Saturday, 19 October 2024

ஸ்ரீ த்ரிபுரஸுந்தரி - அஷ்டகம் !

 தை வெள்ளி ஸ்பெஷல் !


ஸ்ரீ த்ரிபுரஸுந்தரி - அஷ்டகம் !


1.கதம்ப வந சாரிணீம் முனிகதம்பகாதம்பிநீம்

நிதம்பஜிதபூதராம் ஸுரநிதம்பிநீபூஜிதாம் I

நவாம்புருஹலோசநாம் அபிநவாம்புத ச்யாமலாம்

த்ரிலோசன குடும்பிநீம் த்ரிபுரஸுந்தரீமாச்ரயே II


கதம்பவனத்தில் வசிப்பவளும், முனிவர்களாகிய தம்ப வனத்திற்கு மலர்ச்சியை அளிக்கும் முகில் கூட்டமெனத்திகழ்பவளும், மலைபோல் திகழும் கடிபாகத்தையுடையவளும், தேவ மங்கையர் வழிபட நிற்பவளும், புதுத்தாமரை யத்த கண்களையுடையவளும், புதிய நீருண்ட மேகம் போன்று கருமேனியுடையவளும், முக்கண்ணர் மனையாளுமான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.


2.கதம்பவந வாஸினீம் கனகவல்லகீ தாரிணீம்

மஹார்ஹமணிஹாரிணீம் முகஸமுல்லஸத்வாருணீம்

தயாவிபவ காரிணீம் விசதரோசனாசாரிணீம்

த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸுந்தராமாச்ரயே II


கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்க வீணை தாங்கியவளும், மதிப்பு மிக்க மாணிக்க ஹாரம் பூண்டவளும், வாயில் கமழும் வாருணி கொண்டவளும், பக்தர்களுக்கு கருணை பாலிப்பவளும், தெளிவான கோரோசனை திலகம் கொண்டவளும், முக்கணர்மனையாளுமாகிய த்ரிபுர சுந்தரியை சரண்புகுகிறேன்.


3.கதாம்பவனசாலயா குசபரோல்லன்மாலயா

குசேபமிதசைலயா குருக்ருபாலஸத்வேலயா I

மதாருணகபோலயா மதுரகீத வாசாலயா

கயாபி கனலீலயா கவசிதா வயம் லீலயா II


கதம்ப வனத்தில் குடிகொண்டதும், மலையையத்த மார்பகங்களையுடையதும், அம்மார்பகங்களில் துவளும் மாலைகளுடன் அளவில்லாத கருணையின் எல்லையோ எனத்திகழ்வதும், வாருணீ மதத்தால் செவ்வேறிய கன்னங்களையுடையதும், இனிய கீதம் முழுங்குவதும், நீருண்ட மேகமென விளங்குவதுமான ஆச்சார்யமான பேரருளால் நாங்கள் பாதுகாப்பு உடையவர்களானோம்.


4.கதம்பவனமத்யகாம் கனகமண்டலோபஸ்திதாம்

ஷடம்புருஹ வாஸினீம் ஸததஸித்த ஸெளதாமினீம்

விடம்பிதஜபாருசிம் விகர சந்த்ர சூடாமணிம்

த்ரிலோசன குடும்பினீம், த்ரிபுரஸுந்தரீமாச்ரயே II


கதம்பவனத்திற்குள் வசிப்பவளும், தங்கமயமன மண்டலத்தினுள் ஆறு தாமரை மலர்களில் வசிப்பவளாய் எப்போதும் ஒளிரும் மின்னலாய் இருப்பவளும், ஜபா புஷ்பம்போல் செந்நிரமானவளும், ஒளிரும் சந்திரக்கலை அணிந்தவளும் ஆன முக்கண்ணரான பரமேச்வரன் மனையாளான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.


5.குசாஞ்சித விபஞ்சிகாம் குடிலகுந்தலாலங்க்ருதாம்

குசேசய நிவாஸினீம் குடிலசித்தவித்வேஷிணீம் !

மதாருண விலோசனாம் மனஸிஜாரிஸம்மோஹினீம்

மதங்கமுனிகன்யகாம் மதுரபாஷிணீமாச்ரயே II


மார்பகங்களோடு ஒட்டிய வீணையும், மேடு பள்ளமான குந்தலங்களும் விளங்க, தாமரையில் வீற்றிருந்து, கெட்ட மனதுடையோரை வெறுத்து ஒதுக்கி, மதமேறிய கண்களோடு மன்மதனையடக்கிய பரமனை மயக்குகிற, மதங்கமுனிவர் மகளான, இனிய பேச்சுடைய மகேச்வரியை சரண் அடைகிறேன்.


6.ஸ்மரேத் ப்ரதமபுஷ்பிணீம் ருதிரபிந்து நீலாம்பராம்

க்ருஹீதமது பாத்ரிகாம் மதவிகூர்ணநேத்ராஞ்சலாம் I

கனஸ்தனபரோந்நதாம் கலித சூலிகாம் ச்யாமலாம்

த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுர ஸுந்தரீ மாச்ரயே II


மன்மதனின் முதல் பாணமான தாமரை மலர் கொண்டவளும், ரத்தப்பொட்டுகளடங்கிய நீல வஸ்திரம் தரித்தவளும், கையில் மது பாத்திரமேந்தியவளும், மதமேறிய கண்களும், பருத்த ஸ்தனங்களும், அவிழ்ந்த முடியும் கொண்டு கருத்த மேனியளான முக்கண்ணரின் மனவியை த்ரிபுர சுந்தரியை சரண் அடைகிறேன்.


