Saturday, 18 March 2023

கந்தர் அனுபூதி

 #கந்தர் அனுபூதி

காப்பு


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்

தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே

பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.


நூல்

ஆடும் பணிவே லணிசே வலெனப்

பாடும் பணியே பணியா யருள்வாய்

தேடுங் கயமா முகனைச் செருவிற்

சாடுந் தனியா னைசகோ தரனே.


உல்லாச நிராகுல யோக விதச்

சல்லாப விநோதனு நீயலையோ

எல்லாமற என்னை யிழந்த நலஞ்

சொல்லாய் முருகா சுரபூ பதியே.


வானோ புனல்பார் கனல்மா ருதமோ

ஞானோ தயமோ நவில்நான் மறையோ

யானோ மனமோ எனையாண் டவிடந்

தானோ பொருளா வதுசண்முகனே.


வளைபட் டகைம் மாதொடு மக்களெனுந்

தளைபட் டழியத் தகுமோ தகுமோ

கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந்

தொளைபட் டுருவத் தொடுவே லவனே.


மகமாயை களைந்திட வல்ல பிரான்

முகமாறு மொழிந்து மொழிந் திலனே

அகமாடை மடந்தை யரென் றயருஞ்

சகமாயையுள் நின்று தயங் குவதே.


திணியா னமனோ சிலைமீ துனதாள்

அணியா ரரவிந்த மரும்பு மதோ

பணியா வென வள்ளி பதம் பணியுந்

தணியா வதிமோக தயா பரனே.


கெடுவாய் மனனே கதிகேள் கரவா

திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடுவே தனைதூள் படவே

விடுவாய் விடுவாய் வினையா வையுமே.


அமரும் பதிகே ளகமா மெனுமிப்

பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா

குமரன் கிரிராச குமாரி மகன்

சமரம் பொரு தானவ நாசகனே.


மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்

தட்டூ டறவேல் சயிலத் தெறியும்

நிட்டூர நிராகுல நிர்ப் பயனே.


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்

தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்

தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடுவே லவனே.


கூகா வெனவென் கிளைகூ டியழப்

போகா வகைமெய்ப் பொருள்பே சியவா

நாகாசல வேலவ நாலு கவித்

தியாகா சுரலோக சிகா மணியே.


செம்மான் மகளைத் திருடுந் திருடன்

பெம்மான் முருகன் பிறவா னிறவான்

சும்மா இருசொல் லறவென் றலுமே

அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.


முருகன் தனிவேல் முனிநங் குருவென்

றருள்கொண் டறியா ரறியுந் தரமோ

உருவன் றருவன் றுளதன் றிலதன்

றிருளன் றொளியன் றெனநின் றதுவே.


கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்

றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்

மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்

ஐவாய் வழி செல்லு மவாவினையே.


முருகன் குமரன் குகனென்று மொழிந்

துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்

பொருபுங் கவரும் புவியும் பரவுங்

குருபுங் கவஎண் குணபஞ் சரனே.


பேராசை யெனும் பிணியிற் பிணிபட்

டோரா வினையே னுழலத் தகுமோ

வீரா முதுசூர் படவே லெறியுஞ்

சூரா சுரலோ கதுரந் தரனே.


யாமோ தியகல் வியுமெம் மறிவுந்

தாமே பெறவே லவர்தந் ததனாற்

பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீ ரினியே.


உதியா மரியா வுணரா மறவா

விதிமா லறியா விமலன் புதல்வா

அதிகா வநகா வபயா வமரா

பதிகா வலசூர பயங் கரனே.


வடிவுந் தனமும் மனமுங் குணமுங்

குடியுங் குலமுங் குடிபோ கியவா

அடியந் தமிலா அயில்வே லரசே

மிடி யென்றொரு பாவி வெளிப் படினே.


அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்

உரிதா வுபதேச முணர்த் தியவா

விரிதா ரணவிக் ரமவே ளி மையோர்

புரிதா ரகநா கபுரந் தரனே.


கருதா மறவா நெறிகா ணஎனக்

கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்

வரதா முருகா மயில்வா கனனே

விரதா சுரசூர விபாட ணனே.


காளைக் குமரே சனெனக் கருதித்

தாளைப் பணியத் தவமெய் தியவா

பாளைக் குழல் வள்ளி பதம்புணியும்

வேளைச் சுரபூபதி மேருவையே.


அடியைக் குறியா தறியா மையினால்

முடியக் கெடவோ முறையோ முறையோ

வடிவிக் ரமமேல் மகிபா குறமின்

கொடியைப் புணருங் குணபூத ரனே.


கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே

சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ

சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும்

போர்வேல புரந்தர பூப தியே.


மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்

தையோ அடியே னலையத் தகுமோ

கையோ அயிலோ கழலோ முழுதுஞ்

செய்யோய் மயிலே றியசே வகனே.


ஆதா ரமிலே னருளைப் பெறவே

நீதா னொருசற் றுநினைந் திலையே

வேதா கமஞா னவிநோ தமனோ

கீதா சுரலோ கசிகா மணியே.


மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான்

என்னே விதியின் பயனிங் கிதுவோ

பொன்னே மணியே பொருளே யருளே

மன்னே மயிலேறிய வானவனே.


ஆனா அமுதே அயில்வே லரசே

ஞானா கரனே நவிலத் தகுமோ

யானாகிய வென்னை விழுங்கி வெறுந்

தானாய் நிலைநின் றதுதற் பரமே.


இல்லே யெனுமா யையி லிட்டனைநீ

பொல்லே னறியாமை பொறுத் திலையே

மல்லே புரிபன் னிருவா குவிலென்

சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.


செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்

றொவ்வா ததென வுணர்வித் ததுதான்

அவ்வா றறிவா ரறிகின் றதலால்

எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.


பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே

வீழ்வா யென என்னை விதித்தனையே

தாழ்வா னவைசெய் தனதா முளவோ

வாழ்வா யினிநீ மயில்வா கனனே.


கலையே பதறிக் கதறிக் தலையூ

டலையே படுமா றதுவாய் விடவோ

கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்

மலையே மலை கூறிடு வாகையனே.


சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்

விந்தா டவியென்று விடப் பெறுவேன்

மந்தா கினிதந்த வரோ தயனே

கந்தா முருகா கருணா கரனே.


சிங்கார மடந்தையர் தீநெறி போய்

மங்காம லெனக்கு வரந்தருவாய்

சங்க்ராம சிகா வலசண் முகனே

கங்கா நதி பால க்ருபாகரனே.


விதிகாணு முடம்பை விடா வினையேன்

கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்

மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்

துதியா விரதா சுரபூ பதியே.


நாதா குமரா நமவென் றரனார்

ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்

வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்

பாதா குறமின் பதசே கரனே.


கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்

பரிவா ரமெனும் பதமே வலையே

புரிவாய் மனனே பொறையா மறிவால்

அரிவா யடியொடு மகந் தையையே.


ஆதாளியை யொன் றறியே னையறத்

தீதாளியை யாண் டதுசெப் புமதோ

கூதாள கிராத குலிக் கிறைவா

வேதாள கணம் புகழ்வே லவனே.


மாவேழ் சனனங் கெடமா யைவிடா

மூவேடணை யென்று முடிந் திடுமோ

கோவே குறமின் கொடிதோள் புணருந்

தேவே சிவ சங்கர தேசிகனே.


வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்

மனையோடு தியங்கி மயங் கிடவோ

சுனையோ டருவித் துறையோடு பசுந்

தினையோ டிதணோடு திரிந் தவனே.


சாகா தெனையே சரணங் களிலே

காகா நமனார் கலகஞ் செயுநாள்

வாகா முருகா மயில்வா கனனே

யோகா சிவஞா னொபதே சிகனே.


குறியைக் குறியாது குறித்தறியும்

நெறியைக் தனிவேல் நிகழ்த் திடலுஞ்

செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்

றறிவற் றறியா மையு மற்றதுவே.


தூசா மணியுந் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினதன் பருளால்

ஆசா நிகளந் துகளா யின்பின்

பேசா அநுபூதி பிறந் ததுவே.


சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்

சூடும் படிதந் ததுசொல் லுமதோ

வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்

காடும் புனமுங் கமழுங் கழலே.


கரவா கியகல்வி யுளார் கடைசென்

றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ

குரவா குமரா குலிசா யுதகுஞ்

சரவா சிவயோக தயா பரனே.


எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ

சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்

கந்தா கதிர்வே லவனே யுமையாள்

மைந்தா குமரா மறைநா யகனே.


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்

பேறா வடியேன் பெறுமா றுளதோ

சீறா வருசூர் சிதைவித் திமையோர்

கூறா வுலகங் குளிர்வித் தவனே.


அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்

பிறிவொன் றறநின் றபிரா னலையோ

செறிவொன் றறவந் திருளே சிதைய

வெறிவென்றவ ரோடுறும் வேலவனே.


தன்னந் தனிநின் றதுதா னறிய

இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ

மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்

கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே.


மதிகெட்டறவா டிமயங் கியறக்

கதிகெட்டவமே கெடவோ கடவேன்

நதிபுத்திர ஞான சுகா திபவத்

திதிபுத் திரர்வீ றடுசே வகனே.


உருவா யருவா யுளதா யிலதாய்

மருவாய் மலராய் மணியா யொளியாய்

கருவா யுயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவா யருள்வாய் குகனே.


-- அருணகிரி நாதர்

Friday, 3 March 2023

பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்

 #பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்:


ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம்-பீத வஸ்த்ராதி பூஷம்

பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்


#பொருள் :


பீதாம்பரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தவரும், பக்தர்களைக் காப்பவரும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவருமான ஸ்ரீபார்த்த சாரதியை வணங்குகிறேன்.


1.ஸ்ரீகைரவிண்யாஸுதீரே-பத்ம

நேத்ரம் பவித்ரம் புராரேஸ்ஸுமித்ரம்

சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம்-ருக்மிணீ

ஸத்யபாமா ஸமாச்லிஷ்டகாத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


கைரவிணீ எனும் குளக்கரையில் இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி, ஸ்ரீபரமேச்வரனின் நண்பர், சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணீ, சத்யபாமா இவர்களால் ஆலிங்கனம் செய்யப்பட்டவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


2. பீஷ்மாதி பானணக்ஷதாஸ்யம்-புக்தி

முக்தியேகலாபாய பக்தைருபாத்யம்

பக்தார்த்தி ஹாரிஸ்மிதாஸ்யம்-பார்த்த

வாத்ஸல்ப ஸம்ப்ராப்த தௌத்யாதி தாஸ்யம் (ஸ்ரீ)


#பொருள் :


பீஷ்மர், துரோணர் முதலிய மகான்களின் அம்புகளால் முகத்தில் வடுக்களை உடையவரும், சர்வபோகங்கள், மோஷம் ஆகியவற்றின் லாபத்திற்காகப் பக்தர்களால் உபாசிக்கத் தகுந்தவரும், பக்தர்களின் கஷ்டத்தை நீக்கும் புன்சிரிப்புடையவரும், அர்ஜுனனிடத்திலுள்ள அன்பால் தூது முதலிய வேலையைச் செய்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


3.லோகாவனாயாத்தலீலம் பூஜி

தானேக தேவேந்த்ர லோகைக பாலம்

ஸ்ரீ தேவகீ புண்யபாலம்-ஆஹ்ரு

தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்


#பொருள் :


உலகைக் காக்க பால லீலைகள் புரிந்தவரும், இந்திரன் முதலிய பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் பல தங்கப் பட்டாடைகளைக் கவர்ந்தவருமான ஸ்ரீ பார்த்த சாரதியை பூஜிக்கிறேன்.


