Wednesday, 8 July 2020

#ஸ்ரீ_வாராஹி_அஷ்டோத்திர_சத_நாமாவளி

   வாராஹி அம்மனுக்கு உகந்த அஷ்டோத்திர சத நாமாவளி பார்க்கலாம். இந்த நாமாவளியை தினமும் அல்லது வெள்ளிக்
கிழமைகளில் சொல்லி வந்தால் பயம் விலகும்.

ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி
தேவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு
வல்லபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:
ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர
ரதாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:
ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:

Friday, 24 April 2020

ஸ்ரீமஹா #வித்யா #கவசம்...

#ஸ்ரீமஹா_வித்யா_கவசம்...

(காளீ, தாரா, காமாக்யா,  புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமவதி, பகளாமுகி, மாதங்கீ, கமலா என்ற இந்த பத்து தேவிகளையே மகா வித்யைகள் என்றழைப்பர். தாந்த்ரீக வழிபாடுகளில் இவர்களே முதன்மை பெற்று விளங்குகிறார்கள். இந்த கவசத்தை எவரொருவர் படித்து வருகிறாரோ, அவர்கள் அடைய முடியாதது என்று எதுவும் இல்லை)

ஸ்ரீ கணேச உவாச:

ச்ருணுதேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வ சித்திதம்
ஆத்யாயம் மஹா வித்யாயா சர்வாபீஷ்ட பலப்ரதம்||

பொருள்:

கணேசர் கூறுகிறார்:-

ஹே தேவி! அனைத்தையும் பூர்த்தி செய்யும் வழியைக் காட்டும் ஓர் கவசத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேள்!. அனைத்திற்கும் ஆதி தேவியாக விளங்கும் ஸ்ரீ மஹா வித்யையின் இக்கவசத்தை அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் பொருட்டு கூறுகிறேன்.

2). கவசஸ்ய ரிஷிர் தேவி சதாஷிவ இதீரித,
ச2ந்தோ அனுஷ்டுப், தேவதா ச மஹாவித்யா
ப்ரகீர்த்திதா, தர்ம அர்த்த காம
மோக்ஷானாம் விநியோகஸ்ச சாதனே

பொருள்:

இக்கவசத்தின் ரிஷி - தேவி மற்றும் சதாசிவர், சந்தம் - அநுஷ்டுப், உபாசனை தெய்வம் - மஹாவித்யை, உபாஸிக்கும் நோக்கம் - தர்மம் நிலைக்க, விருப்பங்கள் நிறைவேற மற்றும் முக்தி பெற.

3). ஐம் கர பாது சீர்ஷே மாம், காம பீஜம் தட ஹ்ருதி|
ரிமா பீஜம் சதா பாது நபௌ குஹ்யே ச பாடயோ||

பொருள்:

"ஐம்" என் சிரசைக் காக்கட்டும்.
"காம பீஜம்" என் ஹ்ருதயத்தைக் காக்கட்டும்.
"ரிமா பீஜம்" என் வயிறு, அந்தரங்கப் பகுதிகள் மற்றும் என் பாதத்தைக் காக்கட்டும்.

4). லலாதே சுந்தரீ பாது, உக்ரா மாம் கண்ட தேசதா,
பகமாலா சர்வ கேதர், லிங்கே சைதன்ய ரூபிணி

பொருள்:

பார்வைக்கு இனிமையான சுந்தர அழகுடையவள் என் நெற்றியைக் காக்கப்டும்.
உக்ர ரூப தேவதை என் கழுத்தைக் காக்கட்டும்.
பகமாலினி என் முழு உடலையும் காக்கட்டும்.
அறிவின் வடிவாக விளங்கும் சைதன்ய ரூப தேவி என் குறிகளைக் காக்கட்டும்.

5). பூர்வ மாம் பாது வாராஹி, பிரஹ்மாணி தக்ஷிணே ததா,
உத்தரே வைஷ்ணவீ பாது, வக்ஷ காருண்ய மானஸா

பொருள்:

கிழக்கில் என்னை வாராஹி காக்கட்டும்.
தெற்கில் என்னை பிரஹ்மாணி காக்கட்டும்.
வடக்கில் என்னை வைஷ்ணவீ காக்கட்டும்
சிந்தை முழுதும் இரக்கம் நிறைந்துள்ள தேவியானவள் என் மார்பைக் காக்கட்டும்.