7.ஸகுங்கும் விலேபனாம் அலகசும்பி கஸ்தூரிகாம்

ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸதரசாப பாசாங்குசாம் I

அசேஷஜன மோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்

ஜபாகுஸுப பாஸுராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம் II


ஜபம் செய்யும்போது ஜபாம்புஷ்பம் போல் விளங்கும் அம்பிகையை நான் ஸ்மரிக்கிறேன். அந்த அம்பிகையானவள் குங்குமப் பூச்சுடனும், அலகங்களைத் தொடும் கஸ்தூரி திலகத்தோடும் விளங்குகிறாள். புன்முருவல் பூத்த கண்களுடனும், வில், பானம், பாசம், அங்குசம் ஏந்திய கைகளுடனும் அகில ஜனங்களையும் கவர்ந்து மோஹிக்கச் செய்கிறாள் அம்பிகை. சிவந்த மாலைகளும், ஆபரணங்களும், ஸ்திரமும் தரித்தவள் அவள்.


8.புரந்தர புரந்த்ரகா சிகுரபந்த ஸைரந்த்ரிகாம்

பிதாமஹபதிவ்ரதா படுபாடீரசர்சாரதாம் I

முகுந்த ரமணீமணீ லஸதலங்க்ரியா காரிணீம்

பஜாமி புவம்பிகாம் ஸுரவதூடிகா சேடிகாம் II


தேவமங்கயரை வேலைக்காரிகளாகக் கொண்டுள்ள புவன மாதாவான அம்பிகையை ஸேவிக்கிறேன். இந்த்ரன் மனைவி, அம்பிகையின் தலையை வாரிப்பின்னும் ஒப்பனைக்காரியாகவும், ஸரஸ்வதிதேவி, அம்பிகையின் உடலை சந்தனக்குழம்பால் பூசும் தங்கையாகவும், லக்ஷ்மீ தேவி, பல ஆபரணங்களால் அம்பிகையை அழகுபடுத்தும் மாதுவாகவும் பணிபுரிகிறார்கள்.


ஸ்ரீ த்ரிபுரஸுந்தரி அஷ்டகம் முற்றிற்று.

நெல்லை காந்திமதீஸ்வரி அஷ்டகம்

 நெல்லை காந்திமதீஸ்வரி #அஷ்டகம்

மஹிமையும் பலனும்.


சிருங்ககிரி ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவந்ருஸிம்ஹ பாரதீ சுவாமிகள் அருளிச் செய்த அஷ்டகம் இது. இதைச் கொடு அதைக் கொடு, என்று கேட்காது போனால் கூட காந்திமதீயான ஸ்ரீராஜராஜேஸ்வரீ மனோபீஷ்டத்தைத் தருவாள். சுபமங்களங்களைக் கொடுப்பாள். ராஜஸன்மானங்கள் கிடைக்கும்படி அருள்பாலிப்பாள். குடும்ப ஸம்ருத்தியைக் கொடுப்பாள். ஆயுளும் ஆரோக்கியமும் அபிவிருத்தி அடையும்படிச் செய்வாள்.


