Thursday, 29 June 2023

சாதுர் மாஸ்ய விரத விதானம்

 chathur masya viradham.


சாதுர் மாஸ்ய விரத விதானம்.

வராஹ புராணம் இது பற்றி விரிவாக கூறுகிறது.

குந்தியின் மைந்தன் அர்ஜுனன் ஶ்ரீ க்ருஷ்ணரிடம் ஹே மதுசூதனா பகவான் மஹா விஷ்ணுவின் சயன விரதத்தை எவ்வாறு நியமத்துடன் கடை பிடிப்பது என்று பணிவுடன் கேட்டார்.


ஶ்ரீ கிருஷ்ணரும் விஸ்தாரமாக கீழ் கண்டவாறு கூறினார்.


ஒவ்வொரு வருடமும் ஸூர்யன் கடக ராசிக்கு வரும் போது மஹா விஷ்ணு யோக நித்திரையில் ஆழ்ந்து , ஸூர்யன் துலா ராசி ப்ரவேசிக்கும் போது விழித்து எழுகிறார்.


புருஷோத்தம மாதம்=மலமாதம்= அதிக மாதம் இந்த சமயத்தில் வந்தாலும் இந்த விதிப்படி மாறாமல் நடக்கும்.


இவ்விதிப்படி மற்ற தேவதைகள் நித்திரையில் ஆழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்.

ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி திதியன்று விதி முறைப்படி விருதம் அனுஷ்டிக்க வேண்டும்.


அன்று பகவான் மஹா விஷ்ணுவின் ப்ரதிமையை சிலா ரூபத்தில் மூர்த்தியாக செய்து சாதுர் மாஸ்ய விரதத்தை நியமத்துடன் அனுஷ்டிக்க வேண்டும். அன்று விஷ்ணு ப்ரதிமைக்கு அபிஷேக ஆராதனை செய்து , வெள்ளை வஸ்திரம் அணிவித்து , பட்டு மஞ்சத்தில் நித்திரை கோலத்தில் வைக்க வேண்டும்.


பின் தூப தீப நைவேத்யத்துடன் பூஜை, சாஸ்திரம் அறிந்த பண்டிதர் அல்லது பிராமணர்கள் மூலம் நடத்த வேண்டும்.


அதன் பின் மஹா விஷ்ணுவிடம் ஹே பகவானே நான் உங்களை யோக நித்ரையில் ஆழ்த்து கிறேன். நீங்கள் துயில் கொள்வதால் , இந்த ப்ரபஞ்சமே துயிலில் ஆழ்ந்து விடுகிறது. ஹே பகவானே தாங்கள் நாங்கு மாதங்கள் துயில் கொள்ளும் போது , நான் அனுசரிக்கும் சாதுர்மாஸ்ய விரதத்தில் எந்த வித பங்கமும், இடையூறும் வராமல் காத்து அருளுங்கள் என இரு கரம் கூப்பி ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.


வட இந்தியாவில் சில பிரிவினர் ஸ்ரீ விஷ்ணுவை யோக நித்திரையில் சயனிக்க செய்வதால் , அவ்வாறு செய்த பின்பே பிரதிமைக்கு ஸ்நானம் முதலியவை செய்கிறார்கள்.


தேவசயனி ஏகாதசியிலிருந்து தேவோத்தானி ஏகாதசி வரை சாதுர் மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க வேண்டும். துவாதசி, பெளர்ணமி, அஷ்டமி, அல்லது மாத பிறப்பிலிருந்து விரதத்தை தொடங்கி கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ துவாதசியில் நிறைவு செய்ய வேண்டும்.


இந்த விரதத்தினால் சகல பாபங்களும் அழிந்து மஹா விஷ்ணுவின் பூரண கடாக்ஷம் கிட்டும். எவரொருவர் ஒவ்வொரு வருடமும் சாதுர் மாஸ்ய விரதத்தை நியமத்துடன் கடை பிடிக்கிறாறோ, அவர் இந்த உலக வாழ்க்கைக்கு பின் , ஸூர்ய தேவருக்கு இணையாக , தெய்வீகமான விமானத்தில் அமர்ந்து விஷ்ணு லோகத்தை அடைவர்.


இந்த விரத நாட்களில் செய்யபடும் ப்ரத்யேகமான தானங்களின் பலன்களை அறிந்து கொள்வாயாக.


எவர் ஸ்ரீ விஷ்ணுவின் ஆலயத்தில் பல் வேறு வர்ணங்களில் பூ வேலை பாடுகள் செய்த அல்லது, பின்னிய, வஸ்த்திரங்களை சமர்ப்பணம் செய்கின்றார்களோ அவர்கள் ஏழு ஜன்மங்கள் பிராமணர்களாக பிறவி எடுப்பர்.


சாதுர் மாஸ்ய விரத நாட்களில் யாரொருவர் , பகவான் மஹா விஷ்ணுவிற்கு தயிர், பால், தேன் நெய், வெல்லம் (மிஸ்ரி) ஆகிய பஞ்ச அம்ருதங்களால் அபிஷேகம் செய்விக்கிறார்களோ அவர் பாக்கிய சாலியாக அனைத்து சுகங்களையும் அனுபவிப்பர்.


இந்நாட்களில் எவரொருவர் சிரத்தையுடன், பூமி தானம், ஸ்வர்ண தானம், தக்ஷிணை ஆகியவற்றை ப்ராஹ்மணர்களுக்கு அளிக்கிறாறோ அவர் ஸ்வர்க்க லோகத்தில் , இந்திரனுக்கு சமமாக அனைத்து சுக போகங்களையும் அடைவர்.


எவரொருவர் தங்கத்தால் மஹா விஷ்ணு ப்ரதிமை செய்து, தூபம், தீபம், புஷ்பம், நைவத்யத்துடன் பூஜை செய்கிறாரோ , அவர் இந்திர லோகத்தில் அள்ள அள்ள குறையாத செல்வத்துடன் வாழ்வார்.


சாதுர் மாஸ்ய தினங்களில் எவரொருவர் தினமும் விஷ்ணுவிற்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்கிறாரோ , அவர் இவ்வுலக வாழ்விற்கு பின் ஸ்வர்ண புஷ்பக விமானத்தில் விஷ்ணு லோகம் செல்வர்.


சாதுர் மாஸ்ய தினங்களில் எவரொருவர் பகவான் மஹா விஷ்ணுவிற்கு தூப தீபங்களுடன் பூஜை செய்கிறாரோ, அவர் வற்றாத தன லாபம் பெறுவர்.


தேவ சயனி ஏகாதசியிலிருந்து தேவ உத்தானி ஏகாதசி வரை விஷ்ணுவிற்கு பூஜை செய்பவர் , இவ்வுலக வாழ்க்கைக்குபின் விஷ்ணு லோகம் அடைவர்.


சாதுர் மாஸ்ய விரத நாட்களில் மாலையில் விளக்கேற்றும் வேளையில் ,தேவர்களுக்கும் பிராமணர்களுக்கும் தீப தானம் செய்பவர்களும், பிராமணர்களுக்கு தங்க பாத்திரத்தில் வஸ்த்ர தானம் தருபவர்களும் விஷ்ணு லோகம் அடைவர்.


சாதுர்மாஸ்யத்தில் பக்தி பூர்வத்துடன் பகவானின் திரு நாம ஸ்மரணையுடன் , மஹா விஷ்ணுவின் பாத கமலமே தஞ்சம் என்று சரணாகதி அடைபவர்கள் , பிறப்பு, இறப்பு என்ற இந்த மாய சக்கிரத்திலிருந்து விடுதலை அடைவர்.


இவ்விரத காலங்களில் , விஷ்ணு ஆலயத்தில் பிரதி தினம் 108 முறை காயத்திரி மந்திர ஜபம் செய்பவர்கள், தங்களின் பாவங்கள் உடனுக்குடன் விலக பெறுவர்.


எவரொருவர் இவ்விரத காலத்தில் புராணங்கள், தர்ம சாஸ்திரம் ஆகியவற்றை கேட்கின்றாரோ, வேத அத்யயனம் செய்யும் பிராமணர்களுக்கு வஸ்திர தானம் செய்கின்றாரோ , அவர் வள்ளல், தனவான், பாண்டித்யம் மற்றும் யசஸ்வியாக பிறவி எடுக்கும் பேறு பெறுகின்றார்.


மஹா விஷ்ணு அல்லது சிவனின் திரு நாமத்தை இடைவிடாமல் ஸ்மரணம் செய்து , நிறைவில் விஷ்ணு அல்லது சிவ ப்ரதிமையை தானம் செய்பவர் , தம் பாபங்களி லிருந்து விடுதலை பெற்று குணவானாக மாறுவர்.