6). மஹேஸ்வரீ ச ஆக்ஜ்ஞேயாம், நைர்ரிததி கமலா ததா,
வயவ்யாம் பாது கௌமாரி, சாமுண்டா ஹீசகீ ஆவது

பொருள்:

தென்கிழக்கில் அந்த மஹா தேவீ என்னைக் காக்கட்டும்.
தென்மேற்கில் மஹாலக்ஷ்மி என்னைக்  காக்கட்டும்.
வடமேற்கில் என்னை கௌமாரி காக்கட்டும்.
சாமுண்டி தேவி நான் களைப்படைந்த காலத்தில் என்னைக் காக்கட்டும்.

7). இதம் கவசம் ஆஜ்ஞத்வா, மஹா வித்யாம் யோ ஜபேத்,
ந ஃபஹ்லம் ஜாயதே தஸ்ய, கல்ப கோடி ஷதைரபி

பொருள்:

இக்கவசத்தை படிப்பவர்கள், இந்த "மகா வித்யை"யை ஜபிப்பவர்களுக்கு, நூறு கோடி வருடங்களானாலும் கிடைக்காதது எதுவுமில்லை.

Monday, 16 March 2020

ஶ்ரீசக்கரம்

அம்பிகையை #ஶ்ரீசக்கரம்
என்ற யந்திரத்தின் நடுவில் #பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவள் பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களில் எழுந்தருளியி
ருப்பதாகப் பாவித்து வழிபடுவதே ஶ்ரீ சக்கர பூஜையாகும்.

பூஜா மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தூய்மை செய்த ஒருவர் குருவழிபாடு புரிந்து சங்கல்ப்பித்துக் கொண்டு, தேகரட்சை செய்து கொள்ள வேண்டும். தேவி எழுந்தருளும் ஶ்ரீ சக்கரத்தினைச் சுற்றிலும் மதில்களாகவும், கோட்டைகளாகவும், நாற்பத்து நான்கு வரிசைகளை பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே ஶ்ரீ சக்கர பூஜையின் முதலம்சமாகச் சொல்லப்பெறுகிறது.

அடுத்துப்  பூஜை  செய்பவர்  தமது  பௌதீக  உடலை  மந்திரங்களின்  மூலம்  தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். விக்நோத்ஸாரணம் என்கிற விக்னங்களை நீக்கிடும்  வழிபாட்டையாற்ற  வேண்டும்.  இதன்  பின்,  தெய்வீகச்  சரீரமெங்கும்  தேவர்களை  ஆவாஹித்துத்   தெய்வமயமாகச் ,சக்தி மயமாகத்  தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கிற இடத்தையும் சாதகன் அமைத்துக் கொள்கிறான்.

உடம்பில் #மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி  தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன. இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்ட பின்னரே, ஒருவர் ஶ்ரீசக்கர பூஜையினுள் நுழைகிறார்.

ஸ்ரீ சக்கரம் யந்திரங்களின் ராஜா எனப்படுகிறது. பிரபஞ்சம், குரு, தனிமனிதனின் உடல் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் ஸ்ரீ சக்கரத்தின் வழிபாடு பிறவித்தளையை அறுக்கும் ஸ்ரீ வித்யை எனப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் சிவ சக்தி ஐக்கியம் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ வித்யையும் வேதாந்தம் கூறும் பிரம்மவித்தையும் ஒன்றே என்றும் கருதப்படுகிறது. முப்பரிமாணத்தில் ஸ்ரீ சக்கர ராஜம் நவாவரண பூஜையால் வழிபடப்படுகிறது. தாந்ரீக முறையான ஸ்ரீ வித்யாவை வேதாந்தமான அத்வைதத்துடன் இணைத்த மாபெரும் சாதனையாளர் ஸ்ரீ சங்கராச்சாரியார் ஆவார்.

ஶ்ரீசக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில் “#ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.

சாக்தர்களுக்கு மட்டுமல்ல, சைவர்களுக்கும் அன்னை வழிபாடு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. “சிவஞானப்பிரதாயினி” என்பது அம்பாளின் திருநாமங்களுள் ஒன்று. சிவஞானப்பேற்றைத் தந்து முக்தி அருளும் சிறப்புடையவள் அவளேயாம்.

