Monday, 23 December 2024

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா


#பொருள்_உரையுடன் 


அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். 

தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர். 


அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள் .


#அனுமன்_சாலீஸா

#பாராயண_முறை


உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தூய ஆடை அணிந்து தூய உள்ளத்துடன் ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும். 


நெய் விளக்கேற்றி தூபம் காட்டியபின் பதினொரு முறை இந்த நாற்பது துதிகளையும் அன்புடன் ஓத வேண்டும். நூறு முறை ஓதுவது சிறப்பு. 


ஒவ்வொரு முறை முடியும் போதும் ஆஞ்சநேயரின் திருப்பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


கோயிலிலோ வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம் செய்யலாம். 


செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும். 


பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.


#ஸ்ரீராமஜெயம் 🙇‍♂️


ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்


எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன்.


புத்தி ஹீன தனு ஜானி கே ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேச விகார்


எனது அறிவோ குறுகியது வாயு மைந்தனான ஆஞ்சநேயா உன்னைத் தியானிக்கிறேன் எனக்கு வலிமை அறிவு உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.


1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர 

ஜய கபீஸ திஹுலோக உஜாகர


ஆஞ்சநேயா நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன் வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.


2. ராமதூத அதுலித பலதாமா 

அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா


நீ ஸ்ரீராம தூதன் எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம் அஞ்ஜனையின் மைந்தன் வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.


3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ 

குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ


மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.


4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா 

கானன குண்டல குஞ்சித கேசா


பொன்னிறம் பொருந்தியவன் நீ சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.


5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை 

காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை


உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.


6. சங்கர ஸுவன கேசரீ நந்தன 

தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன


நீ சிவபெருமானின் அவதாரம் கேசரியின் மகன் உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.


7. வித்யாவான் குணீ அதி சாதுர 

ராம காஜ கரிபே கோ ஆதுர


நீ அறிவாளி நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன் மிகவும் கூரிய புத்தியை உடையவன் ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.


8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா 

ராம லக்ஷமண ஸுதா மன பஸியா


இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.


9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா 

விகட ரூப தரி லங்க ஜராவா


நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய் மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.


10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே 

ராமசந்த்ர கே காஜ் ஸவாரே


மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.


11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே 

ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே


சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!


12. ரகுபதி கீனி பஹுத் படாயீ 

தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ


ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.


13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் 

அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்


ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.


14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா 

நாரத சாரத ஸஹித அஹீசா


ஸனகர் முதலான முனிவர்கள் பிரம்மா போன்ற தேவர்கள் சிவபெருமான் நாரதர் கலைமகள் ஆதிசேஷன்.


15. யம குபேர திகபால ஜஹாம் தே 

கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே


எமன் குபேரன் திரைக் காவலர்கள் கவிஞர்கள் புலவர்கள் எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.


16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா 

ராம மிலாய ராஜபத தீன்ஹா


ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.


17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா 

லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா


உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.


18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ 

லீல்யோ தாஹி மதுர பல ஜானூ


பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.


19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் 

ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்


ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.


20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே 

ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே


எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும். 


21. ராம துவாரே தும் ரக்வாரே 

ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே


ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.


22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா 

தும் ரக்ஷக காஹூ கோ டர்னா


உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்


23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை 

தீனோம் லோக ஹாங்க்தே காம்பை


உனது ஆற்றலைக் கட்டுபடுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.


24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை 

மஹாவீர ஜப் நாம ஸுனாவை


மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகிறது.


25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா 

ஜபத நிரந்தர ஹனுமத் வீரா


உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.


26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை 

மன க்ரம வசனத்யான ஜோ லாவை


மனம் வாக்கு செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.


27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா 

தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா


தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.


28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை 

தாஸு அமித ஜீவன் பல பாவை


மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.


29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா 

ஹை பரஸித்த ஜகத உஜியாரா


சத்திய திரேதா துவாபர கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.


30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே 

அஸுர நிகந்தன ராம துலாரே


நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.


31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா 

அஸ் வர தீன் ஜானகீ மாதா


எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள்.


32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா 

ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா


ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.


33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை 

ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை


உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.


34. அந்த கால ரகுபதி புர ஜாயீ 

ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ


அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.


35. ஒளர் தேவதா சித்த ந தரயீ 

ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ


அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.


36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா 

ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா


எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.


37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ 

க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ


ஓ ஆஞ்சநேயா உனக்கு வெற்றி வெற்றி வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே எங்களுக்கு அருள்புரிவீர்களாக.