விரத காலத்தில் நித்தமும் ஸூர்ய நாராயணருக்கு அர்க்கியம் கொடுப்பதுடன், நிறைவில் கோ தானமும் செய்பவர், நோய் நொடி அண்டாத ஆரோக்கியம்,தீர்க்காயுள், தனம், கீர்த்தி மற்றும் பலத்துடன் கூடிய ஆனந்த வாழ்வு ஆகியவற்றை பெறுவர்.


சாதுர்மாஸ்யத்தில் எவர் காயத்திரி மந்திர ஜபத்துடன், தில ஹோமம் செய்வதுடன், சாதுர் மாஸ்ய முடிவில் எள் தானம் செய்கிறாரோ , அவர் தமது ஸர்வ பாபங்களும் அழிய பெறுவதுடன் , திட ஆரோக்கியம், நன்னடத்தையுள்ள சந்தான ப்ராப்தி பெறுவர்.


எவரொருவர் சாதுர் மாஸ்ய விரத காலத்தில் அன்னத்தால் ஹோமம் செய்வதுடன் , முடிவில் நெய், கடா, வஸ்த்ரம் ஆகியவற்றை தானம் செய்கிறாரோ அவர் ஐஸ்வர்யங்களை அடையும் பாக்கியம் பெறுவார்.


எவரொருவர் துளசியை மாலையாக அணிவதுடன், அதை விரத முடிவில் பகவான் மஹா விஷ்ணுவின் அம்சமான பிராமணருக்கு தானம் அளிக்கிறாரோ அவர் விஷ்ணு லோகத்தை அடைவர்.


யார் சாதுர் மாஸ்ய விரத காலத்தில் பகவான் யோக நித்திரையில் ஆழ்ந்த பிறகு , பகவானின் மஸ்தகத்தில் நித்யம் பால் அபிஷேகம் செய்வதுடன், நிறைவு நாளில் ஸ்வர்ணத்தால் ஆன தூர்வா வை ( அருகம் பில் ) தானம் செய்து பகவானிடம்


ஹே தூர்வே பூமியில் உன் வேரானது எப்படி விரிந்து பரந்துள்ளதோ , அதே மாதிரி எனக்கும் என்றும் வெற்றியுடன் அமரனாக வாழும் புத்ர ஸந்தானத்தை அருள்வீர் என்று ப்ரார்த்தனை செய்கிறாரோ, அவர் ஸந்தான ப்ராப்தியுடன் சகல பாபங்களிலிருந்தும் விடுதலை அடைந்து இறுதியில் ஸ்வர்க்கத்தை அடைவர்.


எவர் பகல் முழுவதும் , சிவன் அல்லது விஷ்ணுவின் மீது பஜனை பாடல்களை பாடி துதிக்கிறாரோ, அவர் இரவிலும் கண் விழித்து பாராயணம் செய்த புண்ணிய பலனை பெறுகிறார்.


சாதுர் மாஸ்ய விரதத்தை கடை பிடிப்பவர்களுக்கு உன்னதமான சப்தத்தை எழுப்பும் மணியை தானம் செய்வதுடன், ஹே பகவானே ஹே ஜகதீஸ்வரா தாங்கள் ஸகலருடைய பாபங்களையும் நாசம் செய்து அழிப்பவர். செய்ய கூடாத காரியங்களை செய்ததால் விளைந்த என் பாபங்களை நாசம் செய்து என்னை ரக்ஷித்து காப்பீர் என்று துதித்து ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.


சாதுர்மாஸ்ய விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் ப்ராஹ்மணர்களுக்கு தாம்பூலம் அளிப்பவர் (ஸரணாம்ருத் பான்) சகல பாபங்கள், மற்றும் துக்கங்களிருந்து விடுதலை , நீண்ட ஆயுள், லக்ஷ்மி யோகம் ஆகியவற்றை பெறுவர்.


சாதுர்மாஸ்ய காலத்தில் ப்ராஜாபத்யம் மற்றும் சாந்திராயணம் விரத வழி முறைகளின் படியும் விரதத்தை கடை பிடிக்கலாம்.


ப்ராஜாபத்ய விரதம் 12 நாட்களில் பூர்த்தி செய்கின்றனர்.


முதல் மூன்று நாட்கள் பகல் ஒரு வேளை உணவு. அடுத்த மூன்று நாட்கள் இரவு ஒரு வேளை மட்டும் உணவு. அடுத்த மூன்று நாட்கள் யாசிக்காமல் கிடைக்கும் உணவு. அடுத்த மூன்று நாட்கள் உபவாசம் இருப்பது. உணவின் அளவு ஒரு கை நிறைய அன்னம்.. சில மஹரிஷிகள் ஒரு கபளம் அளவு எங்கின்றனர்.


சாந்திராயண விரதம்:- அமாவாசை அன்று உபவாசம். ப்ரதமையில் 1 கைப்பிடி, த்விதியையில் 2 கைப்பிடி உணவு, இப்படியாக பெளர்ணமி தினத்திற்கு முதல் நாள் 14 கைப்பிடி உணவும், பெளர்ணமி அன்று 15 கைப்பிடி உணவு உட்கொள்ள வேண்டும்.


பின்னர் தேய்பிறையில் பெளர்ணமி தினத்திற்கு பின் ஸங்கல்பம் செய்து கொண்டு 14.13.12.11. இப்படி தினமும் ஒவ்வொரு கைப்பிடி குறைத்து கொண்டு வந்து அமாவாசை அன்று உபவாசம் இவ்வரிசையில் உணவு உட்கொள்ளும் அளவை குறைத்து கொண்டு வர வேண்டும்.


இவ்விரதம் ஒரு மாதம் முழுவதும் அனுஷ்டிக்க படுகிறது. ஹே அர்ஜுனா இம்மாதிரி பிராஜாபத்யம், சாந்திராயனம் விரதத்தை மேற்கொள்பவர்கட்கு இவ்வுலகில் தன ப்ராப்தி

பூர்ண ஆரோக்கியத்துடன் கூடிய திட காத்திரமான சரீரம், கடவுளின் பரிபூர்ண க்ருபை ஆகியவை கிட்டுகிறது.


ப்ராஜாபத்யம், க்ருச்சிரம் மேற்கொள்ளும் சாதகன் அவ்விரதத்துடன் சாதுர்மாஸ்ய விரத தார்மீக கடமைகளான பூஜை, ஜபம், த்யானம், அத்யயனம் செய்தல், பஜனை, கீர்த்தனை ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.


12 நாள் சுத்த உபவாசம் இருந்தால் பராக க்ருச்சரம் எனபெயர் படும். ஒரு மாதம் பழங்கள் மாத்திரம் சாப்பிட்டு உபவாசம் இருந்தால் பல க்ருச்சரமாகும். யவ தான்யத்தால் பாயசம் செய்து ஒரு மாதம் சாப்பிட்டு உபவாசம் இருந்தால் யாவக க்ருச்சரம் ஆகும்.


மூன்று பகல், மூன்று இரவு, மூன்று நாள் யாசகமில்லாமல் கிடைப்பது மூன்று நாள் சுத்த உபவாசம்.இந்த நாட்களில் போஜன சமயத்தில் ஜலம் மாத்திரம் சாப்பிட வேண்டும்.இது க்ருச்சராதி க்ருச்சரம் எனப்பெயர்.


யாக்கிய வல்கியர் 12 நாட்கள் பாலை மட்டும் சாப்பிட்டு கொண்டு இருப்பது க்ருச்சராதி க்ருச்சரம் என்கிறார்.


தப்த கிருச்சரம் என்பது சூடாக செய்த ஜலம் மூன்று நாள், சூடாக செய்த பால் மூன்று நாள், சூடாக செய்த நெய் மூன்று நாள், சுத்த உபவாசம் மூன்று நாள்.


சாந்தபன க்ருச்சரம்;- ஒரு நாள் பசு மூத்திரம், ஒரு நாள் பசும் சாணி, ஒரு நாள் பசும் பால், ஒரு நாள் பசும் தயிர், ஒரு நாள் பசு நெய், ஒரு நாள் தர்ப்பை ஜலம். ஒரு நாள் உபவாசம்.மொத்தம் 7 நாட்கள்.


சாதுர்மாஸ்யத்தின் நிறைவில் வேத பண்டிதர்கள், அல்லது ப்ராமணர்களுக்கு தாமிர பாத்திரம், வஸ்த்ரம் போன்ற வற்றை தானமளிப்பதும், வேத பண்டிதர்களுக்கு மன நிறைவான தக்ஷிணை அளிப்பதும் வழக்க மாக உள்ளது.ப்ராமணர்களுக்கு போஜனம் செய்விப்பவர்களுக்கு ஆயுள் வ்ருத்தி, தன வ்ருத்தி கிட்டும்.


