Wednesday, 8 July 2020

நமையாளும் நாயன்மார்கள் அறுபத்திமூவர் தில்லைவாழ் அந்தணர்:சித்திரை-முதல்நாள்-தில்லையில் வாழும் தீட்சதர்கள் தொகையடியார்களின் ஒன்பதுபேரில் முதலாவதாக வணங்கப்ப�

நமையாளும் நாயன்மார்கள் அறுபத்திமூவர்
தில்லைவாழ் அந்தணர்:சித்திரை-முதல்நாள்-தில்லையில் வாழும் தீட்சதர்கள். தொகையடியார்களின் ஒன்பதுபேரில் முதலாவதாக வணங்கப்படுபவர்கள்.
1. திருநீலகண்ட நாயனார்:தை-விசாகம். குயவர்-சோழநாடு, சிதம்பரம். அயலறியா வண்ணிம் மனைவியின் சபதத்திற்கு உடன்படடு அவளைத் தீண்டாது, இளமையிலும் முதுமையிலும் இல்லறம் நடத்தி இறைவன் திருவருளால் இளமை பெற்றார்.
2. இயற்பகை நாயனார்:மார்கழி-உத்திரம். வணிகர்-சோழநாடு- காவிரிப்பூம்பட்டினம். சிவனடியார்க்குத் தம் மனைவியிடமே தானமாகக் கொடுத்தவர்.
3. இளையான் குடிமாற நாயனார்:ஆவணி-பூசம். வேளாளர் இளையான்குடி. விதைத்த நெல் எடுத்து அலங்கெரித்து அடியார்க்கு அமுது அளித்தல்.
4. மெய்ப்பொருள் நாயனார்:கார்த்திகை-உத்திரம் குறுநில மன்னர்-நடுநாடு, திருக்கோவலூர். வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் சிவவேடதாரியைக் காப்பாற்றித் தம் உயிரைவிட்டவர்.
5. விறன்மீண்ட நாயனார்:சித்திரை-திருவாதிரை. வேளாளர்-மலைநாடு, செங்குன்றூர். சுந்திர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக் காரணமாய் இருந்தவர்.
6. அமர்நீதி நாயனார்:ஆனி-பூரம். வணிகர்-சோழநாடு, பழையாறை, கோவணத்திற்கு நிறையாக மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்மையும் சிவனடியார்க்குத் தந்தவர்.
7. எறிபத்த நாயனார்-மாசி-அஸ்தம். சோழநாடு, கருவூர். பூக்குடலையைச் சிவனடியாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறவைத்த பட்டத்து யானையை வெட்டியவர்.
8. ஏனாதினாத நாயனார்-புரட்டாசி-உத்திராடம். சான்றோர்-சோழநாடு, எயினனூர். போர் புரியும் பகைவன் நெற்றியில் திருநீற்றைக் கண்டதும் அவனார் கொல்லப்படும்படி நடந்து கொண்வர்.
9. கண்ணப்ப நாயனார்:தை-மிருகசீரிடம். வேடர்-தொண்டை நாடு-உடுப்பூர். ஆறே நாளில் அளவுகடந்த பக்திசெய்து காளத்தியப்பருக்குத் தம் கண்ணை அப்பியவர்.
10. குங்கிலியக் கலய நாயனார்:ஆவணி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருக்கடவூர். மனைவியின் மாங்கல்யத்தை விற்றும் குங்கிலியம் வாங்கியவர். சாய்ந்த லிங்கத்தைக் கழுத்தில் பூமாலை கொண்டு நிமிர்த்தியவர்.
11. மானக்கஞ்சாற நாயனார்:மார்கழி-சுவாதி, வேளாளர்-கஞ்சாறூர்-திருமணம் தொடங்கும்போது திருமணப் பெண்ணாகிய தமது மகளின் தலைமயிரை அறுத்துச் சிவனடியாருக்குத் தந்தவர்.
12. அரிவட்டாய நாயனார்-தை-திருவாதிரை. வேளாளர்-சோழநாடு, கணமங்கலம். சிவ நிவேதனத்துக்குரிய பொருள் கீழே சிந்தியதற்காகத் தமது கழுத்தை அரித்து கொண்டவர்.
13. ஆனாய நாயனார்:கார்த்திகை-அஸ்தம். இடையர்-மழநாடு, மங்களவூர், பசு மேய்க்கும் போது, ஜந்தெழுத்தைப் புல்லாங்குழலில் அமைத்துவாசித்தவர்.
14. மூர்த்திநாயனார்-ஆடி-கிருத்திகை. வணிகர்-பாண்டியநாடு, மதுரை. சந்தனம் தருகின்ற திருப்பணியில் முட்டுப்பாடு நேரவே, முழங்கையை அரைத்தவர். திருநீறு, உத்திராட்சம், சடைமுடி ஆகிய மூம்மையால் உலகாண்டவர்.
15. முருக நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருப்புகலூர். மலர்த்தொண்டு செய்து திருஞான சம்பந்தர் திருமணத்தில் முக்தி பெற்றவர்.