38. ஜோ சத பார் பாட கர ஜோயீ 

சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ


இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.


39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா 

ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா


இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.


40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா 

கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா


என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.


பவன தனய ஸங்கட ஹரன் மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப


துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.


ஸ்ரீராம ஜெய ராம ஜெயஜெய ராம 🙇‍♂️

Saturday, 19 October 2024

சுதர்ஸன அஷ்டகம்

 (சுதர்ஸன அஷ்டகம்..)


(ஸ்வாமி ஸ்ரீவேதாந்த தேசிகர் அருளிய சுதர்ஸன அஷ்டகத்தை அடியேன் அறிந்த வரையில், 

அந்த ஸ்லோகத்தின் மெட்டிலேயே மொழி பெயர்த்திருக்கிறேன்..


ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்வதற்குச் சிலர் ஸ்ரமப்படக்கூடும் என்பதால் மேற்படி முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..


...இந்த சுதர்ஸன ஸ்லோகத்தை தினமும் பக்தி ஸ்ரத்தையோடு பாராயணம் செய்பவர்,


...வாழ்வில் உள்ள எல்லாத் தடைகளும் நீங்கப் பெற்று, சகல சம்பத்துக்களையும் அடைவர் என்பது ஸ்வாமியின் திருவாக்காகும்..)


 ப்ரதிப⁴டஶ்ரேணி பீ⁴ஷண வரகு³ணஸ்தோம பூ⁴ஷண

ஜநிப⁴யஸ்தா²ந தாரண ஜக³த³வஸ்தா²ந காரண ।

நிகி²லது³ஷ்கர்ம கர்ஶந நிக³மஸத்³த⁴ர்ம த³ர்ஶந

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (1)


அரிபடை அஞ்சவைப்பவன்;

அருங்குண அணியுமானவன்;

அதிபயம் ஆனபிறவியாம் 

ஆழ்கடல் தாண்டவைப்பவன்;


அண்டபகிரண்டம் அனைத்தையும்

அழகாய்நிலை நிறுத்தம்செய்பவன்;

அளவிலாபாவ மூடையை

அடிச்சுவடும் இன்றிஅழிப்பவன்;


அருமறைகாட்டும் வழியினில்

அழைத்துச்செல்லுமொரு வல்லவன்;

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே! உனக்குமங்களம்!..


ஶுப⁴ஜக³த்³ரூப மண்ட³ந ஸுரக³ணத்ராஸ க²ண்ட³ந

ஶதமக²ப்³ரஹ்ம வந்தி³த ஶதபத²ப்³ரஹ்ம நந்தி³த ।

ப்ரதி²தவித்³வத் ஸபக்ஷித ப⁴ஜத³ஹிர்பு³த்⁴ந்ய லக்ஷித

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (2)


அண்டர்கோன் அணியும்ஆனவன்;

அமரர்தம் அச்சம்அழிப்பவன்;

அயன்முதலாதி தேவரும்

அடிபணிந்தேத்தும் தூயவன்;


அறநெறிவாழும் அந்தணர்

அகமகிழ்ந்தணுகும் பெரியவன்;

அண்டிவருகின்ற அன்பர்க்கே

அனைத்துவெற்றியும் அருள்பவன்;


அழிக்குமிறையான அரனவன்

அகமும்வியக்கின்ற அதிசயன்;

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே! உனக்குமங்களம்!


ஸ்பு²டதடிஜ்ஜால பிஞ்ஜர ப்ருʼது²தரஜ்வால பஞ்ஜர

பரிக³த ப்ரத்நவிக்³ரஹ பதுதரப்ரஜ்ஞ து³ர்க்³ரஹ ।

ப்ரஹரண க்³ராம மண்டி³த பரிஜந த்ராண பண்டி³த

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (3)


அண்டமிதனுடைய ஒளியெலாம்

அடர்ந்துவந்ததோர் வடிவினன்;

அகன்றுசூழ்ந்த தீநாக்கெலாம்

ஆனதேஉன் எழில்அரண்!


அரியின்வடிவங்கள் பலதுமே

ஆக்கிவைத்ததே உன்உரு!

அனைத்துமறிந்த நல்அறிஞரும்

அரிதாயுணருவர் உன்புகழ்!


ஆயுதம்பதினாறு தாங்கியே

அபயமளிக்கின்ற மூர்த்தியே!

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே உனக்குமங்களம்!