சாதுர் மாஸ்ய விரதம் நிறைவு பெற்ற பின் தான் பசு மாடு தானம் செய்ய வேண்டும். வசதி இல்லாதவர்கள் வஸ்த்ர தானம் அவசியம் செய்ய வேண்டும். மனதின் நியாயமான ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும்.


பாபங்களிலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக இம்மாதிரி விரதங்கள் மேற்கொள்ள பட வேண்டும். இயலாவிட்டால் ஒவ்வொரு க்ருச்சரத்திற்கும் 12 ப்ராஹ்மண போஜனம், பத்தாயிரம் காயத்ரி ஜபம், ஆயிரம் ஆவர்த்தி தில ஹோமம் ப்ரதினிதியாக செய்யலாம்.


சாதுர் மாஸ்ய நிறைவு ஆனவுடன் வேதம் ஓதும் ப்ராஹ்மணருக்கு பழுப்பு நிற பசு, கன்றுடன், அலங்கரிக்க பட்ட நிலையில் தானம் செய்கிறாரோ அவர் ஆயுள் முழுவதும் சக்கிரவர்த்தியாக வாழும் பாக்கியம் கிட்டும். மேலும் அரசனை போன்ற புத்ரர்களை பெறுவார். ஸ்வர்க்க லோகத்தில் பிரளய காலம் முடியும் வரை இந்திரனுக்கு சமமான ராஜ்ஜியத்தை ஆள்வார்.


எவரொருவர் தினமும் சூரிய பகவானுக்கும், விக்ன விநாயகருக்கும் நமஸ்கார வணக்கம் செய்கிறாரோ அவர் ஆயுள் வளர்ச்சி, செல்வ வளர்ச்சி பெறுவர். விரும்பியது கிடைக்கும். விநாயகர் மற்றும் சூரிய பகவானின் பிரதிமையை ப்ராஹ்மணருக்கு தானம் செய்கிறாரோ அவருக்கு எடுத்த காரியங்கள் ஜயத்துடன் நிறைவடையும்.


எவரொருவர் இந்த இரண்டு ருதுக்களிலும் சிவனின் ப்ரீதிக்காக எள், வஸ்த்ரம், தாமிர பாத்திரம் ஆகியவற்றை தானம் செய்கிறாரோ அவர் இல்லத்தில் சிவன் மீது பக்தி கொண்ட அழகான ஆரோக்கியமான புத்ர ப்ராப்தி பெறுவர்.


எவரொருவர் பகவான் விஷ்ணு யோக நித்ரையில் ஆழ்ந்த பிறகு சக்திக்கு ஏற்றவாறு வஸ்த்ரம், எள், ஸ்வர்ண தானம் செய்கிறாரோ அவரின் அனைத்து பாபங்களும் நசித்து போகும்.இவ்வுலகில் இக போகத்துடன் வாழ்வர், மோக்ஷ ப்ராப்தி கிட்ட பெறுவர்.


சாதுர் மாச நிறைவு ஆனவுடன் எவர் படுக்கையை தானம் செய்கிறாரோ அவர் அளவில்லா சுகம் பெறுவதுடன் குபேரன் போல தனவான் ஆகும் யோகத்தை பெறுவர்.


வர்ஷ ருது= ஆவணி,புரட்டாசி காலத்தில் கோபி சந்தனம் தானம் பகவானுக்கு ப்ரீதி அளிக்கிறது. சாதுர் மாஸ்ய காலத்தில் ஒரு வேளை உணவு உட்கொள்ளுபவர், பசியால் வாடுபவர்களுக்கு அன்னம் அளிப்பவர், தரையில் நித்திரை செய்பவர், தமது அபீஷ்டங்கள் நிறைவேற படுவர்.


சாதுர் மாஸ்ய காலத்தில் ப்ரஹ்மசரியத்தை கடை பிடிப்பவர் அனேக நற்பலன்கள் பெறுவர்.ஶ்ராவண மாதத்தில் காய்கள், பழம்; பாத்ரபத மாதத்தில் தயிர், ஆசுவின மாதத்தில் பால், கார்த்திகம் மாதத்தில் பருப்பு வகைகள் சாப்பிடாமல் இருந்தால் நோய் நொடி இல்லாத பூரண ஆரோக்கியம் கிட்ட பெறுவர்.


சாதுர்மாஸ்ய விரத முடிவில் உத்யாபனம் ( இறைனனை இருப்பிடத்திற்கு எழுந்தருள செய்தல்) செய்ய வேண்டும், நித்திரையை த்யாகம் செய்து விழித்து எழுவதற்கு முன் பூஜை செய்ய வேண்டும்.


ஹே பாண்டு நந்தனா தேவ சயனி ஏகாதசி மற்றும் சாதுர் மாஸ்ய மஹாத்மியம் மிகுந்த புண்ணியத்தை அளிக்கும் பலன் கொண்டது. இதை படிப்பதாலும், கேட்பதாலும் மன நோய்களிலிருந்து அமைதி பெறுவதோடு , பகவான் விஷ்ணு மீதான நிஷ்டையும், பக்தியும் பன் மடங்கு வளர பெறுவர்.


சாதுர் மாஸ்ய விரதம் பகவான் மஹா விஷ்ணுவின் க்ருபா கடாக்ஷம் பெறுவதற்காக நான்கு மாதங்கள் மேற்கொள்ள படும் விரதமாகும். சாதுர் மாஸ்ய 4 மாதமும் பகவான் ஸ்ரீ ஹரி யோக நித்ரையில் ஆழ்ந்திருப்பதால், அச்சமயம் சுப மங்கள காரியங்களை விலக்க வேண்டும்.


தேவோத்தானி ஏகாதசிக்கு பிறகு மீண்டும் சுப மங்கள காரியங்கள் தொடங்கலாம்.


வராஹ புராணத்தில் பூமா தேவி வராஹ மூர்த்தியிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அறியாமை, அற்ப ஆயுள், பிறவி பிணி இவற்றுடன் கலி யுகத்தில் பிறந்தவர்களை பற்றி மிகவும் கவலை பட்டு ,


பிரபு இவர்கள் கலி யுகத்தில் தங்களுடைய குறைகளிலிருந்து பூரணமாக விடுபட்டு நலமுடன் வளமுடன் வாழ , அதிக சிரமம் இல்லாமல் அதே சமயம் முழு பலன் அளிக்க கூடிய ப்ரார்த்தனை முறையை கூறி இவர்களை ரக்ஷியுங்கள் என வேண்டி நின்றாள்.


வராஹ மூர்த்தியும் சாதுர் மாஸ்ய 4 மாதங்களிலும் (சுப காலத்தில் செய்ய படும் விரதம், தானம், ஜபம், ஹோமம் அனேக நன்மை அளிக்கும். ) செய்யும் நற்செயல்கள் பல மடங்கு பலன்களை அளிக்கும்.என்று அருளினார்.


பூமா தேவியும் வராஹ மூர்த்தியிடம் இந்த 4 மாதங்கள் ஏன் அதிக சிறப்பு வாய்ந்தது என விரிவாக எடுத்து உரைக்க வேண்டும் என கேட்டார். ஒரு சமயம் மேரு மலை சிகரத்தில் அமர்ந்திருந்த போது தேவர்கள் அனைவரும் பிரபு இரவு பொழுது ஆகி விட்டது. நாங்கள் செல்வதற்கு எங்களுக்கு விடை கொடுங்கள் என கேட்ட பொழுது


கரு நிறத்தில் மினுக்கும் வெள்ளாடையுடன் கரத்தில் கோடாலியுடன் ஒரு பெண்மணி என் முன்னால் வந்து என் பெயர் ராத்திரி. இராபொழுதின் அபிமானியாக இருந்து வருபவள். இன் நேரத்தில் எந்த விதமானமங்கள சுப காரியங்கள் நடை பெறுவதில்லை.


அசுபமானவள் என எல்லோரும் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.இந்த வேதனையும், வருத்தமும் என்னால் தாங்க முடியவில்லை. வராஹ மூர்த்தியும் ராத்திரி தேவியிடம் ஒரு நாளின் இரவு பொழுதை மூன்று யாமமாக பிறித்து அதில் முதல் இரண்டு


யாமமான சிராவணம், பாத்ரபதம், ஆசுவினம், கார்த்திகம் ஆகிய 4 மாதங்கள் சாதுர் மாஸ்ய மாதங்கள் ஆகும். இந்த 4 சாதுர் மாஸ்ய மாதங்களில் செய்யபடும் புண்ணிய காரியங்கள் , தர்ம காரியங்கள் நிறைந்த நன்மைகளை அளிக்கும்.. இந்த 4 மாதங்களின் செய்யும் புண்ணியமானது நாளுக்கு நாள் கூடுதலாகும்.


