Sunday, 26 July 2020

ஸ்ரீ_மஹாலக்ஷ்மி_கவசம்

#ஸ்ரீ_மஹாலக்ஷ்மி_கவசம்

(இந்த கவசத்தை தினந்தோறும் ஜபம் செய்பவர்களுக்கு ஸகல காரியசித்தியும் ஸௌபாக்யங்களும் ஏற்படுகின்றன.)

#ஓம்

மஹாலக்ஷ்ம்யா: ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வகாமதம்

ஸர்வபாப ப்ரசமனம் ஸர்வவ்யாதி நிவாரணம்  1                               

துஷ்டம்ருத்யுப்ரசமனம் துஷ்ட்தாரித்ர்ய நாசனம்

க்ரஹபீடா ப்ரசமனம் அரிஷ்ட ப்ரவிபஞ்சனம்                                          2

புத்ரபௌத்ராதி ஜனகம் விவாஹப்ரத மிஷ்டதம்

சோராரிஹாரி ஜகதாம் அகிலேப்ஸித கல்பகம்                                      3

ஸாவதாநமநா பூத்வா ஸ்ருணு த்வம் சுகஸத்தம

அநேகஜந்மஸித்தி லப்யம் முக்திபலப்ரதம்                                                4

தநதாந்ய மஹாராஜ்ய ஸர்வ ஸௌபாக்ய தாயகம்

ஸக்ருத்படந மாத்ரேண மஹாலக்ஷ்மீ: ப்ரஸீததி                                       5

க்ஷீராப்திமத்யே பத்மாநாம் காநநே மணிமண்டபே

ரத்னஸிம்ஹாஸநே திவ்யே தந்மத்யே மணிபங்கஜே                             6

தந்மத்யே ஸுஸ்திதாம் தேவீம் மரீசிஜனஸேவிதாம்

ஸுஸ்நாதாம் புஷ்பஸுரபிம் குடிலாலக பந்தநாம்                                 7

பூர்ணேந்துபிம்பவதநாம் அர்த்தசந்த்ர லலாடிகாம்

இந்தீவரேக்ஷணாம் காமாம் ஸர்வாண்ட புவநேச்வரீம்                         8

திலப்ரஸவ ஸுஸ்நிக்த நாஸிகாலங்க்ருதாம் ஶ்ரியம்

குந்தாவதாதரஸநாம் பந்தூகாதர பல்லவாம்                                            9

தர்ப்பணாகார விமலாம் கபோலத்விதயோஜ்வலாம்

மாங்கல்யாபரணோபேதாம் கர்ணத்விதய ஸுந்தராம்                                    10

https://www.facebook.com/latha.venkteshwaran

கமலே ச ஸுபத்ராட்யே அபயம் தததீம் வரம்

ரோமராஜி லதாசாரு மக்நநாபி தலோதரீம்                                               11

பட்டவஸ்த்ர ஸமுத்பாஸாம் ஸுநிதம்பாதி லக்ஷணாம்

காஞ்சநஸ்தம்பவிப்ராஜத் வரஜாநூரு சோபிதாம்                                               12

ஸ்மரகாஹளிகாகர்வ ஹாரி ஜங்காம் ஹரிப்ரியாம்

கமடீப்ருஷ்டஸத்ருச பாதாப்ஜாம் சந்த்ரவந்நகாம்                                 13

பங்கஜோதர லாவண்யாம் ஸதலாங்க்ரி தலாச்ரயாம்

ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸர்வலக்ஷணலக்ஷிதாம்                               14

பிதாமஹ மஹாப்ரீதாம் நித்யத்ருப்தாம் ஹரிப்ரியாம்

நித்ய காருண்யலளிதாம் கஸ்தூரி லேபிதாங்கிகாம்                             15

ஸர்வமந்த்ரமயீம் லக்ஷ்மீம் ச்ருதிசாஸ்த்ர ஸ்வரூபிணீம்

பரப்ரஹ்மமயீம் தேவீம் பத்மநாப குடும்பினீம்                                         16

ஏவம் த்யாத்வா மஹால்க்ஷ்மீம் ய; படேத் கவசம் பரம்

மஹாலக்ஷ்மீ: சிர: பாது லலாடம் மம பங்கஜா                                           17

கர்ணத்வந்த்வம் ரமா பாது நயநே நளிநாலயா

நாஸிகாமவதாதம்பா வாசம் வாக்ரூபிணீ மம                                         18

தந்தாநவது ஜிஹ்வாம் ஸ்ரீ: அதரோஷ்டம் ஹரிப்ரியா

சிபுகம் பாது வரதா கண்டம் கந்தர்வஸேவிதா                                         19

வக்ஷ: குக்ஷிகரௌ பாயும் ப்ருஷ்டமவ்யாத் ரமா ஸ்வயம்

கட்யூருத்வயகம் ஜாநு ஜங்கே பாதத்வயம் சிவா                                      20

https://www.facebook.com/latha.venkteshwaran

ஸர்வாங்கமிந்த்ரியம் ப்ராணாந் பாயாதாயாஸஹாரிணீ

ஸப்ததாதூந் ஸ்வயஞ்ஜாதா ரக்தம் சுக்லம் மநோஸ்தி ச                      21

ஜ்ஞாநம் புத்தி மனோத்ஸாஹாந் ஸர்வம் மே பாது பத்மஜா

மயா க்ருதந்து யத் தத்வை தத்ஸர்வம் பாது மங்களா                            22

மமாயுரங்ககாந் லக்ஷ்மீ: பார்யாபுத்ராம்ஶ்ச புத்ரிகா:

மித்ராணி பாது ஸததம் அகிலம் மே வரப்ரதா                                          23

மமாரிநாசநார்த்தாய மாயாம்ருத்யுஞ்ஜயா பலம்

ஸர்வாபீஷ்டந்து மே தத்யாத் பாது மாம் கமலாலயா                             24

ஸஹஜாம் ஸோதரஞ்சைவ சத்ருஸம்ஹாரிணீ வதூ:

பந்துவர்க்கம் பராசக்தி: பாது மாம் ஸர்வமங்களா                                 25

#பலச்ருதி:

ய இதம் கவசம் திவ்யம் ரமாயா: ப்ரயத: படேத்

ஸர்வஸித்தி மவாப்நோதி ஸர்வரக்ஷாம் ச சாச்வதீம்                             26

தீர்க்காயுஷ்மாந் பவேந் நித்யம் ஸர்வஸௌபாக்யசோபித:

ஸர்வஞ்ஞ: ஸர்வதர்ஶீச ஸுகிதஶ்ச ஸுகோஜ்வல:                                27

ஸுபுத்ரோ கோபதி: ஸ்ரீமாந் பவிஷ்யதி ந ஸம்சய:

தத்க்ருஹே ந பவேத் ப்ரஹ்மந் தாரித்ர்ய துரிதாதிகம்                          28

நாக்நிநா தஹ்யதே கேஹம் ந சோராத்யைஶ்ச பீட்யதே

பூதப்ரேதபிஶாசாத்யா: த்ரஸ்தா தாவந்தி தூரத:                                      29

லிகித்வா ஸ்தாபிதம்யந்த்ரம் தத்ர வ்ருத்திர் பவேத் த்ருவம்

நாபம்ருத்யு மவாப்நோதி தேஹாந்தே முக்திமாந் பவேத்                    30

https://www.facebook.com/latha.venkteshwaran

ஸாயம் ப்ராத: படேத் யஸ்து மஹாதநபதிர் பவேத்

ஆயுஷ்யம் பௌஷ்டிகம் மேத்யம் பாபம் துஸ்வப்நநாசனம்                31

ப்ரஜ்ஞாகரம் பவித்ரஞ்ச துர்பிக்ஷாக்நி விநாசநம்

சிதப்ரஸாத ஜநகம் மஹாம்ருத்யு ப்ரஸாந்திதம்                                      32

மஹாரோக ஜ்வரஹரம் ப்ரஹ்மஹத்யாதி சோதகம்

மஹாஸுக ப்ரதஞ்சைவ படிதவ்யம் ஸுகார்த்திபி:                                33

தநார்த்தீ தநமாப்நோதி விவாஹார்த்தீ லபேத் வதூ:

வித்யார்த்தீ லபதே வித்யாம் புத்ரார்த்தீ குணவத்ஸுதாந்                   34

ராஜ்யார்த்தீ லபதே ராஜ்யம் ஸத்யமுக்தம் மயா சுக( இறையருள்)

மஹாலக்ஷ்ம்யா: மந்த்ரஸித்தி: ஜபாத் ஸத்ய: ப்ரஜாயதே                      35

https://www.facebook.com/latha.venkteshwaran

ஏவம் தேவ்யா: ப்ரஸாதேந சுக: கவசமாப்தவாந்

கவசாநுக்ரஹேணைவ ஸர்வாந் காமாநவாப்நுயாத்                            36

ஸர்வலக்ஷண ஸம்பந்நாம் லக்ஷ்மீம் ஸர்வேஶ்வரேஶ்வரீம்

ப்ரபத்யே ஶரணம் தேவீம் பத்ம பத்ராக்ஷ வல்லபாம்.                            37

ஓம் ஸ்ரீம் க்லீம் ஸௌம் ஶ்ரியை நம:

ஸ்ரீ மஹாலக்ஷ்மீ கவசம் ஸம்பூர்ணம்

Thanks : nytanaya nytanaya

Tuesday, 21 July 2020

திருஞானசம்பந்தருடன் சிவனடி சேர்ந்த நாயன்மார்கள்... வைகாசி மூலத்திருநாளின் நெகிழ்ச்சி பின்னணி!