ஆக, அன்னையை இவ்வாறு மனதில் கற்பித்து, மனச்சுத்தி பேணி, வைதீக மரபின் வண்ணம் அக்னியிலும், ஆகம மரபின் வண்ணம் விக்கிரகத்திலும், தாந்திரீக மரபின் வண்ணம் ஶ்ரீசக்கரத்திலும் ஆவாஹித்து வழிபடுவர். இவ்வாறு சாக்த தந்திர மரபின் வண்ணம் வழிபடுவது என்பதும் தமிழகத்தின் மிகப் பழமையான வழிபாட்டு மரபுகளுள் ஒன்று.. திருமந்திரம் தந்த திருமூலர் பெருமானே இவ்வழிபாட்டு மரபு பற்றி விளக்கிச் சொல்லியிருக்கின்றமையை காண்கிறோம்.

“ககராதி ஓரைந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தாள் சுத்தவெண்மை
ககராதி மூவித்தை காமிய முக்தியே
 – (திருமந்திரம்- புவனாபதி சக்கரம்)”

அறுபத்து நான்கு உபசாரங்களை அளித்து அன்னையை வழிபடுவர். இவற்றை எல்லாம் ஶ்ரீ சக்கர சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறவளாக, அன்னையைப் பாவித்து அளித்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.

சீதளாஷ்டமி



125
பனிக்காலம் முடிந்து இளவேனில் ஆரம்பிகின்ற சமயத்தில் கொண்டாடப்படுகிற வைபவம் சீதளாஷ்டமி. சீதளா என்றால் குளுமை என்று பொருள். வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படும் வெக்கை நோய்களான காலரா சின்னம்மை பெரியம்மை போன்றவற்றை தன்னுடைய குளீர்ச்சியினால் போக்கிவிடும் தெய்வமாக சீதளாதேவியை கொண்டாடுகிறார்கள்.
இவளுக்கு வாகனமாக கழுதையும் கையில் ஆயுதமாக துடப்பமும் தரப்பட்டிருக்கின்றன. உடலை பாதிக்கும் நோய்க்கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்தி பூரண ஆரோக்கியம் அளிப்பவள் என்பதற்கான குறியீடு துடைப்பம்.
கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. மற்றவர்களின் சுமையை தனதாகக் கருதி அதற்காக யார் மனமுவந்து உதவுகிறார்களோ அவர்களை விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனமே உணர்த்துகிறது.123
ஆந்திரா தமிழ் நாடு கர்னாடகா கேரளா போன்ற தென்னிந்திய மானிலங்களில் கொண்டாடப்படும் மாரியம்மன் வழிபாடே வட மானிலங்களில் சீதளாஷ்டமி என்ர பெயரில் கொண்டாடப்படுகிறது.  மாட்டுப்பொங்கல்
சமயத்தில் நாம் மாடுகளை குளிப்பாட்டி பொட்டிட்டு அலங்கரிப்பது போல் கழுதையை அலங்கரித்து பொட்டிட்டு கொண்டாடுகிறார்கள்.
இப்பண்டிகை வருடா வருடம் சித்திரை மாதத்தில் கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் உபவாசம் இருந்து சீதளாதேவியை வேண்டி நோன்பிருப்பார்கள். இதை பசோடா என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். அன்று பொதுவாக எந்த வீட்டிலும் சமைப்பதில்லை. ஒரு நாள் முன்பாகவே சமைத்து வைத்த உணவையே சாப்பிடுவார்கள்.  ‘ BASI ‘ என்ற வடமொழி சொல்லுக்கு முந்தைய இரவு உணவு என்று பொருள். அதிலிருந்து வந்ததுதான் பசோடா. அதாவது குளிர்ந்த சூடுல்லாத உணவை சாப்பிடுதல் என்று பொருள்படும்.
ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சகஷூ [ CHAKSHU ] என்ற கிராமம் மற்றும் ராஜஸ்தான் குஜராத் உத்திரபிரதேசம் போன்ற மானிலங்களில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை இது. இதை முன்னிட்டு இந்த மானிலங்களில் சந்தைகள் கூடும். சந்தைகளில் எல்லாவிதமான விவசாய உபகரணங்களும் பெண்களுக்கான வளையல் போன்ற ஆபரணங்களும் விற்பனைக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் இந்தக் கொண்டாட்டங்களைப் பார்க்கவும் அரிய பொருட்களை சந்தையில் வாங்கவும் குவிகிறார்கள்.