இக்காரணத்தினால் தான் கடைசி மாதமான கார்த்திகை மாதம் அனைத்து விதங்களிலும் மிகுந்த நன்மை அளிக்கும் மாதமாக கருதப்படும். என்று அருளினேன்.

இதை கேட்ட ராத்திரி தேவியும் மிகுந்த மகிழ்வுடன் தன் வந்தனத்தை சமர்பித்து கொண்டு தன் இருப்பிடம் சென்றாள்.


இந்த 4 மாதங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, தானம் செய்வது, ஜபம் செய்வது, தர்ம காரியங்கள் செய்பவர்களுக்கு நான் மிகுந்த நன்மைகளை அளிக்கிறேன்.

என்று அருளினார்.


பிரபு நாராயணர் யோக நித்ரையில் ஆழ்ந்து போகும் காலம். யோக நித்ரையில் ஆழ்வது என்பது பகவானின் ஒரு திருவிளையாடல் ஆகும்.


ஸ்ரீ தரர், ஹ்ருஷிகேசர்,பத்மநாபர், தாமோதரர் என்னும் தனது 4 திருவடிவங்களில் பிரபு நாராயணனே சாதுர்மாஸ்ய மாதங்களின் முகிய வணங்குவதற்குறிய தெய்வம்.


பக்தியை மேலும் அதிகரித்து கொள்ளவும் மோக்ஷ ப்ராப்தி அடைவதற்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு. நம்முடைய சாஸ்திரங்கள் கீழ் கண்ட பத்து புண்ணிய நியதிகளை சாதுர்மாஸ்யத்தில் நாம் கடை பிடிக்க வேண்டும் என விதித்து உள்ளது.


சத் சங்கம்; த்விஜ பக்தி; குரு, தேவர், அக்னி தர்ப்பணம்; கொப்பரை தானம்; வேதம் அத்யயனம்; சத் க்ரியை; சத்ய பாஷனை; பசு மாடு பூஜை; தான பக்தி; தர்ம சாதனை.


சாதுர்மாஸ்ய விரதம். 2-7-20 முதல் 26-11-20 முடிய.

மனைவி மக்களுடன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சாதுர்மாஸ்ய வ்ரதம் உண்டு.

ஆஷாட சுக்ல துவாதசி ஆரம்பம். கார்த்திகம் சுக்ல த்வாதசியில் முடியும்.


ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ த்வாதசி முதல் கார்த்திகை மாதம் ஏகாதசி வரையில் நான்கு மாதங்கள் நாம் உட்கொள்ளும் உணவில் ஒரு சில வற்றை விலக்கி கட்டுபாடுகளுடன் இருப்பதே சாதுர்மாஸ்ய வ்ரதம்.


02-07-2020 முதல்30-07-2020 முடிய உணவில் விலக்க வேண்டியது :காய்,,பழம், புளி, மிளகாய், தேங்காய். சாக விரதம்.


31-7-2020முதல்29-08-2020 முடிய தயிர் மற்றும் அவற்றால் தயாரிக்கும் பொருட்கள் கூடாது. தயிறில் ஒன்றுக்கு நான்கு பங்கு ஜலம் விட்டு மோராக உபயோகிக்கலாம். நிறம், தரம்,, ருசி குணம் மாறி விடுவதால் மோர் சாப்பிடலாம்.. தயிர் விரதம்.=ததி விரதம்.


30-08-2020 முதல் 27-09-2020 முடிய பால் மற்றும் பாலை கொண்டு தயாரிக்கும் உணவு வகைகள் கூடாது. ஆனால் தேங்காய் பால் உபயோகிக்கலாம். பயோ விரதம்.=பால் விரதம்.

18-09-2020 முதல் 16-10-2020 அதிக மாதம் வருகிறது. அதிக ஆசுவினம்.=பால் விரதம்.

.

28-09-2020 முதல் 27-10-2020முடிய த்வி தள விரதம். அதாவது தானியங்களை உடைத்தால் இரு அல்லது பல விதைகள் இருக்கும். ஆதலால் பருப்பு வகைகள் , புளி மிளகாய். காய், பழம் சாப்பிடக்கூடாது. ஆனால் வாழைக்காய், வாழைதண்டு, வாழைபூ, வாழை பழம் சேனை, வள்ளிகிழங்கு, இஞ்சி, மாங்காய் இஞ்சி, பொன்னாங்கண்ணி ஆகியவை உபயோகிக்கலாம். வாழைக்கு விதை கிடையாது.


இதனால் ஆரோக்கியம், குடும்ப அமைதி உண்டாகும். 26-11-2020 சாதுர் மாசம் பூர்த்தி.


2-07-2020 & 21-07-2021 அன்று பூஜை அறையில் ஸ்வாமிக்கு முன்பாக ஹே அச்யுத நான் இன்று முதல் நான்கு மாதங்கள் வரை இந்த வ்ருதத்தை செய்கிறேன். அது வறை எனக்கெந்த தடங்களும் வராமல் செய்வாயாக. தடை ஏதுமில்லாமல் வ்ரதம் நிறைவேற நீ எனக்கு அருள் புரிவாயாக. என்று மஹா விஷ்ணுவை ப்ரார்த்தித்து கொள்ளவும்.

21-07-2021 முதல் 18-08-2021 முடிய சாக விரதம்.

19-08-2021 முதல் 17-09-2021 முடிய தயிர் விரதம்.

18-09-2021 முதல் 16-10 2021 முடிய பால் விரதம்.

17-10-2021 முதல் 15-11-2021 முடிய த்வி தள விரதம்.

சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி அன்று சென்ற நான்கு மாத காலமாக கட்டுபாடுகளுடன் சாதுர் மாஸ்ய விரதம் அனுஷ்டித்தவர்கள் ஸ்வாமி சன்னதியில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி விரதத்தை முடித்து கொள்ள வேண்டும்.

இதம் வ்ருதம் மயா தேவ க்ருதம் ப்ரீத்யை தவ ப்ரபோ ந்யூனம் ஸம்பூரணதாம் யாது த்வத் ப்ரஸாதாத் ஜனார்தன

சிவ_புஜங்கம்

 #சிவ_புஜங்கம்


1.கலத்தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்


சலச்சாருசுண்டம் ஜகத்ராண சௌண்டம்!


கன்த்தந்த காண்டம் விபத்பங்க சண்டம்


சிவப்ரேம பிண்டம் பஜே வக்ரதுண்டம்!!


மதஜலம் பெருகி ஒடுவதால் கூட்டம் கூட்டமாக நாடிவரும் தேனிக்கள் குழுமிய தாடைகளும், அசைந்தாடும் துதிக்கையும், உலகத்தைக் காக்கத் துடிக்கும் வீறும், பளபளக்கும் கொம்புகளும், விபத்துக்களை ஒடுக்குவதில் துடிப்பும், சிவா-சிவன் இவ்விருவரின் அன்புக்கலவையாயும் அமைந்த வக்ரதுண்டரை சேவிக்கிறேன்.


2.அநாத்யந்த மாத்யம் பரம் த்தவமார்தம்


சிதாகாரமேகம் துரீயம் த்வமேயம்!


ஹரிப்ரஹ்மம்ருக்யம் பரப்ரஹ்மரூபம்


மநோவாகதீதம் மஹ:சைவமீடே!!


முதலும் முடிவுமில்லாதவர், முதன்மையானவர், தத்வப்பொருளானவர், ஞானவடிவானவர், அளவுக்கு எட்டாதவர், துரீயமானவர், ஹரியும் பிரம்மாவும் தேடும் பரப்ரஹ்மமேயானவர், மனம், வாக்கு இவற்றிற்கு அப்பாற்பட்டதுமான சிவஜ்யோதியை துதிக்கிறேன்.


3.ஸ்வசக்த்யாதிசக்த்யந்த ஸிம்ஹாஸநஸ்தம்


மநோஹாரி ஸ்ர்வாங்க ரத்னோரு பூஷம்!


ஜடாஹீந்து கங்காஸ்திசம்யாக மௌலீம்


பராசக்தி மித்ரம் நும்:பஞ்சவர்த்ரம்!!


