Sunday, 20 February 2022

ஸ்ரீ காமாக்ஷி அகவல்

 காமாக்ஷி ஆவிர்பாவ தினம் !

மாசி பூரம் ஸ்பெஷல் !


ஸ்ரீ காமாக்ஷி அகவல்


#காப்பு:


ஜகத்திருள் நீக்கும் காஞ்சி க்ஷேத்ரம் தனில்

மகத்துவம் மிகுந்த சக்தி மனோன்மனீ காமாக்ஷி தன்மேல்

அகத்திருள் நீங்கும் வண்ணம் ஓர் அகவற் பாமலை ஓத

முகத்திருள் நீக்கும் யானை முளரி மாமலர்த்தாள் காப்பே


#அகவல்:


ஓம் நமோ பகவதி உத்தமி கவுரி

சாம்பவி மனோன்மனீ சங்கரி பயங்கரி

வெண்தலை மாலை விமலி எண்தோளி

பஞ்சாக்ஷரத்தி பரப்ரம்மசொரூபீ

எஞ்சாகரத்தி இன்பத் தாண்டவீ

ப்ரணவ சொரூபம் பெற்றிடும் வீரி

சரணாம்புயத்தி ஸர்வஸம்ஹாரி

தத்துவப் பொருளாய் தழைத்த நன்மணி

அத்தி முகவனை அளித்த கண்மணி

சிறுவிதி மகவாய் சிறந்த சிவமணி


ஒருதனி முதலாய் ஓங்கும் தவமணி

வரைமகள் எனவே வளர்ந்த நவமணி

பரையென நாமம் பகர்ந்தவர் பவப்பிணி

அகற்றி ஆட்கொள்ளும் அற்புத ஒளியே

சிவ சிவ சிவ சிவ சிவசங்கரியே

நவவடிவாகிய நாராயணியே

ஆதிஅனாதியும் அந்தமும் நீயே

ஜோதி சுடராய் சூழ்ந்தவள் நீயே

தந்தை தாயுமாய் தழைத்தவள் நீயே

இடை பிங்கலையில் இருப்பவள் நீயே


கடை சுழுமுனையில் கலப்பவள் நீயே

முச்சுடராகி முளைத்தவள் நீயே

உச்சுக்கு வெளியில் உலவுபவள் நீயே

மூலத்தில் நின்ற முதல்வியும் நீயே

ஜாலங்கள் புரியும் சமர்த்தியும் நீயே

ஓரெழுத்தான் ஒலிவெளி நீயே

ஈரெழுத்தான் ஈச்வரி நீயே

மூவெழுத்தான முக்கண்ணி நீயே

நாலெழுத்தான நாயகி நீயே

அஞ்செழுத்தான அம்மணி நீயே


பஞ்சக்ருத்தியம் படைத்தவள் நீயே

ஐவராம் கர்த்தர்கு அன்னையும் நீயே

ஐயாறு மூவேழு அக்ஷரீ நீயே

அருவுருவான அற்புதம் நீயே

குருவாய் விளங்கும் கோலமும் நீயே

சின்மயமாக செறிந்தவள் நீயே

தன்மயமாக தனித்தவள் நீயே

வேதாந்தமான விளைவும் நீயே

நாதாந்தமான நவரசம் நீயே

வேற்றுமை இல்லா வித்தகி நீயே


நாற்பத்து முக்கோண நாயகி நீயே

அரனொடு அரியாய் அமர்ந்தவள் நீயே

பரனொடு பரையாய் பதிந்தவள் நீயே

மோன பாத்திர முடிவும் நீயே

ஞான க்ஷேத்திர நவநிதி நீயே

நடுநிலையான நாயகம் நீயே

கொடுவினை மாற்றும் குண்டலி நீயே

சுத்த சிவமாய் ஜொலிப்பவள் நீயே

சத்தி சிவமாய் சார்ந்தவள் நீயே

சுகஸ்வரூபீ சூட்சியும் நீயே


அகண்டபூரணம் ஆனவள் நீயே

வேலனை ஈன்ற விளக்கொளி நீயே

வாலைத் திருமகள் வாணியும் நீயே

கன்னிகையாம் சிவகாமியும் நீயே

அன்னையாம் வடிவம்மையும் நீயே

ஆட்சி நீலாயதாக்ஷியும் நீயே

சூட்சி சிவகமலாக்ஷியும் நீயே

நாரணியாம் மீனாக்ஷியும் நீயே

ஆரணியாம் விசாலாக்ஷியும் நீயே

கன்னிகள் பத்திரகாளியும் நீயே


மன்னும் துர்கை மாரியும் நீயே

எந்திர வித்தைகள் எல்லாம் நீயே

மந்திர ஸ்வரூப மௌலியும் நீயே

மாய குண்டலி மனோன்மனீ நீயே

ஆயிரம் நாமம் ஆனவள் நீயே

ஆனந்த வடிவாய் அமைந்தவள் நீயே

மனவாக்கடங்கா மகமாயி நீயே

ஸர்வ ஸம்ஹார சக்தியும் நீயே

ஸர்வானுக்ரஹ ஸமர்த்தியும் நீயே

எண்ணும் மனதில் இருப்பவள் நீயே


மண்ணுயிர்க்குயிராய் மருவிய தாயே

அகிலாண்டவல்லி அம்பிகையாளே

மஹிமே சேர் கச்சி மாநகராளே

கனகம் பொழி திருக்காமக்கோட்டத்தி

மனங்கவர் காயத்ரி மாமண்டபத்தி

ஓங்கார கோணத்தில் ஒளிர் பத்மாஸனத்தி

நீங்காத நீல நிறத்தி சதுர்புஜத்தி

காணரும் பிலாகாச பீடத்தி கன்னி

சேனுயர் துவஜ சிகர கோபுரத்தி

தகவுறு தர்ம ஸந்தான ஸ்தம்பத்தி


திகழறத்தி பஞ்ச தீர்த்த பூதத்தி

வெற்றி ஸ்தம்பம் விளங்குமாலயத்தி

பற்றற்றவர் பணி பொற்பதத்தி

தலம் புகழ் சங்கராசாரியர் என்னும்

வலம் புரிந்தேத்தி வன்மையோ இன்னும்

ஒருபுடை மருவ உளம் மகிழ் நீலி

திருமகள் கலைமகள் தினம் தொழும் சூலி

காமக்கண்ணி கவுரி கமலாக்ஷி

தாமதமின்றி தந்தருள் காக்ஷி

ஆதரவின்ற அம்மணி உன்றன்


பாதக் கமலம் பணிந்தனன் என்றன்

வேதனை தீர்த்து இவ்வேளை வந்தாதரி

மாதரி வீரி மயான ருத்ரி

சகலரும் போற்றி சந்தோஷமுற்று

சகல சித்தியும் சக்தியும் பெற்று

பக்குவமாக நின் பதமலர் போற்றிட

சக்ரேச்வரியே ஸந்ததம் காப்பாய்

போற்றி போற்றி பொன்னடி போற்றி

ஏத்தி ஏத்தி இறையடி தொழுவாம்

காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே

காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே.