4. பா ஹுத்வயோபேததேஹம் -பாஞ்ச

ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்

ஸ்ரீகாருடஸ்வீயவாஹம்-புத்ர

பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம் (ஸ்ரீ)


#பொருள் :


இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


5. வாமேகரே சாருசக்ரம்-வார

ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்சப்த நக்ரம்

காருண்யஸ்ம்பூர்ண நேத்ரம்-ஸ்வீய

ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யுபேதம்-ரங்க

நாதே தேவேன நித்யம் ஸமேதம்

பக்தைஸ்ஸதா ஸாதுகீதம்-ஸ்வீய

பக்தாய பார்த்தாய ஸம்ப்ரோக்த கீதம் (ஸ்ரீ)


#பொருள் :

ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


7.பக்தயாக்ருதம் ஸதோத்ரரத்னம்-தீக்ஷி

தானந்தராமேண ஸர்வார்த்த ஸித்யை

நித்யம் படேத் பக்தி சாயீ-வாஸு

தேவ ப்ரஸாதோ பவேதேவ தஸ்ய (ஸ்ரீ)


#பொருள் :


விரும்பியவை சித்திக்கும் பொருட்டு ஸ்ரீஅனந்த ராம தீக்ஷிதரால் பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பக்தியோடு படிப்பவருக்கு ஸ்ரீபார்த்தசாரதியின் அருள் கிடைக்கும்.


#ஸ்ரீ_பார்த்தசாரதி_சுவாமி_பெருமை:


மகாபாரதத்தின்படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். *


இங்கு உற்சவ மூர்த்தி தன் #கதாயுதம்_இல்லாமல் #செங்கோலுடன்_காட்சி_தருகிறார்.


