Saturday, 18 March 2023

கந்தர் அனுபூதி

 #கந்தர் அனுபூதி

காப்பு


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்

தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே

பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.


நூல்

ஆடும் பணிவே லணிசே வலெனப்

பாடும் பணியே பணியா யருள்வாய்

தேடுங் கயமா முகனைச் செருவிற்

சாடுந் தனியா னைசகோ தரனே.


உல்லாச நிராகுல யோக விதச்

சல்லாப விநோதனு நீயலையோ

எல்லாமற என்னை யிழந்த நலஞ்

சொல்லாய் முருகா சுரபூ பதியே.


வானோ புனல்பார் கனல்மா ருதமோ

ஞானோ தயமோ நவில்நான் மறையோ

யானோ மனமோ எனையாண் டவிடந்

தானோ பொருளா வதுசண்முகனே.


வளைபட் டகைம் மாதொடு மக்களெனுந்

தளைபட் டழியத் தகுமோ தகுமோ

கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந்

தொளைபட் டுருவத் தொடுவே லவனே.


மகமாயை களைந்திட வல்ல பிரான்

முகமாறு மொழிந்து மொழிந் திலனே

அகமாடை மடந்தை யரென் றயருஞ்

சகமாயையுள் நின்று தயங் குவதே.


திணியா னமனோ சிலைமீ துனதாள்

அணியா ரரவிந்த மரும்பு மதோ

பணியா வென வள்ளி பதம் பணியுந்

தணியா வதிமோக தயா பரனே.


கெடுவாய் மனனே கதிகேள் கரவா

திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடுவே தனைதூள் படவே

விடுவாய் விடுவாய் வினையா வையுமே.


அமரும் பதிகே ளகமா மெனுமிப்

பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா

குமரன் கிரிராச குமாரி மகன்

சமரம் பொரு தானவ நாசகனே.


மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்

தட்டூ டறவேல் சயிலத் தெறியும்

நிட்டூர நிராகுல நிர்ப் பயனே.


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்

தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்

தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடுவே லவனே.


கூகா வெனவென் கிளைகூ டியழப்

போகா வகைமெய்ப் பொருள்பே சியவா

நாகாசல வேலவ நாலு கவித்

தியாகா சுரலோக சிகா மணியே.


செம்மான் மகளைத் திருடுந் திருடன்

பெம்மான் முருகன் பிறவா னிறவான்

சும்மா இருசொல் லறவென் றலுமே

அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.


முருகன் தனிவேல் முனிநங் குருவென்

றருள்கொண் டறியா ரறியுந் தரமோ

உருவன் றருவன் றுளதன் றிலதன்

றிருளன் றொளியன் றெனநின் றதுவே.


கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்

றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்

மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்

ஐவாய் வழி செல்லு மவாவினையே.


முருகன் குமரன் குகனென்று மொழிந்

துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்

பொருபுங் கவரும் புவியும் பரவுங்

குருபுங் கவஎண் குணபஞ் சரனே.


பேராசை யெனும் பிணியிற் பிணிபட்

டோரா வினையே னுழலத் தகுமோ

வீரா முதுசூர் படவே லெறியுஞ்

சூரா சுரலோ கதுரந் தரனே.


யாமோ தியகல் வியுமெம் மறிவுந்

தாமே பெறவே லவர்தந் ததனாற்

பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீ ரினியே.


உதியா மரியா வுணரா மறவா

விதிமா லறியா விமலன் புதல்வா

அதிகா வநகா வபயா வமரா

பதிகா வலசூர பயங் கரனே.


வடிவுந் தனமும் மனமுங் குணமுங்

குடியுங் குலமுங் குடிபோ கியவா

அடியந் தமிலா அயில்வே லரசே

மிடி யென்றொரு பாவி வெளிப் படினே.


அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்

உரிதா வுபதேச முணர்த் தியவா

விரிதா ரணவிக் ரமவே ளி மையோர்

புரிதா ரகநா கபுரந் தரனே.


கருதா மறவா நெறிகா ணஎனக்

கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்

வரதா முருகா மயில்வா கனனே

விரதா சுரசூர விபாட ணனே.


காளைக் குமரே சனெனக் கருதித்

தாளைப் பணியத் தவமெய் தியவா

பாளைக் குழல் வள்ளி பதம்புணியும்

வேளைச் சுரபூபதி மேருவையே.


அடியைக் குறியா தறியா மையினால்

முடியக் கெடவோ முறையோ முறையோ

வடிவிக் ரமமேல் மகிபா குறமின்

கொடியைப் புணருங் குணபூத ரனே.


கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே

சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ

சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும்

போர்வேல புரந்தர பூப தியே.


மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்

தையோ அடியே னலையத் தகுமோ

கையோ அயிலோ கழலோ முழுதுஞ்

செய்யோய் மயிலே றியசே வகனே.


ஆதா ரமிலே னருளைப் பெறவே

நீதா னொருசற் றுநினைந் திலையே

வேதா கமஞா னவிநோ தமனோ

கீதா சுரலோ கசிகா மணியே.


மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான்

என்னே விதியின் பயனிங் கிதுவோ

பொன்னே மணியே பொருளே யருளே

மன்னே மயிலேறிய வானவனே.


ஆனா அமுதே அயில்வே லரசே

ஞானா கரனே நவிலத் தகுமோ

யானாகிய வென்னை விழுங்கி வெறுந்

தானாய் நிலைநின் றதுதற் பரமே.


இல்லே யெனுமா யையி லிட்டனைநீ

பொல்லே னறியாமை பொறுத் திலையே

மல்லே புரிபன் னிருவா குவிலென்

சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.


செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்

றொவ்வா ததென வுணர்வித் ததுதான்

அவ்வா றறிவா ரறிகின் றதலால்

எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.


பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே

வீழ்வா யென என்னை விதித்தனையே

தாழ்வா னவைசெய் தனதா முளவோ

வாழ்வா யினிநீ மயில்வா கனனே.


கலையே பதறிக் கதறிக் தலையூ

டலையே படுமா றதுவாய் விடவோ

கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்

மலையே மலை கூறிடு வாகையனே.


சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்

விந்தா டவியென்று விடப் பெறுவேன்

மந்தா கினிதந்த வரோ தயனே

கந்தா முருகா கருணா கரனே.


சிங்கார மடந்தையர் தீநெறி போய்

மங்காம லெனக்கு வரந்தருவாய்

சங்க்ராம சிகா வலசண் முகனே

கங்கா நதி பால க்ருபாகரனே.


விதிகாணு முடம்பை விடா வினையேன்

கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்

மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்

துதியா விரதா சுரபூ பதியே.


நாதா குமரா நமவென் றரனார்

ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்

வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்

பாதா குறமின் பதசே கரனே.


கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்

பரிவா ரமெனும் பதமே வலையே

புரிவாய் மனனே பொறையா மறிவால்

அரிவா யடியொடு மகந் தையையே.


ஆதாளியை யொன் றறியே னையறத்

தீதாளியை யாண் டதுசெப் புமதோ

கூதாள கிராத குலிக் கிறைவா

வேதாள கணம் புகழ்வே லவனே.


மாவேழ் சனனங் கெடமா யைவிடா

மூவேடணை யென்று முடிந் திடுமோ

கோவே குறமின் கொடிதோள் புணருந்

தேவே சிவ சங்கர தேசிகனே.


வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்

மனையோடு தியங்கி மயங் கிடவோ

சுனையோ டருவித் துறையோடு பசுந்

தினையோ டிதணோடு திரிந் தவனே.


சாகா தெனையே சரணங் களிலே

காகா நமனார் கலகஞ் செயுநாள்

வாகா முருகா மயில்வா கனனே

யோகா சிவஞா னொபதே சிகனே.


குறியைக் குறியாது குறித்தறியும்

நெறியைக் தனிவேல் நிகழ்த் திடலுஞ்

செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்

றறிவற் றறியா மையு மற்றதுவே.


தூசா மணியுந் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினதன் பருளால்

ஆசா நிகளந் துகளா யின்பின்

பேசா அநுபூதி பிறந் ததுவே.


சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்

சூடும் படிதந் ததுசொல் லுமதோ

வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்

காடும் புனமுங் கமழுங் கழலே.


கரவா கியகல்வி யுளார் கடைசென்

றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ

குரவா குமரா குலிசா யுதகுஞ்

சரவா சிவயோக தயா பரனே.


எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ

சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்

கந்தா கதிர்வே லவனே யுமையாள்

மைந்தா குமரா மறைநா யகனே.


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்

பேறா வடியேன் பெறுமா றுளதோ

சீறா வருசூர் சிதைவித் திமையோர்

கூறா வுலகங் குளிர்வித் தவனே.


அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்

பிறிவொன் றறநின் றபிரா னலையோ

செறிவொன் றறவந் திருளே சிதைய

வெறிவென்றவ ரோடுறும் வேலவனே.


தன்னந் தனிநின் றதுதா னறிய

இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ

மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்

கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே.