அம்பிகையின் திருவடிகளில் சரணம்!

Wednesday, 9 February 2022

ஸ்ரீ சூர்யாஷ்டகம் !

 ரத ஸப்தமி ஸ்பெஷல் ! 


ஸ்ரீ சூர்யாஷ்டகம் !


ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||


(ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்)


ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|

ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(ஏழு (வானவில்லின் வண்ணம் போல் ஏழு) குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே... வெப்பம் நிறைந்தவரே... ரிஷி கச்யபரின் குமாரரே... வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே... அனைத்து உலகங்களுக்கும் தந்தையே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என மூன்று குணங்களை உடையவரே... பலம் பொருந்திய மஹாசூரரே... ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)  


ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|

ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸ்ஸாகிய ஒளி கொண்டவரே... வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே... உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|

ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே... மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே... ஒரே சக்கரத்தைக் கொண்டவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே... தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே... எம் பாவம் அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(உலகின் நாதனே... ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... ஹே சூரிய தேவனே... உம்மை வணங்குகிறேன்)


இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்


(இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது)

-----------------------------------------------------

சூர்ய கவசம் !

 ரத ஸப்தமி ஸ்பெஷல் !


சூர்ய கவசம் !


சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.


ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்

ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்


ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும், 

சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்

மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.


தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்

த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்


மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,

ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும், 

ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான 

சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.


ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:

நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே 

வாஸரேஸ்வர: 


என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன் 

காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே 

ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.


க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:

ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே

ஸுரவந்தித: 


என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட 

ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.


ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:

பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:


என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும். 

மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு 

உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும். 

அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.


ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே

ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:


யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ 

அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்.


ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:

ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம்  ச விந்ததி.


யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார். 


இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும் 

சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி 

மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:


சூர்ய மங்கள ஸ்லோகம் !


பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ

குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:

சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ

மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்


பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !


சூரிய பகவான் !

 

காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும் 

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும் 

வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த 

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி


சூர்யன் த்யான ஸ்லோகம் !

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்

தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்


சூரியன் காயத்ரி !

அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்


சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி !

Friday, 21 January 2022

ஸ்ரீ_ஸுக்தம்

 #ஸ்ரீ_ஸுக்தம் 

#அர்த்தம்_புரிந்து_படிப்போம்


ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவகா


#பொருள் விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன்.


தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமிநீம்

யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம்


#பொருள்

அந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம் இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரியுங்கள்.


அஸ்வபூர்வாம் ரத - மத்யாம் ஹஸ்திநாத -ப்ரபோதிநீம்

ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்


#பொருள் : குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை என்னிடத்தில் வருமாறு அழைக்கிறேன். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி என்னை வந்தடையட்டும்.


காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா

மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்

பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்


#பொருள் மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை என் இருப்பிடத்திற்கு அழைக்கிறேன்.


சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்

ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம்

தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே

லக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே


#பொருள்  பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை நான் சரணடைகிறேன். என்னுடைய வறுமை அழியட்டும். எனக்கு அருள் கிடைக்கட்டும்.


ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ

வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷத பில்வ:

தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த

ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ


#பொருள்  சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி அருளவேண்டும்.


உபைது மாம் தேவஸக கீர்த்தஸ்ச மணிநா ஸஹ

ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே - ஸ்மித் கீர்த்திம்ருத்திம் ததாது மே


#பொருள் 

 நீ என்னை அடைய வரும்பொழுது தேவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்த மகா விஷ்ணுவும் உடன் வருவார். இந்த பூமியில் பிறந்திருக்கும் எனக்குக் கீர்த்தியையும், ஐஸ்வர்யத்தையும் கொடுத்தருள வேண்டும்.


க்ஷúத் -பிபாஸா மலாம் ஜ்யேஷ்டா - மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்

அபூதி - மஸம்ருத்திம் ச ஸர்வாந் நிர்ணுத மே க்ருஹாத்


#பொருள்  

உன் அனுகிரகத்தை அடைந்தால் அதன் பலத்தால், பசி, தாகம், பீடை இவற்றை உண்டு பண்ணுகிற மூதேவியை என்னைவிட்டு அகலும்படி செய்துவிடுவேன். சகலவிதமான வறுமையையும் மேன்மேலும் வரவிடாமல் என்னுடைய வீட்டிலிருந்து நீ அகற்றியருள வேண்டும்.


கந்த - த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்

ஈஸ்வரீகும் ஸர்வ - பூதாநாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்


#பொருள்  வாசனைமிக்க திரவியங்களை முதலில் அனுப்பி அதன்பிறகு வந்தவளும், தீயவர்களால் அடைய முடியாதவளும், எப்பொழுதும், எப்பொருட்களாலும் நிறைவுள்ளவளும் கரீஷிணி என்ற திருநாமத்தைப் பெற்றவளும், அனைவராலும் போற்றப்படுபவளுமான உன்னை, இங்கே என்னிடம் (எங்கள் இல்லத்தில்) நித்தியவாசம் (எப்போதும் நீங்காது இருக்கும்படி) செய்யும்படி அழைக்கிறேன்.


மனஸாகாமமாஹுதிம் வாஸ: ஸத்ய மசீமஹி

பசூநாம்ரூபமந்தஸ்ய மயிஸ்ரி ஸ்ரயதாம் யசஹா


#பொருள்  மனதினுடைய விருப்பத்தையும், சந்தோஷத்தையும் வாக்கினுடைய உண்மையையும் அடைவோம். பசுக்களுடையவும் உணவுப் பொருள்கள் உடையவும், பலவிதமான உருவத்தையும் அடைவோம். என்னிடத்தில் லக்ஷ்மிதேவியானவள் நித்யவாசம் செய்யவேண்டும்.


கர்த்தமேந ப்ரஜாபூதா மயிஸம்பவ கர்தம

ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம்


#பொருள்  கர்த்தம ப்ரஜாபதி என்னும் மகரிஷியால் தேவி, புத்திரமதி ஆனாள். கர்த்தமனே என்னிடத்தில் நித்யவாசம் செய்வாயாக. தாமரை மாலையை அணிந்துகொண்டிருக்கிற உனது தாயாராகிய ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்வாயாக.


ஆபஸ் ஸ்ருஜந்துஸ் நிக்தானி சிக் லீத வஸ மே கிருஹே

நிக தேவீம் மாதரம்ச்ரியம் வாஸயமே குலே


#பொருள் 

 ஓ சிக் லீதரே, தண்ணீர், நெய், தயிர், பால் முதலிய பொருட்கள் என்னுடைய வீட்டில் குறைவின்றிப் பெருகவேண்டும். எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற உம்முடைய தாயை (ஸ்ரீதேவியை) எனது வீட்டில் வசிக்கச் செய்து அருளும்.


ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸ்வர்ணாம் ஹேமமாலினீம்

சூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ மமாவஹ


#பொருள்  கருணையால் நனைந்தவளும் (தயையால் நனைந்த இதயம்) தாமரைப் பூவில் வாசம் செய்கின்றவளும் நிறைவின் உருவானவளும், தாமரைப் பூமாலையைத் தரித்தவளும், எல்லா உயிர்களையும் மகிழ்விப்பவளும், பொன் போன்ற பரிசுத்தமான மேனியை உடையவளுமான மகாலட்சுமி என் இருப்பிடத்திற்கு வருமாறு செய்தருளுங்கள்.


ஆர்த்தராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்ம மாலினீம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ


#பொருள்  பகவானாகிய அமுதத்தால் நனைந்த திருமேனியையுடையவளும், செங்கோலுக்கு அடையாளமாக தண்டாயுதத்தை கையில் தரிப்பவளும், மெலிந்த திருமேனியை உடையவளும், கண்களுக்கு ஆனந்தகரமான வடிவினை உடையவரும், தங்கத்தினால் செய்யப்பட்ட பூமாலையை அணிந்தவளும், சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளும், தங்கமயமானவளுமான லட்சுமிதேவியை என்னிடம் வரவழைத்து அவள் என்னிடம் நித்யவாசம் செய்ய அருளுங்கள் திருமாலே !


மாம் ம ஆவஹக ஜாதவேதோ லக்ஷ்மி மநமகாமினிம்

யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோதாஸ் யோஸ் வாநீவிந்தேயம் புருஷனாநஹம்


#பொருள் 

 ஓ பகவானே, எந்த லக்ஷ்மி என்னிடம் வசிக்கையில் ஏராளமான பொன் பொருள்களும், பசுக்களும், சேவகர்களும் குதிரைகளும், உற்றார்களும், நண்பர்களையும் நான் அடைவேனோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி என்னிடம் நித்யவாசம் செய்ய அருளவேண்டும்.


பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே

பத்மாலயே பத்மதளாய தாக்ஷி

விஸ்வப்ரியே விஷ்ணுமநோ நுகூலே

த்வத் பாத பத்மம் மயிஸந்நிதத்ஸ்வ


#பொருள்  தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.


ஸ்ரியே ஜாத ஸ்ரியே ஆநிர்யாய

ஸ்ரியம் வயோஜநித்ருப்யோ ததாது

ஸ்ரியம் வசாநாம் அம்ருத த்வமாயன்

பஜந்தி சத்யஸ் சவிதா விதத்யூன்


#பொருள்  லட்சுமி தேவியின் விளையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.


ச்ரிய ஏவைனம் தச்ச்ரியா மாததாதி ஸந்ததம்

ருசாவஷட்கரத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசுபிஹி.


#பொருள்  எவனொருவன் இந்த ஸ்ரீ சூக்தத்தின் பலன்களை அறிகிறானோ, அவனுடைய செல்வங்களே மேலும் மேலும் வளர்ந்து ஐஸ்வர்யங்களை உண்டாக்குகின்றன. ரிக் வேதத்தில் கூறப்பட்ட இந்த ஸ்ரீ சூக்தத்தை முன்னிருத்தி ஹோம காரியங்களைச் செய்பவர் புத்திர சந்தானத்தோடும், பசுக்களோடும், ஐஸ்வர்யங்களோடும் அனைத்து வளங்களையும் அடைகிறார்.


ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே 

விஷ்ணு பத்ன்யை ச தீமஹி

தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்


#பொருள்  

இந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியானதேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் தந்து அருளவேண்டும். (இந்தக் கடைசி ஸ்லோகமே லக்ஷ்மி காயத்ரி ஸ்லோகமானது. அதிக விசேஷமானது. எங்கேயும், எப்போதும் சுத்தமாக, ஆச்சாரமாக இருந்து இதைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.)


சுபம்.🙏🌹

Friday, 31 December 2021

ஸ்ரீ_ராம_ரக்க்ஷா_ஸ்தோத்ரம்

 #ஸ்ரீ_ராம_ரக்க்ஷா_ஸ்தோத்ரம் .


வினியோக:

ஓம் அஸ்ய ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ர மந்த்ரஸ்ய புதகௌசிக ரிஷி:

ஸ்ரீ சீதாராம சந்த்ரோ தேவதா அனுஷ்டுப் சந்தக: சீதா சக்தி: ஸ்ரீமான் ஹனுமான் கீலகம்

ஸ்ரீராமசந்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ர ஜபே வினியோக:


த்யானம்

த்யாயேதாஜானுபாஹும் த்ருதஷர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்

பீதம் வாஸோ வஸானம் நவகமலதள ஸ்பர்தி நேத்ரம் ப்ரஸன்னம்

வாமாங்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் நீரதாபம்

நானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமண்டலம் ராமசந்த்ரம்


ஸ்தோத்ரம்

சரிதம் ரகுனாதஸ்ய சதகோடி ப்ரவிஸ்தரம்

ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாசனம்                1


த்யாத்வா நீலோத்பல ஷ்யாமம் ராமம் ராஜீவலோசனம்

ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மண்டிதம்            2


ஸாஸிதூண தனுர்பாண பாணிம் நக்தம் சராந்தகம்

ஸ்வலீலயா ஜகத் த்ராது மாவிர்பூதமஜம் விபும்                3


ராமரக்ஷாம் படேத்ப்ராக்ஞ: பாபக்னீம் ஸர்வகாமதாம்

ஸிரோ மே ராகவ பாதுபாலம் தசரதாத்மஜ:                    4


கௌஸல்யேயோ த்ருஷௌ பாது விஸ்வாமித்ர ப்ரிய: ஸ்ருதீ

க்ராணம் பாது மக்த்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸல:            5


ஜிஹ்வாம் வித்யாநிதி: பாது கண்டம் பரத வந்தித:

ஸ்கந்தௌ திவ்யாயுத: பாது புஜௌ பக்னேஷாகார்முக:            6

[30/12, 4:05 pm] Lathvenktesh: கரௌ ஸீதாபதி: பாது ஹ்ருதயம் ஜாமதக்ன்யஜித்

மத்யம் பாது கரத்வம்ஸீ நாபிம் ஜாம்பவதாக்ஷரய:                7


சுக்ரீவேஷ: கடீ பாது ஸக்தினீ ஹனுமத்-பிரபு:

ஊரூ ரகூத்தம: பாது ராக்க்ஷ: குல வினாசக்ருத்                8


ஜானுனீ சேதுக்ருத் பாது ஜண்கே தசமுகாந்தக:

பாதௌ விபீஷண ஸ்ரீத: பாது ராமோ அகிலம் வபு:            9


ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் ய: ஸூக்ருதீ படேத்

ஸ சிராயூ: ஸூகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்                10


பாதாள பூதல வ்யோம சாரிணஷ் ச்சத்ம சாரிண:

ந த்ரஷ்டுமபி சக்தாஸ்தே ரக்ஷிதம் ராம நாமபி:                11


ராமேதி ராமபத்ரேதி ராமசந்த்ரேதி வா ஸ்மரன்

நரோ ந லிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விந்ததி            12


ஜகஜ்ஜை த்ரைக மந்த்ரேண ராமநாம்னாபி ரக்ஷிதம்

ய: கண்டே தாரயேத்தஸ்ய கரஸ்தா: ஸர்வ ஸித்தய:            13


வஜ்ரபஞ்ஜர நாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்

அவ்யாஹதாக்ஞ: ஸர்வத்ர லபதே ஜய மங்களம்                14


ஆதிஷ்டவான்யதா ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர:

ததா லிகிதவான் ப்ராத: ப்ரபுத்தௌ புதகௌசிக:                15


ஆ ராம: கல்பவ்ருக்ஷாணாம் வி ராம: ஸகலாபதாம்

அபிராம ஸ்த்ரிலோகானாம் ராம: ஸ்ரீமான்ஸ ந: ப்ரபு:            16  


தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ

புண்டரீக விஷாலாக்ஷௌ சீர க்ருஷ்ணா ஜினாம்பரௌ        17  


ஃப்லமூலாஸினௌ தாந்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ

புத்ரௌ தசரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ        18


சரண்யௌ ஸர்வஸத்வானாம் ஸ்ரேஷ்டௌ ஸர்வ தனுஷ்மதாம்

ராக்க்ஷ: குல நிஹந்தாரௌ த்ராயேதாம் நோ ரகூத்தமௌ        19  


ஆத்தஸஜ்ஜதனுஷா விஷுஸ்ப்ருஷாவக்ஷயா சுகானிஷங்க ஸங்கினௌ

ரக்ஷணாய மம ராமலக்ஷ்மணாவக்ரத: பதி ஸதைவ கச்சதாம்        20


ஸன்னத்த: கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா

கச்சன் மனோரதான்னஷ்ச ராம்: பாது ஸலக்ஷ்மண்:            21


ராமோ தாசரதி ஷூரோ லக்ஷ்மணானுசரோ பலீ

காகுத்ஸ்ய: புருஷ: பூர்ண: கௌஸல்யேயோ ரகூத்தம்:            22


வேதாந்த வேத்யோ யக்ஞேஷ்: புராண புருஷோத்தம்:

ஜானகீ வல்லப: ஸ்ரீமானப்ரமேய பராக்ரம்:                    23


இத்யேதானி ஜபேந்நித்யம் மத்தக்த: ஸ்ரேத்தயான்

வித:

அஸ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி ந ஸம்சய:            24  


ராமம் தூர்வாதள ஷ்யாமம் பத்மாக்ஷம் பீதவாஸஸம்

ஸ்துவந்தி நாமபிர்-திவ்யைர்-நதே ஸம்ஸாரிணோ நரா:            25


ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் சுந்தரம்

காகுத்ஸ்தம் கருணார்ணவம் குணநிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்    26  

 

ராஜேந்த்ரம் ஸத்யஸந்தம் தசரததனயம் ச்யாமளம் சாந்தமூர்த்திம்

வந்தே லோகாபிராமம் ரகுகுலதிலகம் ராகவம் ராவணாரிம்        27


ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே

ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:                    28


ஸ்ரீராம் ராம் ரகுநந்தன ராம் ராம் ஸ்ரீராம் ராம் பரதாக்ரஜ ராம் ராம்

ஸ்ரீராம் ராம் ரணகர்கஷ் ராம் ராம் ஸ்ரீராம் ராம் சரணம் பவ ராம் ராம்    29


ஸ்ரீ ராமசந்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி

ஸ்ரீ ராமசந்த்ர சரணௌ வசஸா க்ருணாமி                  

ஸ்ரீ ராமசந்த்ர  சரணௌ ஸிரஸா நமாமி

ஸ்ரீ ராமசந்த்ர  சரணௌ சரணம் ப்ரபத்யே                    30


மாதா ராமோ மத்-பிதா ராமசந்த்ர:

ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசந்த்ர:

ஸர்வஸ்வம் மே ராமசந்த்ரோ தயாளு:

நான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே                    31


தக்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா

புரதோ மாருதிர்-யஸ்ய தம் வந்தே ரகுநந்தனம்                32


லோகாபிராமம் ரணரங்கதீரம் ராஜீவனேத்ரம் ரகுவம்சநாதம்

காருண்யரூபம் கருணாகரம் தம் ஸ்ரீராமசந்த்ரம் சரணம் ப்ரபத்யே    33  


மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே    34


கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்

ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம்            35  


ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்            36


பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்

தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்                37


ராமோ ராஜமணி: ஸதா விஜயதே ராமம் ரமேசம் பஜே

ராமேணாபிஹதா நிஷாசரசமூ ராமாய தஸ்மை நம:            38


ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோ (அ) ஸ்ம்யஹம்

ராமே சித்தலய: ஸதா பவது மே போ ராம மாமுத்தர


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்த்ரனாம தத்துல்யம் ராம நாம வரானனே


|| இதி ஸ்ரீ புதகௌசிகமுனி விரசிதம் ஸ்ரீராம ரக்க்ஷா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

 யோகம் தரும் மாருதி வழிபாடு


#வாயுபுத்திரன் எனப்படும் அனுமனைக் கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம். ஸ்ரீராமாயண உபன்யாசம், ஸ்ரீராமநாம ஜெபம் பாராயணம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கே ஒரு காலியான மணைப் பலகையைப் போட்டு வைப்பது வழக்கம். உபன்யாசத்தைக் கேட்க அனுமன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்பேர்ப்பட்ட ராம பக்தனான ஸ்ரீஅனுமனை வழிபட, சில வழிமுறைகளும் தத்துவங்களும் உள்ளன. அதை அறிந்து, உணர்ந்து ஸ்ரீஅனுமனைத் துதிப்போம்.


#வெற்றி(லை) மாலை: அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கும் பக்தர்களில் சிலருக்கே இதன் பொருள் புரிந்திருக்கிறது. சீதாபிராட்டியை அனுமன் அசோக வனத்தில் ராமதூதனாகச் சந்தித்தபோது, சீதை அனுமனின் தலையில் வெற்றிலையை வைத்து 'எப்போதும் சிரஞ்ஜீவியாக வாழ்வாய்!’ என்று ஆசி அருளினார்.  இதனால், வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் வளம் பெறலாம் என்பது ஐதீகம்!


