Saturday, 2 April 2022

 அனைவருக்கும்

யுகாதி திருநாள்/

குடிபாட்வா நல்வாழ்த்துக்கள்💐


#உகாதி_பச்சடி 

 

உகாதி தினத்தன்று செய்யப்படும் ஒரு சிறப்பான உணவு தான் உகாதி பச்சடி. இந்த பச்சடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இது #அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும். இப்படி அறுசுவைகள் சேர்த்து செய்வதற்கு காரணம், சந்தோஷமாக வாழ்ந்திட, #வாழ்க்கையின்_அறுசுவையான இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே ஆகும். இப்போது அந்த உகாதி பச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 


#தேவையானபொருட்கள்....


மாங்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது) வேப்பம்பூ - 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் - 1 கப் (தட்டியது) தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன் புளி சாறு - 4 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு தண்ணீர் - 3 கப் 


#செய்முறை.... 


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், உகாதி பச்சடி ரெடி!!!

🌹🌹🌹🌹🌹🌹🌹


#பேவு_பெல்லா_பச்சடி_பிரம்ம_தேவர்_வழிபாடு_வசந்தம்_வரவேற்கும்_சைத்ர_மாசம்_யுகாதி_பண்டிகையின்_சிறப்புகள்!


பா.விஜயலட்சுமி


யுகாதியன்று விடியற்காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து தலைகுளித்து, புத்தாடை அணிந்து கொள்ள வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இட்டு, வெளியில் வேப்பிலை செருகி வரவேற்கின்றனர்.


யுகாதி

பச்சடி

ஹைதராபத்: ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மக்களின் புத்தாண்டு தினமான 

`#யுகாதி_பண்டிகை’  விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது. யுகாதி அல்லது உகாதி என்று இருவகையாக சொல்லாடப்படுகிறது இந்த வருடப் பிறப்பு பண்டிகை.


மகாராஷ்டிரத்தில் இந்நாள் 

‘குடிபாட்வா’ 

எனவும், சிந்தி மக்கள் 

‘சேதி சந்த்’ எனவும் கொண்டாடு

கின்றனர்.  தெலுங்கு வருடப் பிறப்பன்று ஆதிக்கம் பெற்றுள்ள கிரகம் அந்த ஆண்டின் ராஜாவாகவும், தமிழ் வருடப் பிறப்பன்று அந்நாளின் அதிபதியான கிரகம் அவ்வருடத்தின் மந்திரியாகவும் கூறப்படுகின்றன. 


ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத அமாவாசைக்கு மறுதினம் யுகாதிப் பண்டிகை கொண்டாடப்

படுகிறது. யுகத்தின் ஆரம்பம் இந்நாளில் தொடங்கியது என்பதைக் குறிக்கும் வகையில்  ‘யுகாதி’ என்பதாக பெயரிடப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.


சைத்ர மாதத்தின் முதல்நாளே உலகை பிரம்மன் படைத்ததாக பிரம்ம புராணம் கூறுகிறது. எனவே இந்நாளில் புதிய முயற்சிகள் மேற்கொள்வது கூடுதல் பலன்களைத் தரும்.  வசந்த காலத்தை வரவேற்கும் விழாவாகவும் இது அமைகிறது. 


திருப்பதியில் ஏழுமலையான் கோயில் உற்சவாரம்பங்கள் அனைத்தும் யுகாதி முதல் நாளில்தான் சிறப்பாக துவங்கப்படும். ‘#யுகாதி_ஆஸ்தானம்’ என்கிற சிறப்பு வழிபாடும் நடைபெறும்.  


இதற்காக கோயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்படும். 

 யுகாதியன்று அதிகாலையே மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடைபெறும். பின்பு, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவரான மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறும். 


அன்றைய வருடத்தைய பஞ்சாங்கம் படிக்கப்பட்டு புத்தாண்டு பலன்கள் கூறப்படும். மேலும், அன்றைய தினத்தில் ராமாயண சொற்பொழிவு கேட்டால் வருடப்பிறப்பு சுபிச்சமாக அமையும் என்பது ஐதீகமாம்.


யுகாதியன்று விடியற்காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து தலைகுளித்து, புத்தாடை அணிந்து கொள்ள வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இட்டு, வெளியில் வேப்பிலை செருகி வரவேற்கின்றனர். சிலர் வயல்களில் விளைந்த தானியங்களையும் வீட்டின் முகப்பில் கட்டுகின்றனர். அம்பிகைக்கான பூஜை இந்நாளில் விசேஷமானது. 


பின்னர், முதன்முதலாக ‘யுகாதி பச்சடி’ செய்யப்படுகிறது. அதில் 

வேப்பம்பூ, 

மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவை சேர்க்கப்படும். பிறக்கும் புத்தாண்டு இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி என அனைத்து குண நலன்களையும் ஒரு சேர உடையதாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது இந்த பச்சடி. இதற்கு கன்னட மொழியில் ‘பேவு பெல்லா’ 

என்று பெயர். பெரும்பாலனவர்கள் இதைப் பச்சைபச்சடி என்கின்றனர்.


