Sunday, 16 December 2018

திருப்பாவை_விளக்கம்

#திருப்பாவை_விளக்கம்

#முன்னுரை

மார்கழி மாதம் என்றாலே, இந்துக்களுக்கு உடனே நினைவில் வருவது திருப்பாவைதான். நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் உள்ள அனைத்துப் பாசுரங்களிலும் மிகவும் அதிகமாக பிரபலம் ஆனது திருப்பாவை என்றால் மிகையாகாது. நாச்சியார் திருமொழி என்ற பெயரில் ஆண்டாள் அருளிய பாசுரங்கள் தொகுக்கப்பட்டு இருப்பதை அறியாத பலரும் திருப்பாவையின் ஆசிரியர் யார் என்று கேட்டால், உடனே ஆண்டாள் என்று பதில் சொல்லும் அளவுக்கு திருப்பாவை பிரபலம். சைவம், வைணவம் ஆகிய இரண்டு பிரிவினரும் அனுபவிக்கும் பாடல்கள் நிறைந்த தொகுப்பு திருப்பாவை.
ஆண்டாள் அருளியுள்ள #முப்பது_பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பினை பாடுவதும், ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு நாள் என்று பாடலின் விரிவான விளக்கங்களை சிந்தித்து மார்கழி மாதத்தில் களிப்பதும், பல பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வரும் நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இன்று தொலைக்காட்சி பெட்டிகள் நமது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாக மாறிய பின்னர், ஏறக்குறைய எல்லா தமிழ் சேனல்களும், மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை ஒளிபரப்புகின்றன.

இந்த முப்பது பாடல்களையும் படிக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. கண்ணபிரானையே தனது கணவனாக வரித்து அவனுடன் சேரும் நாள் எப்போதோ என்ற ஏக்கத்தில் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களை பாடிய ஆண்டாள், ஒரு நாள் திருவரங்கம் கோயிலில் பெருமாளுடன் கலந்து விடுகின்றார். தன்னை ஆய்ப்பாடி பெண்களில் ஒருத்தியாக நினைத்துக் கொண்டு, மற்ற ஆயர்பாடி பெண்களுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்பதாக கற்பனை செய்யும் பாடல்கள் கொண்ட இனிய பாசுரம், திருப்பாவை ஆகும்.

நன்றி  :  தினமணி.

திருப்பாவை பாசுரம்

☘#ஸ்ரீ_ஆண்டாள்_அருளிய_திருப்பாவை☘

☘#திருப்பாவை_பாசுரம்
☘: 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

☘#பொருள்☘: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான
நன்றி தினமலர்  முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

☘#விளக்கம்☘: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

☘#நன்றி  :  #தினமலர்☘.

☘#தொகுப்பு  :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன் .☘


#ஸ்ரீ_ஆண்டாள்_அருளிய_திருப்பாவை_பாசுரம்_தொடரும்............☘

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...