தனது சக்தியில் தொடங்கி ஆதிசக்தியில் முடியும் சிம்மாஸனத்தில் அமர்ந்து, அழகிய உடம்பு முழுதும் ரத்னாங்கிபூண்டவரும், ஜடை ஸர்ப்பம், சந்த்ரன், கங்கை, சம்யாகம் இவற்றை தலையில் கொண்டவரும், பராசக்தி துணைவருமாகிய பஞ்சமுக சிவனை ஸ்தோத்ரம் செய்கிறேன்.


4.சிவேசாஸ தத்பூருஷாகோர வாமா


திபி:பஞ்சபிர்ஹ்ருந்முகை:ஷட்பிரங்கை:


அனௌபம்ய ஷட்த்ரிம்சதம் தத்வவித்யா


மதீதம் பரம் த்வாம் கதம் வேத்தி கோவா!!


சிவன், ஈசானன், தத்புருஷன், அகோரன், வாமதேவன் ஆகிய ஐந்து முகங்களுடனும், ஆறு அங்கங்களுடனும், இணையில்லாத முப்பத்தாறுதத்வங்களுக்கு அப்பால் உள்ள பரம் பொருளாகிய தங்களை யார் எப்படி தெரிந்து கொள்ள முடியும்?


5. ப்ரவால ப்ரவாஹ ப்ரபாசோணமர்தம்


மருத்வன் மணி ஸ்ரீமஹ:ச்யாமமர்தம்!


குணஸ்யூதமேதத் வபு:சேவ மந்த


ஸ்மராமி ஸ்மராபத்திஸம்பத்தி ஹேதோ: !!


பவழம் போன்று சிவப்பான ஒரு பகுதியும், இந்திர நீலம் போன்று கருநீலமான மற்றொரு பகுதியும், குணம் என்ற ஒரே கயிறு மூலம் இணைக்கப்பட்ட சிவஸ்வரூபத்தை காம விகாரமழிய தியானம் செய்கிறேன்.


6. ஸ்வஸேவாஸமாயாத தேவாஸுரேந்த்ரா


நமந்மௌலி மந்தாரமாலா பிஷக்தம்!


நமஸ்யாமி சம்போ!பதாம்போருஹம் தே


பவாம்போதி போதம் பவானீ விபாவ்யம்!!


ஹேசம் போ!சம்ஸாரக் கடலைக்கடத்திவிடும் படகு போன்ற தங்களது திருவடித்தாமரையை நமஸ்கரிக்கிறேன் அது, தங்களை ஸேவிக்க வந்த தேவாஸுரர்களின் தலைகளிலுள்ள மந்தாரமலர்கள் படிந்து, பவானீ தேவி காணத்தக்கதாய் மிளிர்கிறது.


7.ஜகந்நாத!மந்நாத!கௌரீஸநாத!


ப்ரபன்னானுகம்பிந் விபந்நார்திஹாரிந்!


மஹ:ஸ்தோம மூர்த்தே ஸமஸ்தைகபந்தோ!


நமஸ்தே நமஸ்தே புனஸ்தே நமோஸ்து II


உலகத்தையும் என்னையும் காத்தருளும் கௌரீமணாளனே!சரணமடைந்தோரை இரக்கமுடன் காப்பவரே!தீதுற்றோர் துன்பம் துடைப்பவரே!ஜ்யோதிருபங்கொண்டவரே!உலகின் ஒரே பந்துவான உமக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


8.விரூபாக்ஷ!ஸிச்வேச!விச்வாதிதேவ!


த்ரயீமூல சம்போ சிவத்ர்யம்பக த்வம்!


ப்ரஸீத!ஸ்மர, த்ராஹி பச்யாவமுக்த்யை


க்ஷமாம் ப்ராப்னுஹி த்ர்யக்ஷ மாம் ரக்ஷ மோதாத் II


விரூபாக்ஷ, விச்வேச்!தேவாதிதேவ!வேதமூலனே!சம்போ, சிவ, திரியம்பக, அருள் பாலிப் பீராக!மறவாமல் காப்பாற்றுவீராக!மோக்ஷமளித்து, என்னை காத்தருள பெருமை கொள்வீராக!


9. மஹாதேவ!தேவேச!தேவாதிதேவ!


ஸ்மராரே!புராரே!யமாரே!ஹரேதி!


ப்ருவாண:ஸ்மரிஷ்யாமி பக்த்யா பவந்த


ததோ மே தயாசீல தேவ ப்ரஸீத II


மஹாதேவா!தேவேச!தேவாதிதேவ!ஸ்மராரியே!புராரியே!யமாரியே!ஹரனே என்று பக்தியுடன் உம்மை தியானிக்கிறேன். தயை காட்ட வேண்டுமே!எனக்காக அருள வேண்டுமே!


10. த்வதந்ய:சரண்ய:ப்ரபன்னஸ்ய நேதி


ப்ரஸீத ஸ்மரந்நேவ ஹந்யாஸ்து தைந்யம் !


நசேத் தே பவேத் பக்தவாத்ஸல்யஹாநி:


ததோ மே தயாலோ ஸதா ஸந்நிதேஹி II


சரணமடைந்தவருக்கு தாங்களன்றி வேறு காப்போரில்லை என்று எண்ணி, அருளன்போடு எனது ஏழ்மையைப் போக்கிவிடுங்கள். இல்லையெனில் பக்தனுக்கு அன்பன் என்ற பெயர் தீதுறுமே. அதனால், ஹேதயாபரனே!என்முன்னே தோன்றுவீராக!


11. அயம் தாநகலஸ்த்வஹம் தாநபாத்ரம்


பவாநேவ தாதா;த்வதந்யம் நயாசே!


பவத்பக்திமேவ ஸ்திராம் தேஹி மஹ்யம்


க்ருபாசீல சம்போ!க்ரிதார் தோஸ்மி தம்மாத்மிமி


ஹேக்ருபாலா!சம்போ!இதுவே கொடுப்பதற்கு நல்ல நேரம்;நானே கொடுப்பதை ஏற்கத்தகுந்தவன். தாங்களே கொடுப்பவர். தங்களையன்றி வேறு எவரையும் வேண்டேன். உம்மிடம் ஸ்திரமான பக்தியை எனக்கு வழங்கவேண்டும். அதனால்தான் பெருமிதம் அடைவேன்.


12. பசும் வேத்ஸி சேந்மாம், தமேவாதிரூட:


கலங்கீதி வா மூர்த்னி தத்ஸேதமேவமி


த்விஜிஹ்வ:புவ:ஸோபிதே கண்டபூஷா


த்வதங்கீக்ருதா:சர்வ!ஸர்வேsபிதந்யா: II


என்னை பசு என்று (அலக்ஷ்யமாக) எண்ணுவீராகில் அதன்மீது தானே தாங்கள் பயணிக்கிறீர்கள். களங்கம் உள்ளவன் என்றால், அவனைத்தானே தலையில் தாங்குகிறார்கள். இரண்டு நாக்கன் என்றாலோ, அவனும் தானே தங்கள் கழுத்தில் ஆபரணமாகிறான். இப்படி தாங்கள் ஏற்றதால் அவர்களெல்லாம் புண்யசாலிகள் ஆகவில்லையா?


13. ந சக்நோமி பரத்ரோஹலேசம்


கதம் ப்ரீயஸே த்வம் ந ஜாநே கிரிச!


ததாஹி ப்ரஸந்நோஸி கஸ்யாபி காந்தா


ஸுத் த்ரோஹிணோ வா பித்ருத்ரோஹிணோவா II


சிறிதேனும் பிறருக்கு தீங்கு செய்வதறியேன். ஆனால் த்ரோஹம் செய்தவர் பாலும் தாங்கள் அன்பு கொண்டது எப்படியோ தெரியவில்லை. ஒரிருவர் அப்படித் த்ரோஹம் செய்தும் தங்கள் அன்புக்குப் பாத்திரமாகவில்லையா?


14. ஸ்துதிம் த்யானமர்ச்சாம் யதாவத்விதாதும்


பஜன்அப்யஜானன் மஹேசாவலம்பே !


த்ரஸந்தம் ஸுதம் த்ராதுமக்ரே ம்ருகண்டோ:


யமப்ராண நிர்வாபணம் த்வத்பதாப்ஜம் II


எனக்கு ஸ்தோத்திரம், தியானம், பூஜை ஆகியவற்றை முறையாகச் செய்யத் தெரியாது. ஆனால், மருண்ட ம்ருகண்டு வின்பிள்ளையைக் காக்கவேண்டி யமன் உயிரையே மாய்த்த தங்களது திருவடியை அறியாமலேயே பற்றியுள்ளேன்.