ஒப்பட்லு, போளி, பாயசம், புளியோகரா என விருந்து உணவுகள் நெய்வேத்தியமாக படைக்கப்படுகின்றன. அந்த் ஆண்டை வரவேற்கும் வகையில் புதிய வருட பஞ்சாங்கம் மற்றும் பஞ்சகவ்யமும் பூஜையில் வைக்கப்படுகிறது. மாலையில் அந்த வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டு, இறைவனுக்கு பூஜை நடத்தப்படுகிறது. மாலையில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அந்நாளை ஆடல், பாடல் என கொண்டாடு

கின்றனர். மிகமுக்கியமாக பிரம்ம தேவரை இந்நாளில் வழிபடுவது எல்லா நலன்களையும் வாழ்க்கையில் உண்டாக்கும்!

🌹🌹🌹🌹🌹🌹🌹


#குடி_பாட்வா


சத்ரபதி சிவாஜி மஹராஜ் வெற்றிக்குமேல் வெற்றி பெற்று இந்த "குடிபாட்வா" தினத்தன்று

திரும்பி வந்தாராம்.


பிரும்மா இன்றுதான் எல்லா லோகங்களையும் சிருஷ்டித்தாராம். 


இதனால்தான் மகாராஷ்டிரா  மாநிலத்தில் ஒவ்வொரு

வீட்டு வாசலிலும் பால்கனியிலும் சன்னலிலும்

"குடி" {gudi} என்ற ஒரு அடையாளம் அமைக்கப்படுகிறது பிரும்மாவின் கொடி அது.


ஒரு மூங்கில் கம்பை எடுத்து அதை சிவப்பு ,பச்சை வர்ணப் பட்டுத்துணியால மூடி அதை ஒரு சொம்பால் மூடிவிடுகிறார்கள்.


அந்தப்பாத்திரம் வெள்ளியகாவோ செம்பாகவோ இருக்க வேண்டும்.


 பின் அந்தக்கம்பில் ஸ்வஸ்திக் சிம்பலை எழுதுகிறார்கள்.


பின் அதன் மேல் பெரிய மாலையும் மாட்டுகிறார்கள்.


 பின் அதை எல்லோருக்கும் தெரியும்படி வெளியில் வைக்கிறார்கள்.


இந்த "குடி" அடையாளம் பல தீய சக்திகளை விரட்டி வீட்டிற்கு வளத்தைத் தருகிறது என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது.


இந்த நன்நாளில் ஒவ்வொரு வீட்டு வாசலையும் "ரங்கோலி" என்ற கோலங்கள் பல வர்ணங்களுடன் அலங்கரிக்கின்றன.


அதில் புள்ளிக்கோலங்கள்,

கணபதி, சிவாஜி

போன்ற சித்திரங்கள், 

இயற்கைக்காட்சிகள்

என்று ஒன்றை ஒன்று சக்கைப்போடு போடுகின்றன.


இன்றுதான் மஹாவிஷ்ணு 'மத்ஸ்யாவதாரம்"

எடுத்தார் என்றும் கூறுகின்றனர்.


பூரண் போளி என்ற வெல்லப்போளியும் 'ஸ்ரீகண்ட்""என்ற இனிப்பும் அவர்களது புத்தாண்டு

ஸ்பெஷல் .

Monday, 28 March 2022

கமலாம்பிகை அஷ்டகம்

 கமலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும் இல்லை என்பது பெரியவர்களின் அனுபவம், நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கீழ்காணும் அஷ்டகத்தைப் பாராயணம் செய்து, அம்பிகை அருளால் அனைத்து நலன்களும் பெறுவோம். இத்துதி நாராயண தீர்த்தர் எனும் யதியின் சிஷ்யரால் இயற்றப்பட்டது.


பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம்

ப்ருந்தாரகைர்வந்திதாம்

மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம்

மந்தஸ்மிதாம் ஸுந்தரீம்

பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம்

போகாபவர்கப்ரதாம்

வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்

வாஞ்சானுகூலாம் ஸிவாம்


 செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற முகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்பட்டவளே, மனதிற்கு எப்போதும் சந்தோஷம் அளிப்பவளே, நிலைத்த புன்சிரிப்புடன் திகழ்பவளே, அழகின் இலக்கணமே, கர்மபந்தத்தை போக்குகிறவளே, முக்கண்களை உடையவளே, இவ்வுலகில் எல்லா சுகங்களையும் அளித்து, நிரந்தர சந்தோஷமான மோட்சத்தையும் அளிப்பவளே, பக்தர் விரும்பியனவெல்லாம் நிறைவேற்றித் தருபவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.


