Tuesday, 20 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீ #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம்🍀
--
🍀#வாழ்க்கை #தத்துவம் 🍀

🍀#காவியம்🍀  :  11
மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

🍀#ஸாரம்🍀:
***************
தனத்திலோ (ஸுகம்), குழந்தை பருவத்திலோ, யௌவ்வன் பருவத்திலோ அபிமானம் கொள்ளாதே, ஏனென்றால் காலம் இப்பருவங்களை எல்லாம் அகற்றிவிடுகிறது.
(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்)
மாயையால் உண்டான இந்த உலகவாழ்வை விட்டு (என்றேன்றும் சாஸ்வதமான) ப்ரஹ்ம பதத்தை அறிந்து அதில் மூழ்குவாயாம.

🍀#விளக்கம்🍀:
******************
உலகஸுகம் தனத்தால் கிடைப்பது.  தனம் சாச்வதமல்ல. அதேபோள் குழந்தை/யௌவன பருவவங்கள் சாச்வதமல்ல. ஏனெனில் அவை காலப்போக்கில் மாறக்குடியவை, அழியக் கூடியவை.. ஸுகமும் துக்கமும் மாறி மாறி நிகழ்கின்றன.
(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்)
அவை இரண்டும் அனித்தியம். பால்யம், கௌமாரம், யௌவ்வனனம், வார்த்தக்யம் என நாலு நிலைகள் நம் ஜீவித்தத்தில் வருகிறது.  ஆகயால், இந்த ஒரு நிலையும் சாச்வதமல்ல். என தெளிவாகிறது.
--
 ஆதலால் இதன்மேல் அபிமானம் அல்லது நாட்டம் கொள்வது மூடத்தனம்.  அதேபோல் இந்த உலகத்திலுள்ள எல்லா வஸ்த்துக்களும் மாறக்குடியவை, கிரமேண அழியக்குடியவை.
(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்)
ஏது சாச்வதமல்லவோ அது மாயாஸவரூபம் என அறிந்துகொள்ள வேண்டும். இந்த மாயா வடிவான உலகை துறந்து (விட்டு) நித்திய வஸ்துவான ப்ரஹம்த்தை உண்ர்ந்து அதாகவை பரிணமிக்க வேண்டும். 
--
ஆனால்தான் நாம் ஜீவன்முக்தர்களாவோம் என கருத்து. ஸ்ரீ சங்கரர் இங்கு "ப்ரஹ்ம்ம ஸத்யம் ஜகன் மித்யா" (ப்ரஹ்மம் ஒன்றுதான் ஸத்யநிலை, நித்தியம், சாஸ்வதம், உலகம் அநித்தியம் அல்லது மாயை என்ற தத்தவத்தை நிலை நாட்டுகிறார். 
(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்)
அப்படி ப்ரஹ்ம்நிலை ஏயதி விட்டால் அதில்தானே திடமாக இருக்கவேண்டும்.  அதைத்தான் "ஆதம ஸாக்ஷாத்க்காரரம்" என குறிப்பிடுகிறார்கள் பெரியோர்கள். ப்ரஹ்மத்தை அறிவது என்பத்ர்க்கு பதிலாக ப்ரஹ்மநிலையில் திகழ்வது என்பது மிக பொருத்தமான விளக்கமாகும்.

#பஜகோவிந்தம் #தொடரும்..........