மு.ஹரி காமராஜ்
பண்டிகை
ன்று (31-5-18), வைகாசி மூல நட்சத்திரத் திருநாள். பெருமைமிக்க இந்த நாளில் சிவனின் புகழ்பாடி சீலம் கொண்ட நாயன்மார்கள் நால்வரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது. ஈசனின் பிள்ளையாகவே வளர்ந்த ஞானக் குழந்தையாம் திருஞான சம்பந்தர்,  திருநீலநக்க நாயனார், இசையால் ஈசனை வசமாக்கிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்புகலூர் முருக நாயனார் ஆகிய நால்வரின் குருபூஜை தினம் இன்று. இவர்கள் நால்வருமே ஒரே நாளில்,  ஒரே ஊரில்,  ஜோதியில் கலந்தது அதிசயிக்கத்தக்க நிகழ்வு. மேலும் இந்தநாள், திருஞானசம்பந்தரின் திருமண நாளாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருஞானசம்பந்தமூர்த்தி : தேவார மூவரில் முதன்மையானவர். ஈசனின் அருளையும் அம்பிகையின் அருட்பாலையும் பெற்ற ஞானக்குழந்தை. பேசத் தொடங்கிய காலத்திலேயே ஈசனைப் பற்றி பாடத் தொடங்கியது. 'தோடுடைய செவியன்' என்று பாடத் தொடங்கி தலம்தோறும் சென்று சைவ சமயத்தின் புகழைப் பரப்பினார். செல்லும் இடமெங்கும் ஈசனின் பெயரால் பல அற்புதங்களைச் செய்த அருளாளர் ஞானசம்பந்தப் பெருமான்.
திருநீலநக்க நாயனார் : சாத்தமங்கை என்ற திருத்தலத்தில் பிறந்த இந்த நாயனார்,  ஈசனையே எல்லாமுமாக எண்ணி வாழ்ந்தவர். ஒருமுறை சாத்தமங்கை அயவந்தீஸ்வரரின் திருக்கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று செல்ல, அதைக் கண்ட நீலநக்கரின் மனைவி விரைவாகத் தனது வாயால் ஊதி அந்த சிலந்தியை விரட்டினார். இதனால் பதறிப்போன நீலநக்க நாயனார், ஈசனை எச்சில் வாயால் ஊதி அவமதித்ததாகக் கூறி அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார். அன்றிரவே நாயனாரின் கனவில் தோன்றிய ஈசன், 'நாயனாரின் மனைவி வாயால் ஊதிய இடம் தவிர மற்ற எல்லா இடங்களும் கொப்புளங்களால் வெம்மை பெற்றிருப்பதாகவும், தன்பால் கொண்டிருந்த அன்பின் காரணமாக அப்படிச் செய்த  மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறும்' கட்டளையிட்டார். இப்படி ஈசனிடம் மட்டற்ற பக்தியும் கனிவும் கொண்டவர் திருநீலநக்க நாயனார்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் : திருஎருக்கத்தம்புலியூரில் பாணர் குலத்தில் பிறந்தவர். இசையால் ஈசனை மகிழ்விக்கும் திருப்பணியை செய்துவந்தவர். மதங்கசூளாமணி எனும் தனது மனைவியுடன் இணைந்து தலம்தோறும் சென்று இறைவனை இசையால் அர்ச்சித்து வந்தார். இவரது இசைக்கு மயங்கிய ஆலவாய் அண்ணல் சொக்கநாதர், இவரை கோயிலுக்குள் அழைத்து பொற்பலகையிட்டு இசைக்க வைத்தார். 'தரையில் இருந்து இசைத்தால் அவரது இசைக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது  என்பதற்காகவே இந்தப் பொற்பலகையைக் கொடுத்தோம்' என்று அசரீரியாகத் தனது பக்தர்களுக்கும் எடுத்துச் சொல்லி, பாணரின் இசைத் திறமையை  புகழ்ந்தார் ஈசன். சீர்காழியில் திருஞானசம்பந்தரைக் கண்டு வணங்கி, அவருடைய பாடல்களை இசைத்து இறைவனை வழிபட்டு வந்தார்.
முருக நாயனார் : சோழ நாட்டின் திருப்புகலூரில் அவதரித்த நாயனார் இவர். திருப்புகலூர் வர்த்தமானீச்சுரத் திருக்கோயில் நந்தவனத்தைப் பராமரித்து, அங்கு மலர்ந்த பூக்களைக் கொய்து, மலர் மாலைகளாக்கி ஈசனுக்கு அணிவித்து சேவை செய்து வந்தார் முருகனார். கோயிலின் திருமடத்தில் தங்கி சேவை செய்து வந்த இவரைக் காண திருநாவுக்கரசர் பெருமானும், திருஞானசம்பந்தரும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும்  ஒருசேர வந்திருந்தார்கள். அவர்களைக் காண திருநீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மாரும் வந்து மடத்தில் தங்கி இருந்தார்கள். அவர்களோடு அன்பால் இணைந்த முருக நாயனார் பெரிதும் மகிழ்ந்தார்.  
இந்த நிலையில், பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணத்துக்கு சம்மதித்தார் ஞானசம்பந்தப் பெருமான். திருநல்லூர் பெருமணம் திருத்தலத்தில் ஞானசம்பந்தருக்குப் பெண் அழைப்பு நடைபெற்றது. இதில் சம்பந்தரின் உறவினர்களோடு முருக நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் கலந்துகொண்டார்கள். அப்போது தனது அவதார நோக்கம் முடிவடைந்ததை உணர்ந்துகொண்ட சம்பந்தப் பெருமான், சிவலோகத் தியாகேசர் திருக்கோயிலில் நெக்குருகி 'நமசிவாயத் திருப்பதிகம்' எனும் பாடல்களைப் பாடினார். 
``காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே'
என்று தொடங்கிய பதிகத்தின் முடிவில், பெரும் ஜோதிப் பிழம்பொன்று தோன்றியது. உடனே சம்பந்தரும் அவரோடு வந்த கூட்டத்தாரும் சிவனின் கருணையை எண்ணி வியந்து, பஞ்சாட்சரம் ஓதியவாறு ஜோதியில் கலந்தனர்.
அந்த நாள் வைகாசி மூலத்திருநாள்.  சம்பந்தருடன் இணைந்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நாயன்மார்கள் தனது குடும்பத்தாரோடு  ஒரே நாளில், ஒரே இடத்தில் ஈசனின் திருவடியை அடைந்தார்கள். அதனால் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயத்தில் திருஞானசம்பந்தரின் திருமண திருவிழா இந்த நாளில் நடைபெறுகிறது. 'இந்த திருமணத்துக்கு வந்திருந்து ஆசீர்வதித்து அம்பிகை திருநீறு அளித்தார்' என்ற ஐதீகத்தால் இன்றும் இந்த ஆலயத்தில் திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீறே அளிக்கப்படுகிறது. இயன்றவர்கள் இன்று இந்த ஆலயத்துக்குச் சென்று இந்த நான்கு நாயன்மார்களோடு சிவசக்தி தம்பதியையும் தரிசித்து வாருங்கள். மங்கள வாழ்வும், முக்திக்கான வழியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Sunday, 19 July 2020

ஆடி அமாவாசை நாளை 20.07.2020
****************************************
🌷சற்று நீண்ட பதிவு🌷

ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும்:
**********************************************
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவா சையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமா ங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்க ளுக்குத் தெரியுமா?