ஸ்ரீகாமேஸ்வர பீட மத்ய நிலயாம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரீம்

ஸ்ரீ வாணீ பரிஸேவிதாங்க்ரியுகளாம்

ஸ்ரீமத்க்ருபாஸாகராம்

சோகாபத்ய மோசினீம் ஸுகவிதா

நந்தைக ஸந்தாயினீம்

வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்

வாஞ்சானுகூலாம் ஸிவாம்


ஸ்ரீகாமகோடி பீடத்தின் நடுவில் அமர்ந்தவளே, ராஜராஜாக்கள், ஈஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி இவர்களால் சேவிக்கப்பட்ட, தாமரை போன்ற மென்பாதங்களைக் கொண்டவளே, ஐஸ்வர்யத்தை அளிக்கும் கருணைக் கடலாக இருப்பவளே, மனக்கவலை, ஆபத்துகள், பயம் ஆகியவற்றைப் போக்குகிறவளே, நல்ல கவிதை உள்ளத்தை அளித்து, அதனால் பேரானந்தத்துக்கு வழி வகுப்பவளே, 

கமலாம்பிகையே, நமஸ்காரம்.


மாயா மோஹவினாஸினீம்

முனிகணைராராதிதாம் தன்மயீம்

ஸ்ரேய: ஸஞ்சய: தாயினீம் குணமயீம்

வாய்வாதி பூதாம் ஸதாம்

ப்ராத: கால ஸமானஸோப மகுடாம்

ஸாமாதி வேதைஸ்துதாம்

வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்

வாஞ்சானுகூலாம் ஸிவாம்


மாயையினால் ஏற்படும் அஞ்ஞானத்தை நீக்குகிறவளே, முனிவர்களால் ஆராதிக்கப்படுபவளே, பிரம்ம ஸ்வரூபமாக துலங்குபவளே, பலவித க்ஷேமங்களை மனம் மகிழ அளிப்பவளே, சத்குணங்கள் நிரம்பியவளே, சாதுக்களின் இதயத்தில் பிராணனுக்குக் காரணமான ஆகாச பூதமாக திகழ்பவளே, உதய காலத்திற்கு ஒப்பான சிவந்த ஒளியுடன் கூடிய கிரீடத்தை அணிந்தவளே, சாம வேதம் முதலான வேதங்களால் துதிக்கப்பட்டவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.


பாலாம் பக்தஜனௌக சித்தநிலயாம்

பாலேந்து சூடாம்பராம்

ஸாலோக்யாதி சதுர்விதார்தபலதாம் 

நீலோத்பலாக்ஷீமஜாம் 

காலாரிப்ரிய நாயிகாம் கலிமல

ப்ரத்வம்ஸினீம் கௌலினீம்

வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்

வாஞ்சானுகூலாம் ஸிவாம்


சிறு பெண்ணாக இருப்பவளே, பக்தர்களின் சித்தத்தில் உறைபவளே, சந்திர கலையை சிரஸில் தரித்தவளே, பரப்ப்ரம்ம ஸ்வரூபிணியே, ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களைக் கொடுப்பவளே, நீலோத்பலம் போன்ற கண்களை உடையவளே, பிறப்பு அற்றவளே, காலனைக் காலால் உதைத்த பரமசிவனுடைய பிரிய மனைவியே, கலியால் ஏற்படும் பாவங்களைப் போக்குகிறவளே, சிவசக்தி ஸம்பந்தரூபமாக உள்ளவளே, விரும்புவோர் எண்ணங்களை ஈடேற்றுபவளே, கமலாம்பிகையே நமஸ்காரம்.


ஆனந்தாம்ருத ஸிந்து மத்ய நிலயாம்

அக்ஞான மூலாபஹா

க்ஞானானந்த விவர்தினீம் விஜயதாம்

மீனேக்ஷணாம் மோஹினீம்

க்ஞானானந்தபராம் கணேஸ ஜனனீம்

கந்தர்வ ஸம்பூஜிதாம்

வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்

வாஞ்சானுகூலாம் ஸிவாம்


ஆனந்த சமுத்திரத்தின் நடுவில் இருப்பவளே, அஞ்ஞானத்தின் ஆதிகாரணத்தையே போக்குகிறவளே, ஞானம், ஆனந்தம், இவற்றை நன்கு மேலோங்கச் செய்கிறவளே, ஜயத்தைக் கொடுக்கிறவளே, மோகிக்கச் செய்கிறவளே, ஞானம் ஆனந்தம் இவற்றிற்குக் காரணமாக இருப்பவளே, ஸ்ரீமகாகணபதிக்குத் தாயாக இருப்பவளே, கந்தர்வனால் சிறப்பாக பூஜிக்கப்பட்டவளே, கோரிய பொருளை அளிப்பவளே, மங்களமே வடிவானவளுமான கமலாம்பிகையே, நமஸ்காரம்.