16. உருத்திர பசுபதி நாயனார்:புரட்டாசி-அஸ்வினி. அந்தனர்-சோழநாடு. திருத்தலையூர். இரவும் பகலும் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஸ்ரீ ருத்ர மந்த்ரம் ஜபித்தவர்.
17.திருநாளைப்போவார் நாயனார்: புரட்டாசி-ரோகினி (நந்தனார்) புளையர்- சோழநாடு. ஆத்தனூர். தில்லை நடராஜப் பெருமானைப் காணவிரும்பித் தீப் புகுந்து முனிவராய் எழுந்து சிற்றம்பலவன் திருமுன்பு மறைந்தவர்.
18. திருக்குறிப்புதொண்ட நாயனார்:சித்திரை-சுவாதி. ஏகாலீயர்-தொண்டைநாடு காஞ்சீபுரம். சிவனடியார்க்கு வாக்களித்தபடி மழையின் காரணமாக உடையை துவைத்து உலர்த்தித்தர முடியாமல் போனதால் தமது தலையை கல்லின்மீது மோதிக் கொண்டவர்
19. சண்டேஸ்வர நாயனார்:தை-உத்திரம். அந்தணர்-சோழநாடு, திருச்சேயஞ்ஞலூர் அபிஷேகப்பாற்குடத்தை இடரியை தந்தையின் காலை வெட்டித் தொண்டர்க்கு தலைவனாக (சண்ணிப் சப்பதம்) இருக்கும் அருள் பெற்றவர்.
20. திருநாவுக்கரச நாயனார்:சித்திரை-சதயம், வேளாளர்-நடுநாடு, திருவாமூர், ஐந்தெழுத்து ஒதி கருங் கல்லின்மேல் கடலில் மிதந்து கரையேரிப் பல தேவாரப்பாடல்கள் பாடி கைத்தொண்டு செய்து முக்தி பெற்றவர்.
21. குளச்சிறை நாயனார்:ஆவணி-அனுஷம், பாண்டிய நாடு-மனமேற்குடி, அரசன் சமணனாய் இருந்தபோதும் தாம் சிவனடியாரை வழிபட்டார். திருஞானசம்பந்தரை அழைத்துவந்து அரசனையும் நாட்டினையும் சைவ மாக்கியவர்.
22. பெருமிழலைக் குரும்ப நாயனார்:ஆடி-சித்திரை, பெருமிழலையூர் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளை வழிபட்டு, அவர் கயிலை செல்வதையறிந்து யோகத்தால் தானும் கயிலை சென்றவர்.
23. காரைக்கால் அம்மையார்:பங்குனி-ஸ்வாதி (பேயார்) , வணிகர்-சோழநாடு. காரைக்கால், சிவபெருமானை வேண்டி மாம்பழம் பெற்றவர். பேய் வடிவம் பெற்றவர். ஆலங்காட்டில் ஈசனாடலையும் பெற்றவர்.
24. அப்புதியடிகள் நாயனார்:தை-சதயம். அந்தணர்-சோழநாடு. திங்களூர். பிள்ளை இறந்ததையும் மறைத்து திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு அமுது அளித்தவர்.
25. திருநீலநக்க நாயனார். வைகாசி-மூலம்:அந்தணர்-சோழநாடு. சாத்தமங்கை. அன்போடு சிவலிங்கத்தின் மீதிருந்த சிலந்தியை ஊதியதால் எச்சில் பட்டதென்று மனைவியை விட்டுச்சென்றவர். பாணர்க்கு வேதிகையில் இடம் தந்தவர். திருஞானசம்பந்தர் திருமணத்தை நடத்தி முக்தி பெற்றவர்.
26. நமிநந்தி அடிகள் நாயனார்:வைகாசி-பூசம். அந்தணர்-சோழநாடு. ஏமப்பேறூர். தண்ணீரால் விளக்கெரித்தவர். திருவாரூர்ப் பிறந்தாரை எல்லாம் சிவசாரூப்பியராகக் கண்டவர்.
27. திருஞானசம்பந்த நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு. சீகாழி. உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றவர். தேவாரம்பாடி எலும்பைப் பொன்னாக்கியவர். பல அற்புதங்கள் செய்த இவர் தமது திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் முக்தி தந்தவர்.
28. ஏயகோன் கலிக்காம நாயனார்:ஆனி-ரேவதி. வேளாளர் சோழநாடு திருப்பெரும் மங்களம். சிவபெருமானைப் தூதராகவிடுத்த வண்றொண்டரை இகழ்ந்து பின்பு திருவருள் விளையாட்டால் அவருடைய நண்பரானவர்.
29, திருமூல நாயனார். ஐப்பசி-அசுவினி:இடையர்-சோழநாடு, சாத்தனூர். மூலன் உடலில் தாம் புகுந்து, மூவாயிரம் ஆண்டிருந்து, திருமந்திரம் அருளிச் செய்தவர்.
30. தண்டியடிகள் நாயனார்-பங்குனி-சதயம். சோழநாடு-திருவாரூர். பிரவிக் குருடாக இருந்தும் திருவாரூர் குளத்தை, கரையில் குச்சி கட்டி, இடையே கயிறு கட்டி திருக்குளப்பணி செய்து குருடு நீங்கிச் சமணரை வென்றவர்.