அது என்ன கதை?:
********************
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோ டு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது.

அவனது மகன், இளமை பருவத்தை எட்டும் போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.

இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒரு நாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோ ரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவள து உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்கு திருமணம் செய்துவைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பா வியான அந்தப் பெண் கணவன் உறங்குவதா க நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள், அரற்றினாள், தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதி யோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.

இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே அன்று அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்க ளுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களு க்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது. அக்னி தேவனே நீராடிய தினம் இது என்பது நம்பிக்கையாக உள்ளது. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்ட போது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்த நொடியே அக்னிதேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல்  சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்து கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. அதனால் அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. அக்னி நீராடிய கடலில் நீராடு வோர் பாவங்கள் தீரும் என ஆசியளித்தாள் சீதாதேவி.

இன்னும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவி போல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசை அன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களை செய்வதும் விசேஷமானது.

தீர்த்தம் அதிகமுள்ள திருத்தலம்:
***********************************
ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்ததால் இத்தலத்திற்கு சேதுக்கரை என்று பெயர் இருந்தது. பின்னாளில் ராமேஸ்வரம் என்னும் கோயில் பெயர் ஊருக்கு சூட்டப்பட்டது. சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோயிலுக்குள் உள்ளன. ராமேஸ்வரம் சென்றும் குளிக் காதது போல என்றொரு சொல்வழக்கு ஒன்றுண்டு. வேறெ ந்த தீர்த்த தலத்தில் குளிக்கா விட்டாலும், இங்கு புனிதநீராடுவது அவசியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

சீதாதேவி தன் கற்பை நிரூபிக்க அக்னியில் புகுந்தாள். அவளது கற்புக்கனல் அக்னி பகவானையே சுட்டது. ஒரு கற்புக்கரசியை சுட்ட பாவத்தை தீர்க்க, அக்னி பகவான் ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் என்று கூற படுகிறது.

இங்கு ஆடிமாதத்தில் பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடை பெறுகிறது. தீர்த்த நீராடலுக்கு பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டும் அல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தல மாக இருப்பதால் ஆடிஅமாவாசையும் இங்கு சிறப்பு.

தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணா யண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோ ரை நினைவு கூர முக்கியமான நாட்கள். முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசைய ன்று, காலையே துவங்கி விட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைக ளைப் படைக்க வேண்டும். படங்களுக்கு தீபா ராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம்.

அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள். குருஷேத்ர யுத்தத்திற்கு முன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக, சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க சென்றான் துரியோதனன். போரில் வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்… எனக் கேட்டான். தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், பூரண அமாவாசை அன்று போரை துவங்கினால் வெற்றி உறுதி என்றார். துரியோதனனும், அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது, கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து, அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்த சூரியனும், சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக வந்தனர். நாங்கள் இருவரும் ஒன்றா க சேரும் நாள்தான் அமாவாசை; ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களா, இது முறையானதா என்றனர்.

அதற்கு கிருஷ்ணன், இப்போது, நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே, இன்று தான் அமாவாசை என, சமயோசிதமாக பதில் சொல்லி விட்டார். சகாதேவன் சொன்ன படி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது. இதனால், நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது. ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல, தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை, நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் பிடித்து, சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரில் இருந்து மயிலாடு துறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து, 4 கி.மீ., தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலு ம், அங்கிருந்து சற்று தூரத்தில், சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்க ளுக்கும் சென்று வாருங்கள்.

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரி க்கிறான். கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசை யின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவே தான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே, ஆடி மாதம் சுப காரியங்கள் தவிர்க்கப்படும் மாதம். என்றாலும், ஆடி அமா வாசைக்குப் பிறகு சுப காரியங்கள் செய்யலா ம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனெ னில், சந்திரனின் இயக்கத்தை அடிப்படையா கக் கொண்டு மாதத்தைக் கணக்கிடும்போது, ஆடி அமாவாசையோடு ஆஷாட மாதம் முடிந்து அதன்பிறகு மங்களகரமான காலமாகக் கூறப் படுகிறது. அப்போது நல்ல காரியங்களைச் செய்யலாம்.

ஆடி அமாவாசை அற்புதக்காட்சி:
***********************************
அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள் புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலு ம் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. கயிலைதரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளை யிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவா சையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சி யின்போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கு ம் விதத்தில் இங்கு கோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் காணலாம்.

ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவா சைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்து வம் வாய்ந்தவை. சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை) ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.

எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அமாவா சையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்க ளால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகி ன்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்ப ரையாக வாழ வழிவகுக்கின்றன.

அதிலும் ஆடி அமாவாசை அன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனிதத்தலங்க ளிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார் வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தி ல் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவது டன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர்.

இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. எந்தவொ ரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவா சையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம் ராகு கேது தோஷம் சர்ப்ப தோ ஷம் சனி, செவ்வாய், கிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்கள், களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாக கருதபடுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்த அன்ன தானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபட வேண்டும் என் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையி ல் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குல வழிக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீயசக்தி இருந்தால்  விலகியோடும். இல்லத் தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களு டன் வாழ்வர்.