திதி நித்யா

#திதி நித்யா 
நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள். ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை.

அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது.

அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள். அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

1. பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா 2. துவதியை –பகமாலினி நித்யா  3. திரிதியை – நித்யக்லின்னை நித்யா 4. சதுர்த்தி – பேருண்டா நித்யா 5. பஞ்சமி – வந்நிவாசினி நித்யா 6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா 7. ஸப்தமி – சிவதூதி நித்யா 8. அஷ்டமி – த்வரிதா நித்யா 9. நவமி – குலசுந்தரி நித்யா 10. தசமி – நித்ய நித்யா 11. ஏகாதசி – நீலபதாகா நித்யா 12. துவாதசி – விஜயா நித்யா 13. திரயோதசி – ஸர்வமங்களா நித்யா 14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா 15. பவுர்ணமி – சித்ராதேவி நித்யா அன்னையின் காலவடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திரகலை வளர்கிறது.

ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக அம்பிகையே வீற்றிருக்கிறாள். திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள். அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி, திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் 43 முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும் 15 தேவியர் தான் இந்த திதி நித்யா.

நீங்கள் பிறந்த திதியும் திதி நித்யாவும் வளர்பிறை ப்ரதமை திதிக்கும் தேய்பிறை அமாவாசை திதிக்கும் ஸ்ரீ காமேச்வரி நித்யா வளர்பிறை த்விதியை திதிக்கும் தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும் ஸ்ரீ பகமாலினி நித்யா வளர்பிறை த்ருதியை திதிக்கும் தேய்பிறை த்ரயோதசி திதிக்கும் ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் தேய்பிறை த்வாதசி திதிக்கும் ஸ்ரீ பேருண்டா நித்யா வளர்பிறை பஞ்சமி திதிக்கும் தேய்பிறை ஏகாதசி திதிக்கும் ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும் மகா ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா வளர்பிறை சப்தமி திதிக்கும் தேய்பிறை நவமி திதிக்கும் ஸ்ரீ சிவதூதி நித்யா வளர்பிறை அஷ்டமி திதிக்கும் தேய்பிறை அஷ்டமி திதிக்கும்

Friday, 21 February 2020

#சிவபெருமான்_அறுபத்தி_நான்கு_திருமேனி கொண்டு திருவிளையாடல்
களைப் புரிந்தார் என புராணங்கள் கூறுகின்றன. அவை,

1. சந்திரசேகரம்
சூரிய ஒளியைப் பெற்று இரவின் இருளை அகற்றும் பொருட்டு உதித்தவன் சந்திரன். அவனுக்கு தட்சன் எனும் அரசனின் சாபத்தால் தான் கற்றுணர்ந்த கலைகள் ஒவ்வொன்றும் நாள்கணக்கில் குறைந்தது. அவை அனைத்தும் தன்னை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சி சிவனை சரணடைந்தான். இறைவனும் வளர்ந்து தேயும் மரணமில்லா வாழ்வை அளித்து அதன் அடையாளமாக பிறை நிலவைத் தன் தலையில் சூடிக் காட்சி அளித்த திருக்கோலம் சந்திரசேகரம்.

2. அர்த்தநாரீசுரம்
ஆணும் பெண்ணும் சரிசமம். சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உமையொருபாகனாகக் காட்சியளித்த அம்மையும் அப்பனுமான திருக்கோலம் அர்த்தநாரீசுரம்.

3. சக்கரபிரதானம்
ஆனந்தத் தாண்டவமாடும்போது, சிவன் தன் கால்களால் வரைந்தது சக்கர உருவம். அதைக் கைலாயத்திலிருந்து பெயர்த்தெடுத்த சலந்தரன் தன் தலைமுடியில் வைத்து சக்தி பெற எண்ணினான். முடி மீது வைத்த நொடி அச்சக்கரம் அவனை அழித்தது.