31. மூர்க்க நாயனார்-கார்த்திகை, மூலம். வேளாளர், தொண்டைநாடு, திருவேர்க்காடு. சூதாட்டத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்தவர்.
32. சோமாச்சிமாற நாயனார்-வைகாசி-ஆயில்யம். அந்தணர். சோழநாடு. திரு அம்பர். வேத வேள்வி செய்து, சாதிமத பேதமின்றி, பஞ்சாட்சரவிதிப்படி அடியயார்களுக்கு அன்னதானம் செய்தவர்.
33. சாக்கிய நாயனார்:மார்கழி-பூராடம். வேளாளர்-திருச்சங்கமங்கை. சமணக் கோலமாயினும் மனதார சிவபூசை செய்தவர். மனதில் மலராக எண்ணி இறைவ மீது இட்டகற்களை இறைவன் மீது இட்டகற்களை இறைவன் மலராக ஏற்று அருள் பெற்றவர்.
34. சிறப்புலி நாயனார்-கார்த்திகை-பூராடம். அந்தணர்-சோழநாடு. திரு ஆக்கூர். குல ஆசாரவிதிப்படி, வேதம் ஒதியும், ஒதுவித்தும், சிவனடியைச் சிந்தித்தும் அடியார்கட்கு, அமுதும் பொருளும் தந்தவர்.
35. சிருத்தொண்ட நாயனார்-சித்திரை-பரணி. மாமாத்திரப் பிராமணர்-சோழநாடு, திருச்செங்காட்டாங்குடி வாதாவியைப் போரில் வென்றவர். சிவனடியார்க்குத் தமது ஒரே பிள்ளையைக் கறியாகச் சமைத்து வைத்தவர்.
36. சோமான் பெருமாள் நாயனார்-ஆடி, சுவாதி (கழறிற்றறிவார் நாயனார்) அரசர், மலைநாடு, கொடுங்கோளூர். நடராஜர் பாதச் சிலம்பொலி கேட்கக் காலம் தகுந்தமையால் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகள் தோழமை பெற்றவர். சிவ பெருமானுடைய திருமுகப் பாசுரம் பெற்றவர். கயிலை சென்று ஞானவுலா பாடியவர்.
37. கணநாத நாயனார்-ஆடி-திருவாதிரை. அந்தணர், சோழநாடு, சீர்காழி. சிவனடியாரைப் போற்றுவதோடு, சிவநெறிப் பணிகள் செய்பவருக்கு பயிற்சி அளித்தவர். திருஞான சம்பந்தரை வழிபட்டவர்.
38. கூற்றுவ நாயனார்-ஆடி-திருவாதிரை. குறுநில மன்னர், திருக்களத்தை. தில்லைவாழ் அந்தணர் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லையம்பலவன் திருவடிகளையே முடியாகச் சூடப்பெற்றவர்.
39. புகழ்ச்சோழ நாயனார்:ஆடி-கிருத்திகை. அரசர் சோழநாடு. உறையூர். பகைவனது அறுபட்ட தலையில் சிவ சின்னமாகிய சடையிருப்பதைக் கண்டு அஞ்சி உயிர்விட்டவர்.
40. நரைசிங்க முனையரைய நாயனார்-புரட்டாசி-சதயம். குருநில மன்னர்-நடுநாடு. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர். திருவாதிரை தோறும் சிவனடியார்களுக்கு அன்னமிடுவதுடன் 100 பொற்காசுகள் வழங்குவார். சிவவேடம் பூண்ட காமக்குறி மலர்ந்த தூதர்களையும் வணங்கியவர்.
41. அதிபந்த நாயனார்-ஆவணி-ஆயில்யம். நுளையர் (மீன் பிடிப்பவர்) சோழநாடு-நாகப்பட்டினம். நவரத்தினம் இழைத்த பொன்மீனைத்தாமே வைத்துக் கொள்ளாமல் சிவார்பணம் செய்தவர்.
42. கலிக்கம்ப நாயனார்-தை-ரேவதி. வணிகர்-நடுநாடு. பெண்ணாடகம். தமது பழைய வேலையாள் சிவனடியாராக வந்தபோது, தாம் அவனை வழிபட்டு, வழிபடாத தமது மனைவி கையை வெட்டியவர்.
43. கலிய நாயனார்:ஆடி-கேட்டை. செக்கர்- (எண்ணெய் வியாபாரி) தொண்டைநாடு-திருவெற்றியூர். திருவிளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாததால் தமது இரத்தத்தைக் கொண்டு எரிக்க முயன்றவர்
44. சக்தி நாயனார்-ஐப்பசி-பூசம். வேளாளர்-சோழநாடு. வரிஞ்சியூர். சிவனடியாளர்களைக் குறை கூறுபவர்களின் நாக்கை அறுத்தவர்.
45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்-ஐப்பசி-மூலம். குறுநில மன்னர்- தொண்டைநாடு. காஞ்சிபுரம். பதவியை வெறுத்துத் தலையாத்திரை செய்தவர். க்ஷேத்திர வெண்பாவால் நிலையாமையைக் கூறியவர்.
