிக்கப்பட்டவளாகிய கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

4. பாலாம் பக்தஜனௌக சித்தநிலயாம்
பாலேந்து சூடாம்ப ராம்
ஸாலோக்யாதி சதுர்விதார்த பலதாம்
நீலோத்பலாக்ஷீமஜாம்
காலாரி ப்ரிய நாயிகாம் கலிமல
ப்ரத வம்ஸினீம் கௌலினீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : சிறுமி வடிவினள், பக்தர்களின் இதயத்தில் இருப்பவள், சந்திரக் கலையைத் தரித்தவள், பரபிரம்மஸ்வரூபிணி. ஸாலோகம், ஸாமீபம், ஸாரூபம், ஸாயுஜ்யம் முதலிய புருஷார்த்தங்களைக் கொடுப்பவள். கருங்குவளை மலர்களை ஒத்த கண்களை உடையவள், பிறப்பற்றவள், காலனைக் காலால் உதைத்த பரமசிவனின் மனைவி, கலியால் ஏற்படும் பாவங்களைப் போக்கி, விரும்பியதை அளிப்பவளுமான மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

5. ஆனந்தாம்ருத ஸிந்து மத்ய நிலயாம்
அக்ஞான மூலாபஹாம்
க்ஞானானந்த விவர்தினீம் விஜயதாம்
மீனேக்ஷணாம் மோஹினீம்
க்ஞானானந்த பராம் கணேச ஜனனீம்
கந்தர்வ ஸம்பூஜிதாம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : ஆனந்தக் கடலின் நடுவில் இருப்பவள், அஞ்ஞானத்தின் காரணத்தைப் போக்கி, ஞானமும், ஆனந்தமும் அளிப்பவள், வெற்றியை நல்குபவள், மீன் போன்ற கண்களை உடையவள், மோகிக்கச் செய்பவள், மகாகணபதியின் தாய், கந்தர்வர்களால் பூஜிக்கப்பட்டவள்,https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/ விரும்பியவற்றை அளிப்பவள், அப்படிப்பட்ட மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

6. ஷட் சக்ரோபரி நாதபிந்து நிலயாம்
ஸர்வேச்வரீம் ஸர்வகாம்
ஷட் சாஸ்த்ராகம வேத வேதி தகுணாம்
ஷட்கோண ஸம்வாஸினீம்
ஷட்காலேன ஸமர்ச்சிதாத்ம விபவாம்
ஷட்வர்க ஸம்சேதினீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : அறுகோண சக்கரத்தின் மீது நாத பிந்துவில் இருப்பவள், அனைவருக்கும் ஈஸ்வரி, எங்கும் இருப்பவள், ஆறு சாஸ்திரங்கள், நான்கு வேதங்கள் - ஆகமங்களால் அறியப்பட்ட குணங்களை உடையவள், ஆறு காலங்களிலும் பூஜிக்கப்பட்டவள், காம-குரோத-லோப-மோக-மத-மாத்ஸர்யம் எனும் ஆறு பகைவர்களை அழிப்பவள், விரும்பியவற்றை அளிக்கும் மங்களகரமான அந்த கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

7. யோகா னந்த கரீம் ஜகத்ஸுககரீம்
யோகீந்த்ர சித்தாலயாம்
ஏகாமீச ஸுகப்ரதாம் த்விஜநுதாம்
ஏகாந்த ஸஞ்சாரிணீம்
வாகீசாம், விதி, விஷ்ணு, சம்பு, வரதாம்
விச்வேச்வரீம் வைணிகீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : தியான யோகத்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளிப்பவள், உலகிற்குச் சுகத்தை அளிப்பவள், யோகிகளின் மனதைக் கோவிலாகக் கொண்டவள், அத்விதீயாக இருப்பவள், பரமசிவனுக்குச் சுகத்தை அளிப்பவள், பிரளய காலத்தில் தனித்து நிற்பவள், வாக்கிற்கு ஈஸ்வரி. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு வரங்களை அளிப்பவள்
 உலகிற்கெல்லாம் தலைவி, வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள், விரும்பியதை அருளும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் வணங்குகிறேன்.