நிஜபத³ப்ரீத ஸத்³க³ண நிருபதி⁴ஸ்பீ²த ஷட்³கு³ண

நிக³ம நிர்வ்யூட⁴ வைப⁴வ நிஜபர வ்யூஹ வைப⁴வ ।

ஹரி ஹய த்³வேஷி தா³ரண ஹர புர ப்லோஷ காரண

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (4)


அறவழிவாழ்வர் மனதுமே

அடிஇணைஉனதை நாடுமே!

அறுகுணநிதிகள் அனைத்துமே

அண்டிஉன்னையே கூடுமே!


அருமறையின் அங்கம்யாவையும்

அருங்குணம்உனதைச் சொல்லுதே!

அரியவன்போல் பரவ்யூகமே

ஆழியான்உனக்கும் உள்ளதே!


அமரேசன்அச்சம் தொலைத்தநீ

அரனவன்போரில் உதவினை!

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே! உனக்குமங்களம்!


(வளரும்..)

தேவராஜாஜ அஷ்டகம்.

 திருக்கச்சி நம்பிகள்

இயற்றிய தேவராஜாஜ அஷ்டகம்.


திருக்கச்சி நம்பிகள் பெருந்தேவித் தாயாரின் ப்ரிய கேள்வனான வரதராஜப் பெருமாளின் பெருமையை வெளிப்படுத்தும் நோக்குடன் ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார்.


ஸ்லோகம் 1

நமஸ்தே ஹஸ்தி சைலேச! ஸ்ரீமன்! அம்புஜ லோசன! |

சரணம் த்வாம் பிரபன்னோஸ்மி ப்ரணதார்த்தி ஹராச்யுத! ||


ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு நாதனே! ஸ்ரீபதியே! தாமரைக் கண்ணனே! உனக்கு வணக்கம். தன்னை வணங்கினவர்களின் துக்கத்தைப் போக்குபவனே! நழுவ விடாதவனே! உன்னைச் சரணமாக அடைந்திருக்கிறேன்.


ச்லோகம் 2


ஸமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண! கருணோல்பண! |

விலஸந்து கடாக்ஷாஸ்தே மய்யஸ்மின் ஜகதாம்பதே  ||


எல்லா ப்ராணிகளையும் காப்பதில் திறமை உள்ளவனே! நிறைந்த கருணை உள்ளவனே! உலகத்திற்கு ஸ்வாமியே! உனது பார்வை இந்த என்னிடம் மலரட்டும்.


ச்லோகம் 3


நிந்திதாசார கரணம் நிவ்ருத்தம் க்ருத்ய கர்மண :  |

பாபீயாம்சம் அமர்யாதம் பாஹிமாம் வரத ப்ரபோ! ||


நல்லவர்களால் வெறுக்கப்பட்ட செயல் புரிபவனும், செய்ய வேண்டியதைச் செய்யாதவனும், பாபிஷ்டனும், மரியாதை இல்லாதவனுமான என்னை ஹே வரதராஜ! ரக்ஷிப்பாயாக.


ச்லோகம் 4


ஸம்ஸார மருகாந்தாரே துர்வ்யாதி வயாக்ர பீஷணே |

விஷய க்ஷுத்ர குல்மாட்யே த்ருஷாபாதபசாலினி ||


ச்லோகம் 5


புத்ர தார க்ருஹ க்ஷேத்ர ம்ருக த்ருஷ்ணாம்பு புஷ்கலே |

க்ருத்யா க்ருத்ய விவேகாந்தம் பரிப்ராந்தம் இதஸ் தத: ||


ச்லோகம் 6


அஜஸ்ரம் ஜாத த்ருஷ்ணார்த்தம் அவஸந்நாங்கமக்ஷமம் |

க்ஷீண சக்தி பலாரோக்யம் கேவலம் க்லேச ஸம்ச்ரயம் ||


ச்லோகம் 7


ஸந்தப்தம் ​​விவிதைர் து:கை: துர்வசைரேவமாதிபி: | 

தேவராஜ! தயாஸிந்தோ!​ தேவதேவ ஜகத்பதே!  ||


ச்லோகம் 8


த்வதீக்ஷண ஸுதாஸிந்து வீசி விக்ஷேபசீகரை: |

காருண்ய மாருதாநீதை: சீதலைரபிஷிஞ்சமாம் ||


4-8 – இந்த ஐந்து ச்லோகங்களால் தமது நிலையை ஓர் உருவகத்தின் மூலம் விளக்கி, தமது ரக்ஷணத்தை தேவப்பெருமாளிடத்தில் இரக்கிறார்.