🙏#ஸ்ரீ_பார்த்தசாரதி_உன்_திருவடிகளே_சரணம்".🙏


*ஓம் நமோநாராயணா*

Tuesday, 28 February 2023

ஶ்ரீலலிதாத்ரிஶதீ ஸ்தோத்ரம்

 ஶ்ரீலலிதாத்ரிஶதீ ஸ்தோத்ரம்



1) ககாரரூபா கல்யாணீ கல்யாணகுணஶாலிநீ


கல்யாணஶைலநிலயா கமநீயா கலாவதீ



2) கமலாக்ஷீ க‍ந்மஷக்நீ கருணாம்ருத ஸாகரா


கதம்பகாநநாவாஸா கதம்ப குஸுமப்ரியா



3) கந்தர்‍ப்பவித்யா கந்தர்‍ப்ப ஜநகாபாம்க வீக்ஷணா


கர்‍ப்பூரவீடீஸௌரப்ய கல்லோலிதககுப்தடா



4) கலிதோஷஹரா கஞ்ஜலோசநா கம்ரவிக்ரஹா


கர்‍ம்மாதிஸாக்ஷிணீ காரயித்ரீ கர்‍ம்மபலப்ரதா



5) ஏகாரரூபா சைகாக்ஷர்யேகாநேகாக்ஷராக்ருதிஃ


ஏதத்ததித்யநிர்‍தேஶ்யா சைகாநந்த சிதாக்ருதிஃ



6) ஏவமித்யாகமாபோத்யா சைகபக்தி மதர்‍ச்சிதா


ஏகாக்ரசித்த நிர்‍த்த்யாத்யாதா சைஷணா ரஹிதாத்த்ருதா



7) ஏலாஸுகந்திசிகுரா சைநஃ கூட விநாஶிநீ


ஏகபோகா சைகரஸா சைகைஶ்வர்ய ப்ரதாயிநீ



8) ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய ப்ரதா சைகாந்தபூஜிதா


ஏதமாநப்ரபா சைஜதநேகஜகதீஶ்வரீ



9) ஏகவீராதி ஸம்ஸேவ்யா சைகப்ராபவ ஶாலிநீ


ஈகாரரூபா சேஶித்ரீ சேப்ஸிதார்‍த்த ப்ரதாயிநீ



10) ஈத்த்ருகித்ய விநிர்‍தே്தஶ்யா சேஶ்வரத்வ விதாயிநீ


ஈஶாநாதி ப்ரஹ்மமயீ சேஶித்வாத்யஷ்ட ஸித்திதா



11) ஈக்ஷித்ரீக்ஷண ஸ்ருஷ்டாண்ட கோடிரீஶ்வர வல்லபா


ஈடிதா சேஶ்வரார்‍தாம்க ஶரீரேஶாதி தேவதா



12) ஈஶ்வர ப்ரேரணகரீ சேஶதாண்டவ ஸாக்ஷிணீ


ஈஶ்வரோத்ஸம்க நிலயா சேதிபாதா விநாஶிநீ



13) ஈஹாவிராஹிதா சேஶ ஶக்தி ரீஷல்‍ ஸ்மிதாநநா


லகாரரூபா லளிதா லக்ஷ்மீ வாணீ நிஷேவிதா



14) லாகிநீ லலநாரூபா லஸத்தாடிம பாடலா


லலந்திகாலஸத்பாலா லலாட நயநார்‍ச்சிதா



15) லக்ஷணோஜ்ஜ்வல திவ்யாம்கீ லக்ஷகோட்யண்ட நாயிகா


லக்ஷ்யார்‍த்தா லக்ஷணாகம்யா லப்தகாமா லதாதநுஃ



16) லலாமராஜதளிகா லம்பிமுக்தாலதாஞ்சிதா


லம்போதர ப்ரஸூர்லப்யா லஜ்ஜாட்யா லயவர்‍ஜ்ஜிதா



17) ஹ்ரீங்கார ரூபா ஹ்ரீங்கார நிலயா ஹ்ரீம்பதப்ரியா


ஹ்ரீங்கார பீஜா ஹ்ரீங்காரமந்த்ரா ஹ்ரீங்காரலக்ஷணா



18) ஹ்ரீங்காரஜப ஸுப்ரீதா ஹ்ரீம்மதீ ஹ்ரீம்விபூஷணா


ஹ்ரீம்ஶீலா ஹ்ரீம்பதாராத்யா ஹ்ரீம்கர்‍பா ஹ்ரீம்பதாபிதா



19) ஹ்ரீங்காரவாச்யா ஹ்ரீங்கார பூஜ்யா ஹ்ரீங்கார

பீடிகா


ஹ்ரீங்காரவேத்யா ஹ்ரீங்காரசிந்த்யா ஹ்ரீம் ஹ்ரீம்ஶரீரிணீ



20) ஹகாரரூபா ஹலத்ருத்பூஜிதா ஹரிணேக்ஷணா


ஹரப்ரியா ஹராராத்யா ஹரிப்ரஹ்மேந்த்ர வந்திதா



21) ஹயாரூடா ஸேவிதாம்க்ரிர்‍ஹயமேத ஸமர்‍ச்சிதா


ஹர்யக்ஷவாஹநா ஹம்ஸவாஹநா ஹததாநவா



22) ஹத்யாதிபாபஶமநீ ஹரிதஶ்வாதி ஸேவிதா


ஹஸ்திகும்போத்துங்க குசா ஹஸ்திக்ருத்தி ப்ரியாம்கநா



23) ஹரித்ராகுங்குமா திக்த்தா ஹர்யஶ்வாத்யமரார்‍ச்சிதா


ஹரிகேஶஸகீ ஹாதிவித்யா ஹல்லாமதாலஸா



24) ஸகாரரூபா ஸர்‍வ்வஜ்ஞா ஸர்‍வ்வேஶீ ஸர்‍வமம்களா


ஸர்‍வ்வகர்‍த்ரீ ஸர்‍வ்வபர்‍த்ரீ ஸர்‍வ்வஹந்த்ரீ

ஸநாதநா



25) ஸர்‍வ்வாநவத்யா ஸர்‍வ்வாம்க ஸுந்தரீ ஸர்‍வ்வஸாக்ஷிணீ


ஸர்‍வ்வாத்மிகா ஸர்‍வஸௌக்ய தாத்ரீ ஸர்‍வ்வவிமோஹிநீ



26) ஸர்‍வ்வாதாரா ஸர்‍வ்வகதா ஸர்‍வ்வாவகுணவர்‍ஜ்ஜிதா


ஸர்‍வ்வாருணா ஸர்‍வ்வமாதா ஸர்‍வ்வபூஷண பூஷிதா



27) ககாரார்‍த்தா காலஹந்த்ரீ காமேஶீ காமிதார்‍த்ததா


காமஸஞ்ஜீவிநீ கல்யா கடிநஸ்தநமண்டலா



28) கரபோருஃ கலாநாதமுகீ கசஜிதாம்புதா


கடாக்ஷஸ்யந்தி கருணா கபாலி ப்ராணநாயிகா



29) காருண்ய விக்ரஹா காந்தா காந்திபூத ஜபாவலிஃ


கலாலாபா கம்புகண்டீ கரநிர்‍ஜ்ஜித பல்லவா



30) கல்‍பவல்லீ ஸமபுஜா கஸ்தூரீ திலகாஞ்சிதா