#வடைமாலை_வழிபாடு: நவதான்யங்களில், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சக்தியைக் கொடுப்பது உளுந்து. அனுமனின் தாயார் அஞ்சனாதேவி உளுந்து வடையைச் செய்து கொடுத்ததால், ஸ்ரீஅனுமன் ஆரோக்கியமாகவும் திடமாகவும் திகழ்ந்தாராம். எனவே, அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால், நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.


#வெண்ணெய்க்_காப்பு: ராவணனுக்கும் ஸ்ரீராமனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் இறந்த பிறகு, இரண்டு அசுரர்கள் எப்படியாவது ஸ்ரீராமனை அழிக்க நினைத்தார்கள். ஸ்ரீஅனுமனை அனுப்பி அந்த அரக்கர்களை அழித்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார் ஸ்ரீராமபிரான். அப்போது, தேவர்களும் தெய்வ ரூபங்களும் அனுமனிடம் பல ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் அனுமன் கையில் வெண்ணெயைக் கொடுத்தார்.  அந்த வெண்ணெய் உருகுவதற்குள் அரக்கர்களை அழித்துவிட்டுத் திரும்பவேண்டும் என்பது குறிப்பு. அதன்படியே செய்தார் அனுமன். காரியங்களில் வெற்றி கிடைத்திட, தேக ஆரோக்கியத்துடன் திகழ, ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, ஜெயபஞ்சகத் துதியைச் சொல்லி வழிபடலாம்.


#செந்தூரக்_காப்பு_வழிபாடு: அசோகவனத்தில் சீதையிடம் ராமதூதனாக வந்து சந்தித்த அனுமன் சொன்னதைக் கேட்டு, நெற்றியில் செந்தூரம் வைத்துக்கொண்டு, மகிழ்ந்து சிரித்தாளாம் சீதாதேவி. இதைக் கண்ட அனுமனும் மகிழ்ந்து, செந்தூரத்தை உடலெங்கும் பூசிக்கொண்டாராம். எனவே, செந்தூரக் காப்பு செய்து ஸ்ரீஅனுமனை வழிபட்டால், வீட்டிலும் மனத்திலும் எப்போதும் மகிழ்ச்சி தங்கும்.


#வாலில்_பொட்டிட்டுப்_பிரார்த்தனை: பாண்டவர்களில் பராக்கிரமசாலியாக விளங்கிய பீமன், திரௌபதி விரும்பிய பாரிஜாத மலரைத் தேடிக் கானகம் சென்றான். வழியில் கிழக் குரங்கு ஒன்று, நடுவில் வாலை நீட்டிப் படுத்திருந்தது. அதைத் தாண்டிப்போக விரும்பாமல், வாலைச் சற்றுத் தள்ளி வைத்துக்கொள்ளும்படி சொல்ல, 'நான் மிகவும் களைப்புடன் படுத்திருக்கிறேன். முடிந்தால், நீயே என் வாலை தள்ளி வைத்துவிட்டுச் செல்’ என்றது குரங்கு. அதன்படியே, அதன் வாலை பீமன் அலட்சியமாக நகர்த்த முயன்றபோது, ஒரு துளிகூட அதை அசைக்க முடியாமல் போகவே, அதிர்ந்து போனான் பீமன். கர்வம் அடங்கினான். பின்பு, அந்தக் குரங்குதான் ஸ்ரீஅனுமன் என்பதை அறிந்து, 'நான் அனுமனின் பக்தன். என்னால் முடியும்’ என்று சொல்லியபடி வாலை நகர்த்த முயல, அனுமன் மகிழ்ந்து அவனுக்குத் தன் வாலை நகர்த்தி உதவினார்.


'அனுமனின் வாலுக்கே இத்தனைச் சக்தி இருக்கிறதே! இதை வணங்கினாலே அருள் பெறலாமே’ என்று எண்ணினான் பீமன்.எனவே, வால் வழிபாடு விசேஷம்!  


அனுமனின் அருளை எளிதில் பெற, வாலில் பொட்டு வைத்து வழிபடலாம். அதேபோல், மங்கல வடிவான மணியைக் கட்டி வழிபடும் வழக்கமும் உண்டு. அனுமனின் வாலில் நவகிரகங்கள் சேர்ந்திருப்பதாக அவரது வழிபாட்டுக் கல்பம் கூறுகிறது. ஏழரைச் சனி காலங்களில் அனுமன் வழிபாடு, நம்மை அரணெனக் காக்கும்.


பூஜை அறையில் மாருதி கோலமிட்டு, தீபம் ஏற்ற வேண்டும்.


'அஸ்யஸ்ரீ ஹனுமான் மகா மந்த்ரஸ்ய

ஸ்ரீராமச்சந்திரோ பகவான் ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ ஹனுமான் தேவதா

ஹ்ரீம் பீஜம் - ஸ்ரீம் சக்தி: கில - கில - பூ - பூ காரிணே இதி கீலகம்

சர்வ அரிஷ்ட சர்வானுகூலே, கிரஹ தோஷ நிவாரண ஜபே விநியோக:

ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம். ஹ்ரீம் ஹ்ரூம் இதி கரந்யாச அங்கந்யாஸ பூர்புவஸ்ஸுவரோம் இதி திக்பந்த:’


- என்று கை கூப்பியபடி சொல்லுங்கள்.


தியானம்


'வந்தே வித்யுத் ஜ்வலன விலஸத் ப்ரம்ம சூத்ரோஜ் வலந்தம்

கர்ணத்வந்த்வே கனக ரசிதே குண்டலே தாரயந்தம்

ஸத்கௌபீனம் கபிலாங்ருதம் காமரூபம் கபீந்த்ரம்

புத்ரம் வாயோ நினசுத சுகதம் வஜ்ர தேஹம் வரேண்யம்’


- என்று தியானித்து, கோலத்தில் இந்த ஸ்ரீஅனுமன் நாமார்ச்சனையைச் சொல்லி, துளசியால் அர்ச்சிக்க வேண்டும்.