ஸம்ஸாரம் என்பது ஒரு பாலைவனம், அந்த வனத்தில் புலிகள் போன்ற பயங்கரமான வியாதிகள். பாலைவனத்தில் முட்புதர்கள்போல் அற்பசுகங்கள் நிறைந்திருக்கின்றன. ஆசை என்னும் மரங்கள், மக்கள், மனைவி வீடு நிலம் இவைகள் கானல் நீர் போல் நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட வனத்தில் செய்யவேண்டியவை, செய்யத்தகாதவை என்னும் பகுத்தறிவில்லாத குருடனாகவும் இங்காங்கும் அலைந்து இடைவிடாது பேராசை உடையவனும், மெலிந்து வாடிய அவயவங்களுடன் கூடினவனும், திறமையற்றவனும், தேஹ திடம், மநோ திடம், தேஹ ஆரோக்யம் இவைகளும், இவைகளால் குறைந்தவனும் க்லேசத்துக்கே இருப்பிடம் ஆனவனும் இப்படி சொல்லத்தகாத பல வகை துக்கங்களால் தாபத்தை அடைந்தவனுமான என்னை தேவராஜனே! கருணைக்கடலே! தேவர்களுக்கும் தேவனே! உலகத்துக்கு ஸ்வாமியே! உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலைகளைப் போடுவதால் உண்டான திவலைகளால் கருணை என்னும் காற்றுடன் குளிர்ந்து கடாக்ஷிப்பாயாக. குளிர்ந்த கருணை என்னும் காற்று கொண்டுவந்து உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலை ஏறிப்பதால் ஏற்பட்ட துளிகளால் நனைப்பாயாக – குளிரக் கடாக்ஷிக்கவேணும் என்பது பொருள்.

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் அஷ்டகம்.....

 ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் அஷ்டகம்.....


ஆர்த்தானாம் து:கஸமனே தீக்ஷிதம் 

ப்ரபுமவ்யயம் |

அஸேஷ ஜகதாதாரம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


அபார கரூணாம்போதிம் 

ஆபத்பாந்தவமச்யுதம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


பக்தானாம் வத்ஸலம் 

பக்திகம்யம் ஸர்வகுணாகரம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம் 

ஸர்வ லக்ஷண ஸம்யுதம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் லக்ஷ்மீநாராயணம் பஜே || 


சிதசித் ஸர்வஜந்தூனாம் 

ஆதாரம் வரதம் பரம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


ஸங்கசக்ர தரம் தேவம் 

லோகநாதம் 

தயாநிதிம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


பீதாம்பரதரம் விஷ்ணும் 

விலஸத் ஸூமுத்ரஸோபிதம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


ஹஸ்தேன தக்ஷிணேநாஜம் அபயப்ரதமக்ஷரம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


ய​: படேத் ப்ராதரூத்தாய 

லக்ஷ்மீ நாராயணாஷ்டகம் |

விமுக்தஸ் ஸர்வபாபேப்ய​: 

விஷ்ணுலோகம் ஸ கச்சதி ||


ஆபதாமப ஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்ப்ரதாம |

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||


க்ருஷ்ணாய வாஸுதேவாய ஹரயே பரமாத்மனே |

ப்ரணத க்லேஸ நாஸாய கோவிந்தாய நமோ நம​: ||

ஆதானாம் துக்க ஷமனே

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்

 ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்

***************************************

1

அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி

காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி !

ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


2

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ

வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ !

கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


3 மஞ்


அம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ

ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா !

வீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


4

அம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ

ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா!

சாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


5

அம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ

வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா !

மல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


6

அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா

காயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா !

ஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


7

அம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா

யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ !

யா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


8

அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய! படேத்

அம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம் !

அம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

ஸ்ரீ ராஜ் ராஜேக்ஷ்வரி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.🙏🙏🙏🙏

மஹாலட்சுமி அஷ்டகம்

 மஹாலட்சுமி அஷ்டகம் செல்வம் பெருக சொல்ல வேண்டிய மஹாலட்சுமி அஷ்டகம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |


சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1 ||


நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |


சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2 ||


சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |


சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3 ||


சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி |


மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4 ||


ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி


யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5 ||


ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |


மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6 ||


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |


பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7 ||


ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |


ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8 ||


பலஸ்ருதி:


மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |


ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||


ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |


த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||


திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |


மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. ||


|| இதி இந்திரன் அருளிய ஸ்ரீ மஹா லக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூரணம் ||🙏🙏

கிருஷ்ணாஷ்டகம்

 #கிருஷ்ணாஷ்டகம்


கோகுலாஷ்டமியில்... சகல ஐஸ்வரியம் தரும் கிருஷ்ணாஷ்டகம்! 