8. போதானந்த மயீம் புதைரபி நுதாம்
மோத ப்ரதா மம்பி காம்
ஸ்ரீமத் வேத புரீச தாஸவினுதாம்
ஹ்ரீங்கார ஸந்தாலயாம்
பேதாபேத விவர்ஜிதாம் பஹுவிதாம்
வேதாந்த சூடாமணீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : ஞானானந்த ஸ்வரூபிணி, சான்றோர்களால் துதிக்கப்பட்டவள், சந்தோஷத்தை அளிப்பவள், அம்பிகை, வேதபுரீச தாசரால் துதிக்கப்பட்டவள், ஹ்ரீம், ஹ்ரீம் என்ற பீஜ மந்திரத்தைக் கோவிலாகக் கொண்டவள்,https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/ வேறுபட்டது - வேறுபடாதது என்ற இரண்டற்றவள், பலவித வடிவினள், வேதாந்தங்களுக்கு மணிமகுடமாக இருப்பவள் விரும்பியதை அளிக்கும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

9. இத்தம் ஸ்ரீகமலாம்பி காப்ரியகரம்
ஸ்தோத்ரம் படேத் யஸ்ஸதா
புத்ர ஸ்ரீப்ரத மஷ்டஸித்தி பலதம்
சிந்தா வினாசாஸ்பதம்
ஏதி ப்ரஹ்மபதம் நிஜம் நிருபமம்
நிஷ்கல்மஷம் நிஷ்களம்
யோகீந்த்ரை ரபி துர்லபம்
புனரயம் சிந்தா வினாசம் பரம்.

#பொருள் : குழந்தைச் செல்வம் மற்றும் எல்லாச் செல்வங்களையும், எட்டு சித்திகளின் பயனையும் அளித்து கவலைகளைப் போக்கும் கமலாம்பிகைக்குப் பிரியமான இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறார்களோ அவர்கள், இணையற்ற உருவமற்ற களங்கமற்ற, சிறந்த யோகிகளுக்கும் எட்டாத மேலான பிரம்மபதத்தை அடைவார்கள்.

சியாமளா_தண்டகம்_ஸ்லோகம்

#கல்வியில்_சிறந்து_விளங்கச்_செய்யும்_சியாமளா_தண்டகம்_ஸ்லோகம்

#அபூர்வ_ஸ்லோகம்

மகாகவி காளிதாசன் இயற்றிய அற்புத ஸ்லோகம், #சியாமளா_தண்டகம். தேவியின் அருளால் கவிபுனையும் திறம் பெற்ற காளிதாசன், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல உலகோர் அனைவரும் உய்ய இந்தத் துதியினை இயற்றியிருக்கிறார். கல்வி கேள்விகளிலும், சகல கலைகளிலும் சிறந்து விளங்க இந்தத் துதியினை உளமாற ஓதி அந்த நற்பலன்களைப் பெறலாம்.

மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும்
பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும்,
நீல மணியின் ஒளியுடன் கூடியhttps://www.facebook.com/groups/Divinity.Power/
அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனி
வரின் புதல்வியுமான பராசக்தியை மனதில்
தியானம் செய்கிறேன்.

சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:

நான்கு கைகள் உடையவளும், தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும், நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும், குங்குமச் சிவப்பு மேனியுடையவளும், கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும் உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும் ஆன பராசக்தியான ச்யாமளா தேவியே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.

மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப https://www.facebook.com/groups/Divinity.Power/
வனவாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே

ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியேஉலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும், ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும், எப்பொழுதும் மங்கள வடிவானவளும், கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும் மதங்க முனிவரின் புத்ரியுமான பராசக்தியே உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன். நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே, சங்கீதத்தில் பிரியமுடையவளே, செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே, ஹே மாதங்கி! எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக. (கிளி எனும் சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்).

ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த
ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட
பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப
காதம்ப காந்தார வாஸப்ரியே,
க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!

அம்ருதம் எனும் கடலின் மத்தியில்,
மனதைக் கவரும் சிறப்புடைய தீவில் வில்வ
மரங்கள் சூழ்ந்த பிரதேசத்தில் கற்பக
விருட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கதம்ப மரக் காட்டில் வசிப்பவளே!
யானைத்தோல் போர்த்திய சிவனின் பத்தினியே,
அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரியமானவளே.

ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா ஸம்ப்ரமாலோல
நீபஸ்ரகாபத்த சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே
சேகரீபூத சீதாம்சுரேகா மயூகாவளீநத்த
ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக
ஸம்பாவிதே!

நீ பாடத்துவங்கி அந்த ஸங்கீத ரஸத்தில் திளைத்திருக்கும் தருணத்தில் உனது முதுகெலும்பின் அடிப்பாகம் வரை நீண்ட கூந்தலில் அணிந்திருக்கும் கதம்ப புஷ்ப கொத்துக்கள் அசைந்தாடுவதே தனி அழகு. ஹே! ஹிமவானின் புதல்வியே! நீ சிரஸில் ஆபரணமாக அணிந்த சந்திர கலையின் கிரணங்களால் சூழப்பட்ட சுருள் சுருளான கருங்கூந்தல்களுடன் மிளிர்பவளே, சகல ஜனங்களாலும் பூஜிக்கப்படுபவளே!

காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்ப https://www.facebook.com/groups/Divinity.Power/
ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே
சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே
ஸூராமே ரமே

காமதேவனின் வில்லுக்கொத்த கொடிபோல் வளைந்த புருவங்களைக் கொண்ட உனது கண்கள் அந்தக் கொடியின் புஷ்பங்களோ எனு ப்ரமைக்குரித்தானவளே, அம்ருதத்திற்கு நிகரான வாக்கு உடையவளே! கோரோசனை சாந்தினால் இடப்பட்ட அலங்கார திலகத்தின் அழகுடன் கூடியவளே! மனதிற்குகந்தவளே, ஐஸ்வர்யமே வடிவானவளே!

ப்ரோல்ல ஸத்வாலிகா மௌக்தி கச்ரேணிகா
சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்
தலந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸௌரப்ய ஸம்ப்ராந்த
ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீஸ்வரே ஸூஸ்வரே பாஸ்வரே.

ஜொலிக்கும் காதணியின் முத்துக்களின் நிலவுபோல் ஒளிரும் சோபையுடனும், கன்னங்களில் கஸ்தூரியினால் வரையப்பட்ட சித்திரங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு இங்கும் அங்கும் பறக்கின்ற வண்டுகளின் ரீங்காரத்துடன் கலந்த வீணா நாதத்துடன் இணைந்தவளே. வீணை மீட்டும் தோரணையினால் அசைகின்ற பனங்
குருத்தினால் அமைக்கப்பெற்ற விசேஷமான காதணிகளுடன் கூடியவளே, மந்திர சித்தி பெற்ற சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே.
வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த
தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே.

திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலாலஸச் சக்ஷு
ஜராந்தோலன ஸமாக்ஷிப்த கர்ணைக https://www.facebook.com/groups/Divinity.Power/
நீலோத்பலே, ச்யாமலே
பூரிதா சேஷலோகாபிவாஞ்
சாபலே நிர்மலே.