மதிகெட்டறவா டிமயங் கியறக்

கதிகெட்டவமே கெடவோ கடவேன்

நதிபுத்திர ஞான சுகா திபவத்

திதிபுத் திரர்வீ றடுசே வகனே.


உருவா யருவா யுளதா யிலதாய்

மருவாய் மலராய் மணியா யொளியாய்

கருவா யுயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவா யருள்வாய் குகனே.


-- அருணகிரி நாதர்

Friday, 3 March 2023

பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்

 #பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்:


ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம்-பீத வஸ்த்ராதி பூஷம்

பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்


#பொருள் :


பீதாம்பரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தவரும், பக்தர்களைக் காப்பவரும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவருமான ஸ்ரீபார்த்த சாரதியை வணங்குகிறேன்.


1.ஸ்ரீகைரவிண்யாஸுதீரே-பத்ம

நேத்ரம் பவித்ரம் புராரேஸ்ஸுமித்ரம்

சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம்-ருக்மிணீ

ஸத்யபாமா ஸமாச்லிஷ்டகாத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


கைரவிணீ எனும் குளக்கரையில் இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி, ஸ்ரீபரமேச்வரனின் நண்பர், சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணீ, சத்யபாமா இவர்களால் ஆலிங்கனம் செய்யப்பட்டவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


2. பீஷ்மாதி பானணக்ஷதாஸ்யம்-புக்தி

முக்தியேகலாபாய பக்தைருபாத்யம்

பக்தார்த்தி ஹாரிஸ்மிதாஸ்யம்-பார்த்த

வாத்ஸல்ப ஸம்ப்ராப்த தௌத்யாதி தாஸ்யம் (ஸ்ரீ)


#பொருள் :


பீஷ்மர், துரோணர் முதலிய மகான்களின் அம்புகளால் முகத்தில் வடுக்களை உடையவரும், சர்வபோகங்கள், மோஷம் ஆகியவற்றின் லாபத்திற்காகப் பக்தர்களால் உபாசிக்கத் தகுந்தவரும், பக்தர்களின் கஷ்டத்தை நீக்கும் புன்சிரிப்புடையவரும், அர்ஜுனனிடத்திலுள்ள அன்பால் தூது முதலிய வேலையைச் செய்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


3.லோகாவனாயாத்தலீலம் பூஜி

தானேக தேவேந்த்ர லோகைக பாலம்

ஸ்ரீ தேவகீ புண்யபாலம்-ஆஹ்ரு

தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்


#பொருள் :


உலகைக் காக்க பால லீலைகள் புரிந்தவரும், இந்திரன் முதலிய பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் பல தங்கப் பட்டாடைகளைக் கவர்ந்தவருமான ஸ்ரீ பார்த்த சாரதியை பூஜிக்கிறேன்.


4. பா ஹுத்வயோபேததேஹம் -பாஞ்ச

ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்

ஸ்ரீகாருடஸ்வீயவாஹம்-புத்ர

பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம் (ஸ்ரீ)


#பொருள் :


இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


5. வாமேகரே சாருசக்ரம்-வார

ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்சப்த நக்ரம்

காருண்யஸ்ம்பூர்ண நேத்ரம்-ஸ்வீய

ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யுபேதம்-ரங்க

நாதே தேவேன நித்யம் ஸமேதம்

பக்தைஸ்ஸதா ஸாதுகீதம்-ஸ்வீய

பக்தாய பார்த்தாய ஸம்ப்ரோக்த கீதம் (ஸ்ரீ)


#பொருள் :

ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


7.பக்தயாக்ருதம் ஸதோத்ரரத்னம்-தீக்ஷி

தானந்தராமேண ஸர்வார்த்த ஸித்யை

நித்யம் படேத் பக்தி சாயீ-வாஸு

தேவ ப்ரஸாதோ பவேதேவ தஸ்ய (ஸ்ரீ)


#பொருள் :


விரும்பியவை சித்திக்கும் பொருட்டு ஸ்ரீஅனந்த ராம தீக்ஷிதரால் பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பக்தியோடு படிப்பவருக்கு ஸ்ரீபார்த்தசாரதியின் அருள் கிடைக்கும்.


#ஸ்ரீ_பார்த்தசாரதி_சுவாமி_பெருமை:


மகாபாரதத்தின்படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். *


இங்கு உற்சவ மூர்த்தி தன் #கதாயுதம்_இல்லாமல் #செங்கோலுடன்_காட்சி_தருகிறார்.


🙏#ஸ்ரீ_பார்த்தசாரதி_உன்_திருவடிகளே_சரணம்".🙏


*ஓம் நமோநாராயணா*

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...