46. கணம்புல்ல நாயனார்-கார்த்திகை-கிருத்திகை. இருக்குவேளூர். புல்விற்று நெய்கொண்டு திருவிளக்கெரித்தவர். நெய்யின்மையால் திருப்புலீஸ்வர சிவன் சன்னதியில் தமது தலைமயிரை விளக்காக எரித்தவர்.
47. காரிநாயனார்-மாசி-பூராடம்.. சோழநாடு. திருக்கடவூர். கோவைப்பாடி பொருள்பெற்று, ஆலயப்பணி செய்தவர்.
48. நின்றசீர் நெடுமாற நாயனார்-ஐப்பசி-பரணி. அரசர்-பான்டிய நாடு. மதுரை. திருஞானசம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீக்கியவர். அவர் திருவாக்கால், கூன் நிமிரப்பெற்று சைவரானவர்.
49. வாயிலார் நாயனார்-மார்கழி-ரேவதி. வேளாளர், தொண்டைநாடு-மயிலாப்பூர். மானசீகமான ஞானபூஜை செய்தவர்.
50. முனையடுவார் நாயனார்-பங்குனி-பூசம். வேளாளர், சோழநாடு, திருநீடூர். கூலிக்குப் போர் செய்து அக்கூலிகொண்டு சிவனடியாரை வழிபட்டவர்.
51. கழற்சிங்க நாயனார்-வைகாசி-பரணி. குறுகிய மன்னர்-சிவபூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் தமது மனைவியின் மூக்கை ஒரு சிவனடியார் அறுத்த தண்டனை போதாது என்று, அவள் கைகளையும் வெட்டியவர்.
52. இடங்கழி நாயனார்-ஐப்பசி-கார்த்திகை. அரசன்-கோனாடு, கொடும்பாளூர். அடியார் வழிபாடு செய்ய நெய் நெல் திருடினவர்க்கு மேலும் பொருளும் நெல்லும் தந்தவர்.
53. செருத்துணை நாயனார்-ஆவணி-பூசம். வேளாளர், சோழநாடு, தஞ்சாவூர். கழற்சிங்க நாயனாருடைய மனைவி, பூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் அவர் மூக்கை அரித்தவர்.
54. புகழ்த்துணை நாயனார்-ஆவணி-ஆயில்யம். ஆதிசைவர். செருவிலிபுத்தூர். சிவபூஜைக்கு உதவியாக அரிசிற்கரைப்புத்தூர் சிவபெருமானால் பஞ்சகாலத்தில் காசு அளிக்கப்பெற்று தொண்டு செய்தவர்.
55. கோட்புலி நாயனார்-ஆடி -கேட்டை. வேளாளர். சோழநாடு. திருநாட்டியத்தான்குடி. சிங்கடி, வனப்பகை என்ற இரண்டு புதல்வியரைத் சுந்தர மூர்த்தி ஸ்வாமிக்கு அரிப்பணம் செய்தவர். சிவபூஜைக்குரிய நெல்லையுன்ட சுற்றத்தார் அனைவரையும், குழந்தை உட்பட அனைவரையும் கொன்றவர்.
56. பூசலார் நாயனார்-ஐப்பசி-அனுஷம். அந்தணர். தொண்டைநாடு. திருநின்றவூர். மனத்தினாலேயே கோயில்கட்டிச் சிவ வழிபாடு செய்தவர்.
57. மங்கையர்க்கரசியார்-சித்திரை-ரோகினி. (மாணியார்) அரசியார், பாண்டியநாடு, திருஞானசம்பந்தரை வரவழைத்துத் தமது கணவரையும், பாண்டிய நாட்டையும் சைவமாக்கியவர்.
58. நேச நாயனார்-பங்குனி-ரோகிணி. சாலியர்-கம்பீரநகரம் சிவனடியார்களுக்கு உடையும் கோவணமும் செய்து கொடுக்கும் பணியைச் செய்தவர்.
59. கோச்செங்கட்சோழ நாயனார்:மாசி-சதயம். அரசர் சோழநாடு. எழுபது சிவாலயங்கள் கட்டியவர். முப்பிறவியில் சிலந்தியாகப் பூஜை செய்தவர்.
60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்-வைகாசி-மூலம். பாணர், நடுநாடு- திருஎருக்கத்தம்புலியூர், திருஞானசம்பந்தருடன் சென்று, யாழ்த்தொண்டு புரிந்தவர்.
61. சடைய நாயனார்-மார்கழி-திருவாதிரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர். சுந்திரமூர்த்தி சுவாமிகளைப் பிள்ளைகளாகப் பெற்றவர். அவருக்குச் சடங்கவி சிவாச்சாரியார் புதல்வியைத் திருமணம் செய்விக்க முயற்சித்தவர்.
62. இசைஞானியர்-சித்திரை-சித்திரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர், சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளைப் பிள்ளையாகப் பெற்று வளர்த்த பெண்மணியார்.
63. சுந்தரமூர்த்தி நாயனார்-ஆடி-சுவாதி. ஆதிசைவர், நடுநாடு-திருநாவலூர். திருத்தொண்டர் தொகைபாடியவர். இறைவனைத் தூது அனுப்பியவர். முதலையுண்ட மகனா வருவித்தவர்.