அஷ்டகம்


ஸ்ரீமத் வேணுவநேச் வரஸ்ய ரமணீம்

சீ தாம்சு பிம்பானனாம்

ஸிஞ்ஜந்நூபுர கோமளாங்க்ரிகமலாம்

கேயூரஹாராந்விதாம்

ரத்நஸ்யூத கிரீட குண்டலதராம்

ஹேலாவிநோதப்ரியாம்

ஸ்ரீமத் காந்திமதீச் வரீம் ஹ்ருதி

பஜே ஸ்ரீ ராஜராஜேச்வரீம்


தத்வஞானி ஹ்ருதப்ஜமத்ய

நிலயாம் தாம்ராப காத்ரகாம்

காருண்யாம்நுபு நிதிம் தடித்

துலிதபாம் தாளிதலச்யாமலாம்

லீலா ச்ருஷ்டி விதாயிநீம்

தநுப்ருதாம் தாத்பர்ய போ தாப் தயே

தந்வீம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜராஜேச்வரீம்


ஸங்கீதாம்ருத பிந்து மத்ய

பவநாம் ஸாஹித்ய நித்யாதராம்

ஸ்வாரஸ்யாத்புத நாட்யவீக்ஷணபராம்

ஸாலோக்ய முக்த்யாதிதாம்

ஸாதுப்ய: ஸகலாம் ஆர்தித

மஹாஸாம்ராஜ்யலக்ஷ்மீ ப்ரதாம்

ஸாத்வீம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜராஜேச்வரீம்


கல்யாணீம் அகிலாண்டகோடி

ஜநநீம்கல்ஹார தாமோஜ்வலாம்

கஸ்தூரீ திலகா பிராமநிடிலாம்

கஞ்ஜாஸனாராதிதாம்

காமாரே: கனகாசலேந்த்ர

தநுஷ: காருண்யவாராம்நிதே

காந்தாம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜராஜேச்வரீம்


பக்தானாம் பயஜால பஞ்ஜநகரீம்

பாந்வப்ஜந் சுக்ரேக்ஷணாம்

பாக்யோதார குணாந்விதாம்

பகவதீம் பண்டரஸுர த்வம் ஸிநீம்

பாஸ்வத் ரத்ந கிரீடகுண்ட லதராம்

பத்ராஸநாத்யாஸிநீம்

பவ்யாம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜராஜேச்வரீம்


தேவாநாம் அபயப்ரதம் விதிநுதாம்

துஷ்டாபஹந்த்ரீம் சுகாம்

தேசாநேக திகந்த மத்யநிலயாம்

தேஹார்த தாஸ்யப்ரியாம்

மாதுர்யாகர சந்த்ரகண்ட மகுடாம்

தேவாங்கனாஸேவிதாம்

தேவீம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜராஜேச்வரீம்


துஷ்டாடோப விநாசனைக நிபுணாம்

தௌர்பாக்ய விச்சேதிநீம்

துர்மாத்ஸர்யமதாபி மாநமதிநீம்

து: காபஹாம் ப்ராணினாம்

துர்வாராமித தைத்யபஞ்ஜநகரீம்

துஸ்ஸ்வப்நஹந்த்ரீம் சிவாம்

துர்காம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜ ராஜேச்வரீம்


மந்தஸ்மேர முகாம்புஜாம் மரகத

ச்யாமாம் மஹாவைபவாம்

மாதங்கீம் மஹிஷாஸுரஸ்யசமநீம்

மாதங்க கும்பஸ்தநீம்

மந்தார த்ரும ஸந்நிபாம்

ஸூமதுராம் ஸிம்ஹாஸனாத் யாஸிதாம்

மாந்யாம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜரா

ஜேச்வரீம்


காந்திமதீச்வரீ அஷ்டகம் ஸம்பூர்ணம்.

கோமதி அம்பாள் அஷ்டகம்

 ஆடி தபசு ஸ்பெஷல் ! 


கோமதி அம்பாள் அஷ்டகம் !


      பூனகலாஸே மனோக்ஞே புவன வனவ்ருதே

              நாகதீர்த்தோபகண்டே

       ரத்னப்ராகார மத்யே ரவிசந்த்ர மஹாயோக

              பீடே நிஷண்ணம் |

       ஸம்ஸார வ்யாதி வைத்யம் ஸகலஜனநுதம்

         சங்கபத்மார்ச்சிதாங்க்ரிம்

       கோமத்யம்பாஸமேதம் ஹரிஹரவபுஷம்

              சங்கரேசம் நமாமி ||


பூசைலாசமெனப்படும் சங்கரநாராணர் கோவிலில் உலகமாகிற காட்டினால் சூழப்பெற்றதும், நாகதீர்த்த மெனப்படும் குளத்தின் அருகிலுள்ளதும், ரத்தினங்களாலான பிராகாரத்தின் நடுவில் உள்ளதுமான சூரிய, சந்திரராகிற யோகபீடத்தில் வீற்றிருப்பவரும், சங்கு, தாமரை முதலிய ரேகைகளைத் திருவடியில் கொண்டவரும், பிறப் பிறப்பு என்கிற நோய்க்கு வைத்தியராயும், கோமதி அம்பாளுடன் கூடியவரும், முக்கண்ணன், திருமால் இரண்டையும் ஒரே உருவத்தில் கொண்டவருமான ஶ்ரீ சங்கரேச்வரரான ஶ்ரீசங்கரலிங்கரை வணங்குகின்றேன்.


       லக்ஷ்மீ வாணீ நிஷேவிதாம்புஜ பதாம்

              லாவண்ய சோபாம் சிவாம்

       லக்ஷ்மீவல்லப பத்மஸம்பவநுதாம்

           லம்போதரோல்லாஸிநீம் |

       நித்யம் கெளசிகவந்த்யமான சரணாம்

              ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்  

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                         1


லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலியவர்களால் நன்கு தொழப்பட்ட திருவடித் தாமரைகளை உடையவளும், திருமால், நான்முகன் ஆகியோர்களால் துதிக்கப்பட்டவரும், தினமும் கெளசிகரால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும், “ஹ்ரீம்” என்னும் மந்திரத்தில் ஒளிவிட்டு விளங்குபவளும், புன்னாகவனத்தின் தலைவரின் மனைவியாய் விளங்குகிற ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       தேவீம் தானவராஜ தர்ப்பஹரிணீம்

              தேவேந்த்ர ஸம்பத்ப்ரதாம்

       கந்தர்வோரக யக்ஷ ஸேவிதபதாம்

              ஶ்ரீசைல மத்யஸ்திதாம் |

       ஜாதீ சம்பக மல்லிகாதி குஸுமை

              ஸம்சோபிதாங்க்ரி த்வயாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                         2


பண்டன் முதலான அரக்கர் தலைவர்களின் கொழுப்பை அடக்கியவளும், மூவுலகத்துத் தலைவனான இந்திரனுக்கு ஒப்பான செல்வத்தைக் கொடுப்பவளும், கந்தர்வர், யக்ஷர், உரகர் முதலியவர்களால் தொழப்பட்ட திருவடிகளை உடையவளும், ஜாதி, சம்பகம், மல்லிகை ஆகிய மலர்களால் பூஜிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும், புன்னாகவனத்தின் தலைவரின் மனைவியும் தேவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       உத்யத்கோடி விகர்த்தனத்யுதிநிபாம்