15. சிரோத்ருஷ்டி - ஹ்ருத்ரோக - சூலப்ரமேஹ-


ஜ்வரார்சோ - ஜரா - யக்ஷ்ம - ஹிக்கா - விஷார்த்தான்


த்வமாத்யோ பிஷக், பேஷஜம் பஸ்ம சம்போ !


த்வமுல்லாகயாஸ்மான் வபுர்லாகவாய !!


எத்தனையோ கொடிய ரோகங்களைப் போக்கும் முதன்மை மருத்துவராயிற்றே தாங்கள். சம்போ!தங்கள் ப்ரஸாதமான பஸ்மமே மருந்து!எங்களை நோயற்றவராகச் செய்தருள்வீராக!


16. த்ரித்ரோsஸ்மி, அபத்ரோsஸ்மி, பக்னோஸ்மி தூயே


விஷண்ணோsஸ்மி, ஸந்நோsஸ்மி, கின்னோsஸ்மி சாஹம் I


பவான் ப்ராணிநாம் அந்தராத்மாஸி சம்போ


மமாதிம் நவேத்ஸி ப்ரபோ ரக்ஷ மாம் த்வம் II


நான் ஏழ்மைப்பட்டு சீராக இல்லததால் மனம் உடைந்துள்ளேன். நொந்து கிலேசப்படுகிறேன். தாங்கள் ப்ராணிகளின் அந்தராத்மாவாக இருப்பதால், ஹேசம் போ!என் துன்பம் தெரியவில்லையா?என்னை காப்பாற்றுவீராக!


17. த்வதக்ஷ்ணோ:கடாக்ஷ:பதேத் த்ர்யக்ஷபதேத் த்ர்யக்ஷ


யத்ர க்ஷணம் க்ஷ்மா ச லக்ஷ்மீ :ஸ்வயமா தம் வ்ருணாதே!


கிரீடஸ்புச்சாமரச்சத்ரமாலா-


கலாசீ-கஜ-ªக்ஷளம-பூஷா-விசேஷை: II


ஈசனே!நீர்முக்கண்ணராயிற்றே!உமது கடாக்ஷம் யார்மேல் ஒரு நொடியாவது விழுகிறதோ, அவன்பால், பூமி, சொத்து, சுதந்திரம் அரசாட்சி அனைத்தும் தாமே குடிகொள்ள அடையுமே!


18. பவான்யை பவாயாபி மாத்ரேச பித்ரே


ம்ருடான்யை ம்ருடாயாப்யகக்ன்யை மகக்னே I


சிவாங்க்யை சிவாங்காய குர்ம:சிவாயை


சிவாயாம்பிகாயை நமஸ்த்ர்யம்பகாய II


பவானீ-பவராய், தாய் தந்தையராய், ம்ருடானீ-ம்ருடராய், பாபம் துடைப்பவளாய்-தக்ஷயாகம் குலைத்தவராய், மங்கள வடிவம் கொண்டு சிவா-சிவனாய் விளங்கும் உங்களுக்கு நமஸ்காரம்.


19. பவத்கௌரவம் மல்லகுத்வம் விதித்வா


ப்ரபோ ரக்ஷ காருண்யத்ருஷ்ட்யாநுகம் மாம் I


சிவாத்மானுபாவஸ்துதாவக்ஷமோsஹம்


ஸ்வசக்த்யா க்ருதம் மேsபராதம் க்ஷமஸ்வமிமி


தங்களது கௌரவத்தையும் எனது சிறுமையையும், நன்கு அறிந்து கருணைக்கண்ணுடன் என்னைக் காப்பீராக!சிவாத்மானு பூதியுடன் ஸ்தோத்திரம் செய்யமுடியவில்லை. நான் செய்த தவறை தாங்களே பொறுப்பேற்று மன்னிப்பீராக!


20. யதா கர்ணரந்த்ரம் வ்ரஜேத் கால வாஹ-


த்விஷத் கண்ட - கண்டா கணாத்கார நாத:


வ்ருஷாதீச மாருஹ்ய தேவெளபவாஹ்யம்


ததா வத்ஸ மாபைரிதி ப்ரீணயத்வம் II


யம வாஹனமாகிய மஹிஷப்பகைவனின் கழுத்தில் தொங்கும் மணியின் ஒசை என் செவியில் விழுவதற்குள் தங்கள் வாஹனமாகிய விருஷ பத்தின் மீதேரி பயப்படாதே குழந்தாய் என்று சொல்லி மனம் தேற்றுவீராக!


21. யதா தாருணாபாஷணா பீஷணா மே


பவிஷ்யந்த்யுபாந்தே க்ருதாந்தஸ்ய தூதா:


ததா மன்மனஸ்த்வத்பமா ம்போருஹஸ்தம்


கதம் நிஸ்சலம் ஸ்யாத் நமஸ்தேsஸ்து சம்போ II


யமதூதர்கள் கடுஞ்சொற்களைக் கூறிக்கொண்டு என்னருகில் தொங்குவதற்குள், ஹேசம்போ!ஒரு கணம் என் மனம் தங்கள் திருவடித்தாமரையில் பதிந்து அசையாமலிருக்க வேண்டுமே!உமக்கு நமஸ்காரம்.


22. யதா துர்நிவார வசதோணுஹம் சயாநோ


லுடன், நி:ச்வஸன் நி:ஸ்ருதாவ்யக்த வாணி:


ததா ஜஹ்னு கன்யா ஜலாலங்க்ருதம் தே


ஜடா மண்டலம் மன்மனோ மந்திரம்ஸ்யாத் II


ஏதோ தாங்கமுடியாத வலியால் படுத்துப்புறன்டு பெருமூச்சுவாங்க, ஏதோ உளரிக் கொண்டிருப்பேனே, அப் பொழுதாகிலும் கங்கை கொண்ட தங்களது ஜடாமண்டலம், என் மனம் குடிகொள்ளும் இடமாக அமையட்டும்.


23. யதா புத்ரமித்ராதயோ மத்ஸகாசே


ருதந்த்யஸ்த ஹா கீத்ருசீயம் தசேதி I


ததா தேவதேவேச கௌரீச சம்போ!


புராரே!பவந்தம் ஸ்புடம் பாவயேயம்மிமி


என் பெண்டு பிள்ளைகள் என்னருகில் உட்கார்ந்து, இவருக்கு என்ன ஆயிற்று என்று அழுது புலம்புவார்களே, அப்பொழுது, ஹேத்வதேவ!கௌரீபதே, சம்போ என்றும் சிவாம நம:என்றும் விடாமல் கூறுவேனாக!


24. யதா பச்யதாம் மாமஸெள வேத்திநாஸ்மா


நயம் ச்வாஸ ஏவேதி வாசோ பவேயு:


ததா பூதிபூஷம் புஜங்காவநத்தம்


புராரே!பவந்தம் ஸ்புடம் பாவயேயம் II


நாம் பார்க்கிறோமே, ஆனால் இவர் நம்மை அடையாளம் கண்டுகொள்ளவில்லையே என்றும் இது நிச்சயம் மூச்சுதான் என்றும் ஏதேதோ பேசுவார்களே அப்பொழுது பஸ்மபூஷிதராய், நாகாபரணம் பூண்டவராய் இருக்கும் தங்களைத் தெளிவாகக் காண்பேனா?


25. யதா யாதநாதேஹஸந்தேஹ வாஹீ


பவேதாத்ம தேஹே ந மோஹோ மஹான் மேமி


ததா காச-சீதாம்சூ ஸங்காசமீச !


ஸ்மராரே வபுஸ்தே நமஸ்தே ஸ்மராணி II


யாதனாதேஹம் நெருங்கிவிட்டதோ என்ற சந்தேஹம் மேலிட, தற்போதய தேஹத்தில் மயக்கம் மேலிடாத பொழுது, தங்களது தூய வெண்ணிற மேனியை கண்ணாரக்காண்பேனா?


26. யதாபாரமச்சாய மஸ்தானமத்பி:


ஜனைர்வா விஹீனம் கமிஷ்யாமி மார்கம் I


ததா தம் நிருந்தன் க்ருதாந்தஸ்ய மார்கம்


மஹாதேவ!மஹ்யம் மனோஜ்ஞம் ப்ரயச்ச! II


அக்கரைகாணாத, களையிழந்த, போக்கிடமில்லாத, தண்ணீரும் தன்னைச் சார்ந்த வருமில்லாத அந்தயமனின் வழியை மறித்து, ஹேமஹாதேவ!எனக்கு வேறு நல்வவியை கொடுப்பீராக!