ஆடி அமாவாசை:
*******************
பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார் கட்ன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அவற்றில் உத்தராயன முதல் மாதத்தில் வரும் தை அமாவாசையும், தட்சிணாயன முதல் மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகின்றன. மகாளயபட்சம் என்ற புரட்டாசி அமாவாசையும் இந்த தட்சிணாயன காலத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளா ன கடற்கரை, ஆற்றங்கரை, குளக் கரைகளில் அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என ஞானநூல்கள் கூறுகின்றன

சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் தண்ணீரில் பிறந்த முல்லைப்பூ நிறத்திலான பத்து குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத் தும் போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால், தேய்ந்து ஒரு கலையோடு காட்சி தரும் நிலையில் சந்திரன் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமா கும். பவுர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக் கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளி இழந்த சந்திரன் அமை என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.

பித்ருக்களான முன்னோர்களில் சவுமியர், பர்ஹிஷதர், அக்னிஷ் வர்த்தர் என்ற மூன்று பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும் போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத் துவதால் அவர்களது நல்வாழ்த்துகள் கிட்டும். அதனால் ஆடி அமாவாசையன்று முன்னோர்க ளுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

ஆகவே, ஆடி அமாவாசை நாளில், பித்ருக்க ளுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பண ம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம்.


Wednesday, 8 July 2020

நமையாளும் நாயன்மார்கள் அறுபத்திமூவர் தில்லைவாழ் அந்தணர்:சித்திரை-முதல்நாள்-தில்லையில் வாழும் தீட்சதர்கள் தொகையடியார்களின் ஒன்பதுபேரில் முதலாவதாக வணங்கப்ப�

நமையாளும் நாயன்மார்கள் அறுபத்திமூவர்
தில்லைவாழ் அந்தணர்:சித்திரை-முதல்நாள்-தில்லையில் வாழும் தீட்சதர்கள். தொகையடியார்களின் ஒன்பதுபேரில் முதலாவதாக வணங்கப்படுபவர்கள்.
1. திருநீலகண்ட நாயனார்:தை-விசாகம். குயவர்-சோழநாடு, சிதம்பரம். அயலறியா வண்ணிம் மனைவியின் சபதத்திற்கு உடன்படடு அவளைத் தீண்டாது, இளமையிலும் முதுமையிலும் இல்லறம் நடத்தி இறைவன் திருவருளால் இளமை பெற்றார்.
2. இயற்பகை நாயனார்:மார்கழி-உத்திரம். வணிகர்-சோழநாடு- காவிரிப்பூம்பட்டினம். சிவனடியார்க்குத் தம் மனைவியிடமே தானமாகக் கொடுத்தவர்.
3. இளையான் குடிமாற நாயனார்:ஆவணி-பூசம். வேளாளர் இளையான்குடி. விதைத்த நெல் எடுத்து அலங்கெரித்து அடியார்க்கு அமுது அளித்தல்.
4. மெய்ப்பொருள் நாயனார்:கார்த்திகை-உத்திரம் குறுநில மன்னர்-நடுநாடு, திருக்கோவலூர். வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் சிவவேடதாரியைக் காப்பாற்றித் தம் உயிரைவிட்டவர்.
5. விறன்மீண்ட நாயனார்:சித்திரை-திருவாதிரை. வேளாளர்-மலைநாடு, செங்குன்றூர். சுந்திர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக் காரணமாய் இருந்தவர்.
6. அமர்நீதி நாயனார்:ஆனி-பூரம். வணிகர்-சோழநாடு, பழையாறை, கோவணத்திற்கு நிறையாக மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்மையும் சிவனடியார்க்குத் தந்தவர்.
7. எறிபத்த நாயனார்-மாசி-அஸ்தம். சோழநாடு, கருவூர். பூக்குடலையைச் சிவனடியாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறவைத்த பட்டத்து யானையை வெட்டியவர்.
8. ஏனாதினாத நாயனார்-புரட்டாசி-உத்திராடம். சான்றோர்-சோழநாடு, எயினனூர். போர் புரியும் பகைவன் நெற்றியில் திருநீற்றைக் கண்டதும் அவனார் கொல்லப்படும்படி நடந்து கொண்வர்.
9. கண்ணப்ப நாயனார்:தை-மிருகசீரிடம். வேடர்-தொண்டை நாடு-உடுப்பூர். ஆறே நாளில் அளவுகடந்த பக்திசெய்து காளத்தியப்பருக்குத் தம் கண்ணை அப்பியவர்.
10. குங்கிலியக் கலய நாயனார்:ஆவணி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருக்கடவூர். மனைவியின் மாங்கல்யத்தை விற்றும் குங்கிலியம் வாங்கியவர். சாய்ந்த லிங்கத்தைக் கழுத்தில் பூமாலை கொண்டு நிமிர்த்தியவர்.
11. மானக்கஞ்சாற நாயனார்:மார்கழி-சுவாதி, வேளாளர்-கஞ்சாறூர்-திருமணம் தொடங்கும்போது திருமணப் பெண்ணாகிய தமது மகளின் தலைமயிரை அறுத்துச் சிவனடியாருக்குத் தந்தவர்.
12. அரிவட்டாய நாயனார்-தை-திருவாதிரை. வேளாளர்-சோழநாடு, கணமங்கலம். சிவ நிவேதனத்துக்குரிய பொருள் கீழே சிந்தியதற்காகத் தமது கழுத்தை அரித்து கொண்டவர்.
13. ஆனாய நாயனார்:கார்த்திகை-அஸ்தம். இடையர்-மழநாடு, மங்களவூர், பசு மேய்க்கும் போது, ஜந்தெழுத்தைப் புல்லாங்குழலில் அமைத்துவாசித்தவர்.
14. மூர்த்திநாயனார்-ஆடி-கிருத்திகை. வணிகர்-பாண்டியநாடு, மதுரை. சந்தனம் தருகின்ற திருப்பணியில் முட்டுப்பாடு நேரவே, முழங்கையை அரைத்தவர். திருநீறு, உத்திராட்சம், சடைமுடி ஆகிய மூம்மையால் உலகாண்டவர்.
15. முருக நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருப்புகலூர். மலர்த்தொண்டு செய்து திருஞான சம்பந்தர் திருமணத்தில் முக்தி பெற்றவர்.
16. உருத்திர பசுபதி நாயனார்:புரட்டாசி-அஸ்வினி. அந்தனர்-சோழநாடு. திருத்தலையூர். இரவும் பகலும் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஸ்ரீ ருத்ர மந்த்ரம் ஜபித்தவர்.
17.திருநாளைப்போவார் நாயனார்: புரட்டாசி-ரோகினி (நந்தனார்) புளையர்- சோழநாடு. ஆத்தனூர். தில்லை நடராஜப் பெருமானைப் காணவிரும்பித் தீப் புகுந்து முனிவராய் எழுந்து சிற்றம்பலவன் திருமுன்பு மறைந்தவர்.
18. திருக்குறிப்புதொண்ட நாயனார்:சித்திரை-சுவாதி. ஏகாலீயர்-தொண்டைநாடு காஞ்சீபுரம். சிவனடியார்க்கு வாக்களித்தபடி மழையின் காரணமாக உடையை துவைத்து உலர்த்தித்தர முடியாமல் போனதால் தமது தலையை கல்லின்மீது மோதிக் கொண்டவர்
19. சண்டேஸ்வர நாயனார்:தை-உத்திரம். அந்தணர்-சோழநாடு, திருச்சேயஞ்ஞலூர் அபிஷேகப்பாற்குடத்தை இடரியை தந்தையின் காலை வெட்டித் தொண்டர்க்கு தலைவனாக (சண்ணிப் சப்பதம்) இருக்கும் அருள் பெற்றவர்.
20. திருநாவுக்கரச நாயனார்:சித்திரை-சதயம், வேளாளர்-நடுநாடு, திருவாமூர், ஐந்தெழுத்து ஒதி கருங் கல்லின்மேல் கடலில் மிதந்து கரையேரிப் பல தேவாரப்பாடல்கள் பாடி கைத்தொண்டு செய்து முக்தி பெற்றவர்.
21. குளச்சிறை நாயனார்:ஆவணி-அனுஷம், பாண்டிய நாடு-மனமேற்குடி, அரசன் சமணனாய் இருந்தபோதும் தாம் சிவனடியாரை வழிபட்டார். திருஞானசம்பந்தரை அழைத்துவந்து அரசனையும் நாட்டினையும் சைவ மாக்கியவர்.
22. பெருமிழலைக் குரும்ப நாயனார்:ஆடி-சித்திரை, பெருமிழலையூர் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளை வழிபட்டு, அவர் கயிலை செல்வதையறிந்து யோகத்தால் தானும் கயிலை சென்றவர்.