ஹகாரார்‍த்தா ஹம்ஸகதிர்‍ஹாடகாபரணோஜ்ஜ்வலா



31) ஹாரஹாரி குசாபோகா ஹாகிநீ ஹல்யவர்‍ஜ்ஜிதா


ஹரில்பதி ஸமாராத்யா ஹடால்‍கார ஹதாஸுரா



32) ஹர்‍ஷப்ரதா ஹவிர்‍போக்த்ரீ ஹார்‍த்த ஸந்தமஸாபஹா


ஹல்லீஸலாஸ்ய ஸந்துஷ்டா ஹம்ஸமந்த்ரார்‍த்த ரூபிணீ



33) ஹாநோபாதாந நிர்‍ம்முக்தா ஹர்‍ஷிணீ ஹரிஸோதரீ


ஹாஹாஹூஹூ முக ஸ்துத்யா ஹாநி வ்ருத்தி விவர்‍ஜ்ஜிதா



34) ஹய்யம்கவீந ஹ்ருதயா ஹரிகோபாருணாம்ஶுகா


லகாராக்யா லதாபூஜ்யா லயஸ்தித்யுத்பவேஶ்வரீ



35) லாஸ்ய தர்‍ஶந ஸந்துஷ்டா லாபாலாப விவர்‍ஜ்ஜிதா


லம்க்யேதராஜ்ஞா லாவண்ய ஶாலிநீ லகு ஸித்திதா



36) லாக்ஷாரஸ ஸவர்‍ண்ணாபா லக்ஷ்மணாக்ரஜ பூஜிதா


லப்யேதரா லப்த பக்தி ஸுலபா லாம்கலாயுதா



37) லக்நசாமர ஹஸ்த ஶ்ரீஶாரதா பரிவீஜிதா


லஜ்ஜாபத ஸமாராத்யா லம்படா லகுளேஶ்வரீ



38) லப்தமாநா லப்தரஸா லப்த ஸம்பத்ஸமுந்நதிஃ


ஹ்ரீங்காரிணீ ச ஹ்ரீங்கரி ஹ்ரீமத்த்யா ஹ்ரீம்ஶிகாமணிஃ



39) ஹ்ரீங்காரகுண்டாக்நி ஶிகா ஹ்ரீங்காரஶஶிசந்த்ரிகா


ஹ்ரீங்கார பாஸ்கரருசிர்‍ஹ்ரீங்காராம்போதசஞ்சலா



40) ஹ்ரீங்காரகந்தாங்குரிகா ஹ்ரீங்காரைகபராயணாம்


ஹ்ரீங்காரதீர்‍கிகாஹம்ஸீ ஹ்ரீங்காரோத்யாநகேகிநீ



41) ஹ்ரீங்காராரண்ய ஹரிணீ ஹ்ரீங்காராவால வல்லரீ


ஹ்ரீங்கார பஞ்ஜரஶுகீ ஹ்ரீங்காராங்கண தீபிகா



42) ஹ்ரீங்காரகந்தரா ஸிம்ஹீ ஹ்ரீங்காராம்போஜ ப்ரும்கிகா


ஹ்ரீங்காரஸுமநோ மாத்வீ ஹ்ரீங்காரதருமஞ்ஜரீ



43) ஸகாராக்யா ஸமரஸா ஸகலாகமஸம்ஸ்துதா


ஸர்‍வ்வவேதாந்த தாத்பர்யபூமிஃ ஸதஸதாஶ்ரயா



44) ஸகலா ஸச்சிதாநந்தா ஸாத்யா ஸத்கதிதாயிநீ


ஸநகாதிமுநித்யேயா ஸதாஶிவ குடும்பிநீ



45) ஸகாலாதிஷ்டாந ரூபா ஸத்யரூபா ஸமாக்ருதிஃ


ஸர்‍வ்வப்ரபஞ்ச நிர்‍ம்மாத்ரீ ஸமநாதிக வர்‍ஜ்ஜிதா



46) ஸர்‍வ்வோத்தும்கா ஸம்கஹீநா ஸகுணா ஸகலேஶ்வரீ


ககாரிணீ காவ்யலோலா காமேஶ்வரமநோஹரா



47) காமேஶ்வரப்ரணாநாடீ காமேஶோத்ஸம்கவாஸிநீ


காமேஶ்வராலிம்கிதாம்கீ கமேஶ்வரஸுகப்ரதா



48) காமேஶ்வரப்ரணயிநீ காமேஶ்வரவிலாஸிநீ


காமேஶ்வரதபஃஸித்திஃ காமேஶ்வரமநஃப்ரியா



49) காமேஶ்வரப்ராணநாதா காமேஶ்வரவிமோஹிநீ


காமேஶ்வரப்ரஹ்மவித்யா காமேஶ்வரக்ருஹேஶ்வரீ



50) காமேஶ்வராஹ்லாதகரீ காமேஶ்வரமஹேஶ்வரீ


காமேஶ்வரீ காமகோடிநிலயா காம்க்ஷிதார்‍தததா



51) லகாரிணீ லப்தரூபா லப்ததீர்லப்த வாஞ்சிதா


லப்தபாப மநோதூரா லப்தாஹங்கார துர்‍க்கமா



52) லப்தஶக்திர்லப்த தேஹா லப்தைஶ்வர்ய ஸமுந்நதிஃ


லப்த வ்ருத்திர்லப்த லீலா லப்தயௌவந ஶாலிநீ



53) லப்தாதிஶய ஸர்‍வ்வாம்க ஸௌந்தர்யா லப்த விப்ரமா


லப்தராகா லப்தபதிர்லப்த நாநாகமஸ்திதிஃ



54) லப்த போகா லப்த ஸுகா லப்த ஹர்‍ஷாபி பூஜிதா


ஹ்ரீங்கார மூர்‍த்திர்‍ஹ்ரீண்‍கார ஸௌதஶ்ரும்க

கபோதிகா



55) ஹ்ரீங்கார துக்தாப்தி ஸுதா ஹ்ரீங்கார கமலேந்திரா


ஹ்ரீங்காரமணி தீபார்‍ச்சிர்‍ஹ்ரீங்கார தருஶாரிகா



56) ஹ்ரீங்கார பேடக மணிர்‍ஹ்ரீங்காரதர்‍ஶ பிம்பிதா


ஹ்ரீங்கார கோஶாஸிலதா ஹ்ரீங்காராஸ்தாந நர்‍த்தகீ



57) ஹ்ரீங்கார ஶுக்திகா முக்தாமணிர்‍ஹ்ரீங்கார போதிதா


ஹ்ரீங்காரமய ஸௌவர்‍ண்ணஸ்தம்ப வித்ரும புத்ரிகா



58) ஹ்ரீங்கார வேதோபநிஷத் ஹ்ரீங்காராத்வர தக்ஷிணா


ஹ்ரீங்கார நந்தநாராம நவகல்‍பக வல்லரீ



59) ஹ்ரீங்கார ஹிமவல்‍கம்க்கா ஹ்ரீங்காரார்‍ண்ணவ

கௌஸ்துபா


ஹ்ரீங்கார மந்த்ர ஸர்‍வ்வஸ்வா ஹ்ரீங்காரபர ஸௌக்யதா



இதி ஶ்ரீ ப்ரஹ்மாண்டபுராணே உத்தராகண்டே


ஶ்ரீ ஹயக்ரீவாகஸ்த்யஸம்வாதே


ஶ்ரீலளிதாத்ரிஶதீ ஸ்தோத்ர கதநம் ஸம்பூர்‍ணம்



தோடகாஷ்டகம்

 தோடகாஷ்டகம் !


ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.


அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை வியந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.


ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டகமும் அதன் அர்த்தமும். 


விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே

மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)


கருணா வருணாலய பாலய மாம்

பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்

ரசயாகிலதர்சன தத்வவிதம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். 

என்னை ஞானவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.


பவதா ஜனதா ஸுகிதா பவிதா

நிஜபோதவிசாரண சாருமதே

கலயேச்வர ஜீவ விவேகவிதம்

பவ சங்கர தேசிகமே சரணம்!!


தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!


பவ ஏவ பவானிதி மே நிதராம்

ஸமஜாயத சேதஸி கெளதுகிதா

மம வாரய மோஹமஹாஜலதிம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!


ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ

பவிதா ஸமதர்சன லாலஸதா

அதிதீனமிமம் பரிபாலய மாம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் 

நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ

விசரந்தி மஹா மஹஸஸ்சலத:

அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ

பவசங்கர தேசிக மே சரணம்!!


குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


குருபுங்க புங்கவ கேதந தே

ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:

சரணாகத வத்ஸல தத்வநிதே

பவ சங்கர தேசிக மே சரணம்!!


ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!


விகிதா ந மயா விசதைககலா

நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ

த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!


ஸ்ரீ குருப்யோ நமஹ !

Monday, 27 February 2023

ஸ்ரீ_வராஹி_மாலை

 #ஸ்ரீ_வராஹி_மாலை 


வராஹி அம்மனை வரவழைக்க உதவும் அற்புத ஸ்தோத்திரம்!


முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க, நம்மில் எத்தனை பேர் மனமார வேண்டினோமோ தெரியாது... 


 இறைவன், உங்களை மகிழ்ச்சியிலும், நிம்மதியிலும் தொடர்ந்து வைத்து இருக்க , இறைவனை பிரார்த்திக்கிறேன். 


இந்த வராஹி மாலையை , மனமுவந்து பாராயணம் செய்து வந்தால் , உங்களுக்கு வராஹி தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும். 


ஸ்ரீ வாராஹி மாலை


1. வசீகரணம் (தியானம்)


இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்

குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்

திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி

மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.


2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)


தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து

ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே

ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்

வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.


3. பகை தடுப்பு (பிரதாபம்)


மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு

கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி

வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்

பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.


4. மயக்கு (தண்டினி தியானம்)


படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை

அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி

குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்

நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.


5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)


நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்

கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்

டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்

தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.


               (லதா வெங்கடேஷ்வரன்)


6. உச்சாடணம் (ரோகஹரம்)


வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை

நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்

பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை

நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.


7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)


நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்

வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்

ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே

வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.


8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)


வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்

காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே

ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி

மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.


9. பகை முடிப்பு (வித்வேஷணம்)


வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்

சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்

கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்

பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.


10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)


பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்

பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து

கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்

தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.


              (லதா வெங்கடேஷ்வரன்)


11. தேவி வருகை (பூதபந்தனம்)


 எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்

அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து

பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்

சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.


12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)


சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்

குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே

இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே

நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே


13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)


நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி

நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு

வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்

கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.


14. மந்திரபூஜை (முனிமாரணம்)


மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்

அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்

கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து

விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.


15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)


ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை

மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்

கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே

வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே


             (லதா வெங்கடேஷ்வரன்)


16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)


தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்

மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்

கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்

வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!


17. வாழ்த்துதல் (உலக மாரணம்)

வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்

பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்

பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்

விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.


18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)


வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்

கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்

சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்

மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.


19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை

ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்

கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்

ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.


20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)


தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்

சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்

வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து

தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.


               (லதா வெங்கடேஷ்வரன்)


21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)


ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்

கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்

சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்

வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.


22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)


தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்

பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை

நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை

உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே


23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)


ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு

யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு

காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு

வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.


24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)


உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்

வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்

இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்

விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.


25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)


தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்

வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை

நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)

அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.


             (லதா வெங்கடேஷ்வரன்)

  

26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)


அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்

கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்

தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்

நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.


27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)


சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே

அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்

நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்

புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.


28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)


பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற

மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)

இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை

நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.


29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)


தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து

நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்

மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு

கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.


30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)


நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்

அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே

சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி

எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.


           (லதா வெங்கடேஷ்வரன்)


31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)


வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று

காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்

பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்

கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.


32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)


சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்

தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை

அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு

நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.

வாராஹி_திருநட்சத்திர_மாலை

 ஆஷாட நவராத்திரி ஸ்பெஷல் !