ஷட்சக்ரோபரி நாதபிந்து நிலயாம்

ஸர்வேஸ்வரீம் ஸர்வகாம்

ஷட் ஸாஸ்த்ராகம வேத வேதிதகுணாம்

ஷட் கோண ஸம்வாஸினீம்

ஷட் காலேன ஸமர்ச்சிதாத்ம விபவாம்

ஷட்வர்க ஸம்சேதினீம்

வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்

வாஞ்சானுகூலாம் ஸிவாம்


ஷட்சக்ரத்தின் மீது நாதபிந்துவில் இருப்பவளே, யாவருக்கும் ஈஸ்வரியாய் விளங்குபவளே, எங்கும் வியாபித்திருப்பவளே, ஆறு சாஸ்திரம், ஆகமங்கள், நான்கு வேதங்கள், இவை போற்றும் குணங்களை உடையவளே, ஷட்கோணங்களில் இருப்பவளே, ஆறு காலங்களிலும் பூஜிக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடையவளே, காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம் எனும் ஆறு வர்க்கங்களையும் அழிப்பவளே, கோரிய பொருளை அளிப்பவளே, மங்களமாய்த் துலங்குபவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.


யோகானந்தகரீம் ஜகத்ஸுககரீம்

யோகீந்த்ர சித்தாலயாம்

ஏகாமீஸ ஸுகப்ரதாம் த்விஜநுதாம்

ஏகாந்த ஸஞ்சாரிணீம்

வாகீஸாம், விதி, விஷ்ணு, ஸம்பு, வரதாம்

விஸ்வேஸ்வரீம் வைணிகீம்

வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்

வாஞ்சானுகூலாம் சிவாம்


தியான யோகத்தினால் ஏற்படும் ஆனந்தத்தை அளிப்பவளே, உலகத்திற்கு சுகத்தை அளிப்பவளே, யோகீந்த்ரர்களின் மனதைக் கோயிலாகக் கொண்டவளே, பரமசிவனுக்கு சுகத்தை அளிப்பவளே, வேதியர்களால் துதிக்கப்பட்டவளே, பிரளய காலத்திலும் தனித்து நிற்பவளே, வாக்கிற்கு ஈஸ்வரியாக விளங்குபவளே, பிரம்மா, விஷ்ணு, சிவன், இவர்களுக்கும் வரங்களை அளிப்பவளே, உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியாகத் திகழ்பவளே, வீணா வாத்யத்தில் தேர்ச்சி பெற்றவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.


போதானந்த மயீம் புதைரபிநுதாம்

மோதப் ரதாமம் பிகாம்

ஸ்ரீமத் வேதபுரீஸ தாஸ வினுதாம்

ஹ்ரீங்கார ஸந்தாலயாம்

பேதா பேத விவர்ஜிதாம் பகுவிதாம்

வேதாந்த சூடாமணீம்

வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்

வாஞ்சானுகூலாம் சிவாம்


ஞானானந்த ஸ்வரூபிணியே, அறிவாளிகளால் சிறப்பாக ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளே, சந்தோஷத்தை அளிக்கிறவளே, அம்பிகையே, வேதபுரீச தாஸரால் துதிக்கப்பட்டவளே, ஹ்ரீம், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்தை ஆலயமாகக் கொண்டவளே, வேறுபட்டது, வேறுபடாதது இவ்விரண்டும் அற்றவளே, பலவிதமாய் காட்சி தருபவளே, வேதாந்தங்களுக்கு சிரோபூஷணமாய் இருப்பவளே, கோரிய பலனை அளிப்பவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே நமஸ்காரம்.


இத்தம் ஸ்ரீ கமலாம்பிகாப்ரியகரம்

ஸ்தோத்ரம் படேத்யஸ்ஸதா

புத்ர ஸ்ரீப்ரதமஷ்டஸித்திபலதம்

சிந்தா வினாஸாஸ்பதம்

ஏதி ப்ரஹ்மபதம் நிஜம் நிருபமம்

நிஷ்கல்மஷம் நிஷ்களம்

யோகீன்த்ரைரபி துர்லபம்

புனரயம் சிந்தா வினாஸம் பரம் 


இவ்விதம் சந்தானம், சம்பத்து இவற்றை அளிப்பதும், எட்டு வித சித்திகளின் பயனைக் கொடுப்பதும் கவலையைப் போக்கவல்ல முக்கிய ஸ்தானமாயும் ஸ்ரீகமலாம்பிகைக்கு பிரியத்தை உண்டு பண்ணுகிறதுமான, இந்த ஸ்தோத்திரத்தை எப்போழுதும் படிக்கிறவர்கள் அனைவரும் நிகரற்றதும் களங்கமற்றதும் அவயமற்றதும் சிறந்த யோகிகளுக்கும் எட்டாததும் நிரந்தர உற்சாகம் அளிப்பதும் மேன்மையானதுமான தன் ஸ்வரூபமான, பிரம்ம பதத்தையும் அடைவார்கள்.

 

அம்பிகையின் திருவடிகளில் சரணம்....