23. காரைக்கால் அம்மையார்:பங்குனி-ஸ்வாதி (பேயார்) , வணிகர்-சோழநாடு. காரைக்கால், சிவபெருமானை வேண்டி மாம்பழம் பெற்றவர். பேய் வடிவம் பெற்றவர். ஆலங்காட்டில் ஈசனாடலையும் பெற்றவர்.
24. அப்புதியடிகள் நாயனார்:தை-சதயம். அந்தணர்-சோழநாடு. திங்களூர். பிள்ளை இறந்ததையும் மறைத்து திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு அமுது அளித்தவர்.
25. திருநீலநக்க நாயனார். வைகாசி-மூலம்:அந்தணர்-சோழநாடு. சாத்தமங்கை. அன்போடு சிவலிங்கத்தின் மீதிருந்த சிலந்தியை ஊதியதால் எச்சில் பட்டதென்று மனைவியை விட்டுச்சென்றவர். பாணர்க்கு வேதிகையில் இடம் தந்தவர். திருஞானசம்பந்தர் திருமணத்தை நடத்தி முக்தி பெற்றவர்.
26. நமிநந்தி அடிகள் நாயனார்:வைகாசி-பூசம். அந்தணர்-சோழநாடு. ஏமப்பேறூர். தண்ணீரால் விளக்கெரித்தவர். திருவாரூர்ப் பிறந்தாரை எல்லாம் சிவசாரூப்பியராகக் கண்டவர்.
27. திருஞானசம்பந்த நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு. சீகாழி. உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றவர். தேவாரம்பாடி எலும்பைப் பொன்னாக்கியவர். பல அற்புதங்கள் செய்த இவர் தமது திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் முக்தி தந்தவர்.
28. ஏயகோன் கலிக்காம நாயனார்:ஆனி-ரேவதி. வேளாளர் சோழநாடு திருப்பெரும் மங்களம். சிவபெருமானைப் தூதராகவிடுத்த வண்றொண்டரை இகழ்ந்து பின்பு திருவருள் விளையாட்டால் அவருடைய நண்பரானவர்.
29, திருமூல நாயனார். ஐப்பசி-அசுவினி:இடையர்-சோழநாடு, சாத்தனூர். மூலன் உடலில் தாம் புகுந்து, மூவாயிரம் ஆண்டிருந்து, திருமந்திரம் அருளிச் செய்தவர்.
30. தண்டியடிகள் நாயனார்-பங்குனி-சதயம். சோழநாடு-திருவாரூர். பிரவிக் குருடாக இருந்தும் திருவாரூர் குளத்தை, கரையில் குச்சி கட்டி, இடையே கயிறு கட்டி திருக்குளப்பணி செய்து குருடு நீங்கிச் சமணரை வென்றவர்.
31. மூர்க்க நாயனார்-கார்த்திகை, மூலம். வேளாளர், தொண்டைநாடு, திருவேர்க்காடு. சூதாட்டத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்தவர்.
32. சோமாச்சிமாற நாயனார்-வைகாசி-ஆயில்யம். அந்தணர். சோழநாடு. திரு அம்பர். வேத வேள்வி செய்து, சாதிமத பேதமின்றி, பஞ்சாட்சரவிதிப்படி அடியயார்களுக்கு அன்னதானம் செய்தவர்.
33. சாக்கிய நாயனார்:மார்கழி-பூராடம். வேளாளர்-திருச்சங்கமங்கை. சமணக் கோலமாயினும் மனதார சிவபூசை செய்தவர். மனதில் மலராக எண்ணி இறைவ மீது இட்டகற்களை இறைவன் மீது இட்டகற்களை இறைவன் மலராக ஏற்று அருள் பெற்றவர்.
34. சிறப்புலி நாயனார்-கார்த்திகை-பூராடம். அந்தணர்-சோழநாடு. திரு ஆக்கூர். குல ஆசாரவிதிப்படி, வேதம் ஒதியும், ஒதுவித்தும், சிவனடியைச் சிந்தித்தும் அடியார்கட்கு, அமுதும் பொருளும் தந்தவர்.
35. சிருத்தொண்ட நாயனார்-சித்திரை-பரணி. மாமாத்திரப் பிராமணர்-சோழநாடு, திருச்செங்காட்டாங்குடி வாதாவியைப் போரில் வென்றவர். சிவனடியார்க்குத் தமது ஒரே பிள்ளையைக் கறியாகச் சமைத்து வைத்தவர்.
36. சோமான் பெருமாள் நாயனார்-ஆடி, சுவாதி (கழறிற்றறிவார் நாயனார்) அரசர், மலைநாடு, கொடுங்கோளூர். நடராஜர் பாதச் சிலம்பொலி கேட்கக் காலம் தகுந்தமையால் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகள் தோழமை பெற்றவர். சிவ பெருமானுடைய திருமுகப் பாசுரம் பெற்றவர். கயிலை சென்று ஞானவுலா பாடியவர்.
37. கணநாத நாயனார்-ஆடி-திருவாதிரை. அந்தணர், சோழநாடு, சீர்காழி. சிவனடியாரைப் போற்றுவதோடு, சிவநெறிப் பணிகள் செய்பவருக்கு பயிற்சி அளித்தவர். திருஞான சம்பந்தரை வழிபட்டவர்.
38. கூற்றுவ நாயனார்-ஆடி-திருவாதிரை. குறுநில மன்னர், திருக்களத்தை. தில்லைவாழ் அந்தணர் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லையம்பலவன் திருவடிகளையே முடியாகச் சூடப்பெற்றவர்.
39. புகழ்ச்சோழ நாயனார்:ஆடி-கிருத்திகை. அரசர் சோழநாடு. உறையூர். பகைவனது அறுபட்ட தலையில் சிவ சின்னமாகிய சடையிருப்பதைக் கண்டு அஞ்சி உயிர்விட்டவர்.
40. நரைசிங்க முனையரைய நாயனார்-புரட்டாசி-சதயம். குருநில மன்னர்-நடுநாடு. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர். திருவாதிரை தோறும் சிவனடியார்களுக்கு அன்னமிடுவதுடன் 100 பொற்காசுகள் வழங்குவார். சிவவேடம் பூண்ட காமக்குறி மலர்ந்த தூதர்களையும் வணங்கியவர்.
41. அதிபந்த நாயனார்-ஆவணி-ஆயில்யம். நுளையர் (மீன் பிடிப்பவர்) சோழநாடு-நாகப்பட்டினம். நவரத்தினம் இழைத்த பொன்மீனைத்தாமே வைத்துக் கொள்ளாமல் சிவார்பணம் செய்தவர்.
42. கலிக்கம்ப நாயனார்-தை-ரேவதி. வணிகர்-நடுநாடு. பெண்ணாடகம். தமது பழைய வேலையாள் சிவனடியாராக வந்தபோது, தாம் அவனை வழிபட்டு, வழிபடாத தமது மனைவி கையை வெட்டியவர்.