#வாராஹி_திருநட்சத்திர_மாலை


காப்பு


சிந்தா மணிக்கிருகத் தேர்வாசல் வாசம்செய்

நந்தா மணிவிளக்கு நாயகியாள்- முந்துபடை

"வாராஹி  தாரக அந்தாதி " நான்பாடக்

காரானை பொற்பாதம் காப்பு


நூல்


உலகம் நிலையாய் உருளப் புரிந்தே உதவியவள்

கலகம் எதுவும் கழல்பணி பக்தன் கதவிருந்து

விலகும் படிக்கு விதிக்கும் அசுவதி வித்தகியாள்

இலகும் நலத்தாள் இதம்புரி வாராஹி ஏத்துவமே!                1       


ஏத்துப் புரக்கும் இனிய தளபதி, ஏற்புடனே

காத்துக் கருப்பால் கலங்கா திருக்கும் கதிதருவாள்

யாத்த கவிதை அனைய ஒழுங்கினில் அன்பரணி

பூத்துச் சிரிப்பாள் பொருந்திடும் வாராஹி பூரணியே                 2


அணியாய் இருகரம் அங்குச பாசம் அமைந்திருக்கப்

பணியார் தமையே பயப்படச் செய்யும் படைகளுடன்

திணியார் வலிமை திருக்கார்த் திகையொளித் தேசுடனே

துணையாய்த் தொழுவோர் சுகம்பெற வாராஹி தோற்றுவளே!     3


தோற்றும் சிரசில் உரோகிணி காந்தன் சுடர்விடவும்

ஊற்றும் பசுமை உடல்நிற மாக ஒளிவிடவும்

ஏற்றும் விழிகள் எரியும் கனிவும் இழைத்திடவும்

ஆற்றும் அழகில் அமர்கிறாள் வாராஹி ஆனந்தமே!              4


ஆனந்தம் நல்கும் அருளுடை அம்பிகை , அற்புதமாய்த்

தானந்த மான மிருக சிரத்தாள் சதுர்புஜத்தாள்

ஏனிந்த வண்ணம் எதிர்த்தோம் எனவே எதிரிகளும்

வானந்தம் காணவைப் பாளெங்கள் வாராஹி மாணிக்கமே!        5


மாணிக்கக் கண்கள் மரகத மேனி, வராஹமுகம்

ஆணிப்பொன் மேனியன் ஆதிரை யானும் அதிசயிக்கப்

பேணிக்கொண் டுள்ள பெருநெடுந் தோள்கள்,, பிறைநகங்கள்

காணக்கண் கோடியும் வேண்டும்நம் வாராஹி காண்பதற்கே!    6


காண்பதற் கிங்கே  கடுமை  எனவே கருதுபவர்

மாண்புப் புனர்வசு மன்னவன் வில்லம்பில் வந்திடினும்

தீண்டும் கடுமைகொள் தேவனென் றேமனம் சிந்திப்பரோ

பூண்பலா போன்றநற் பொற்பினள் வாராஹி போர்மகளே!         7


போர்மகள், ஞானப் புகழ்மகள், வேதப் புனிதமெலாம்

தேர்மகள் செம்மஞ்சள் பூசம்பந் தத்தினள் சேர்சினத்தில்

வேர்வரை சென்றே எதிரியை வீழ்த்தும் வினைகளிலே

நேர்மகள் வீரம் திகழ்மகள் வாராஹி நேசத்தளே!                8

      

நேசத்தள் ஆயிலி யம்திரு நெஞ்சத்தள், நேருமுப

தேசத்தில் பாசத்தள், சேர்மணி தீபத் திருநகரில்

வாசத்தள், அன்பு வடிவத்தள், மாறி மறித்துநிற்கும்

நீசத்தை வீழ்த்தும் நியாயத்தள் வாராஹி  நிர்மலையே!          9

(ஆயிலி -  தாய்வழிப் பிறவாதவள்)


மலைகளும்  தோற்கும் மதர்த்த வடிவாள் மறித்திடும்போர்க்

கலைகளும் தாமகம் கண்டே சுருதிக் கழல்பணியும்

அலைகடல் பொங்கி அலைப்ப தெனவரும் ஆழ்துயர

வலைகளைப் பிய்த்தே எறிவள்நம் வாராஹி வாழ்வளித்தே               10


அளித்திடும் வெற்றி அவள்பதம் என்றே அறிந்துகொண்டு

களித்திடும் அன்பர் கனிவுடன் கற்பூரம் காட்டிடுவார்

வளைத்திருள் வந்திடும் மாலை கழிந்த வளரிரவில்

திளைத்து வணங்குதல் செய்கநம் வாராஹி தெய்வத்தையே    11

  