மகாவிஷ்ணு இச்சக்கரத்தைப் பெற விரும்பி, தினசரி சிவனைத் தியானித்துத் தினமும் ஆயிரம் மலர் கொண்டு பூஜித்தார். திருவிளையாடல் நிகழ்த்த எண்ணிய சிவன் ஒரு மலரை ஒரு நாள் மறைத்து விட்டார்.

மகாவிஷ்ணுக்கு ஒரு மலர் குறைந்தது தெரிய வந்ததும், தன் வலக்கண்ணைப் பிடுங்கிச் செம்மலராகக் கருதி அர்ச்சித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் திருமாலுக்கு அந்தச் சக்கரத்தையும், இழந்த கண்ணினையும், செந்தாமரைக் கண்ணன் என்ற பெயரினையும் அளித்து அருளிய கோலம் சக்கரபிரதானம்.

4. தட்சிணாமூர்த்தம்
படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, கலைகளின் அரசி சரஸ்வதி. இவர்களின் புத்திரர்களான சனகர், சனாதரர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நான்கு பேருமே மெய்நூல்களின் உண்மைப் பொருளோ, தத்துவமோ அறியவில்லை. சிவபெருமான் மௌனகுருவாய் யம திசையான தென்திசை நோக்கி அமர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்திய திருக்கோலம் தட்சிணாமூர்த்தம்.

5. லிங்கஸ்வரூபம்
பிறப்பு, இறப்பின்றி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகளை தன்னுள் அடக்கி ஐம்புலன்களை உணர்த்துவது லிங்கஸ்வரூபம்.

6. லிங்கோற்பவம்
பிரம்மனும், விஷ்ணுவும் தாங்களே பெரியவர் எனும் கர்வத்தில் இருந்தனர். அப்போது அக்கினிப் பிழம்பாக சிவன் தோன்றிய போது அடிமுடி காணாதவர்களாகக் கர்வம் அடங்கினர். தீப்பிழம்பு லிங்கத் தோற்றமே லிங்கோற்பவம்.

7. தட்சயக்ஞ பங்கம்
சிவபெருமானை அழைக்காமல் தட்சன் எனும் அரசன் யாகம் செய்தான். மரியாதை செய்யாத தட்சன் மீது கொண்ட கோபத்தால் அவன் வேள்வியை அழித்தும் பாடம் சொன்ன கோலம் தட்சயக்ஞ பங்கம்.

8. சந்தத நிர்த்தனம்
படைத்தல், காத்தல், அழித்தல், அழித்ததை மறையும்படி செய்தல், மறைந்ததை மீண்டும் அருளல் ஆகிய ஐந்து தொழில்களும் சரிவர நடக்கும்படி ஆடிக் கொண்டிருக்கும் நடராஜத் திருக்கோலம் சந்தத நிர்த்தனம்.

9. சண்டே சாதுக்ரகம்
தன்னை பூஜித்த சண்டேசுவர நாயனாருக்கு அருளிச் செய்த கோலம் சண்டே சாதுக்ரகம்.

10. சலந்தரவதம்
சக்கரத்தினை தனக்குடைமையாக்க முற்பட்ட சலந்திரனை வதம் செய்த திருக்கோலம் சலந்தரவதம்.

11. அகோராஸ்திரம்
சப்ததந்து என்ற அரசன் அனைவருக்கும் சிரமங்களைக் கொடுத்து வந்தான். அகோராஸ்திரம் என்ற கூரிய ஆயுதத்தால் அவனைக் கொன்றார். அவன் மனைவியர் மன்றாட, அவனை உயிர்த்தெழச் செய்த திருக்கோலம் அகோராஸ்திரம்.

12. ஏகபதம்
இவ்வுலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் தம்முடைய மலரடியில் தாங்கி நின்ற காட்சி ஏகபதம்.

13. அச்வாருடம்
மாணிக்கவாசகரைக் காத்தருளும் வண்ணம் நரியினை பரியாக்க அப்பரியினை ஓட்டும் சேவகராக பாண்டிய மன்னர் முன் எழுந்தருளிய கோலம் அச்வாருடம்.

14. சத்ய சதாசிவம்
சத்ய சொரூபம், பஞ்சமுகங்களாய்த் தோன்றி சத்தியஜோதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவற்றினைக் கொண்டு வேத ஆகமங்களைப் போதித்த திருக்கோலம் சத்ய சதாசிவம்.