              மெளர்வீம் பவாம்போநிதே:

       உத்யத்தாரகநாத துல்யவதநாம்

              உத்யோதயந்தீம் ஜகத் |

       ஹஸ்தந்யஸ்த சுகப்ரணாள ஸஹிதாம்

              ஹர்ஷப்ரதாமம்பிகாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                         3


உதயமாகிற கோடிக்கணக்கான சூரியர்களுக்கொப்பான ஒளியை உடையவளும், பிறவிக்கடலைத் தகர்த்தெறிபவளும், உதயமாய்க் கொண்டிருக்கின்ற நக்ஷத்திரக்கூட்டங்களின் தலைவனான சந்திரன் போன்ற முகத்தை உடையவளும், உலகத்தை விளங்கச் செய்பவளும், கிளியையும், தாமரைப் பூவையும் கையில் கொண்டு பக்தர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிற புன்னாகவனத் தலைவரின் மனைவியான ஶ்ரீ கோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       கல்யாணீம் கமநீயமூர்த்திஸஹிதாம்

              கர்ப்பூர தீபோஜ்வலாம்

       கர்ணாந்தாயத லோசனாம் களரவாம்

              காமேச்வரீம் சங்கரீம் |

       கஸ்தூரீ திலகோஜ்வலாம் ஸகருணாம்

              கைவல்ய ஸெளக்யப்ரதாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                         4


கல்யாணியாயும் மிகவும் அழகான திருமேனியைக் கொண்டவளும், கர்ப்பூர தீபங்களால் பிரகாசிக்கிறவளும் காது வரையில் நீண்ட கண்களை உடையவளும், இனிமையான குரலையுடையவளும், காமேச்வரியாயும், சங்கரியாயும், கஸ்தூரிப்பொட்டால் விளங்குகிறவளும், கருணையுடன் கூடியவளும் மோக்ஷம் என்னும் அழியாத ஸெளக்கியத்தைக் கொடுப்பவளும், புன்னாகவனத் தலைவரின் மனைவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       வைடூர்யாதி ஸமஸ்த ரத்னகசிதே

              கல்யாண ஸிம்ஹாஸனே

       ஸ்தித்வா (அ)சேஷஜனஸ்ய பாலனகரீம்

              ஶ்ரீராஜ ராஜேச்வரீம் |

       பக்தாபீஷ்ட பலப்ரதாம் பயஹராம்

              பண்டஸ்ய யுத்தோத்ஸுகாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                         5


வைடூர்யம் முதலிய எல்லா ரத்தினங்களாலும் அமைக்கப்பட்ட ஸிம்மாஸனத்தில் அமர்ந்து உலக ஜனங்களைப் காப்பவளும், ராஜ ராஜர்களுக்குத் தலைவியாயும், பக்தர்களின் இஷ்டத்தைக் கொடுப்பவளும், பயத்தைப் போக்கடித்து பண்டன் என்னும் அரக்கனோடு போர்புரிவதில் ஆர்வமுள்ளவரும், புன்னாகவனத் தலைவரின் மனைவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       சைலாதீசஸுதாம் ஸரோஜநயனாம்

              ஸர்வாகவித்வம்ஸிநீம்

       ஸந்மார்க்கஸ்தித கோகரக்ஷணபராம்

              ஸர்வேச்வரீம் சாம்பவீம் |

       நித்யம் நாரத தும்புரு ப்ரப்ருதிபி:

              வீணாவிநோதஸ்திதாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம் ||                         6


மலையரசனின் மகளும், தாமரை போன்ற கண்களை உடையவளும், பாவக்கூட்டத்தை நாசம் செய்பவளும், நல்வழியில் உள்ள ஜனங்களைக் காப்பவளும் ஸர்வேச்வரியும், சம்புவின் மனைவியாயும், நாரதர், தும்புரு முதலிய தேவ முனிவர்களுடன், வீணை நாதம் செய்பவளும் புன்னாகவனத் தலைவரின் மனைவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       பாபாரண்ய தவாநலாம் ப்ரபஜதாம்

              பாக்யப்ரதாம் பக்திதாம்

       பக்தாபத்குலசைல பேதநபவிம்

              ப்ரத்யக்ஷமூர்த்திம் பராம் |

       மார்க்கண்டேய பராசராதி முநிபி:

              ஸம்ஸ்தூயமாநாம் உமாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                                7


தன்னை அண்டினவர்களின் பாவமாகிற காட்டிற்குத் தீயாயும், பாக்கியத்தையும் பக்தியையும் ஒருங்கே கொடுப்பவளும், பக்தர்களின் மலைபோன்ற ஆபத்துக்கு வஜ்ராயுதம் போன்றவளும், நேரில் காக்ஷி கொடுப்பவளும், மார்க்கண்டேயர், பராசரர் முதலிய முனிவர்களால் நன்கு துதிக்கப்படுபவளும், உமாதேவியும், புன்னாகவனத் தலைவரின் மனைவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       சேதாரண்யநிவாஸிநீம் ப்ரதிதினம்