 
 

#ஸ்ரீ_வாராஹி_அஷ்டோத்திர_சத_நாமாவளி

   வாராஹி அம்மனுக்கு உகந்த அஷ்டோத்திர சத நாமாவளி பார்க்கலாம். இந்த நாமாவளியை தினமும் அல்லது வெள்ளிக்
கிழமைகளில் சொல்லி வந்தால் பயம் விலகும்.

ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி
தேவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு
வல்லபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:
ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர
ரதாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:
ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:

Friday, 24 April 2020

ஸ்ரீமஹா #வித்யா #கவசம்...

#ஸ்ரீமஹா_வித்யா_கவசம்...

(காளீ, தாரா, காமாக்யா,  புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமவதி, பகளாமுகி, மாதங்கீ, கமலா என்ற இந்த பத்து தேவிகளையே மகா வித்யைகள் என்றழைப்பர். தாந்த்ரீக வழிபாடுகளில் இவர்களே முதன்மை பெற்று விளங்குகிறார்கள். இந்த கவசத்தை எவரொருவர் படித்து வருகிறாரோ, அவர்கள் அடைய முடியாதது என்று எதுவும் இல்லை)

ஸ்ரீ கணேச உவாச:

ச்ருணுதேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வ சித்திதம்
ஆத்யாயம் மஹா வித்யாயா சர்வாபீஷ்ட பலப்ரதம்||

பொருள்:

கணேசர் கூறுகிறார்:-

ஹே தேவி! அனைத்தையும் பூர்த்தி செய்யும் வழியைக் காட்டும் ஓர் கவசத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேள்!. அனைத்திற்கும் ஆதி தேவியாக விளங்கும் ஸ்ரீ மஹா வித்யையின் இக்கவசத்தை அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் பொருட்டு கூறுகிறேன்.