15. மிக்க சதாசிவம்
இருபத்தைந்து திருமுகங்களுடன் விஸ்வரூபமாய் நின்ற கோலம் மிக்க சதாசிவம்.

16. தகுல குளேசுவரம்
உலோகங்களில் சிறந்த இலகுளத்தால் செய்யப்பட்டு மணிகள் அழகுடன் கோர்க்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம் தகுல குளேசுவரம்.

17. சகஜ சுகாசனம்
ஆறு திருக்கரத்துடன் பார்வதி தேவியைத் தன் இடப்பக்கத்தில் அமர்த்திக் காட்சிதரும் கோலம் சகஜ சுகாசனம்.

18. கூர்ம சங்காரம்
பாற்கடல் கடைய விஷ்ணு ஆமை வடிவம் எடுத்துத் தேவர்களுக்கு உதவினார். கர்வமடைந்த விஷ்ணு ஆமை வடிவத்தை அகலப்படுத்திக் கொண்டே போக பாற்கடல் கரைபுரண்டது. அனைவரும் எம்பெருமானிடம் வேண்டி நிற்க ஆமையைப் பிளந்து அதன் ஓட்டை அணிந்து காட்சியளித்த கோலம் கூர்ம சங்காரம்.

19. மச்சாரி
சோமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் மச்சாவதாரம் (மீன்) எடுத்துக் கடலுக்குச் சென்று அசுரனை அழித்தார். திருமால் கர்வம் கொண்டு பாற்கடல் கலக்கினார். சிவன் அக்கணம் தோன்றி மீனின் கண் மலர்களைப் பிடுங்கி அணிந்த கோலம் மச்சார்.

20. வராஹரி
மகாவிஷ்ணு இரணியாட்சன் என்கிற அசுரனைப் பன்றி உருவம் கொண்டு வதைத்தார். பின்னர் கர்வத்திற்கு ஆட்பட்ட அப்பன்றி உலக மக்களைத் துன்புறுத்தியது. அப்பன்றிகள் கோரப்பல்லினைப் பிடுங்கி சிவன் அணிந்து கொண்டு காட்சியளித்த கோலம் வராஹரி.

21. சற்குரு மூர்த்தம்
மனத்தின் அறியாமை அகற்ற மாணிக்க வாசகருக்கு அருள் பொழிய குரு வடிவில் வந்த கோலம் சற்குரு மூர்த்தம்.

22. உமேசம்
பார்வதி தேவியைத் தம் இடப்பாகத்தில் இருத்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவராசிகளைப் படைக்கப் பிரம்ம தேவனுக்கு அருளிய திருக்கோலம் உமேசம்.

23. உமாபதி
சிவன், சக்திக்கு ஐந்து தொழில்களையும் செய்து வர அருள் வழங்கிய கோலம் உமாபதி.

24. ஐயபுஜங்கத்ராசம்
பரமேசுவரனிடம் கோபம் கொண்ட முனிவர்கள் ஒரு சிலர் யாகம் செய்து தோன்றிய பாம்புகளை அவர் மீது தவவலிமையால் ஏவி விட்டனர். மரணமில்லா பெருவாழ்வு உடைய ஐயன் அப்பாம்புகளை ஆடையாக்கி அணிந்த கோலம் ஐயபுஜங்கத்ராசம்.

25. சார்த்தூரஹரி
மீண்டும் முனிவர்கள் தாருக வனத்தில் யாகத்தில் தோற்றுவித்த புலியைக் கொண்று அதன் தோலினை ஆடையாக உடுத்திய கோலம் சார்த்தூரஹரி.

26. பைரவம்
அந்தகாசுரனை சிவன் சூலத்தால் கொன்று அச்சூலத்திலேயே அவனை அணிகலன் ஆக்கினார். அங்கிருந்தபடியே அவன் சிவனைத் துதிக்க மகிழ்ந்த ஈசன் காட்சி அளித்து சிவகணங்களுள் ஒருவனாக்கி அருளிச் செய்த கோலம் பைரவம்.

27. கல்யாணசுந்தரம்
தட்சணின் புதல்வியான பார்வதி ஈசனை மணக்க வேண்டி தவம் இருந்தாள். மகிழ்ந்த சிவபெருமானும் சுந்தரரூபனாய் உமையின் திருக்கரம் பற்றி மணக்கோலத்தில் அளித்த கோலம் கல்யாண சுந்தரம்.