#தொகுப்பு  :  🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀

பஜகோவிந்தம்

🍀#ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட #பஜகோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம் 🍀 :10
~~~~~~~~~~~~~~
வயஸி கதே க:காமவிகார:
சுஷ்கே நீரே க:காஸார:
க்ஷீணே வித்தே க:பரிவார:
ஞாதே தத்வே க:ஸம்ஸார:

🍀#ஸாரம்🍀:
***************
முதிர்ச்சி அடையும்போது (அதாவது சிறுவயது போய் வயதாகும்போது) என்ன காம விசாரம்? ஜலம் வற்றின் பிறகு எங்கே தடாகம் (ஏரி)? தனமில்லதாகும் பொழுது எங்கே சுற்றத்தார்கள்? (ஆத்ம) ஞானம் கிடைத்தபிறகு ஏது ஸம்ஸாரம்?

🍀#விளக்கம்🍀:
******************
உலக பந்தம் பலனில் அடங்கியது.  ந்மக்கு பலன் இல்லையேல் நாம் யாருடனும் குட்டுறவு வைத்துக்கொள்ள மாட்டோம். சிறுவயது போய் நாம் முதிர்ச்சி அடையும்போது நம்க்கு காம விசாரங்கள் அடங்கிவிடுகிறது.  முதியோர்களில் சிறுவர்களில் காணும் காம உணர்ச்சி அல்லது ஸல்லாபம் இருப்பதில்லை.

ஒரு தடாகத்தில் (ஏரி) ஜலம் முழுதும் வற்றிவிட்டால் அதர்க்கு தடாகம் என்ற பேர் போய்விடுகிறது. அதேபோல் ந்ம்மிடம் தனமில்லையேல் ந்ம உறவினர்கள் ந்ம்மை நாடி வரமாட்டார்கள்.  அதாவது நம் பொருளாதார நிலை போய் விட்டாள் சுற்றத்தார் விலகிவிடுவார்கள்.

ஆத்மஞானம் வந்து விட்டால் இந்த உலக வாழ்க்கை நமக்கு கிடையாது முன் சொன்ன ஸ்லோகத்தில் ஆத்ம ஞானம் பெற வழியை காண்பித்தார்.  எதர்க்காக ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்று இந்த ஸ்லோகத்திலும் அடுத்து வரும் ஸ்லோகங்களிலும் விவரிக்கிறார்.

#பஜகோவிந்தம்
#தொடரும்...............

🍀#தொகுப்பு : 🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀

Tuesday, 13 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம்🍀 :  9
ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல தத்வம்
நிச்சல தத்வே ஜீவன் முக்தி:

🍀#ஸாரம்🍀:
****************
ஸத்துக்களுடைய (புண்ணியாதமாக்கள்) கூட்டுறவு கிடைத்தால் பந்தபாசத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.  பந்தபாச விடுதலை நம்மை மோஹத்திலிருந்து (மாயை) விடுபட செய்யும்.  மோஹம் அகன்றால் ஸ்திரமாக உள்ள (நித்திய) வஸ்து விளங்கும்.  ஸ்திரமான வஸ்து விளங்கினால் அதுவே ஜீவன்முக்தி நிலை.

🍀#விளக்கம்🍀:
******************
ஆத்ம விசாரம் செய்ய ந்மக்கு வ்ழிகாட்டி வேண்டும்.  அதுதான் ஸத்துக்களுடைய சங்கம்.  அதாவது ந்ல் வழியில் செல்லும் ஞானிகளின கூட்டுறவு.  அப்படி அவர்களிடம் உறவு கொண்டால் அவர்கள் நம்க்கு வழிகாட்டுவார்கள்.  அப்படி அவர்கள் வழியில் சென்றால், பந்தபாசங்கள் ஒழியும். 

எப்படி?  மேலே சொன்ன ஆத்ம விசார பாதயில் செல்ல அவர்கள் நமக்கு உதவுவார்கள்.  அப்படி ஆத்மவிசாரம் செய்தால் மோஹம் (Deluision) அக்லும். அதாவது மாயை அகலும். அதாவது ஞானம் உதயமாகும். அப்படி மாயை அகன்று ஞானம் வந்தால் ஸ்திரமாக உள்ள நிச்சலமான வஸ்து (SELF)  ந்மக்கு புலப்படும். 

அப்படி புலப்பட்டால் அதுவே ந்மக்கு மன அமைய்தியை தந்து இந்த உடலில் இருக்கும்போதே ஜீவன்முக்த நிலையை தரும். இதைத்தான் ஸ்ரீ ரமணமஹர்ஷி "Self Realization"  என கூறியிருக்கிறார்.

 திருப்புகழ் என்ற கிரந்தத்தில் ஸ்ரீ அருணகிரி நாதர் "ஸ்வானுபூதி" என குறிப்பிட்டுள்ளாற். இதைத்தான் ஆட்ம ஸாக்ஷாத்க்காரம் என்று கூறுகிறார்கள்.  அதாவது தன்னை தானே அறிந்துகொள்வது.  இதுதான் நம் வாழ்க்கை லக்ஷியம்.