              ஸ்தோத்ரேண பூர்ணாநநாம்

       த்வத்பாதாம்புஜ ஸக்தபூர்ண மனஸாம்

              ஸ்தோகேதரேஷ்ட ப்ரதாம் |

       நாநாவாத்யவைபவ சோபிதபதாம்

              நாராயணஸ்யாநுஜாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                                8


மனதாகிற காட்டில் வஸிப்பவளும், தினமும் பக்தர்களின் துதியினால் மலர்ந்த முகமுடையவளும், தந்திருவடித்தாமரைகளில் எப்பொழுதும் மனதைச் செலுத்திய பக்தர்களுக்கு அளவற்ற வரங்களைக் கொடுப்பவளும், பலவிதமான வாத்தியங்களினால் விளங்குகிற திருவடிகளை உடையவளும், நாராயணனின் உடன் பிறந்தவளும், புன்னாகவனத் தலைவரின் மனைவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.    

      ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றியதாகக் கருதப்படுகிற ஶ்ரீ கோமதி அஷ்டகம் ஶ்ரீ பி. என். நாராயண சாஸ்திரிகள் எழுதிய தமிழுரையுடன் முற்றிற்று.


அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

ஸ்ரீ_ராமர்_அஷ்டகம்

 #ஸ்ரீ_ராமர்_அஷ்டகம்


வேதவியாசர் அருளியது ஸ்ரீ ராமர் அஷ்டகம்


பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்

ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்


#பொருள்: அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.


ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்

ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்


#பொருள் : அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன்.


நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்

ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.


ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்

நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.


நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்

சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.


பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்

குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்


#பொருள்: சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுகிறேன்.


மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை

பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்ப

வராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிக்கிறேன். (பரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மகாவாக்கியத்தை மூன்று முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதற்குச் சமம் என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.)


சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்

விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிக்கிறேன்.


ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம் வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம் ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்


#பொருள்: வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!

ஸ்ரீ_கிருஷ்ணாஷ்டகம்

 ☘#ஸ்ரீ_கிருஷ்ணாஷ்டகம்☘

--

#அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. 

அந்த வகையில் *

--

#ஸ்ரீகிருஷ்ணனைத்_துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு - #கிருஷ்ணாஷ்டகம்.* ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த #கிருஷ்ணாஷ்டகம்‘ என்பதை இதன் கடைசி ஸ்லோகமான பலஸ்ருதி சொல்கிறது. இந்த  அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!

--

☘#ஸ்ரீ_கிருஷ்ணாஷ்டகம்☘


☘1. *வசுதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘2. *அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘3. *குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம் விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘4. *மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம் பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘5 .*உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் யாதவானாம் சிரோ ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘6. *ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம் அவாப்த துளசீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘7. *கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம் ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘8. *ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலா விராஜிதம் சங்க சக்ரதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


☘9. *க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய படேத் கோடி ஜந்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி*


*#பொருள்:* எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!


#Thanks  :  #kamakoti .#org

ஸ்ரீ_ஸ்ரீ_தாமோதராஷ்டகம்

 தாமோதர  மாதம் ஸ்பெஷல் !


#ஸ்ரீ_ஸ்ரீ_தாமோதராஷ்டகம்


நன்றி ! இணைய தளம் !


1.நமாமீஷ்வரம் ஸச்-சித்-ஆனந்த-ரூபம்

லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம்

யஷோதா-பியோலூகலாத் தாவமானம்

பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய கோப்யா


(1) பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய ரூபத்தில் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகின்றேன். சுரா மீனின் வடிவிலுள்ள காதணிகள் இங்குமங்கும் ஆட, தெய்வீகத் திருத்தலமான கோகுலத்தில் அவர் அழகாக ஜொலித்துக் கொண்டுள்ளார். அன்னை யசோதையைக் கண்ட பயத்தால் மர உரலிலிருந்து இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் அதைவிட வேகமாக அவரை விரட்டிய அன்னையினால் அவரைப் பிடித்துவிட முடிந்தது. அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு நான் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.


2. ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜந்தம்

கராம்போஜ-யுக்மேன ஸாதங்க-நேத்ரம்

முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட-

ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம்


(2) (அன்னையின் கரங்களில் இருந்த கோலைக் கண்ட) அவர் அழுதபடி தாமரைக் கரங்களைக் கொண்டு, பயம் நிறைந்த கண்களை மீண்டும் மீண்டும் கசக்குகிறார். சங்கின் மூன்று கோடுகளை ஒத்திருக்கும் அவரது கழுத்தில் அவர் அணிந்திருக்கும் முத்து மணி மாலை, விம்மி அழுவதனால் அங்குமிங்கும் அசைகின்றது. கயிற்றினால் அல்ல, தனது அன்னையின் அன்பினால் வயிற்றில் கட்டப்பட்ட முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்

கின்றேன்.