43. கலிய நாயனார்:ஆடி-கேட்டை. செக்கர்- (எண்ணெய் வியாபாரி) தொண்டைநாடு-திருவெற்றியூர். திருவிளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாததால் தமது இரத்தத்தைக் கொண்டு எரிக்க முயன்றவர்
44. சக்தி நாயனார்-ஐப்பசி-பூசம். வேளாளர்-சோழநாடு. வரிஞ்சியூர். சிவனடியாளர்களைக் குறை கூறுபவர்களின் நாக்கை அறுத்தவர்.
45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்-ஐப்பசி-மூலம். குறுநில மன்னர்- தொண்டைநாடு. காஞ்சிபுரம். பதவியை வெறுத்துத் தலையாத்திரை செய்தவர். க்ஷேத்திர வெண்பாவால் நிலையாமையைக் கூறியவர்.
46. கணம்புல்ல நாயனார்-கார்த்திகை-கிருத்திகை. இருக்குவேளூர். புல்விற்று நெய்கொண்டு திருவிளக்கெரித்தவர். நெய்யின்மையால் திருப்புலீஸ்வர சிவன் சன்னதியில் தமது தலைமயிரை விளக்காக எரித்தவர்.
47. காரிநாயனார்-மாசி-பூராடம்.. சோழநாடு. திருக்கடவூர். கோவைப்பாடி பொருள்பெற்று, ஆலயப்பணி செய்தவர்.
48. நின்றசீர் நெடுமாற நாயனார்-ஐப்பசி-பரணி. அரசர்-பான்டிய நாடு. மதுரை. திருஞானசம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீக்கியவர். அவர் திருவாக்கால், கூன் நிமிரப்பெற்று சைவரானவர்.
49. வாயிலார் நாயனார்-மார்கழி-ரேவதி. வேளாளர், தொண்டைநாடு-மயிலாப்பூர். மானசீகமான ஞானபூஜை செய்தவர்.
50. முனையடுவார் நாயனார்-பங்குனி-பூசம். வேளாளர், சோழநாடு, திருநீடூர். கூலிக்குப் போர் செய்து அக்கூலிகொண்டு சிவனடியாரை வழிபட்டவர்.
51. கழற்சிங்க நாயனார்-வைகாசி-பரணி. குறுகிய மன்னர்-சிவபூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் தமது மனைவியின் மூக்கை ஒரு சிவனடியார் அறுத்த தண்டனை போதாது என்று, அவள் கைகளையும் வெட்டியவர்.
52. இடங்கழி நாயனார்-ஐப்பசி-கார்த்திகை. அரசன்-கோனாடு, கொடும்பாளூர். அடியார் வழிபாடு செய்ய நெய் நெல் திருடினவர்க்கு மேலும் பொருளும் நெல்லும் தந்தவர்.
53. செருத்துணை நாயனார்-ஆவணி-பூசம். வேளாளர், சோழநாடு, தஞ்சாவூர். கழற்சிங்க நாயனாருடைய மனைவி, பூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் அவர் மூக்கை அரித்தவர்.
54. புகழ்த்துணை நாயனார்-ஆவணி-ஆயில்யம். ஆதிசைவர். செருவிலிபுத்தூர். சிவபூஜைக்கு உதவியாக அரிசிற்கரைப்புத்தூர் சிவபெருமானால் பஞ்சகாலத்தில் காசு அளிக்கப்பெற்று தொண்டு செய்தவர்.
55. கோட்புலி நாயனார்-ஆடி -கேட்டை. வேளாளர். சோழநாடு. திருநாட்டியத்தான்குடி. சிங்கடி, வனப்பகை என்ற இரண்டு புதல்வியரைத் சுந்தர மூர்த்தி ஸ்வாமிக்கு அரிப்பணம் செய்தவர். சிவபூஜைக்குரிய நெல்லையுன்ட சுற்றத்தார் அனைவரையும், குழந்தை உட்பட அனைவரையும் கொன்றவர்.
56. பூசலார் நாயனார்-ஐப்பசி-அனுஷம். அந்தணர். தொண்டைநாடு. திருநின்றவூர். மனத்தினாலேயே கோயில்கட்டிச் சிவ வழிபாடு செய்தவர்.
57. மங்கையர்க்கரசியார்-சித்திரை-ரோகினி. (மாணியார்) அரசியார், பாண்டியநாடு, திருஞானசம்பந்தரை வரவழைத்துத் தமது கணவரையும், பாண்டிய நாட்டையும் சைவமாக்கியவர்.
58. நேச நாயனார்-பங்குனி-ரோகிணி. சாலியர்-கம்பீரநகரம் சிவனடியார்களுக்கு உடையும் கோவணமும் செய்து கொடுக்கும் பணியைச் செய்தவர்.
59. கோச்செங்கட்சோழ நாயனார்:மாசி-சதயம். அரசர் சோழநாடு. எழுபது சிவாலயங்கள் கட்டியவர். முப்பிறவியில் சிலந்தியாகப் பூஜை செய்தவர்.
60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்-வைகாசி-மூலம். பாணர், நடுநாடு- திருஎருக்கத்தம்புலியூர், திருஞானசம்பந்தருடன் சென்று, யாழ்த்தொண்டு புரிந்தவர்.
61. சடைய நாயனார்-மார்கழி-திருவாதிரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர். சுந்திரமூர்த்தி சுவாமிகளைப் பிள்ளைகளாகப் பெற்றவர். அவருக்குச் சடங்கவி சிவாச்சாரியார் புதல்வியைத் திருமணம் செய்விக்க முயற்சித்தவர்.
62. இசைஞானியர்-சித்திரை-சித்திரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர், சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளைப் பிள்ளையாகப் பெற்று வளர்த்த பெண்மணியார்.
63. சுந்தரமூர்த்தி நாயனார்-ஆடி-சுவாதி. ஆதிசைவர், நடுநாடு-திருநாவலூர். திருத்தொண்டர் தொகைபாடியவர். இறைவனைத் தூது அனுப்பியவர். முதலையுண்ட மகனா வருவித்தவர்.


 
 

#ஸ்ரீ_வாராஹி_அஷ்டோத்திர_சத_நாமாவளி

   வாராஹி அம்மனுக்கு உகந்த அஷ்டோத்திர சத நாமாவளி பார்க்கலாம். இந்த நாமாவளியை தினமும் அல்லது வெள்ளிக்
கிழமைகளில் சொல்லி வந்தால் பயம் விலகும்.

ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி
தேவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு
வல்லபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:
ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர
ரதாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:
ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...