#பஜகோவிந்தம் #தொடரும்...................

#தொகுப்பு :🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீ #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம்🍀  :  8
காதே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரொயம் அதீவ விசித்ர:
கஸ்யத்வம் க: குத ஆயாத:
த்த்வம் சிந்தய த்திஹ ப்ராந்த:

🍀#ஸாரம்🍀:
***************
உன்னுடய ப்ரியதமன் அல்லது ப்ரியதமை யார்? யார் உன்னுடய புத்திரன்? இந்த ஸம்ஸார ஸாகர்ம் (குடும்பஜீவிதம்) அதி விசித்ரமாக உள்ளது.  நீ யாருடையவன்? நீ யார்? எங்கிருந்து வந்தாய்? இப்படி (வழ்க்கை) தத்துவத்தை பற்றி சிந்தனை செய் சகோதரா!

🍀விளக்கம்🍀:
*****************
இந்த ஸ்லோகம் மூலம் நம்மை ஆத்ம சிந்தனையில் ஈடுபட சொல்கிறார்.  யார் மனைவி அல்லது பர்த்தா?  யார் புத்திரன்? நான் யாருடையவன்?  நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், இந்த ஸம்ஸாரம் (குடும்ப பந்தம்) விசித்ரமாக உள்ளதே என்ற தத்வார்த்தமாக சிந்தனை செய் என பொருள்.

 ஸ்ரீ ரமண மஹர்ஷியின் "நான் யார்" என்ற நூலில் இதைத்தான் அவர் கூறுகிறார். முதலில் ந்ம்மை அறிந்துகொள்ள வேண்டும்.  இல்லையேல் உலக ஞானம் பூர்த்தியாகாது.  உலகத்தை அறிவதர்க்கு முன் யார் அறிகிறார்கள் என பார்க்க வேண்டும்.

(Know the Knower).  அதாவது பார்ப்பவனை (Subject) அறியுமுன் பாற்ப்பதை (Object)  அறிய இயலாது.  அந்த ஞான்ம் பூர்த்தியாகாது.. ஸ்ரீ சங்கரர் ஆத்ம விசாரத்தில் ந்ம்மை மூழ்க சொல்கிறார்.

#பஜகோவிந்தம் #தொடரும்..................

#தொகுப்பு  :  🍀#திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீ  #ஆதிசங்கர #பகவத்பாதரால்  #இயற்றப்பட்ட #பஜகோவிந்தம் 🍀-
--
🍀#வாழ்க்கை #தத்துவம்🍀
--
🍀#காவியம்🍀  :  7 பாலஸ்தாவத் க்ரீடாsஸக்த:
தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தாsஸக்த:
பரமே ப்ருஹ்மணி கோsபினஸக்த:

🍀ஸாரம்🍀:
**************
பால்ய வயது விளையாட்டில் செலவாகிறது, இளைய பிராயம் ஸ்த்ரீ ஸல்லபத்தில் மூழ்கிவிடுகிறது,, முதிர்ச்சிகாலம் விசாரத்தில் (சிந்தனையில்) நலிகிறது, (மனிதன்) ஒருபொழுதும் பிரஹ்ம்மத்தை நாடுவதில்லை

🍀விளக்கம்🍀:
*****************
வாழ்க்கை எவ்வண்ணம் வியர்த்தமாகிறது என மிக தெளிவாக சித்ரீகரித்திருக்கிறார். குழந்தை பிராயத்தில் நாம் களிப்பாட்டங்களில் மனதை இழக்கிறோம்.  அப்பொழுது சிந்தித்து வேலை செய்ய இயலாது.  குட்டிக்காலம் இப்படி வியர்த்தமாகி விடுகிறது. 

பௌரனானால் ஸ்த்ரீசுகத்தில் காலம் ஓட்டுகிறோம்.  ஸ்த்ரீ ஸுகம் என்பது பெண்களுடன் உறவாடுவது மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா வித ஸுகங்களையும் அது குறிக்கிறது;  இப்படி உலக்த்திலுள்ள ஸகல சுகங்களையும் அனுபவிக்க மனம் துடிக்கிறது.  அப்பொழுதும் நம் சத்திய நிலையை அறிய ஆவல் கொள்வதில்லை.

முதிர்ச்சியடைந்தால் நாம் தனித்துவிடப்பட்டு சிந்தனையில், விசாரத்தில், கவலையில ஆழ்ந்துவிடுகிறோம்.  நம் குடும்பம், குழந்தைகள், பேரன், பேட்த்தி முதலியவர்கள் நலனுக்காக கவலைப்படுதல், ந்ம்மை யாரும் கவனிக்கவில்லையே என்ற கவலை, நம்மை மரணம் அண்டுமே என்ற கவலை இத்யாதி ஸதா ஸர்வநேரமும் கவலைப்படுவதிலேயே நம் சமயத்தை கழிக்கிறோம். 

அப்பொழுதும் பிரஹ்ம்மத்தை (நம் சத்திய நிலையை) ஆராய்வதில்லை.  ஆத்மஞானம் பெற பாடுபடுவதில்லை.  இப்படி வாழ்நாள் முழுதும் வியர்த்தமாக கழித்துவிடுகிறோம்.  பகவத் சிந்தனை (ஆதம விசாரம்) நம்மை நாடுவதில்லை.  பிறகு எப்படி ஆத்ம சாந்தி பெறுவது?  எப்படி ஜீவன்முக்தன் நிலையை ஏய்வது.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்.............