'ஓம் ஸ்ரீம் கௌண்டின்ய கோத்ர ஜாதாய நம: ஓம் ஸ்ரீ கேசரீ சுதாய நம:

ஓம் ஸ்ரீ அஞ்சநா கர்ப்ப நம: ஓம் ஸ்ரீ அனுமதே நம: ஓம் ஸ்ரீ சிரஞ்சீவனே நம:

ஓம் ஸ்ரீ பஞ்சவஜ்த்ராய நம: ஓம் ஸ்ரீ சர்வ மந்த்ர ஸ்வரூபவதே நம:

ஓம் ஸ்ரீ சர்வ தந்த்ர ஸ்வரூபினே நம: ஓம் ஸ்ரீ சர்வ ரோக ஹராய நம:

ஓம் ஸ்ரீ சர்வ துக்க ஹராய நம: ஓம் ஸ்ரீ சர்வ க்ரஹ விநாசினே நம:

ஓம் ஸ்ரீ சர்வ மாயா விபஞ்சநாய நம: ஓம் ஸ்ரீ சர்வ வித்யா சம்பத் ப்ரதாயகாய நம:

ஓம் ஸ்ரீ சீதாசமேத ஸ்ரீராமபாத ஸேவா துரந்தராய நம:’


தூபம் தீபம், நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி செய்த பிறகு குங்குமம், செந்தூரம், சந்தனம், துளசி இட்டுக்கொண்டு, மும்முறை ஆத்ம பிரதட்சிணம் செய்து, வரைந்துள்ள கோலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் 'ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்’ என்று கூறி துளசியும் குங்குமமும் போடவும். பிறகு, மூல மந்திரத்தை 21 தடவை கூறவேண்டும்.


'ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராமதூதாய லங்கா வித்வம்சனாய

அஞ்சனா கர்ப்ப சம்பூதாய சாகினீ டாகினீ வித்வம்சனாய, கிலகில பூ பூ காரிணே

விபீஷணாய ஹனுமத் தேவாய ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹ்ரூம் பட்   ஸ்வாஹா’


படத்தில், அனுமனுடைய வால் பகுதியில் சந்தனம் குங்குமம் வைத்து, மூன்று முறை ஜெய

பஞ்சகத்தைப் படிக்கவேண்டும். இப்படி 47 நாட்கள் படித்து, பொட்டு வைத்து வந்தால், நினைத்ததெல்லாம் நடந்தேறும்; ஞானமும் யோகமும் பெறலாம்.


ஞானம், பலம், வீரம், பக்தி, சேவை, விநயம், பிரம்மசர்யம், சாதனை, யோகம் இவற்றில் உச்சத்தில் இருக்கும் அனுமனைத் தோத்திரம் செய்தால் நமக்கு எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம்!


- வழிபடுவோம்...


நன்றி : விகடன்.

Thursday, 7 October 2021

மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம்

 மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம்


1.கல்லோலோல்லஸிதாம்ருதாப்திலஹரீமத்யே விராஜன்மணி


த்வீபே கல்பக வாடிகா பரிவ்ருதேகாதம்ப வாட்யுஜ்வலேமி


ரத்னஸ்தம்ப ஸஹஸ்ரநிர்மித ஸபாமத்யே விமாநோத்தமே


சிந்தாரத்ன விநிர்மிதம் ஜநதி தே ஸிம்ஹாஸநம் பாவயேமிமி


அலை பொங்கும் அம்ருதக்கடலின் அலைகளின் நடுவே விளங்கும் மணித்வீபத்தில், கல்பகச்சோலை சூழ்ந்த கதம்ப மரத்தோப்பு விளங்குகிறது. அங்கு ஆயிரக்கணக்கில் ரத்னத்தூண்கள் அமைந்த ஸபையின் நடுவில் சீரியவிமானத்தின் சிந்தாமணியால் வடித்த ஸிம்மாஸனத்தை ஹேதாயே!மனதிற்பாவிக்கிறேன்.


2.ஏணாங்காநலபர்னு மண்டல லஸத் ஸ்ரீசர்கமத்யே ஸ்திதாம் I


பாலோர்கத்யுதிபாஸுராம கரதலை:பாசாங்குசௌபிப்ரதீம்


சாபம் பாணுமபி ப்ரஸந்நவதநாம் கௌஸும் பவஸ்த்ரான் விதாம்


தாம் த்வாம் சந்த்ரகலாவதம்ஸமகுடாம்சாருஸ்மிதாம் பாவயே II


சந்த்ரன், அக்னி, சூர்யமண்டலங்கள் விளங்கும் ஸ்ரீசக்ரத்தின் நடுவில் அமர்ந்திருப்பவளும், இளம் சூர்யன் போன்று ஒளிர்பவளும், கைகளில் பாசம், அங்குசம், வில், அம்பு, இவற்றை வைத்திருப்பவளும், மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன், காவிவஸ்திரம் அணிந்தவளும், சந்த்ரபிறை கொண்ட கிரீடம் அணிந்தவளும், அழகிய புன்சிறிப்பு தவழும் அத்தகைய உன்னை மனதிற்காண்கிறேன்.


3.ஈசாநாதிபதம் சிவைகபலகம் ரத்னாஸனம் தே சுபம்


பாத்யம் குங்கும சந்தனாதிபரிதைரர்க்யம் ஸரத்னாக்ஷதை: I


சுத்தை ராச மநீயகம் தவஜலைர்பக்த்யா மயாகல்பிதம்


காருண்யாம்ருத வாரிதே ததகிலம் ஸந்து ஷ்டயே கல்பதாம் II


ஈசாநன், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் இவரால் தாங்கப்பட்டதும், சிவனொருவனை பலகையாகக் கொண்டதுமான நல்ல ரத்னமய ஆஸசனம், ஹே அன்னையே!உனது மகிழ்ச்சிக்காக அமையட்டும். குங்குமம், சந்தனம் இவை கலந்த பாத்தியமும், ரத்னமாகிய அக்ஷதையுடன் அர்க்யமும், சுத்த ஜலத்தால் ஆசம நீயகமும் நான் பக்தியுடன் ஸமர்ப்பிக்கிறேன். ஹே கருணைக் கடலே!இவையெல்லாம் உன் மகிழ்ச்சியை உண்டாக்கட்டும்.


4.லக்ஷ்யே யோகிஜநஸ்ய ரக்ஷிதஜகத்ஜாலே விசாலே க்ஷணே


ப்ராலேயாம்பு படீரகுங்கும லஸத்கர்பூர மிச்ரோதகை:


கோக்ஷீரைரபி நாலிகேரஸலிலை:சுத்தோத கைர் மந்த்ரிதை:


ஸ்நானம் தேவி தியா மயைததகிலம் ஸந்துஷ்டயே கல்பதாம் II


ஹே தேவி, யோகிஜனங்களின் கடைசீ இலக்கானவளே. உலகத்தைக் காப்பவளே. பரந்த கண்ணுடையவளே பந்நீரும், சந்தனமும், குங்குமப்பூவும் பச்சைகற்பூரமும் கலந்த தண்ணீராலும், பசும்பால், உளநீர், மந்திரித்த சுத்த ஜலம் இவற்றாலும் மனதளவில் ஸ்நானம் செய்துவைக்கிறேன். இவையெல்லாம் உன் மகிழ்ச்சிக்கு ஹேதுவாகட்டும்.