3.இதீத்ருக் ஸ்வ-லீலாபிர் ஆனந்த-குண்டே

ஸ்வ-கோஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயந்தம்

ததீயேஷித-க்ஞேஷு பக்தைர் ஜிதத்வம்

புன: ப்ரேமதஸ் தம் ஷதாவ்ருத்தி வந்தே


(3) அத்தகு பால்ய லீலைகளினால் கோகுலவாசிகளை அவர் ஆனந்தக் கடலில் மூழ்கடிக்கின்றார். மதிப்பு மரியாதையைக் கடந்த நெருக்கமான தூய பக்தர்களால் மட்டுமே தன்னை வெல்ல முடியும் என்பதை, ஐஸ்வர்ய ஞானத்தில் மூழ்கியுள்ள தனது பக்தர்களுக்கு அவர் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார். மீண்டும் மீண்டும் எனது பணிவான வணக்கங்களை மிகவுயர்ந்த அன்புடன் பகவான் தாமோதரருக்கு நூற்றுக்கணக்கான முறைகள் சமர்ப்பிக்கின்றேன்.


4. வரம் தேவ மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா

ந சான்யம் வ்ருணே (அ)ஹம் வரேஷாத் அபீஹ

இதம் தே வபுர் நாத கோபால-பாலம்

ஸதா மே மனஸ்-யாவிராஸ்தாம் கிம் அன்யை:


(4) வரம் நல்குவோரில் சிறந்தவரான எம்பெருமானே, அரூபமான முக்தி, உயர்ந்த முக்தியான வைகுண்ட பிராப்தி, அல்லது வேறு எந்த வரத்தையும் நான் தங்களிடம் வேண்டுவதில்லை. பிரபுவே, விருந்தாவனத்தில் உள்ள உமது பால கோபால ரூபம் என் மனதில் எப்போதும் பதிந்திருக்க வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம். இதை விட்டுவிட்டு வேறு வரத்தைப் பெறுவதால் என்ன பலன்?


5. இதம் தே முகாம்போஜம் அத்யந்த நீலைர்

வ்ருதம் குன்தலை: ஸ்னிக்த-ரக்தைஷ் ச கோப்யா

முஹுஷ் சும்பிதம் பிம்ப-ரக்தாதரம் மே

மனஸ்-யாவிராஸ்தாம் அலம் லக்ஷ-லாபை:


(5)எம்பெருமானே, செம்மை கலந்த மிருதுவான கருமை நிற சுருள் கூந்தலால் சூழப்பட்டுள்ள தங்களின் தாமரைத் திருமுகம் மீண்டும் மீண்டும் அன்னை யசோதையினால் முத்தமிடப்படுகிறது; உதடுகள் கோவைப் பழம்போல சிவந்துள்ளன. இத்தாமரைத் திருமுகம் எப்போதும் என் மனதில் தோன்றுவதாக. இலட்சக்

கணக்கான இதர லாபங்களால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.


6.நமோ தேவ தாமோதரானந்த விஷ்ணோ

ப்ரஸீத ப்ரபோ து:க-ஜாலாப்தி-மக்னம்

க்ருபா-த்ருஷ்டி-வ்ருஷ்ட்யாதி-தீனம் பதானு-

க்ருஹாணேஷ மாம் அக்ஞம் ஏத்-யக்ஷி-த்ருஷ்ய:


(6) முழுமுதற் கடவுளே, தங்களுக்கு நான் எனது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன். ஓ தாமோதரா! ஓ அனந்தா! ஓ விஷ்ணு! ஓ பிரபுவே, என்மீது திருப்தியடைவீராக. கருணை மிகுந்த தங்களது பார்வையை என்மேல் பொழிந்து, பௌதிகத் துன்பக் கடலில் மூழ்கி முட்டாளாக இருக்கும் என்னை விடுவியுங்கள்; எனது கண்களுக்குக் காட்சியளி

யுங்கள்.


7.குவேராத்மஜௌ பத்த-மூர்த்யைவ யத்வத்

த்வயா மோசிதௌ பக்தி-பாஜௌ க்ருதௌ ச

ததா ப்ரேம-பக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச

ந மோக்ஷே க்ரஹோ மே (அ)ஸ்தி தாமோதரேஹ


7) ஓ தாமோதரா, மர உரலில் கயிற்றால் கட்டப்பட்டுள்ள தங்களால் குபேரனின் இரு மகன்களும் (மணிக்ரீவன், நளகூவரன்) நாரதரின் சாபத்திலிருந்து விடுபட்டு மாபெரும் பக்தர்களாயினர். அதுபோன்ற பிரேம பக்தியை எனக்கும் கொடுங்கள். நான் அதற்காகவே ஏங்குகிறேன், எந்தவித முக்தியிலும் எனக்கு ஆசையில்லை.


8. நமஸ் தே (அ)ஸ்து தாம்னே ஸ்புரத்-தீப்தி தாம்னே

த்வதீயோதராயாத விஷ்வஸ்ய தாம்னே

நமோ ராதிகாயை த்வதீய-ப்ரியாயை

நமோ (அ)னந்த-லீலாய தேவாய துப்யம்


(8) ஓ தாமோதரா, நான் எனது முதல் வணக்கங்களை உமது வயிற்றைக் கட்டியுள்ள அந்த ஒளிவிடும் கயிற்றுக்கு சமர்ப்பிக்கின்றேன். பின்னர், முழுப் பிரபஞ்சத்தின் இருப்பிடமான உம்முடைய வயிற்றிற்கும், உமக்கு மிகவும் பிரியமான ஸ்ரீமதி ராதாராணிக்கும், அதன் பின்னர், அளவில்லா லீலைகள் புரியும் முழுமுதற் கடவுளாகிய உமக்கும் எமது வணக்கங்களை சமர்ப்பிக்

கின்றேன்.