 

பகவான் கிருஷ்ணரை பூஜித்துப் போற்றும் கோகுலாஷ்டமி. கீதையின் நாயகனைக் கொண்டாடி வணங்கும் நன்னாள். புல்லாங்குழலோன் உதித்து, குழலின் இசையால் ஆவினங்களையும் நம்மையும் குளிர்வித்த புண்ணியத் திருநாள். இந்தநாளில், இல்லத்தில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, கிருஷ்ணரை வணங்குவோம். கண்ணனுக்குப் பிடித்த சீடை, அதிரசம், அவல் பாயசமெல்லாம் செய்து கண்ணனை அழைத்து ஆராதிப்போம்.


குழந்தை இல்லாத வீட்டில், கோகுலாஷ்டமி பூஜையைச் செய்தால், குழந்தையாக கிருஷ்ணனே வந்து பிறப்பான் என்பது ஐதீகம். குசேலருக்கு உதவியது போல் நமக்கும் அருள் மழை பொழிவான். சகல ஐஸ்வர்யமும் தந்து வாழச் செய்வான்.


முக்கியமாக... இந்த நன்னாளில், கோகுலாஷ்டமியில், #கிருஷ்ணாஷ்டகம்_பாராயணம்_செய்யுங்கள். தெய்வ கடாக்ஷம் இல்லத்தில் ஒளிரும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே நடந்தேறும்.


அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகத்தால் ஆனவை. கிருஷ்ணன் குறித்த எட்டு ஸ்லோகங்கள், கிருஷ்ணாஷ்டகம் எனப்படும். 

இப்படியாக எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டகத்தை பாராயணம் செய்து, கிருஷ்ண பகவானை வணங்குவது மிகுந்த பலன்களைத் தரும்.


'நம் வாழ்வில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல நல்ல பலன்கள் அனைத்தையும் எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்' என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதன் கடைசி ஸ்லோகம் இதையே வலியுறுத்துகிறது. கோகுலாஷ்டமியில், தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!


#கிருஷ்ணாஷ்டகம்


1. வசுதேவ ஸூதம் தேவம்


கம்ஸ சாணூர மர்த்தனம்


தேவகீ பரமானந்தம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: வசுதேவரின் குமாரன்... கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


2.அதஸீ புஷ்ப ஸங்காசம்


ஹாரநூபுர சோபிதம்


ரத்ன கங்கண கேயூரம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன். ரத்தினம் இழைத்த கையில் அணியும் அணிகலன்களை தோள்களில் அணிந்தவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


குடிலாலக ஸம்யுக்தம்


3.பூர்ண சந்த்ர நிபானனம்


விலஸத் குண்டல தரம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன். முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன். பளீர் என ஒளிருகிற குண்டலங்கள் அணிந்தவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


4.மந்தார கந்த ஸம்யுக்தம்


சாருஹாஸம் சதுர்ப்புஜம்


பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் திகழ்பவன். அழகான புன்னகையைத் தவழவிடுபவன். நான்கு திருக்கரங்களை உடையவன். மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்... உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


5.உத்புல்ல பத்ம பத்ராக்ஷம்


நீல ஜீமூத ஸந்நிபம்


யாதவானாம் சிரோ ரத்னம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள் : மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்... தாமரைக் கண்ணன். நீருண்ட மேகத்தைப் போன்றவன். யாதவர்களின் ரத்தினமாகவும் முடிசூடா மன்னனாகவும் திகழ்பவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணரை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


6.ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம்


பீதாம்பர ஸூசோபிதம்


அவாப்த துளசீ கந்தம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன். பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன். துளசியின் பரிமளத்தைக் கொண்டிருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


7.கோபிகாநாம் குசத்வந்த்வ


குங்குமாங்கித வக்ஷஸம்


ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பின் அடையாளத்தை மார்பில் கொண்டவன். ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடம் தந்தவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


8.ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம்


வநமாலா விராஜிதம்


சங்க சக்ரதரம் தேவம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவன். அகன்ற மார்பை உடையவன். வனமாலையைச் சூடிக் கொண்டிருப்பவன். சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


9.க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம்


ப்ராதருத்தாய ய படேத்


கோடி ஜந்ம க்ருதம் பாபம்


ஸ்மரணேன விநச்யதி


#பொருள்: எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு ஸ்லோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் பாராயணம் செய்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். வீடு மனை யோகம் கிடைத்து, குறும்புக் கண்ணனைப் போல் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


நன்றி :  Hindutamil.in

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...