2). கவசஸ்ய ரிஷிர் தேவி சதாஷிவ இதீரித,
ச2ந்தோ அனுஷ்டுப், தேவதா ச மஹாவித்யா
ப்ரகீர்த்திதா, தர்ம அர்த்த காம
மோக்ஷானாம் விநியோகஸ்ச சாதனே

பொருள்:

இக்கவசத்தின் ரிஷி - தேவி மற்றும் சதாசிவர், சந்தம் - அநுஷ்டுப், உபாசனை தெய்வம் - மஹாவித்யை, உபாஸிக்கும் நோக்கம் - தர்மம் நிலைக்க, விருப்பங்கள் நிறைவேற மற்றும் முக்தி பெற.

3). ஐம் கர பாது சீர்ஷே மாம், காம பீஜம் தட ஹ்ருதி|
ரிமா பீஜம் சதா பாது நபௌ குஹ்யே ச பாடயோ||

பொருள்:

"ஐம்" என் சிரசைக் காக்கட்டும்.
"காம பீஜம்" என் ஹ்ருதயத்தைக் காக்கட்டும்.
"ரிமா பீஜம்" என் வயிறு, அந்தரங்கப் பகுதிகள் மற்றும் என் பாதத்தைக் காக்கட்டும்.

4). லலாதே சுந்தரீ பாது, உக்ரா மாம் கண்ட தேசதா,
பகமாலா சர்வ கேதர், லிங்கே சைதன்ய ரூபிணி

பொருள்:

பார்வைக்கு இனிமையான சுந்தர அழகுடையவள் என் நெற்றியைக் காக்கப்டும்.
உக்ர ரூப தேவதை என் கழுத்தைக் காக்கட்டும்.
பகமாலினி என் முழு உடலையும் காக்கட்டும்.
அறிவின் வடிவாக விளங்கும் சைதன்ய ரூப தேவி என் குறிகளைக் காக்கட்டும்.

5). பூர்வ மாம் பாது வாராஹி, பிரஹ்மாணி தக்ஷிணே ததா,
உத்தரே வைஷ்ணவீ பாது, வக்ஷ காருண்ய மானஸா

பொருள்:

கிழக்கில் என்னை வாராஹி காக்கட்டும்.
தெற்கில் என்னை பிரஹ்மாணி காக்கட்டும்.
வடக்கில் என்னை வைஷ்ணவீ காக்கட்டும்
சிந்தை முழுதும் இரக்கம் நிறைந்துள்ள தேவியானவள் என் மார்பைக் காக்கட்டும்.

6). மஹேஸ்வரீ ச ஆக்ஜ்ஞேயாம், நைர்ரிததி கமலா ததா,
வயவ்யாம் பாது கௌமாரி, சாமுண்டா ஹீசகீ ஆவது

பொருள்:

தென்கிழக்கில் அந்த மஹா தேவீ என்னைக் காக்கட்டும்.
தென்மேற்கில் மஹாலக்ஷ்மி என்னைக்  காக்கட்டும்.
வடமேற்கில் என்னை கௌமாரி காக்கட்டும்.
சாமுண்டி தேவி நான் களைப்படைந்த காலத்தில் என்னைக் காக்கட்டும்.

7). இதம் கவசம் ஆஜ்ஞத்வா, மஹா வித்யாம் யோ ஜபேத்,
ந ஃபஹ்லம் ஜாயதே தஸ்ய, கல்ப கோடி ஷதைரபி

பொருள்:

இக்கவசத்தை படிப்பவர்கள், இந்த "மகா வித்யை"யை ஜபிப்பவர்களுக்கு, நூறு கோடி வருடங்களானாலும் கிடைக்காதது எதுவுமில்லை.

Monday, 16 March 2020

ஶ்ரீசக்கரம்

அம்பிகையை #ஶ்ரீசக்கரம்
என்ற யந்திரத்தின் நடுவில் #பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவள் பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களில் எழுந்தருளியி
ருப்பதாகப் பாவித்து வழிபடுவதே ஶ்ரீ சக்கர பூஜையாகும்.

பூஜா மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தூய்மை செய்த ஒருவர் குருவழிபாடு புரிந்து சங்கல்ப்பித்துக் கொண்டு, தேகரட்சை செய்து கொள்ள வேண்டும். தேவி எழுந்தருளும் ஶ்ரீ சக்கரத்தினைச் சுற்றிலும் மதில்களாகவும், கோட்டைகளாகவும், நாற்பத்து நான்கு வரிசைகளை பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே ஶ்ரீ சக்கர பூஜையின் முதலம்சமாகச் சொல்லப்பெறுகிறது.