ஸ்ரீ  க்ருஷ்ணா உன் திருவடிகளே  சரணம்  !

Saturday, 18 May 2024

 இன்று அன்னையர் தினம் !


மாத்ரு பஞ்சகம் !


ஸ்தாம் தாவதியம்ப்ரஸூ தி ஸமயே துர்வார

சூலவ்யதா

நைருச்யம் தனுசோஷணம் மலமயீ சய்யாச

ஸாம்வத்ஸரீ

ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரண க்லேசஸ்ய

யஸ்யாக்ஷம:

தாதும் நிஷ்க்ருதி முன்னதோபி தனய: தஸ்யை

ஜனன்யை நம:


பொதுப் பொருள்: தனது கீர்த்தி, தான் செய்த காரியம் எதுவானாலும் இருக்கட்டும்; எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு  நிமிஷமும் என்னைத் தாங்கியபோது அவள் அடைந்த உடல் துன்பத்துக்குப் பிரதி உபகரமாக நான் ஏதாவது செய்திருக்கிறேனோ?  அதுமட்டுமா, பிரசவ சமயத்தில், தாங்கிக்கொள்ள இயலாததும், பிறரால் பங்கிட்டுக்கொள்ளவும் முடியாததுமான, அவள் அனுபவித்த  சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் என்ன கைம்மாறு செய்திருக்கின்றேன்?இது மட்டுமா? என்னைப் பிரசவித்ததும், என்  உடல்நலத்தைப் பாதுகாக்க, தான் கொஞ்சமும் ருசியில்லாத உணவைச் சாப்பிட்டு ஜீவித்த அந்தத் தியாகச் செம்மலுக்கு நான் என்ன பரிகாரம்  செய்திருக்கிறேன்? தூக்கமில்லாமல், சரியான உணவு இல்லாமல் தன் உடலை இளைக்க வைத்துக்கொண்டு, என்னை அரவணைத்தபடி எனது  மலத்திலேயே படுத்துக்கொண்டு ஒரு வருஷம் என்னைக் காத்த தாயாருக்கு நான் என்ன செய்திருக்கிறேன்? தன்னைக் கஷ்டப்படுத்திக்  கொண்டு அளவற்றப் பொறுமையுடன் காப்பாற்றிய தாயாருக்கு அவளுடைய குழந்தைகள் பிரதியுபகாரம் செய்ததுண்டா? யாராலும் அந்தத்  தியாகத்துக்கு சமமாகப் பிரதியுபகாரம் செய்ய முடியாது. எனவே அம்மையே, இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம் உமக்கு  நமஸ்காரம் செய்வதுதான்; ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே.


குருகுல முபஸ்ருத்ய ஸ்வப்ன காலேது     த்ருஷ்ட்வா

யதி ஸமுசித வேஷம் ப்ராவ்ருதோமாம் த்வ

முச்சை:

குருகுல மத ஸர்வம் ப்ராரு தத்தே ஸமக்ஷம்

ஸபதி சரண யோஸ்தே மாதரஸ்து ப்ரணாம: 


நான் குருகுலக் கல்வியை மேற்கொண்டிருந்தபோது ஒருநாள், அம்மையே நீங்கள் தன்னை மறந்து தூங்கிவிட்டீர்கள். அந்தத் தூக்கத்தில் நான்  சன்யாசியானதுபோல் ஒரு கனவைக் கண்டு, திடுக்கிட்டு எழுந்து பதறியடித்துக்கொண்டு, அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறினீர்கள்.  அதைப் பார்த்து குருகுலவாசிகளும் கதறினார்கள், என்மீதான உங்கள் பாசத்தைக் கண்டு அவர்கள் நெக்குருகினார்களே, என் தாயே, உமக்கு  நமஸ்காரம்.


ந கஸ்தம் மாகஸ்தே மரண மையே 

தோயமபி வா

ஸ்வதாவா நோ தத்தா மரண திவஸே ச்ராத்த

விதினா

ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரக மனு:

அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதர

துலாம் 


அம்மையே, நீங்கள் முக்தியடையும் சமயத்தில், உங்களுக்குக் கொஞ்சம் ஜலமாவது வாயில் விட்டேனா? பிறகும் ஸ்வதா மந்திரத்தினால்  ச்ராத்தம், தர்ப்பணமாவது செய்தேனா? உங்களது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உங்கள் காதில் ஓதினேனா? அச்சமயம் எனக்குக்  கிடைக்காததாலும், எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும், சன்யாசியானதாலும் எந்த வைதீகமும் அனுஷ்டிக்க முடியாது போனதாலும்,  மனம் தவிக்கின்ற உங்களது மகனான என்னிடம் தயவுசெய்ய வேண்டுமம்மா! உங்களது கமல பாதங்களைச் சரணடைந்து 

வேண்டுகின்றேன் தாயே.