Sunday, 13 March 2022

போதாயன_அமாவாசை_தோன்றிய_கதை

 #போதாயன_அமாவாசை_தோன்றிய_கதை


சதுர்த்தசி திதி அன்றே அமாவாசை வரும் பட்சத்தில் அது போதாயன அமாவாசை என அழைக்கப்படுகிறது.


#போதாயன_சூத்திரம்:


போதாயனர் என்று ஓர் மகரிஷி. விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாக புராண இதிகாஸ நூல்களில் காணப்படுகிறது. இவரது வம்சத்தைச் சேர்த்தவர்களே போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்

படுகின்றனர்.


"கோத்திரம் தெரியாவதர்களுக்கு காசியப கோத்திரம்;


ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயன ஸூத்திரம்"


போதாயன ஸூத்திரம் பற்றி காஞ்சி பெரியவர் மிக உயர்வாக கூறியிருக்கிறார்.


#போதாயன_மகரிஷி:


போதாயன சூத்ரம்' என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது


#போதாயன_அமாவாசை:


போதாயனரின் சீடரே ஆபஸ்தம்ப மகரிஷி என்றுகூட சொல்வதுண்டு. இந்த போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளே போதாயன அமாவாசை என்று கூறப்படுகிறது. பொதுவாக மற்றவருக்கான அமாவாசை நாளுக்கு முதல் நாள் போதாயன அமாவாசை நிகழும். இந்த போதாயன அமாவாசை முதன் முதலாக ஏற்பட்ட சரித்திரம் மஹாபாரதத்தில் காணப்படுகிறது.


#மகாபாரதத்தில்_அமாவாசை:


மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமாதானம் ஏற்படாமல் இனிமேல் யுத்தம் தான் ஒரே தீர்வு என்று தீர்மானமானவுடன் துரியோதனன் யுத்தத்தில் தனக்கே வெற்றி கிடைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டான். எந்த நாளில் போர் துவங்கினால் எனக்கு வெற்றி கிட்டுமோ அந்த நல்ல நாளை குறித்துத் தா என்று பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம் கேட்டான். சகாதேவனும் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அமாவாசை திதி நாளன்று யுத்தத்தை ஆரம்பித்தால் தாங்கள் ஸைன்யங்களுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்று அறிவுரை சொல்கிறார்.


#ஸ்ரீ_க்ருஷணர்_செய்த_லீலை:


இதை அறிந்துகொண்ட பஞ்சபாண்டவர்கள் கவலையடைகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று இனிமேல் என்ன செய்வது? என்று கேட்க ஸ்ரீ கிருஷ்ணரும் "கவலை படாதீர்கள்! நான் பார்த்துக்கொள்கிறேன்" என அவருக்கே உரிய புன்னகையுடன் கூறிவிட்டு

அமாவாசைக்கு முதல் நாளே கிருஷ்ணர் நதிக்கரையில் அமர்ந்து திதி கொடுப்பதற்குத் தயாராகிவிட்டார்.


#சூரியனும்_சந்திரனும்:


திகைத்துப்போன சூரியனும், சந்திரனும் ஒன்றாக அங்கே தோன்றி, ஒரு சேர அவரிடம் கேட்டனர்:


சூரியனும் சந்திரனும் அடடா ஸ்ரீமன் நாராயனரே தவறுதலாக அமாவாசையை கணித்து விட்டார்கள் போலிருக்கிறதே நாளைதானே அமாவாசை என்ன செய்யலாம்? நாமே இவர்களிடம் நேரில் சென்று விவரத்தை சொல்லுவோமே என்று நினைத்து சூரியனும் சந்திரனும் ஸ்ரீ க்ருஷ்ண பகவானிடம்


"பகவானே! நாளை அல்லவா அமாவாசை?"


கிருஷ்ணர் எதிர்க் கேள்வி கேட்டார்: "நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தினம்தானே அமாவாசை?"


"ஆமாம்" என்று இருவரும் பதில் அளித்தனர்.


கிருஷ்ணர் புன்னகைத்தார்." இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்?"


அப்போதுதான் அவ்விருவருக்கும் அந்த மாயக் கண்ணனின் லீலை புரிந்த்து.


#மகாபாரத_வெற்றி:


ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை ஏற்றுக்கொண்டனர். ஸ்ரீ க்ருஷ்ணர் அமாவாசை தர்ப்பணம் செய்வதால் இன்றுதான் அமாவாசை என்று துரியோதனன் முதலான கௌரவர்களும் அமாவாசைக்கு முதல் நாளே பித்ரு தர்ப்பணம் செய்தனர். மேலும் அன்றே அதாவது அமாவாசைக்கு முதல் நாளே மஹாபாரத யுத்தத்தை ஆரம்பித்தனர். ஆகவேதான் மஹாபாரத யுத்தத்தில் துரியோதனன் சைன்யங்களுக்கு வெற்றி கிடைக்காமல் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்த நிகழ்ச்சி நடந்தது முதல் அமாவாசை என்பது இரண்டு விதமாக ஆகி போதாயன அமாவாசை என்பது புதிதாக ஆரம்பமாயிற்று.