அடுத்துப்  பூஜை  செய்பவர்  தமது  பௌதீக  உடலை  மந்திரங்களின்  மூலம்  தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். விக்நோத்ஸாரணம் என்கிற விக்னங்களை நீக்கிடும்  வழிபாட்டையாற்ற  வேண்டும்.  இதன்  பின்,  தெய்வீகச்  சரீரமெங்கும்  தேவர்களை  ஆவாஹித்துத்   தெய்வமயமாகச் ,சக்தி மயமாகத்  தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கிற இடத்தையும் சாதகன் அமைத்துக் கொள்கிறான்.

உடம்பில் #மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி  தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன. இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்ட பின்னரே, ஒருவர் ஶ்ரீசக்கர பூஜையினுள் நுழைகிறார்.

ஸ்ரீ சக்கரம் யந்திரங்களின் ராஜா எனப்படுகிறது. பிரபஞ்சம், குரு, தனிமனிதனின் உடல் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் ஸ்ரீ சக்கரத்தின் வழிபாடு பிறவித்தளையை அறுக்கும் ஸ்ரீ வித்யை எனப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் சிவ சக்தி ஐக்கியம் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ வித்யையும் வேதாந்தம் கூறும் பிரம்மவித்தையும் ஒன்றே என்றும் கருதப்படுகிறது. முப்பரிமாணத்தில் ஸ்ரீ சக்கர ராஜம் நவாவரண பூஜையால் வழிபடப்படுகிறது. தாந்ரீக முறையான ஸ்ரீ வித்யாவை வேதாந்தமான அத்வைதத்துடன் இணைத்த மாபெரும் சாதனையாளர் ஸ்ரீ சங்கராச்சாரியார் ஆவார்.

ஶ்ரீசக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில் “#ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.

சாக்தர்களுக்கு மட்டுமல்ல, சைவர்களுக்கும் அன்னை வழிபாடு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. “சிவஞானப்பிரதாயினி” என்பது அம்பாளின் திருநாமங்களுள் ஒன்று. சிவஞானப்பேற்றைத் தந்து முக்தி அருளும் சிறப்புடையவள் அவளேயாம்.

ஆக, அன்னையை இவ்வாறு மனதில் கற்பித்து, மனச்சுத்தி பேணி, வைதீக மரபின் வண்ணம் அக்னியிலும், ஆகம மரபின் வண்ணம் விக்கிரகத்திலும், தாந்திரீக மரபின் வண்ணம் ஶ்ரீசக்கரத்திலும் ஆவாஹித்து வழிபடுவர். இவ்வாறு சாக்த தந்திர மரபின் வண்ணம் வழிபடுவது என்பதும் தமிழகத்தின் மிகப் பழமையான வழிபாட்டு மரபுகளுள் ஒன்று.. திருமந்திரம் தந்த திருமூலர் பெருமானே இவ்வழிபாட்டு மரபு பற்றி விளக்கிச் சொல்லியிருக்கின்றமையை காண்கிறோம்.

“ககராதி ஓரைந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தாள் சுத்தவெண்மை
ககராதி மூவித்தை காமிய முக்தியே
 – (திருமந்திரம்- புவனாபதி சக்கரம்)”

அறுபத்து நான்கு உபசாரங்களை அளித்து அன்னையை வழிபடுவர். இவற்றை எல்லாம் ஶ்ரீ சக்கர சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறவளாக, அன்னையைப் பாவித்து அளித்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.