28. வடுகம்
துந்துபி என்ற அசுர மைந்தனான முண்டாசுரன் தேவர்களுக்கு தொல்லை அளித்ததால் அவனை சம்ஹாரம் செய்து வடுகராய்க் காட்சி அளித்த கோலம் வடுகம்.

29. கிராதம்
அரிய சிவதனுசினைப் பெற காட்டில் தவம் பண்ணினான் அர்ச்சுனன். அவன் விரும்பிய வரங்களை வழங்க வேடுவராய்க் காட்சியளித்த கோலம் கிராதம்.

30. சுந்தர விருஷப ஊர்தி
சிவனுக்கு வாகனம் நந்தி திருமாலுக்குத் தாமும் ஈசனைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அவர் வேண்டுகோளுக்கு இணங்க ரிஷப வாகனமான விஷ்ணு மீதமர்ந்து உலா வரும் கோலம் சுந்தர விருஷப ஊர்தி.

31. விஷாபஹரணம்
பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விசத்தினை உண்டு நீலகண்டராய்க் காட்சியளித்த கோலம் விஷாபஹரணம்.

32. சுவராபக்ஞம்
தேவர்களுக்குள் போர் நிகழ்ந்த போது கிருஷ்ண பகவான் வாணசுரன் மேல் சீதாசுரம் என்ற அஸ்திரத்தை ஏவ, சிவபெருமான் உஷ்ணாசுரம் என்ற அஸ்திரத்தால் காத்தார். அப்போது மூன்று முகம், நான்கு கைகள், ஒன்பது விழிகள், மூன்று பாதங்களுடன் காட்சி அளித்த கோலம் சுவராபக்ஞம்.

33. துகளறு க்ஷேத்திரபாலகம்
பிரளயம் நிகழ்ந்தது. அக்னி சர்வலோகங்களையும் அழித்தது. பின்பு பெருமழை பொழிய உலகமே வெள்ளக் காடாய்க் காட்சி தந்தது. ஜீவராசிகள் எல்லாமே அழிந்தன பூமியை புதுப்பித்து உயிர்களை மீண்டும் படைத்துக் காத்திட அவதரித்த திருக்கோலம் துகளறு க்ஷேத்திர பாலகம்.

34. தொல்கருடாந்திகம்
சிவன் வழிபாட்டில் மெய்மறந்து விஷ்ணு காலம் கடத்தி வந்தார். அவருடைய வாகனமான கருடன் சிவனை பழித்தது. சிவன் சினமுற்று தன் வாகனமான நந்தியின் மூச்சுக் காற்றால் கருடனை அலைக்கழித்தார். அவனுக்குப் புத்திமதி காட்டிய கோலம் தொல் கருடாந்திகம்.

35. முகலிங்கம்
சகலதேவர்களையும் அடக்கி ஐம்புலன்களையும் ஒடுக்கி லிங்கஸ்வரூபமாய்க் காட்சிதரும் சர்வேஸ்வரரின் மலர்ந்த தாமரை போல் புன்சிரிப்பு தரக் காட்சியளிக்கும் கோலம் முகலிங்கம்.

36. துங்க கங்காதரம்
கைலாயத்தில் ஆனந்தமயமான வேளையில் விளையாட்டால் உமையவள் அவர்தம் இருகண்களையும் பொத்தினாள். எங்கும் இருள் சூழ்ந்தது. பகவான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க உலகம் உய்வுற்றது. அந்த வெப்பத்தில் உமாதேவியின் கைகளில் வியர்வை பெருக்கெடுத்து பெருவெள்ளமாய் உலகினை சூழ்ந்து வர, பெருமான் வெள்ளத்தினை எடுத்துத் தன் ஜடாமுடியில் பொருத்தித் தாங்கினார். கங்காதர மூர்த்தியாகக் காட்சியளித்த திருக்கோலம் துங்க காங்காதரம்.