#சண்டையிட_ஏற்ற_சதுர்த்தசி_திதி:


காலப்பிரகாசிகை போன்ற ஜோதிட நூல்களில் சதுர்த்தசியை சன்டையிட (போர் துவங்க) ஏற்ற திதியாக கூறப்பட்டுள்ளது. அதை நன்றாக அறிந்த ஸ்ரீ க்ருஷ்ணர் சதுர்த்தசியில் போர் துவங்க வேண்டும் என்பதற்காகவே கபட நாடகம் ஆடியதை மகாபாரத கதைகளில் அறியமுடிகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் சதுர்த்தசி திதியில் எந்த முகூர்த்தமும் வைப்பதை தவிர்த்ததை காணும்போது

" நாள் செய்வதை நல்லோர் செய்யார் " என்பதை உணர முடிகிறது.

Saturday, 12 March 2022

காரடையான் நோன்பு

 காரடையான் நோன்பு ஸ்பெஷல் ! 


காரடையான் நோன்பு  ஒவ்வொரு சுமங்கலி பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.தன் கணவன் நன்றாக வாழவும், என்றென்றும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்விரதத்தை பெண்கள் இருப்பர்.


மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். 

பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான். இது காமாட்சி நோன்பு.  சாவித்ரி விரதம் என்றும் கூறுவர்.


காரடையான் நோன்பு எப்படி நோற்க வேண்டும்?


இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.


இப்போது நம் வீடுகளில் செய்யப்படும் இந்த நோன்பிற்கு, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு சிறிய நுனிவாழை இலை போட்டு இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவற்றை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும் வெண்ணெய்யும் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலிகள் தங்கள் இலைகளில் அம்பிகைக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.


மூன்று இலை போடக்கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக்கொண்ட பின் மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களைச் சாப்பிடச் சொல்லலாம். தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்த பின் 


பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும். அப்போது "உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோற்றேனே. ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேணும்' என்று வேண்டிக் கொள்வார்கள். நம் வீட்டு பெண்குழந்தைகளுக்கும் 

சரடு கட்டி விட வேண்டும். 

அதுமட்டுமல்ல, மாசி முடிவதற்குள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும்.


 "மாசி சரடு பாசி படியும்' என்பது சொலவடை. அதாவது பாசி படிய வேண்டும் என்றால் எத்துணை பழைமையாக வேண்டும்....? அத்தனைக் காலம் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம்.

சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது.


ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் அல்லது பூ சேர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.

இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்...?


சங்கல்ப ஸ்லோகம்

 

மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் 

மம பர்த்துச்ச  அன்யோன்யப்ரீதி

அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம் 

ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே


தியானம்


ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் 

புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே 

தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்

காமாக்ஷீம் ஆவாஹயாமி.


நோன்புச்சரடு மந்திரம்


தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்

பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா


மஞ்சள் சரடு கொண்டு பூஜை செய்து அதை கழுத்தில் கட்டி கொள்வது வழக்கம். காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.


'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்

ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்'


காரடையான் நோன்பிற்கு சாவித்திரி விரதமென்ற பெயருண்டு. ஏன் என்று தெரிய வேண்டுமா?


காரடையான் நோன்பு பிறந்த கதை


"சாவித்ரி பாடம்'' என்ற கர்ண பரம்பரைப் பாட்டு ஒன்றில் இந்த நோன்பு தோன்றிய வரலாறும் அதன் மகிமையும் சொல்லப்பட்டிருக்கிறது.

பத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவியோ மகா பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம்தான் அவர்களுக்கு வாய்க்கவில்லை. மகாராணி மாலதி தேவி பெரும் விரதமிருந்து வஷிஷ்ட மகரிஷியிடம் வேத மாதாவான சாவித்ரி தேவியின் ஆராதனா மந்திர உபதேசத்தைப் பெறுகிறாள். பின்பு பக்தி சிரத்தையுடன் பல காலம் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய, கணவன் அச்வபதியும் விடாமல் காயத்ரி ஜெபத்தையும் செய்ய அதன்படியே அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.


"சாவித்ரி' என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். அவள் மணப்பருவத்தை அடைகிறாள். விதி வசமாய் ஒருமுறை சாவித்ரி, சத்யசேனன் என்ற சத்யவானைக் காண நேரிட்டது. அப்போது அவன் கண் பார்வையற்ற தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறான். அவன் தன் பெற்றோர்பால் கொண்டிருந்த பக்தியும் சிரத்தையும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவனையே தன் கணவனாக மனதில் வரித்து விடுகிறாள்.