தெய்வத் திருபஞ்ச பாணத்தில் தோன்றிச் சிறப்புடனே

செய்ய கிரிசக்ரத் தேர்ரதம் ஊரும் திரிநயனி

எய்தும் விவாதத் தெதிரி ஜெயக்கொடி ஏற்றிடுமுன்

உய்வளிப் பாளன்பர்க் கூட்டுவள் வாராஹி உத்தரமே                           12


உத்தரம் போலே உறுதியிற் காத்திடும் உத்தமியாள்

பத்திர மாகப் பயங்களைப் போக்கிப் பரிசளிப்பாள்

அத்தமும் ஆதியும் ஆகியே தம்மரும்  அத்தங்களில்

அத்திரம் ஏந்தி அருளுவள்  வாராஹி ஆதரித்தே!                        13


ஆதரித்(து) ஆக்கம் அளித்தே புரப்பவள் ஆயசக்தி

மாதரில் ஐந்தாம் வரிசை பெறுபவள், வாஞ்சையுடன்

ஓதரும் ஞானம் உதவும் வி சித்திரை, ஒப்பரிய

சாதகம் நல்கிடும் தந்திரம் வாராஹி சாதிப்பளே!                 14


சாதிக்க வேண்டும்சொல் தர்க்கத்தில் என்கிற தாகமுளோர்

வாதிக்கும் துர்நச்சு வாதி பயந்து மயங்கிடவே

ஆதிக்கம் நல்கிடும் வார்த்தாளி  போற்றி அடிபணிந்தால்

சோதிக்கும் போது  துயரற வாராஹி தோன்றுவளே        15


தோன்றும் வடிவும் சொலமுடி யாத தொகைவகையாய்

ஊன்றும் பயிரவி சாகம் பரியென உண்டுபல

ஆன்ற திருப்பெயர் அன்பர்கள் பாடி அடிபரவ

மூன்று திருவிழி யாள்நிறை வாராஹி முன்னிற்பளே!            16


முன்னிடும்  அந்தினி ரும்பினி ஜம்பினி மோஹினியாள்

மின்னலாய்ப் பாய்ந்து விசுக்கிரன் தன்னையே வீழ்த்தியவள்

மன்னிடும் காம னுடம்பெரி செய்த மலைச்சிவனும்

நன்னய மாய்ப்புகழ் நல்கிடும்  வாராஹி நாயகியே!        17

அனுடம்


நாயகி, பஞ்சமி  நற்தண்ட நாதா நலமருளும்

தாயகி வார்த்தாளி பஞ்சமி தாக்கிடும் , சண்டையிலே

போயெதிர் நின்று பொருது நம் கேட்டைப் பொசுக்கிடுவாள்

ஆயநற் செல்வம் அளித்திடும் வாராஹி ஆரமுதே!               18


ஆரமு தேயென அன்பர் தொழுதே அகமகிழ,

சேரமு தாகத் திகழ்கிற ஆக்ஞா திகிரியிலே

ஓரமு தாக மனத்தை அடக்க உதவிடுவாள்

பேரருள் மூலப் பிழம்பவள் வாராஹி பேசுவளே!                      19


பேசுவள் சொப்பனப் போதில் மிகுந்த பொலிவுடனே,

வீசுவள் பூராடம் பத்தில் கருவம் மிகுந்தவரை

பூசுவள் வெற்றிப் பொடியள்ளி, உண்மைப் புனிதமிலா

மாசுகள் நீங்கிய நெஞ்சினில்  வாராஹி வாழுவளே!              20

(குறிப்பு- பூரா டம்பத்தில் )


வாழும் பொழுதினில் வந்தடி வீழும் மனிதருக்குச்

சூழும் நலங்கள் தொகுத்துக் கொடுப்பாள், துணையிருப்பாள்

ஊழில் அலுத்திருத் ராஷாடத் தம்மையை உள்தொழுவீர்

ஆழ நினைப்பீர் அரியநம் வாராஹி அன்னையையே!!             21

(உத்திராஷாடம்– உத்திராடம் – ஆஷாடம் –ஆடிமாதம்)     


அன்னை, வராஹன் அருந்திரு வோணன் அரியவனாய்

முன்னைப் புவியைக் கடலடி மூழ்கி முகந்தெடுத்தாள்

தன்னை வணங்கிடும் பக்தர்கள் சங்கடம்  தானழித்தே

அன்னது மீளா தருளுவள் வாராஹி ஆட்படவே                  22                    

                                                                                        படவிட்ட வட்ட பலவிட்ட சக்கரப் பாதையிலே

விடவிட்டு விட்ட விதியட்டுத் தீய வினைதடுப்பாள்

படைமுட்டு தீமை பலப்பட்ட போது படையெடுத்தே

உடைபட்டுப் போக ஒழித்தவள் வாராஹி உத்தமியே!             23   


உத்தமி, எல்லா உலகும் பயந்தே உதறும்படி

சத்தமிட் டேவந்த ரக்தபீ ஜன்தனைத் தண்டித்தவள்

புத்திகெட் டேநஞ் சதையம் மதுவாய்ப் புகலுகிற

பித்தினை வீழ்த்திப் புரந்திடும் வாராஹி பேரருளே                                 24


பேரரு ளாட்டி, பதின்மூன்றும் நூறும்  பிழையறவே

யாருரைப் பாரவர்  முன்னே மகிழ்வாய்  அவள்நடப்பாள்

சீரற வெற்பூரட் டாதி தருமம் செழிக்கவைத்த

காரணி, பாதம் கருதுக வாராஹி காப்பதற்கே!     

குறிப்பு: வெற்பூர் அட்டு ஆதி தருமம் செழிக்க)     `                               25


காசுக் கெனவே கழிகிற வாழ்வில் கதித்துவரும்


மாசுத் திரட்டாதி மாயப் புரிந்து மறுகுடலில்

வாசம் தவிர்த்திடும் மாமணிப் பாதம் மனம் நினைந்து

பூசை புரிக, புகழ்நிறை வாராஹி போற்றிடவே!                  26        

 (குறிப்பு: மாசுத் திரட்டு ஆதி மா சே

போற்றுவ ரேவதி  யும்படி நெஞ்சில்  புகலுவரே

ஏற்றுவரே மனம் எண்ணுவ ரே உள் இழிவுகளை

மாற்றுவ ரே யவள் மாணருள் நெஞ்சிடை மாந்திடுவர்

ஆற்றும் அருளால் அடைவர்பின் வாராஹி ஆளுலகே           !27


நூற்பயன்

வாராஹி தாரக மாலையை நெஞ்சிலே

ஆரா தனைசெயும் அன்பர்க்கே- நேரான

உச்சப் பரிசாம் உயர்முக்தி தானளிப்பாள்

இச்சக்திக் கில்லை இணை!


அம்பிகையின் திருவடிகளில் சரணம்....

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...