சிறந்த மதுபானத்தின் காரணமாக பிரகாசிக்கின்ற கண்களின் சேஷ்டையினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு காதில் அணிந்த நீலத்தாமரை புஷ்பத்தை உடையவளே, நீலநிறத் திருமேனியுடையவளே. லோகங்களெல்லாம் நிரப்பும் விருப்பிய பலன்களை உடையவளே, பரிசுத்தமானவளே! ஐஸ்வர்யங்களை அளித்தும் அருள்பாலிக்கின்றவளே.
ஸ்வேத பிந்தூல்லஸத்பால லாவண்ய நிஷ்யந்த

ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே
ஸர்வ மந்த்ராத்மிகே. ஸர்வ விச்வாத்மிகேகாளிகே
முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக 
கற்பூரதாம்பூல கண்டோத்கரே ! ஞானமுத்ராகரே,
ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, கரே !

நெற்றியில் காணும் வியர்வைத் துளிகளின் கூட்டமோ என்று பராமரிக்கக்கூடிய சோபை மிகுந்த புல்லாக்கு ஆபரணம் அணிந்தவளே! மந்திரங்களுக்கு இருப்பிடமானவளே! வெண்மையான புன்முறுவல் தவழும் உதடுகளில் விளங்கும் கற்பூர தாம்பூலம் பூண்டவளே, ஞானமே சின்னமாய் உடையவளே, சம்பத்துகள் அருள்பவளே, கையில் எழில் மிகுந்த தாமரை புஷ்பம் ஏந்தியவளே!

குந்த புஷ்பத்யுதி ஸ்நிக்த தந்தாவலீ
நிர்மலாலோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர 
சோபாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரேhttps://www.facebook.com/groups/Divinity.Power/
முல்லை புஷ்பம் போல் சோபையுள்ள பல்வரிசைகளின் ப்ரகாசத்துடன்
 கூடின அழகிய புன்முறுவல் தவழும் சிவந்த கீழுதடு உடையவளே.

ஸுலலித நவயௌவனாரம்ப சந்த்ரோத  யோத்வேல லாவண்ய
துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ஹ்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா

ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே
துவங்கும் யௌவனத்தின் சந்த்ரோதயம் போன்று சோபையுடன் கூடிய பாற்கடலிலிருந்து வெளிப்படும் சங்கின் அழகையும் மிஞ்சும் கழுத்து உடையவளே, நளின நடையுடையவளே! சிறந்த ரத்தினங்கள் அமைந்த ஒளிமிக்க ஆபரணங்களால் ப்ரகாசிக்கும் அழகிய அங்கங்களை உடையவளே, மங்கள ஸ்வரூபிணியே!
ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே, யோகிபி: பூஜிதே:

விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத்
கங்கணா லங்க்ருதே, விப்ரமாலாங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !
ரத்னங்களை இழைத்த வங்கியின் ஒளிக்கிரணங்களால் சோபிக்கின்ற தோள்களுடன் விளங்குபவளே, யோகிகளால் வணங்கப்படுபவளே! திசைகளெல்லாம் ஒளிர்ப்பிக்கும் ப்ரகாசம் உடைய கங்கணத்தால் அலங்கரிக்கப்பட்டவளே, உபாஸகர்களால் பூஜிக்கப்படுபவளே!

வாஸராரம்பவேலா ஸமுஜ்ரும்பமாணாரவிந்த
ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.
திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம
ஸந்த்யாய மானாங்குலீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா (ஆ)
கண்டலே,
சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே சூர்யோதயத்தில் மலர்ந்த தாமரை

புஷ்பத்திற்கு ஒப்பான கைகளையுடையவளே, எப்பொழுதும் பெருக்கெடுக்கும் தயையுடையவளே, இரண்டற்று ஒன்றேயானவளே, கைகளை அலங்கரிக்கும் ரத்ன மோதிரங்களின் ஒளியில் சாயங்கால சிவந்த வானம் போன்றதில், நகம் எனும் சந்திரனைப் போல் ப்ரகாசமுடைய தளிர் விரல்களுடையவளே, ஞானமாகிற ஒளி
யினால் சூழப்பட்டவளே, ஒளிரும் குண்டலங்கள் பூண்டவளே.