சீதளாஷ்டமி



125
பனிக்காலம் முடிந்து இளவேனில் ஆரம்பிகின்ற சமயத்தில் கொண்டாடப்படுகிற வைபவம் சீதளாஷ்டமி. சீதளா என்றால் குளுமை என்று பொருள். வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படும் வெக்கை நோய்களான காலரா சின்னம்மை பெரியம்மை போன்றவற்றை தன்னுடைய குளீர்ச்சியினால் போக்கிவிடும் தெய்வமாக சீதளாதேவியை கொண்டாடுகிறார்கள்.
இவளுக்கு வாகனமாக கழுதையும் கையில் ஆயுதமாக துடப்பமும் தரப்பட்டிருக்கின்றன. உடலை பாதிக்கும் நோய்க்கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்தி பூரண ஆரோக்கியம் அளிப்பவள் என்பதற்கான குறியீடு துடைப்பம்.
கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. மற்றவர்களின் சுமையை தனதாகக் கருதி அதற்காக யார் மனமுவந்து உதவுகிறார்களோ அவர்களை விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனமே உணர்த்துகிறது.123
ஆந்திரா தமிழ் நாடு கர்னாடகா கேரளா போன்ற தென்னிந்திய மானிலங்களில் கொண்டாடப்படும் மாரியம்மன் வழிபாடே வட மானிலங்களில் சீதளாஷ்டமி என்ர பெயரில் கொண்டாடப்படுகிறது.  மாட்டுப்பொங்கல்
சமயத்தில் நாம் மாடுகளை குளிப்பாட்டி பொட்டிட்டு அலங்கரிப்பது போல் கழுதையை அலங்கரித்து பொட்டிட்டு கொண்டாடுகிறார்கள்.
இப்பண்டிகை வருடா வருடம் சித்திரை மாதத்தில் கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் உபவாசம் இருந்து சீதளாதேவியை வேண்டி நோன்பிருப்பார்கள். இதை பசோடா என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். அன்று பொதுவாக எந்த வீட்டிலும் சமைப்பதில்லை. ஒரு நாள் முன்பாகவே சமைத்து வைத்த உணவையே சாப்பிடுவார்கள்.  ‘ BASI ‘ என்ற வடமொழி சொல்லுக்கு முந்தைய இரவு உணவு என்று பொருள். அதிலிருந்து வந்ததுதான் பசோடா. அதாவது குளிர்ந்த சூடுல்லாத உணவை சாப்பிடுதல் என்று பொருள்படும்.
ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சகஷூ [ CHAKSHU ] என்ற கிராமம் மற்றும் ராஜஸ்தான் குஜராத் உத்திரபிரதேசம் போன்ற மானிலங்களில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை இது. இதை முன்னிட்டு இந்த மானிலங்களில் சந்தைகள் கூடும். சந்தைகளில் எல்லாவிதமான விவசாய உபகரணங்களும் பெண்களுக்கான வளையல் போன்ற ஆபரணங்களும் விற்பனைக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் இந்தக் கொண்டாட்டங்களைப் பார்க்கவும் அரிய பொருட்களை சந்தையில் வாங்கவும் குவிகிறார்கள்.

திதி நித்யா

#திதி நித்யா 
நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள். ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை.

அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது.

அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள். அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

1. பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா 2. துவதியை –பகமாலினி நித்யா  3. திரிதியை – நித்யக்லின்னை நித்யா 4. சதுர்த்தி – பேருண்டா நித்யா 5. பஞ்சமி – வந்நிவாசினி நித்யா 6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா 7. ஸப்தமி – சிவதூதி நித்யா 8. அஷ்டமி – த்வரிதா நித்யா 9. நவமி – குலசுந்தரி நித்யா 10. தசமி – நித்ய நித்யா 11. ஏகாதசி – நீலபதாகா நித்யா 12. துவாதசி – விஜயா நித்யா 13. திரயோதசி – ஸர்வமங்களா நித்யா 14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா 15. பவுர்ணமி – சித்ராதேவி நித்யா அன்னையின் காலவடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திரகலை வளர்கிறது.

ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக அம்பிகையே வீற்றிருக்கிறாள். திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள். அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி, திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் 43 முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும் 15 தேவியர் தான் இந்த திதி நித்யா.

நீங்கள் பிறந்த திதியும் திதி நித்யாவும் வளர்பிறை ப்ரதமை திதிக்கும் தேய்பிறை அமாவாசை திதிக்கும் ஸ்ரீ காமேச்வரி நித்யா வளர்பிறை த்விதியை திதிக்கும் தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும் ஸ்ரீ பகமாலினி நித்யா வளர்பிறை த்ருதியை திதிக்கும் தேய்பிறை த்ரயோதசி திதிக்கும் ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் தேய்பிறை த்வாதசி திதிக்கும் ஸ்ரீ பேருண்டா நித்யா வளர்பிறை பஞ்சமி திதிக்கும் தேய்பிறை ஏகாதசி திதிக்கும் ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும் மகா ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா வளர்பிறை சப்தமி திதிக்கும் தேய்பிறை நவமி திதிக்கும் ஸ்ரீ சிவதூதி நித்யா வளர்பிறை அஷ்டமி திதிக்கும் தேய்பிறை அஷ்டமி திதிக்கும்

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...