27. யதா ரௌவாதி ஸ்மரன்னேவ பீத்யா


வ்ரஜாம்யத்ர மோஹம் மஹாதேவ கோரம் I


ததா மாமஹோ நாத!கஸ்தாரயிஷ்ய-


த்யநாதம் பராதீனமர்த்தேந்து மௌலே!மிமி


ஹேமஹாதேவ!ரௌரவம் முதலிய நரகங்களை நினைத்து, பயந்து, நான் மயக்கமுற்று தவிற்கும்போது, துணையில்லாமலும் பிறரையண்டியுமிருக்கிற என்னை, உன்னையன்றி வேறு யார் கைதூக்கிவிடுவார்கள்.


28. யதா ச்வேத பக்ராயதாலங்க்ய சக்தே


க்ருதாந்தாத் பயம் பக்தவாத்ஸல்ய பாவாத் I


ததா பாஹிமாம் பார்வதீவல்லபான்யம்


ந பச்யாமி பாதார மேதாத்ருசம்மே II


எனக்கு மீற முடியாத யம பயம் நேர்ந்த பொழுது, ஹே பார்த்தீ வல்லப!என்னைக் காத்தருள். நீர் பக்தனுக்கு அன்பு காட்டுபவரன்றோ. உம்மைத்தவிர வேறெவரும் என்னைக் காப்பவரில்லை!


29.இதானீமிதானீம் ம்ருதிர்மே பவித்ரீ


த்யஹோ ஸந்ததம் சிந்தயா பீடிதோsஸ்மி I


கதம் நாம மா பூத் ம்ருதௌ பீதிரேஷா


நமஸ்தே கதீனாம் கதே நீலகண்ட! II


ஹே நீலகண்ட, இதோ இதோ எனக்கு மரணம் வந்துவிட்டது என்று யமபயத்தால் துன்பப்படுகிறோனே இந்த யம பயம் எப்படி தொலையும்!உமக்கு நமஸ்காரம் நீரே எனக்கு கதி!


30.அமர்யாத மேவாஹ மாபால வ்ருத்தம்


ஹரந்தம் க்ருதாந்தம் ஸமீக்ஷ்யாஸ்தி பீத:


ம்ருதௌ தாவகாங்க்ரயப்ஜ திவ்யப்ரஸாதாத்


பவானீபதே நிர்லயோsஹம் பவானி II


சிறியவர், பெரியவர் என்று நிலையின்றி, தடையின்றி உயிரைப் பறிக்கும் யமனைக்கண்டு பயந்து நடுங்குகிறானே!ஹே பார்வதீபதே!உமது திருவடிதாமரையருளால் இந்த யம பயத்தினின்று தெளிவேனாக!


31.ஜராஜன்ம கர்பாதிவாஸாதிது:கா


ன்யஸஹ்யாநி ஜஹ்யாம் ஜகந்நாததேவ! I


பவந்தம் விநாமே கதிர்நைவ சம்போ !


தயாலோ ந ஜாகர்த்திகிம்வா தயா தே II


ஹே ஜகந்நாத!முதுமை, பிறப்பு, இறப்பு முதலிய பொறுக்கவொண்ணாத் துன்பங்களை முற்றிலும் விட்டொழிக்க உம்மைத் தவிர எனக்கு வேறு வழி ஏது?நீர் தயையுள்ள வராயிற்றே!உமக்குக்கூட தயை பிறக்கவில்லையா?


32. சிவாயேதி சப்தோ நம:பூர்வ ஏஷ


ஸ்மரன் முக்திக்ருத் ம்ருத்யுஹா தத்வவாசீமி


மஹேசாந மா கான்மனஸ்தோ வசஸ்த:


ஸதா மஹ்யமேதத் ப்ரதானம் ப்ரயச்ச II


நம:என்று தொடங்கி சிவாய என்று முடியும் சொல்லை நினைப்பவருக்கு மோக்ஷமே கிடைக்கும். தத்வர் பொருளை உணர்த்தும் அச்சொல் மரணத்தை நீக்கும். ஹேமஹாதேவ!அச்சொல் என் மனதைவிட்டு வரம் தந்தருள்வாயே!


33. த்வமப்யம்ப!மாம் பச்ய் சீதாம்சூமௌலி-


ப்ரியே!பேஷஜம் த்வம் பவவ்யாதிசாந்தௌ


பஹ§க்லேச பாஜம் பதாம்போஜபோதே


பவாப்தௌ நிமக்னம் நயஸ்வாத்ய பாரம் II


ஹே சந்த்ரமௌலிப்ரியே!நீயும் என்னை கவனித்துக் கொள். c தானே அம்மா!சம்சாரநோய்க்கு மருந்து. சம்ஸாரக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் என்னை நினது திருவடிப்படகில் ஏற்றி கரைக்கடக்கச் செய்!


34. அனுத்யல்லலாடாக்ஷி வஹ்நிப்ரரோஹை:


அவாமஸ்புரத் சாருவாமேரு சோபை: I


அனங்கப்ரமத் போகிபூஷா விசேஷை:


அசந்த்ரார்த்த சூடை ரலம்தைவதைர் ந: II


நெற்றிக்கண்ணில் தீப்பொறி தோன்றாத, இடது பக்கம் அழகிய நங்கை மிளிராத, உடம்பில் பாம்பு அணிகலன்கள் தவழாத, சந்த்ரமௌலியாக இல்லாதபிற தெய்வங்கள் எனக்கு வேண்டாமே!


35. அகண்டே கலங்கா தனங்கே புஜங்காத்


அபாணௌ கபாலா தபாலேநலாக்ஷ£த் I


அமௌலௌ சசாங்காதவாமே கலத்ராத்


அஹம் தேவ மன்யம் நமன்யே நமன்யே II


கழுத்தில் காலகூடமில்லாத, உடம்பில் நாகம் தவழாத, கையில் கபாலமில்லாத, நெற்றியில் தீக்கண்ணில்லாத, மௌலியில் சந்த்ரபிறையில்லாத, இடதுபக்கம் பாகம் பிரியாள் இல்லாத வேறு ஒரு கடவுளை கடவுளாக நான்மனதாலும் நினையேன்.


36. மஹாதேவ!சம்போ கிரீச!த்ரிசூலின்


த்வயீதம் ஸமஸ்தம் விபாதீதி யஸ்மாத் !


சிவாதன்யதா தைவதம் நாபிஜாதே


சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம் II


மஹாதேவ!சம்போ!கிரீச!த்ரிசூலனே!உம்மிடமே இந்த அகில உலகும் துலங்குகிறது. ஆகையால், சிவனாகிய உன்னைத் தவிற வேறு தெய்வத்தை அறியேன். நானே சிவன், நானே சிவன், நானே சிவன்.


37. யதோsஜாயதேதம் ப்ரபஞ்சம் விசித்ரம்


ஸ்திதிம் யாதி யஸ்மின் யதேகாந்தமந்தே I


ஸகர்மாதிஹீன:ஸ்வயம்ஜ்யோதிராத்மா


சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம்மிமி


இந்த விசித்ர உலகம் எங்கிருந்து தோன்றி, நிலைகொண்டு, பின் எதனில் கடைசியில் ஒடுங்குகிறதோ அதே, கர்மம் முதலியன இல்லாததாகி ஸ்வயம் பிரகாசமான, ஆத்மஸ்வரூபமான சிவனே நான், சிவனே நான், சிவனே நான், சிவனே நான்.


38. கிரீடே நிசேசோ லலாடே ஹ§தாசோ


புஜே போகிராஜோ கலே காலிமா ச!


தநௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம்


ந ஜானே ந ஜானே நஜானே ந ஜானே II


எவருடைய கிரீடத்தில் சந்திரபிறையும், நெற்றியில், அக்னியும், கைகளில் ஸர்ப்பராஜனும், கழுத்தில் காலகூடக் கறுமையும், உடம்பில் பிரியையும், உறைகிறார்களோ அப்படிப்பட்ட கடவுளை சிவனன்றி அறியேன். அறியேன். அறியேன். அறியேன்.


39. அநேந ஸ்தவேநாதராதம்பிகேசம்


பராம் பக்திமாஸாத்ய யம் யே நமந்திமி


ம்ருதௌ நிர்பயாஸ்தே ஜனாஸ்தம் பஜந்தே


ஹ்ருதம்போஜமத்யே ஸதாஸீநமீசம் !!


அம்மையருபாகனான அந்த தேவனை பக்தியுடனும், ஆதரவுடனும் எவரெவர் இந்தஸ்தோத்திரத்தைச் சொல்லி நமஸ்கரக்கிறார்களோ அவரவர் மரணபயம் நீங்கி ஹ்ருதயத் தாமரையில் அனவரதம் வாஸம் செய்யும் அவ்ஈசனையடைவர்.