37. கங்கா விசர்ஜனம்
பகீதரன் என்பவன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டி பிரம்மனை நோக்கி தவமிருந்தான். சிவனின் அருளால் தன் லோகத்துக்குக் கிடைத்த கங்கையின் சிறு பகுதியைப் பூமிக்கு அளித்தான் பிரம்மன். வெள்ளமெனப் பெருகி செருக்கோடு ஓடிய கங்கையை மீண்டும் தம் சடைமுடியில் கட்டிப் போட்டார் சிவபெருமான். பகீதரன் மீண்டும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க கங்கையை முடியிலிருந்து பூவுலகிற்குச் சென்றடைய கட்டளை இட்ட போது செய்த திருக்கோலம் கங்கா விசர்ஜனம்.

38. சுப சோமஸ்கந்தம்
சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெர்ப்புப் பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் விழுந்தன. அணு குழந்தைகளாகி வளர்ந்து சக்தியின் அருளால் ஒன்றாகி ஸ்கந்தனாக விளங்கி சிவனுக்கும் உமாதேவிக்கும் இடையில் அமர்ந்து காட்சி அளிக்கும் திருக்கோலம் சுப சோமஸ்கந்தம்.

39. சூரசிம்ஹாரி
மகாவிஷ்ணு நரசிம்ம வடிவம் கொண்டு தூணினைப் பிளந்து இரண்யகசிவு என்ற அரக்கனை வதம் செய்தார். அப்போது வெறி கொண்டு உலகினை அழிக்க முற்படுகையில் சரபடிவம் கொண்ட சிவன் நரசிம்மத்தின் தோலைக் கிழித்து அவருக்குத் தம்நிலை உணர்த்திய கோலம் சூரசிம்ஹாரி.

40. கமாரி
சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய கோலம்.

41. யமாந்தகம்
பதினாறு வயதே வாழ்வாய் என வரம் பெற்ற மார்க்கண்டேயனின் உயிர் நீக்க எண்ணி எமன் அவன் மீது பாசக்கயிற்றை வீசினார். மார்க்கண்டேயனோ சிவ நாமம் ஜபித்தபடி அருகிலிருந்த சிவலிங்கத்தினை இருகைகளாலும் பற்றிக் கொண்டான். அவனைக் காத்திட சிவன், எமனை இடதுகாலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயனுக்கு சாகா வரமளித்த கோலம் யமகாந்தகம்.

ஆபத்பாந்தவனாய்த் தன்னை வந்தடையும் பக்தர்களின் துயர் நீக்கி இன்பம் சேர்க்கும் கோலம் கவலை யுத்தாரணம்.

57. வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்

பிரம்மனின் கர்வம் அடக்கத் தலையைத் தன் கை நகத்தால் கிள்ளிய கோலம் வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்.

58. கவுரி விலாசமந்விதம்

பார்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோமசுந்தரேசுவரராய் விளங்கும் கோலம் கவுரி விலாசமந்விதம்.

59. எழிலரியர்த்தம்

மகாவிஷ்ணுவை ஸ்திரீ ரூபமாய்த் தன் உடலில் பாதியாக்கித் தாங்கி நிற்கும் கேசவார்த்தம் என்னும் கோலம் எழிலரியர்த்தம்.

60. வீரபத்திரம்

வீர மார்த்தாண்டன் என்ற அசுரனைக் கொன்று வீரபத்திரராக விளங்கிய கோலம் வீரபத்திரம்.

61. திரிமூர்த்தி முப்பாதம்

பிரம்மன், விஷ்ணு ருத்ரன் ஆகிய மூவரும் தன்னுள் அடக்கம் எனும் தத்துவம் உணர்த்தும் மூன்று திருவடி உடைய கோலம் திரிமூர்த்தி முப்பாதம்.

62. மகாவேதாளி நடம்

கண்டமுண்டாசுரர்களையும் வதைத்து, கோர ஸ்வரூபமான மகாகாளியுடன் ஆடிய ருத்ர தாண்டவக் கோலம் மகாவேதாளி நடம்.

63. வெருவரு மேகபதத்திருவரு

பிரம்ம விஷ்ணுக்களைத் தன்னுள் அடக்கி ஒரே திருவடியுடன் கூடிய கோலம் வெருவரு மேகபதத்திருவரு.

64. சிவலிங்கம்

ஆகம வேத முதற் பொருளானவன். மங்களமானவன். பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை உடையவன் என்பதை உணர்த்தும் கோலம் சிவலிங்கம்.

ஓம் நமசிவாய.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...