🍀#தொகுப்பு  :  #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

பஜகோவிந்தம்

🍀#ஆதிசங்கர் #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட #பஜகோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம் 🍀

🍀#காவியம்🍀  :  6
யாவத் பவனோ நிவஸதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாsபாயே
பார்யா பிம்ப்யதி தஸ்மின் காயே

🍀ஸாரம்🍀:
*************
(உன்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை உனது குடும்பத்தினர் உன் நலனில் இச்சை காட்டுவார்கள்.  தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டாள், உனது மனைவிகூட உன் (உயிரற்ற) சடலத்தை கண்டு நடுங்குவாள்.

🍀விளக்கம்🍀:
*****************
பந்தம் பாசம் என்பது உடலில் உயிர் உள்ளதுவரை தான்.  உயிர் போய் தேஹம் சடலமாகிவிட்டால், அதர்க்கு பெயர் பிணம்.  பிணத்ததை பார்த்து யார்தான் பயப்படமாட்டார்கள்.  அப்பொழுது மனைவிகூட அந்த சடலத்தை அணுக பயப்படுவாள். ஏன் மனைவி என்று குறிப்பாக சொல்லணும்?  ஏற்றவும் பாஸ்த்துடன் கூடின உறவு கணவ்ன் மனைவி தானே.

 ஸ்த்ரீகளை கருதும்போது, இங்கு மனைவி என்பதை கணவன் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.  ஏனென்றால் இது இரண்டு தரப்பினருக்கும் பாதகமான தத்துவம். இது எவ்வளவு கண்கூடான சத்தியம்!  வாழும்போது, இந்த உடலை நாம் போற்றீ கோண்டாடுகிறோம்.

அதர்க்கு எல்லா ஸௌகரியங்களையும் சைய்துகொடுத்து மகிழ்ச்சி அடைகிறோம்.  இந்த உடல் நிரந்தரம் அல்ல, அழியக்கூடியது என்ற உண்மை ந்மக்கு தெரிவதில்லை. மரணத்திர்க்கு பிறகு உடல் தீண்டப்பட மாட்டாது என்ற உண்மையை விளக்குகிறார்.

#பஜகோவிந்தம் #தொடரும்..........

🍀#தொகுப்பு  :  🍀#திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

பஜகோவிந்தம்

🍀#ஆதிசங்கர #பகவத் #பாதரால்இயற்றப்பட்ட #பஜகோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀
 
🍀#காவியம்🍀 : 5
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோsபின ப்ருச்சதி கேஹே
ஸாரம்:

உன்னால் எவ்வளவு காலம் சம்பாதிக்க முடியுமோ, அது நாள் வரை உன்னை சார்ந்தவர்கள் உன்னிடம் நெருங்கி பழகுவார்கள்.எப்பொழுது நரை விழுந்து தேஹம் நலிந்துபோகிறதோ அப்பொழுது யாரும்–உன் குடும்பத்தார் கூட-உன்னிடம் பேசமாட்டார்கள்

🍀விளக்கம்🍀:
****************
நாம் கண்கூடாக பார்க்கும் ஓர் சத்தியநிலையை எவ்வள்வு ஸுலபமாக சித்ரீகரித்திருக்கிறார்! நம்மால் எவ்வள்வு நாள் ஸம்பாதித்து பண் உதவி பண்ண இயலுகிறதோ அதாவது மற்றவருக்கு எவ்வளவு காலம் ந்ம்மால் உபயோகமுண்டோ அது வரை நம்மை சார்ந்தவர்கள் ந்ம்மிடம் ஒட்டி உறவாடுவார்கள்.

 உலக நியதிப்படி பார்த்தால், எல்லோரும் மற்றவ்ரிடம் உதவி எதிர்பார்த்து உறவு கொள்கிறார்கள்.  நமக்கு வயதாகி வந்து, நம் தேஹம் நரை கண்டு, க்ஷீணமாகி ந்ம்மால் மற்றவருக்கு உபயோகமில்லாமல ஆகிவிடும்பொழுது, நம் சொந்த குடும்பத்தினரும் கூட ந்ம்மிடம் ஒட்டி உற்வாட தயங்குவார்கள்.

 பேசுவதர்க்கு கூட அருகில் வர மாடார்கள்.  இதிலிருந்து, உலகத்தில் எந்த உறவும் சாச்வதமல்ல என்ற தத்துவத்தை மிக எளிதாக சுட்டிகாட்டியிருக்கிறார்.
--
#பஜகோவிந்தம் #தொடரும்.........
--
🍀#தொகுப்பு  :🍀 #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...