தாரகா ராஜிநீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ https://www.facebook.com/groups/Divinity.Power/
வலிச்சேத விஸீஸ முல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே, கிங்கர  கரே
ஹேம கும்போப மோத்துங்க வக்ஷோப பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே
லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே,

 மஞ்ஜூ ஸம்பாஷணே
நட்சத்திர மண்டலத்திற்கு ஒப்பான
ப்ரகாசமான முத்து மாலைகளின் வரிசை
யினால் சோபையூட்டப்பட்ட உயர்ந்த பரந்த மார்பகத்தின் பாரத்தினால் சிறிது மடிந்து வளைந்த இடையுள்ளவளே! கடல் போன்ற ஸௌந்தர்யங்களை உடையவளே, கைகளில் வீணை ஏந்தியவளும், குபேரனால் வணங்கப்படுபவளும் ஆனவளே! தங்கக்குடத்திற்கு ஒப்பான மார்பின் பாரத்தினால் வணங்கினவளே, மூன்று லோகங்களாலும் பூஜிக்கப்படுபவளே, இனிய பேச்சுடையவளே.

சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே
பத்ம ராகோல்லஸத் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே,சந்த்ரிகா சீதலே.
விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு
கச்சன்ன சாரு சோபா பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர
மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்கலே ச்யாமளே.

மன்மதனின் வில்லின் நாணுக்கு ஒப்பான சலங்கை பொருந்திய அரை ஞாண் பூண்டவளே, ஜரிகை வஸ்த்ரம் அணிந்தவளே. பத்மராகக் கல்லினால் இழைத்த ஒட்டியாணத்தின் சோபையுடன் கூடிய இடையுடையவளே, பவுர்ணமி நிலவு போன்று குளிர்ந்தவளே. மலர்ந்த பலாச புஷ்பம் போல் சிவப்பு நிறப் புடவையினால் மூடப்பட்ட துடைகளின் ப்ரகாசத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தூரத்தினால் சிவந்த ஐராவதத்தின் துதிக்கை போன்று கையை உடையவளே, எல்லையற்ற வைபவங்களுடன் கூடியவளே, இந்திரநீல போன்ற நிறம் உடையவளே.

கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸிதானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தல ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ
ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்கhttps://www.facebook.com/groups/Divinity.Power/ ஸாரங்கஸம்யோகரிங்க்கந்ந கேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.நிர்மலே!

அழகிய மென்மையான நீலத்தாமரை புஷ்பத்தினாலான மன்மதனின் அம்புறாத் தூணியோ என்றெண்ணக் கூடிய கொடி போன்ற கணுக்கால்களை உடையவளே, அழகிய விளையாடும் நடையுடையவளே. அடிபணியும் திக்பாலக ஸ்த்ரீகளின் சுருளான கருங்கூந்தல் கூட்டத்தின் நீலநிற சோபையினால், மானுடன் சம்பந்தம் சொல்லக்கூடிய அறுகம்புல் தளிர்களா அவை என்றெண்ணும்படியான, நகம் எனும்
சந்திரன் போன்ற மிகையான ப்ரகாசத்துடன் விளங்குபவளே.

ப்ரஹ்வ தேவேச, பூதேச வாணீச கீநாச
தைத்யேச, யக்ஷேச, வாகீச, வாணேச, https://www.facebook.com/groups/Divinity.Power/
கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலாதபோத் தாமலாக்ஷவர
ஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.

ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே,
ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன பத்மாஸனே,
சங்க்க பத்மத்வயோபாச்ரிதே வணங்குகின்ற இந்திரன், விஷ்ணு,
சிவன், யமன், வருணன், குபேரன், ப்ரஹ்மா,

நிருருதி, வாயு, அக்னி, இவர்களுடைய கிரீடத்திலுள்ள மாணிக்க மணிகளின் ஒளியால் இளம் வெய்யில் போல் சிவந்ததும், தாமரை மலர்https://www.facebook.com/groups/Divinity.Power/ போன்றதுமான பாதங்களை உடையவளே, உமாதேவியே! நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட அழகிய சிறந்த ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளே, அழிவற்றவளே. ரத்னம் போன்ற தாமரையில் ரத்ன
ஸிம்மாஸனத்தில் வீற்றிருந்து, சங்கு, தாமரை இரண்டாலும் சேவிக்கப்படுபவளே.
தத்ரவிக்னேச துர்க்கா, வடுக்ஷேத்ர பாலையுதே
மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே,
மஞ்ஜூளாமேனகாத்யங்க நாமானிதே,

பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே தேவி
வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே,
சக்திபிஸ்ஸேவிதே ! தாத்ரி லக்ஷ்ம்யாதி
சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே !https://www.facebook.com/groups/Divinity.Power/
பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங் கனா மண்டலை ரர்ச்சிதே

விநாயகர், துர்க்கை, ப்ரம்மச்சர்யம் பூண்ட பிரம்ம தேவதைகள், க்ஷேத்ரபாலன் இவர்களுடன் கூடியவளே. ஆனந்தத்தில் திளைக்கும், மதங்க முனிவரின் புதல்விகளால் சூழப்பட்டவளே. மஞ்ஜுளா, மேனகா முதலிய அப்ஸர ஸ்தீரிகளால் போற்றப்படுபவளே, எட்டு பைரவர்கள் எனும் தேவர்களால் சூழப்பட்டவளே. பூமி, லக்ஷ்மி முதலிய எட்டு சக்திகளுடன் கூடியவளே. ப்ராம்ஹீ முதலிய மாத்ருக்கள் எனும் எழுவரால் அலங்கரிக்கப்பட்டவளே. யக்ஷர், கந்தர்வர், ஸித்தர் இவர்களின்
ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுபவளே.

பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யாச
ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாபிநந்திதேhttps://www.facebook.com/groups/Divinity.Power/
பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே,
யோகினாம் மானஸே, த்யோதஸே,

சந்தஸாமோஜஸா ப்ராஜஸே
கீதவித்யா வினோதாதி த்ருஷ்ணேன
க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே
பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே,
விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர்கீயஸே

மன்மதனைப் போன்று மயங்க வைக்கும் ரூபலாவண்யம் உடையவளே, மன்மதன் ரதிதேவி இவர்களாலும் பூஜிக்கப்படுபவளே, ப்ரியமுள்ளhttps://www.facebook.com/groups/Divinity.Power/ வஸந்தருதுவினால் சந்தோஷப்படுத்தப்படுபவளே, பக்தியுள்ளோருக்கு மோக்ஷமும் அனுக்ரஹமும் செய்கிறாய். யோகிகளின் மனதில் ப்ரகாசிக்கிறாய். வேதங்களின் ஸாரத்தில் உறைந்திருக்கிறாய். ஸங்கீத ரஸானுபவத்தில் ப்ரியமுள்ள க்ருஷ்ணனால் பூஜிக்கப்படுகிறாய். பக்தி ஆவேசம் உடைய பிரம்மாவால் பூஜிக்கப்
படுகிறாய். மனதைக் கவரும் வீணை முதலிய வாத்யங்களிசைக்கும் வித்யாதரர்களால் ஸ்தோத்திரம் செய்யப்படுகிறாய்.

ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே
ஸர்வ ஸௌபாக்ய வாஞ்ச்சா வதூ
பீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.
ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு
காதா ஸமுச்சாடனம்
கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம்
ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட சோபாதி தூரீ பவத் கிம்சுகாபம் சுகம் லாலயந்தீ
 பரிக்ரீடஸே.