40. பஜங்கப்ரியாகல்ப சம்போ மயைவம்


புஜங்கப்ரயாதேந வ்ருத்தேந த்லுப்தம் !


நர:ஸ்தோரமேதத் படித்வோருபக்த்யா


ஸுபுத்ராயுராரோக்ய மைச்வர்யமேதிமிமி


புஜங்கப்ரயாத விருத்தத்திலமைந்த இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி நாகாபரணரான சம்புவை சேவிக்கிற அனைவரும் நல்ல புத்ரர்கள், ஆயுள், ஆரோக்யம், ஐச்வர்யம் ஆகிய நற்பயனைப் பெறுவர்.


நன்றி : kamakotti.org.

Tuesday, 6 June 2023

ஶ்ரீ_வசந்த_நவராத்திரி_1

 🎊🎉#ஶ்ரீ_வசந்த_நவராத்திரி_1🎉🎊


#ஶ்ரீ_ராஜ_ராஜ_மகாதிரிபுரசுந்தரி_வைபவம்🎊


#அமிர்தக்கடல் மத்தியிலே நவகோண ஶ்ரீநகரம்...


 #மரகத கோட்டைகள்  சூழ்ந்திருக்க  மங்காத ஒளிபுலரும்..


#கோடிசூர்ய பிரகாசம் கோமதியவள் கிருகம்தன்னில்..


#சித்தாடை கட்டியவள் சிந்தாமணியில் எழுந்தருள.. சிற்றிடையை மறைத்திருக்கும் நவரத்ன ஒட்டியாணம் ...


#சத்தியத்தை நிலைநாட்டி தர்மக்கொடியேற்ற தாளாத நல்மனமும் நம்பிக்கையும் தந்துவிடு..


#தாயே வண்ணமயமான பளிங்கு மாளிகையில் கோடானுகோடி யோகினிகள் சேவிக்க ரமாவாணி சாமர பன்னீர் தென்றலில் மெய்மறந்து 


#மாதங்கியின் வீணாகானத்தில் ஶ்ரீபுரத்தையே மறந்தவளே.. தண்டநாதை உன் கண்ணசைவுக்கு காத்திருக்கிறாள்.. ஸ்வர்ண சிம்மாசனத்தை மறந்து மணித்வீபம் அகன்று எழுந்து வாடி தாயே..


ஶ்ரீ லோகமாதா மகா திரிபுரசுந்தரி ஶ்ரீ பராபட்டாரிகா அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி சர்வஜனவசங்கரி சர்வேஸ்வரீ... ஶ்ரீ சண்டிதுர்கா  ஶ்ரீலலிதா பரமேஸ்வரீ போற்றி ..


நவராத்திரி பூஜைகள் ஏற்றுக்கொள்ள வருவாய் அம்மா .. நவகோண சக்கரத்தில் வீற்றிருக்கும் ராஜேஸ்வரி ..


"கற்பகமே உனையன்றித் துணை யாரம்மா

நீயே கதி எனப் போற்றும் எனைக்

கண் பாரம்மா அம்மா

அற்புதம் எல்லாம் நிகழ்த்தும்

அருள் திறம் உடையவளே

ஆனந்த வாழ்வு தன்னை அன்பர்க்கு அளிப்பவளே

அலைகடல் ஓரத்திலே அமைந்த மயிலையிலே

அலைகடல் ஓரத்திலே அமைந்த மயிலையிலே

கலை வடிவாய்த்திகழும் நின் திருக்கோயிலிலே

கலை வடிவாய்த்திகழும் நின் திருக்கோயிலிலே

சிலை வடிவாய் நின்று உலகேழும் காப்பவளே

சிலை வடிவாய் நின்று உலகேழும் காப்பவளே

செம்பவள மேனி வண்ணன் மகிழும் உமையவளே

செம்பவள மேனி வண்ணன் மகிழும் உமையவளே"

Saturday, 3 June 2023

கிருஷ்ணாஷ்டகம்

 #கிருஷ்ணாஷ்டகம்


கோகுலாஷ்டமியில்... சகல ஐஸ்வரியம் தரும் கிருஷ்ணாஷ்டகம்! 

 

பகவான் கிருஷ்ணரை பூஜித்துப் போற்றும் கோகுலாஷ்டமி. கீதையின் நாயகனைக் கொண்டாடி வணங்கும் நன்னாள். புல்லாங்குழலோன் உதித்து, குழலின் இசையால் ஆவினங்களையும் நம்மையும் குளிர்வித்த புண்ணியத் திருநாள். இந்தநாளில், இல்லத்தில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, கிருஷ்ணரை வணங்குவோம். கண்ணனுக்குப் பிடித்த சீடை, அதிரசம், அவல் பாயசமெல்லாம் செய்து கண்ணனை அழைத்து ஆராதிப்போம்.


குழந்தை இல்லாத வீட்டில், கோகுலாஷ்டமி பூஜையைச் செய்தால், குழந்தையாக கிருஷ்ணனே வந்து பிறப்பான் என்பது ஐதீகம். குசேலருக்கு உதவியது போல் நமக்கும் அருள் மழை பொழிவான். சகல ஐஸ்வர்யமும் தந்து வாழச் செய்வான்.


முக்கியமாக... இந்த நன்னாளில், கோகுலாஷ்டமியில், #கிருஷ்ணாஷ்டகம்_பாராயணம்_செய்யுங்கள். தெய்வ கடாக்ஷம் இல்லத்தில் ஒளிரும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே நடந்தேறும்.


அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகத்தால் ஆனவை. கிருஷ்ணன் குறித்த எட்டு ஸ்லோகங்கள், கிருஷ்ணாஷ்டகம் எனப்படும். 

இப்படியாக எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டகத்தை பாராயணம் செய்து, கிருஷ்ண பகவானை வணங்குவது மிகுந்த பலன்களைத் தரும்.


'நம் வாழ்வில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல நல்ல பலன்கள் அனைத்தையும் எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்' என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதன் கடைசி ஸ்லோகம் இதையே வலியுறுத்துகிறது. கோகுலாஷ்டமியில், தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!


#கிருஷ்ணாஷ்டகம்


1. வசுதேவ ஸூதம் தேவம்


கம்ஸ சாணூர மர்த்தனம்


தேவகீ பரமானந்தம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: வசுதேவரின் குமாரன்... கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


2.அதஸீ புஷ்ப ஸங்காசம்


ஹாரநூபுர சோபிதம்


ரத்ன கங்கண கேயூரம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன். ரத்தினம் இழைத்த கையில் அணியும் அணிகலன்களை தோள்களில் அணிந்தவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


குடிலாலக ஸம்யுக்தம்


3.பூர்ண சந்த்ர நிபானனம்


விலஸத் குண்டல தரம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன். முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன். பளீர் என ஒளிருகிற குண்டலங்கள் அணிந்தவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


4.மந்தார கந்த ஸம்யுக்தம்


சாருஹாஸம் சதுர்ப்புஜம்


பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் திகழ்பவன். அழகான புன்னகையைத் தவழவிடுபவன். நான்கு திருக்கரங்களை உடையவன். மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்... உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


5.உத்புல்ல பத்ம பத்ராக்ஷம்


நீல ஜீமூத ஸந்நிபம்


யாதவானாம் சிரோ ரத்னம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள் : மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்... தாமரைக் கண்ணன். நீருண்ட மேகத்தைப் போன்றவன். யாதவர்களின் ரத்தினமாகவும் முடிசூடா மன்னனாகவும் திகழ்பவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணரை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


6.ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம்


பீதாம்பர ஸூசோபிதம்


அவாப்த துளசீ கந்தம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன். பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன். துளசியின் பரிமளத்தைக் கொண்டிருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


7.கோபிகாநாம் குசத்வந்த்வ


குங்குமாங்கித வக்ஷஸம்


ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பின் அடையாளத்தை மார்பில் கொண்டவன். ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடம் தந்தவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


8.ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம்


வநமாலா விராஜிதம்


சங்க சக்ரதரம் தேவம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவன். அகன்ற மார்பை உடையவன். வனமாலையைச் சூடிக் கொண்டிருப்பவன். சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


9.க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம்


ப்ராதருத்தாய ய படேத்


கோடி ஜந்ம க்ருதம் பாபம்


ஸ்மரணேன விநச்யதி


#பொருள்: எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு ஸ்லோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் பாராயணம் செய்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். வீடு மனை யோகம் கிடைத்து, குறும்புக் கண்ணனைப் போல் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


நன்றி :  Hindutamil.in

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...