அவள் விரும்பிய சத்யவானையே மணக்க சாவித்ரியின் தந்தையும் சம்மதிக்கிறார். இந்த நிலையில் நாரதர் சாவித்ரியிடம் வந்து, "அம்மா.. நீ நெடுங்காலம் சௌபாக்யவதியாய் சகல லக்ஷ்மிகரமும் பொருந்திய வாழ்வு வாழ வேண்டியவள். இந்த சத்யவானுக்கு ஆயுள் பலம் கிடையாது. இன்னும் ஓராண்டில் அவன் காலகதி 

அடைந்து விடுவான். எனவே, இவனைத் தவிர்த்துவிட்டு வேறு ஒரு நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்'' என்று உபதேசிக்கிறார். எனினும் சாவித்ரியும் தன் தந்தையிடம் மன்றாடி சத்யவானையே மணக்கிறாள்.


நாரதர் சொன்னபடியே சத்தியவான் காட்டில் விறகு வெட்டி வரச் சென்று அங்கு தன் கோடரியால் காலை வெட்டிக் கொண்டு கீழே சாய்கிறான். யமதர்மராஜன் பாசக்கயிற்றை வீசி அவன் உயிரைக் கவர்ந்து கொண்டு செல்கிறான். அவனை விடாமல் பின் தொடர்கிறாள் சாவித்ரி. தன் கணவன் உயிரை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று யமனிடம் மன்றாடி வேண்டுகிறாள். 


சாவித்ரியின் மன உறுதியையும், பதிவிரதா பக்தியின் மேன்மையையும் உணர்ந்த யமதர்மராஜன் அவளுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்கிறான்.

"தர்மபிரபுவே... என் கற்புக்குப் பங்கம் வராமல் எனக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வரம் தாரும்'' என்கிறாள். யமனும் "இவ்வளவுதானே தந்தேன்'' என்று அவள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டான். அவள் கணவன் உயிரோடு இருந்தால்தானே அவள் கேட்டபடி குழந்தைகள் பிறக்கும்? யமதர்மராஜனுக்கு 

இப்போது சத்தியவானின் உயிரைத் திரும்பத் தருவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், சத்தியவானை உயிர்ப்பித்துவிட்டு மறைகிறான்.


சாவித்ரி செய்த அந்த நோன்பு மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. சிலர் இதை, "ஸம்பத் கௌரீ'' பூஜை என்றும் சொல்கிறார்கள். 


என்றும் உங்கள் குடும்பமும் நலமாக இருக்க காமாக்ஷி தேவியை பிராத்திக்கிறேன்.

நாமும் சந்தோஷமாக  இருப்போம்.மற்றவர்களும்  சந்தோஷமாக இருக்க வழிவகுப்போம்.

Friday, 4 March 2022

காரடையான் நோன்பு

 காரடையான் நோன்பு ஸ்பெஷல் !


மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.


சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள்.  இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.


மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.


விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.


பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

 #ஜெய_ஜனார்த்தன_கிருஷ்ணா_ராதிகா_பதே

ஜெயஜனார்த்தனகிருஷ்ணாராதிகாபதே

ஜனவிமொக்ஷனகிருஷ்ணாஜென்மமோக்ஷன


கருடவாகனகிருஷ்ணாகோபிகாபதே

நயனமோகனகிருஷ்ணாநீரஜீக்ஷன

சுஜனபாந்தவகிருஷ்ணாசுந்தராக்ருதே

மதனகோமளாகிருஷ்ணாமாதவாஹரி


வசுமதிபதேகிருஷ்ணாவாசவனுஜா

வரகுணாகராகிருஷ்ணாவைஷ்ணவாக்ருதே

சுருசிராணனகிருஷ்ணாஷௌர்யவாரிதி

முரஹராவிபோகிருஷ்ணாமுக்திதாயக

விமலபாலககிருஷ்ணாவல்லபிபதே

கமலலோசனகிருஷ்ணாகாம்யதாயக

ஜெயஜனார்த்தனகிருஷ்ணாராதிகாபதே

ஜனவிமொக்ஷனகிருஷ்ணாஜென்மமோக்ஷன

விமலகத்ரனேகிருஷ்ணாபக்தவத்சலா


சரணபல்லவம்கிருஷ்ணாகருணகோமளம்

குவலஈஷனகிருஷ்ணாகோமளாக்ருதே

தவபதாம்புஜம்கிருஷ்ணாஷரனமாஸ்ரையே

புவனநாயககிருஷ்ணாபாவனக்ருதே

குனகநோஜ்வலகிருஷ்ணாநளினலோச்சனா

ப்ரனயவாரிதேகிருஷ்ணாகுணகனாகர

தாமசொதரகிருஷ்ணாதீனவத்சலா

காமசுந்தராகிருஷ்ணாபாஹிசர்வத

நரகநாசனகிருஷ்ணாநரசஹாயக

தேவகிசுதாகிருஷ்ணாகாருண்யம்புதே

கம்ஸநாசனகிருஷ்ணாதுவாரகஇஸ்தித

பாவணத்மகாகிருஷ்ணாதேஹிமங்களம்

தவபதாம்புஜம்கிருஷ்ணாஷ்யாமகோமளம்

பக்தவத்சலாகிருஷ்ணாகாம்யதாயாக

பாலிசென்னணுகிருஷ்ணாஸ்ரீஹரிநமோ

ஜெயஜனார்த்தனகிருஷ்ணாராதிகாபதே

ஜனவிமொக்ஷனகிருஷ்ணாஜென்மமோக்ஷன


பக்ததாசன கிருஷ்ணாஹரசுணீசதா

காடுநிந்தெனகிருஷ்ணாசலஹியாவிபோ

கருடவாகனகிருஷ்ணாகோபிகாபதே

நயனமோகனகிருஷ்ணாநீரஜீக்ஷன


ஜெயஜனார்த்தனகிருஷ்ணாராதிகாபதே

ஜனவிமொக்ஷனகிருஷ்ணாஜென்மமோக்ஷன

Thursday, 3 March 2022

பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்

 #பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்:


ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம்-பீத வஸ்த்ராதி பூஷம்

பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்


#பொருள் :


பீதாம்பரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தவரும், பக்தர்களைக் காப்பவரும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவருமான ஸ்ரீபார்த்த சாரதியை வணங்குகிறேன்.


1.ஸ்ரீகைரவிண்யாஸுதீரே-பத்ம

நேத்ரம் பவித்ரம் புராரேஸ்ஸுமித்ரம்

சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம்-ருக்மிணீ

ஸத்யபாமா ஸமாச்லிஷ்டகாத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


கைரவிணீ எனும் குளக்கரையில் இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி, ஸ்ரீபரமேச்வரனின் நண்பர், சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணீ, சத்யபாமா இவர்களால் ஆலிங்கனம் செய்யப்பட்டவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


2. பீஷ்மாதி பானணக்ஷதாஸ்யம்-புக்தி

முக்தியேகலாபாய பக்தைருபாத்யம்

பக்தார்த்தி ஹாரிஸ்மிதாஸ்யம்-பார்த்த

வாத்ஸல்ப ஸம்ப்ராப்த தௌத்யாதி தாஸ்யம் (ஸ்ரீ)


#பொருள் :


பீஷ்மர், துரோணர் முதலிய மகான்களின் அம்புகளால் முகத்தில் வடுக்களை உடையவரும், சர்வபோகங்கள், மோஷம் ஆகியவற்றின் லாபத்திற்காகப் பக்தர்களால் உபாசிக்கத் தகுந்தவரும், பக்தர்களின் கஷ்டத்தை நீக்கும் புன்சிரிப்புடையவரும், அர்ஜுனனிடத்திலுள்ள அன்பால் தூது முதலிய வேலையைச் செய்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


3.லோகாவனாயாத்தலீலம் பூஜி

தானேக தேவேந்த்ர லோகைக பாலம்

ஸ்ரீ தேவகீ புண்யபாலம்-ஆஹ்ரு

தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்


#பொருள் :


உலகைக் காக்க பால லீலைகள் புரிந்தவரும், இந்திரன் முதலிய பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் பல தங்கப் பட்டாடைகளைக் கவர்ந்தவருமான ஸ்ரீ பார்த்த சாரதியை பூஜிக்கிறேன்.


4. பா ஹுத்வயோபேததேஹம் -பாஞ்ச

ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்

ஸ்ரீகாருடஸ்வீயவாஹம்-புத்ர

பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம் (ஸ்ரீ)


#பொருள் :


இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


5. வாமேகரே சாருசக்ரம்-வார

ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்சப்த நக்ரம்

காருண்யஸ்ம்பூர்ண நேத்ரம்-ஸ்வீய

ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யுபேதம்-ரங்க

நாதே தேவேன நித்யம் ஸமேதம்

பக்தைஸ்ஸதா ஸாதுகீதம்-ஸ்வீய

பக்தாய பார்த்தாய ஸம்ப்ரோக்த கீதம் (ஸ்ரீ)


#பொருள் :

ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


7.பக்தயாக்ருதம் ஸதோத்ரரத்னம்-தீக்ஷி

தானந்தராமேண ஸர்வார்த்த ஸித்யை

நித்யம் படேத் பக்தி சாயீ-வாஸு

தேவ ப்ரஸாதோ பவேதேவ தஸ்ய (ஸ்ரீ)


#பொருள் :


விரும்பியவை சித்திக்கும் பொருட்டு ஸ்ரீஅனந்த ராம தீக்ஷிதரால் பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பக்தியோடு படிப்பவருக்கு ஸ்ரீபார்த்தசாரதியின் அருள் கிடைக்கும்.


#ஸ்ரீ_பார்த்தசாரதி_சுவாமி_பெருமை:


மகாபாரதத்தின்படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். *


இங்கு உற்சவ மூர்த்தி தன் #கதாயுதம்_இல்லாமல் #செங்கோலுடன்_காட்சி_தருகிறார்.


🙏#ஸ்ரீ_பார்த்தசாரதி_உன்_திருவடிகளே_சரணம்".🙏


*ஓம் நமோநாராயணா*

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...