முக்தாமணிஸ்த்வம் நயனம் மமேதி

ராஜேதி ஜீவேதி சிரம் ஸ¤ தத்வாம் 

இக்யுக்தவத்யாஸ்தவ வாசி மாதர்

ததாம்யஹம் தண்டுல மேவசுஷ்கம் 


அம்மையே, என்னைக் காணும்போதெல்லாம், ‘என் முத்தே, என் கண்ணே, என் அப்பனே, ராஜா! நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டும்’ என்று  எப்பொழுதும் சொல்லி என்னிடத்தில் கருணையையும், அன்பையும், தயையும் கலந்த அம்ருத மயமான சொற்களால் என்னைச் சீராட்டி,  பாலூட்டி, தாலாட்டி என்னை வளர்த்த எனது அன்னைக்கா வாயிலே, வேகாத அரிசியைச் சமர்ப்பிப்பேன்! இதைப் பொறுக்க  முடியவில்லையே அம்மையே! உன்னைச் சரணடைகிறேன்.


அம்பேதி தாதேதி சிவேதி தஸ்மின்

ப்ரஸதி காலே யதவோச உச்சை 

க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தேத்

யஹோ ஜனன்யை ரசிதோய மஞ்ஜலி: 


தாயே, என்னைப் பெற்றெடுக்கும்போது பொறுக்க முடியாத வேதனை சமயத்தில் ‘அம்மா! அப்பா! சிவபெருமானே, கிருஷ்ணா, கோவிந்த,  ஹரே முகுந்தா’ என்று வலி தாங்கிக்கொள்ளும் உபாயமாக தெய்வங்களை அழைத்த என் கருணைத் தெய்வமே! என் இரு கைகளையும்  உயர்த்தி உங்களுக்கு அஞ்சலி செய்து, உங்களைச் சரணடைகின்றேன்.


பெற்ற தாய்க்கு, அவளுடைய இறுதிப் பொழுதில் தன்னை  அர்ப்பணித்துக் கொண்டார் முற்றும் துறந்த சந்நியாசியான, பரமேஸ்வர அவதாரமான ஆதிசங்கரர். முற்றும் துறந்த ஒரு துறவியையே  தாயன்பானது கதறச் செய்தது என்றால் அதற்கு உன்னதமானதொரு காரணமும் உண்டு, பகவத்பாதாள், சாதாரணமான உலகத்தில் நாம்  இன்று காணும் சந்நியாசிகளைப் போன்றவர் அல்லர். 


தன் காலத்துக்குப் பின் வரக்கூடிய சந்நியாசிகளுக்கெல்லாம் வழிகாட்டத் தோன்றியவர். ‘தாயிற் சிறந்த கோயிலில்லை’ என்னும் சாஸ்திர  வாக்கியத்தை உறுதிபடுத்தத் தோன்றியவர் அவர். ஒருவன் பரம்பொருளில் லயித்த மனதினனாக சிறிது காலம் இருந்தான் என்றாலும்கூட,  அப்படிப்பட்ட சாதகன் எல்லாப் புண்ய க்ஷேத்ரங்களிலும், நதிகளிலும், குளங்களிலும் ஆங்காங்கு நீராடிய பலனையும், பூவுலகம்  அனைத்தையும் தானமாகத் தந்த பலனையும், ஆயிரம் யாகங்களைச் செய்த பலனையும், எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட பலனையும்,  தன் முன்னோரை பிறவிச் சுழலினின்றும் மீட்ட பலனையும் அடைந்தவராக மூவுலகினாலும் வழிபடத்தகுந்தவராக ஆகிறான் என ‘லகுயோக  வாஸிஷ்டம்’ கூறுகிறது.


இந்த அடிப்படையில் மஹாப்ரம்ம ஞானியான ஆதிசங்கரரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ! அவரைப் பெற்றெடுத்த தாய்-தந்தையின்  மகத்துவத்தை விவரிக்கதான் இயலுமோ? அதிலும் முன்னறி தெய்வமான அவரது தாயாரின் பெருமை அளப்பரியது. அவரைப் போன்றதொரு  மாமுனி தோன்றிய குலத்தின் அறுபது தலைமுறை முன்னோரும், அறுபது தலைமுறை பின்னோரும் உய்வை அடைகிறார்கள். மனுதர்ம  சாஸ்திர காலத்திலிருந்து எல்லா சாஸ்திரங்களிலும் தாயாரின் உயர்வைக் கூறுகின்ற வாக்யங்களை காண்கிறோம். மனு, ‘‘ஒரு மகன் நூறு  வருடங்கள் பாடுபட்டாலும் தன் பெற்றோருக்குத் தான் பட்ட பிறவிக் கடனைத் தீர்க்க முடியாது’’ எனக் கூறுகிறார் :


பெற்றெடுத்து, அதற்குப் பின் வளர்க்கும் போதும் தாய், தந்தை எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு ஒரு நூறாண்டு உழைத்தாலும் ஒருவன்  பிறவிக்கடன் தீர்ப்பது அரிது. சாணக்யரும் தன் நீதி சூத்திரத்தில் தாயின் பெருமையை, ‘‘தாயே தலை சிறந்த குருவாவாள்; எந்நிலையிலும்  அவள் காக்கப்பட வேண்டியவள். ஒருவனுடைய ஆத்மாவுக்கு உயிரும் உடலும் கொடுப்பவள் அவளே" என விளக்குகிறார்.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...