5.ஹ்ரீங்காராங்கித மந்த்ரலக்ஷிததநோ ஹேமாசலாத் ஸஞ்சிதை:


ரத்னைருஜ்வலமுத்தரீயஸஹிதம் கௌஸும்ப வர்ணாம் சுகம் I


முக்தாஸந்ததியஜ்ஞஸ¨த்ர மமலம் ஸெளவர்ண தந்தூத்பவம்


தத்தம் தேவி தியா மயைத்தகிலம் ஸந்துஷ்டயே கல்பதாம் II


ஹ்ரீங்காரத்தை உள்ளடக்கிய மந்த்ரத்தின் பொருளானவளே!தங்க மலையிலிருந்து சேகரித்த ரத்தினங்கள் இழைத்ததும், உதரீயத்துடன் கூடியதுமான ஆரஞ்சுக்கலர் துகிலையும் முத்துமணி கோவையான தூய யஞ்ஞோப வீதத்தையும் ஸமர்ப்பிக்கிறேன். இவை உனது ஸந்தோஷத்தை உண்டுபண்ணட்டுமே.


6.ஹம்ஸைரப்யதி லோபநீயகமநே ஹாராவ லீமுஜ்வலாம்


ஹிந்தோலத்யுதி ஹீரபூரிததரே ஹேமாங்கதே கங்கணே


மஞ்ஜீரௌ மணிகுண்டலே மகுடமப்யர்தேந்து சூடாமணிம்


நாஸாமெனக்திகம் அங்குலீயகடகௌ காஞ்சீமபிஸ்வீகுரு II


ஹே தேவி. ராஜ அன்னங்களே உன் நடைப்பழக ஏங்கி விரும்புகின்றனவே c, ஒளிரும் ஹாரத்தையும், அசைந்தாடும் ப்ரகாசமுள்ள வைரங்கள் பதித்த தங்க தோள்வளைகளையும், கைவளைகளையும், சதங்கைகளையும், குண்டலங்களையும் கிரீடம், அரைவிட்டப்பிறைசந்திர சிகை ஆபரணம், முத்து மூக்குத்தி, மோதிரம், கடகம், ஒட்டியானம் இவற்றையெல்லாம் ஸ்வீகரித்துக்கொள்.


7.ஸர்வாங்கே கனஸாரகுங்கும கனஸ்ரீகந்த பங்காங்கதிதம்


கஸ்தூரீதிலகம் ச பாலபலகே கோரோச நாபத்ரகம்மி


கண்டா கர்சனமண்டலே நயநயோர் த்வ்யாஞ்ஜநம் தேsரஞ்சிதம்


கண்டாப்ஜேம்ருகநாபி பங்கம் அமலம் த்வத்ப்ரீதயே கல்பதாம்


ஹேதேவி. உனது உடல் முழுவதும் பூசுவதற்கு கெட்டியான குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கலந்த சந்தனக் கலவையும், பளபளப்பான நெற்றியில் கஸ்தூரீ திலகமும், கண்ணாடி போன்று மழமழப்பும், பிரகாசமும் கொண்ட கன்னத்தில் கோரோசனைகோடும், கண்களில் திவ்யமான மையும், கழுத்து பாகத்தில் கஸ்தூரியுமான தொப்புள் விழுதும் உனது மகிழ்ச்சியை கூட்டுவிப்பதாக இருக்கட்டும்.


8.கல்ஹாரோத்பல மல்லிகா மருவகை:ஸெளவர்ண பங்கேருனஹ:


ஜாதீசம்பகமாலதீவகுலகைர் மந்தார குந்தாதிபி:


கேதக்யா தரவீரகை:பகுவிதா:க்லுப்தா:ஸ்ரஜே மாலிகா:


ஸங்கல்பேந ஸமர்பயாமி வரதேஸந்து ஷ்டயே க்ருஹ்யதாம்மிமி


ஹே தேவி. வரங்களை கொடுத்தருள்பவளே. செந்தாமரை, உத்பலம், மல்லிகை, மருவகம், மஞ்சள் தாமரை, குந்தம், தாழை, அரளி ஆகிய பூக்களால் கட்டப்பட்ட மாலைகள், சரங்கள் மனதளவில் ஸமர்பிக்கப்படுகின்றன. இவை உனக்கு மகிழ்ச்சியளிக்கட்டும்.


9.ஹந்தாரம் மதநஸ்ய நந்தயஸி யைரங்கை ரநங்கோஜ்வலை:


பைர்ப்ருங்காவலி நீல குந்தலபரை:பத்நாஸி தஸ்யாசம் I


தாநீமாநி தவாம்ப கோமலதராண்யாமோதலீலாக்ருஹா-


ண்யாமோ தாய தசாங்க குக்குலுக்ருதைர் துபைரஹம் தூபயேமிமி


ஹே அன்னையே. உனது மிக மிருதுவான வாசனை மிக்க கேலீக்ருஹங்களை தசாங்கம், குக்குலு, பசுநெய் முதலியவற்றால் புகைத்து மணம் கமழ வைக்கிறேன். முதலாவதாக, மன்மதனையடக்கிய பரமேச்வரனுக்கே காம விகாரத்தையுண்டு பண்ணும் சில உடற்பாகங்கள், இரண்டாவதாக பரமேச்வரனின் புத்தியை ஸ்தம்பிக்கச்செய்யும் நீலமான சேங்கள் - மொய்க்கும் வண்டுக்கூட்ட மோவென விளங்குமவற்றையும் புகை போட்டு மணக்கவைக்கிறேன்.


10.லக்ஷ்மீ முஜ்வலயாமி ரத்னநிவஹோத் பாஸ்வந்தரே மந்திரே


மாலாரூப விலம்பிதைர்மணிமய ஸ்தம்பேஷ§ ஸம்பாவிதை: I


சித்ரைர்ஹாடக புத்ரிகாகரத்ருதைர் கவ்யைர் க்ருதை: மிவர்திதை:


திவ்யைர்தீபகணை ர்தியா கிரிஸுதே ஸந்து ஷ்டயே கல்பதாம் II


ரத்ன கற்கள் இழைத்த உனது ஸ்ரீகோவிலில் மாலை போல் தொங்குகிறவையும், இரத்னமயத் தூண்களில் நிழலாகத் தெரிகின்றவையும், பலவித தங்கப் பெண் பதுமைகளால் கையில் ஏந்திய வண்ணம் பசுநெய் விளக்குகளால் மனதளவில் அழகை கூட்டுவிக்கிறேன். அது உன்னை மகிழ்விக்கட்டும்.