செவிகளுக்கு இனிய நாதமுடைய வீணையினால் கின்னர்களால் பாடப்படுகிறாய். யக்ஷ, கந்தர்வ, ஸித்தர்களின் ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். இஷ்ட ஸித்திகளில் விருப்பங்கொண்ட தேவஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். சகல வித்யைகளின் ஸாரமுடைய இனிமையான ஸ்லோகங்களை மொழிகின்றதும், கழுத்தின் அடிப்பாகத்தில் மூன்று வர்ணக் கோடுகளையுடையதும், அழகிய பச்சை நிற இறக்கைகள் உடையதும், புரச மொட்டின் நேர்த்தியை எஞ்சுகிற அழகுடன் கூடிய மூக்குடையதும் ஆன கிளியுடன் விளையாடிக் களிக்கிறாய்.

பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபிஸ்ப்பாடிகீம்
ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம்சாங்குசம்
பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே  தஸ்ய
வக்த்வரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.https://www.facebook.com/groups/Divinity.Power/
யேன வாயா வகாபாக்ருதிர்
பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா:

யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.
கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம்த்யாயத:

தாமரை போன்று அழகிய இரு கைகளில் ஞானத்தின் சாரமாகிய புஸ்தகத்தையும், ஸ்படிகமணி ஜப மாலையையும் தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே, உன்னை த்யானிப்போர் நாவின் மூலம் உரைநடை, செய்யுள் வடிவான வாக்சாதுர்யம் தானே வெளிப்படுகிறது. சிவந்த மேனியளாய் உன்னை த்யான செய்பவர்களுக்கு ஸ்த்ரீ புருஷர்கள் வசப்படுகிறார்கள். ஐஸ்வர்ய ரூபியாக உன்னை த்யானிப்பவர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாய். சந்த்ர கலையை சிரசில் அணிந்த உனது அழகு பொழிந்த நீல வர்ண சரீரத்தை மனதில் வைத்து த்யானம்

செய்பவருக்கு எதுதான் கிட்டாது. https://www.facebook.com/groups/Divinity.Power/
தஸ்ய லீலாஸரோவாரித:
தஸ்ய கேளீவனம் நந்தனம்
தஸ்ய பத்ராஸனம் பூதலம்,
தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ,
தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்
ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்
மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே,

ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே,
ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே,
ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே,
ஸர்வவிச்வாத்மிகே,
ஸர்வ தீக்ஷவத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே,
ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம்,

பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:

சமுத்திரம் (ஸம்சார) அவருக்கு விளையாட்டாக கடக்க முடிகிறது. தேவலோக நந்தவனம் அவருக்கு விளையாட்டிடம் ஆகிறது. பூமி ஸிம்ஹானமாகிறது. சரஸ்வதியும்https://www.facebook.com/groups/Divinity.Power/ பணிப்பெண்ணாகிறாள். அவர்க்கு ஐஸ்வர்யலக்ஷ்மீ பணிந்து செயல்படுகிறாள். சகல தீர்த்தங்களின் வடிவானவளே, சகல மந்த்ர ஸ்வரூபிணியே, சகல சாஸ்த்ர ரூபிணியே, மந்த்ர ரூபமான உபாஸனா யந்த்ரங்களில் உறைபவளே!

எல்லா ஜ்யோதிஷ்சக்கரங்கள், சக்திகளுக்கும் இருப்பிடமானவளே, எல்லா தேவதா ஸ்தானங்களின் வடிவானவளே, எல்லா தத்வார்த்தங்களுக்கும் உறைவிடமே, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமானவளே, யோகம் முதலிய சகல உபாஸனை சாதனைகளுக்கும் இருப்பிடமானவளே, சகல சப்த ரூபங்களுக்கும் உறைவிடமே, அக்ஷரங்களின் ஸ்வரூபிணியே, யக்ஞம் முதலிய உபாசனா தீக்ஷைகளில் உறைபவளே, எங்கும் வ்யாபித்த அத்வைத வடிவினளே, ஹே உலகங்களின் தாயே! என்னை காப்பாற்று, என்னைக் காப்பாற்று, என்னைக்காப்பாற்று, உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள்.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...