11.ஹ்ரீங்காரேச்வரி தப்தஹாடகக்ருதை:ஸ்தாலீஸ ஹஸ்ரைர் ப்ருதம்,


திவ்யான்னம் க்ருதஸ¨பசாகபரிதம் சித்ரான்னபேதம்ததா I


துக்தான்னம் மதுசர்கரா ததியுதம் மாணிக்யயாத்ரே ஸ்திதம்


மாஷாபூப ஸஹஸ்ரமம்ப ஸகலம் நைவேத்யமாவேதயே II


ஹே ஹ்ரீங்காரேச்வரி! தாயே! உருக்கிய தங்கத்தால் செய்யப்பட்ட பல கிண்ணங்களில் பரிமாறப்பட்டுள்ள நைவேத்தியம் அனைத்தையும் நிவேதனம் செய்கிறேன். நெய்யும் பருப்பும் கலந்து தயாரித்த கறி வகைகளும் சித்ரான்னங்களும், தயிர், தேன், சர்க்கரை சேர்த்து மாணிக்கம் பதித்த பாத்திரத்தில் இருக்கும் பாலன்னம், ஆயிரம் வடைகள் இப்படி நைவேத்தியம் இங்கு பாவிக்கப்படுகிறது.


12.ஸச்சாயைர்வரகேதகீதலருசா தாம்பூலவல்லீதலை:


பூகைர்பூரிகுணை:ஸுகந்தி மதுரை:கர்பூர கண்டோஜ்வலை: I


முக்தாசூர்ண விராஜிதைர் பகுவிதைர் வக்த்ராம் புஜா மோதனை:


பூரணா ரத்னகலாசிகா தவமுதே ந்யஸ்தா புரஸ்தாதுமே II


ஹே உமேமிஉனது எதிரில் இதோ ரத்ன கற்கள் பதிந்த வெற்றிலை பெட்டி வைத்துள்ளேன். அது உன் மகிழ்ச்சிக்காகவே வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் நல்ல தாழம்பூ போன்ற (நிறமான) வெற்றிலைகளும், இனிய மனம் கொண்ட பாக்குத் துகள்களும், பச்சை கற்பூரம், சுண்ணாம்பு கலந்து வாய்க்கு மணம் உண்டாக்கும் விதத்தில் அனைத்து பொருட்களும் நிரம்பியுள்ளன.


13.கன்யாபி:கமநீயகாந்திபிரலங்காராமலாரார்திகா


பாத்ரே மௌக்திக சித்ரபங்க்தி விலஸத்கர்பூர தீபாலிபி: I


தத்தத்தால ம்ருதங்க கீதஸஹிதம் ந்ருத்யத் பதாம்போருஹம்


மந்த்ராராதன பூர்வகம் ஸுவிஹிதம் நீராஜநம்க்ருஹ்யதாம்மிமி


அழகிய பெண்கள், அலங்கார ஆரத்தி பாத்திரத்தில் வரிசையாக முத்துகேர்த்தாற்போல் கர்பூர தீபங்களை ஏந்தியவர்களாய், அந்தந்த தாள ஒலிக்கு ஏற்றார்போல் ஸங்கீதமும், நாட்டியமும் சேர்ந்து அப்யஸிக்கின்றவர்களாய், மந்திரங்களுடன் காட்டும் நீராஜனத்தை ஏற்றுக் கொள்ளலாமே!


14.லக்ஷ்மீர் மௌக்திக லக்ஷகல்பித ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்


இந்த்ராணீ ச ரதிஸ்ச சாமரவரே தத்தேஸ்வயம் பாரதீ I


வீணாம், ஏணவிலோசநா:ஸுமநஸாம் ந்ருத்யந்திதத்ராகவத்


பாவை:ஆங்கிக ஸாத்விகை:ஸ்புடதரம் மாத ஸ்தாகர்ண்யதாம்மிமி


ஹே அன்னையே!லக்ஷ்மிதேவி, பல முத்து மணிகளால் ஆகிய வெண்பட்டுக்குடையை ஆர்வமாக தாங்கி தலைமேல் பிடிக்கிறாள். இந்த்ராணியும், ரதியும் இரு வெண் சாமரங்களை வீசுகின்றனர். ஸரஸ்வதி தேவியும் வீணை வாசிக்கிறாள். மற்ற தேவ மங்கையர் ராக பாவங்களையட்டி கை கால் அசைவுகளாலும், ஸாத்விக பாவங்களாலும் ரஸம் ததும்ப நடனம் புரிகின்றனர். இவை எல்லாம் கேட்டு மகிழலாமே!


15.ஹ்ரீங்காரத்ரயஸம்புடேந மனுநோபாஸ்யே த்ரியீமௌலிபி:


வாக்யைர்லக்ஷ்யதநோ தவஸ்துதிவிதௌ கோ வா க்ஷமேதாம்பிகே I


ஸல்லாபா:ஸ்துதய:ப்ரக்ஷிணசதம் ஸஞ்சார ஏவாஸ்துதே


ஸம்வேசோ நமஸ:ஸஹஸ்ரமகிலம் த்வத்ப்ரீதயே கல்பதாம் II


ஹே அம்பிகே. மூன்று ஹ்ரீங்காரங்களின் கூட்டால் அறிய வேண்டியவள் c. உபநிஷத்துக்களால் காணத்தக்கவளும் கூட. உன்னை ஸ்தோத்திரம் செய்ய எவர்தான் சக்தியுடையவர்?ஆகவே, நான் பேசுவதெல்லாம் உன் ஸ்தோத்ரங்களாகவும், நான் இக்குங்குமம் ஸஞ்சரிப்பதே உன்னை பிரக்ஷிணம் செய்வதாகவும், நான் படுத்து உறங்குவதே உன்னை நமஸ்கரிப்பதாகவும் பரிணமித்து, உனக்கு மகிழ்ச்சியை தரவல்லதாக அமையட்டும்.


16.ஸ்ரீமந்த்ராக்ஷரமாலயா கிரிஸுதாம்ய:பூஜயேத்சேதஸா


ஸந்த்யாஸுப்ரதிவாஸரம் ஸுநியதஸ்தஸ்யாமலம் ஸ்யான்மந:


சித்தாம்போருஹ மண்டபே கிரிஸுதாந்ருத்தம் விதத்தே ரஸாத்


வாணீ வக்த்ரஸரோருஹே ஜலதிஜா கேஹேஜகன்மங்களா II


எவரொருவர், தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோ, அவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றி, அவர் ஹ்ருதயதாமரையில் ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள், பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள், வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.


17.இதிகிரிவர புத்ரீ பாத ராஜீவ பூஷா


புவன மமலயந்தீ ஸ¨க்தி ஸெளரப்ய ஸாரை: I


சிவபத மகரந்த ஸ்யந்திநீயம் நிபந்தா


மதயது கவிப்ருங்கான் மாத்ருகா புஷ்பமாலைமிமி


என்றறிந்த அன்னையின் மந்த்ராக்ஷரம் பொதிந்த புஷ்பமாலை, நல்ல வாஸனையால் உலகை தூய்மை பெறச் செய்து, அன்னையின் திருவடிகளுக்கு அணிகலனாக அமைந்துள்ளது. சிவனின் பதங்களின் மகரந்தத்தையும் பெருக்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே கவிகளாகிய தேன் வண்டுகளையும் எக்களிப்படையச் செய்யட்டும்.


மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று .

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...